சென்னையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்

சென்னை: சென்னையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் நடைபெற்றது. இந்தியாவின் மகத்தான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஜோதியை எடுத்துச் சென்றார். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஜோதி நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்ட இன்று சென்னை வந்தது. சென்னையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் இன்று நடைபெற்றது. மாநிலக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் வரை ஜோதி … Read more

எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? – சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர – தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று கனமழை நீடிக்கும் என்றும், சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பொழிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வும் மையம் அறிவித்துள்ளது. ஆந்திர – தமிழக கடலோரப் பகுதிகலின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஜூலை 27) அடுத்த 24 மணி நேரத்தில், தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் … Read more

#தென்காசி || நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.! வியாபாரி உயிரிழப்பு.!

தென்காசியில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்துள்ளார். தென்காசி சங்கரன்கோவில் அருகே உள்ள நைனாபுரத்தைச் சேர்ந்தவர் பால் வியாபாரி மாடசாமி(32). இவருடைய மனைவி ராமசீதா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மாடசாமி, இன்று காலை டீக்கடை ஒன்றிற்கு பால் ஊற்றிவிட்டு இரு சக்கர வாகனத்தில் சங்கரன்கோவில்-ராஜபாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் … Read more

கோடநாடு வழக்கு | ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோடாநாடு கொலை , கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள் காவலாளி ஓம்பகதூரைக் கொலை செய்துவிட்டு, பங்களாவுக்குள் இருந்த பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சோலூர்மட்டம் காவல் … Read more

'மாணவிக்கு கொடுமைகள் நடந்ததற்கான சூழ்நிலை இருந்துள்ளது'-குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

கள்ளக்குறிச்சி பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரிடம் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் நேரில் விசாரணை மேற்கொண்டார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தில் கள்ளக்குறிச்சி பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் வீட்டில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்கனு தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். இதில், மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி, உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார், … Read more

தமிழக அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: சிற்றுண்டி மெனு முதல் குறிக்கோள் வரை – முழு விவரம்

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தைப் பார்ப்போம். திமுக தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்பதும் ஒன்று. மேலும், இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு … Read more

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: கைதான 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல்

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஐந்து பேரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி மர்மமான முறையில் கடந்த 13ம் தேதி பள்ளியில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரில் சின்னசேலம் போலீஸார் … Read more

“கருணாநிதியை தூக்கி சாப்பிடும் அளவுக்கு செந்தில்பாலாஜி ஊழல் செய்கிறார்” – அண்ணாமலை

தமிழக அரசு மே, ஜூன் ஆகிய 2 மாதங்களில் தனியாரிடம் இருந்து 4,600 கோடி ரூபாய்க்கு மின்சாரத்தை வாங்கி அதில், 4 சதவிகித கமிஷனாக 220 கோடி ரூபாயை பெற்றுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டினார். தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வை கண்டித்து பாஜக சார்பில் கரூரில் இன்று கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது. இதில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசும்போது… மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த கடிதம் … Read more

Tamil news today live :செஸ் ஒலிம்பியாட் : மாமல்லபுரத்தில் சிறப்பு மருத்துவ குழு 8 மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு

Go to Live Updates இன்றைய பெட்ரோல் – டீசல் விலை சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 67-ஆவது நாளாக எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், டீசல் லிட்டர் ரூ. 94.24 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. சோனியா காந்தி இன்றும் ஆஜராக உத்தரவு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்றும் சோனியா காந்தி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று 2ஆவது நாள் விசாரணைக்கு ஆஜரான நிலையில், இன்றும் ஆஜராக அமலாக்கத்துறை … Read more