பாம்பு தீண்டி மரணித்து பாலியல் அரக்கனை அடையாளம் காட்டிய சிறுமி..! வீடியோ எடுத்தவர்களும் சிக்கினர்

திருவள்ளூர் மாவட்டம் எருமவெட்டி பாளையத்தில்  8 வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்த நிலையில் , 4 மாதங்களுக்கு முன்பாக அந்த சிறுமியிடம், 75 வயது முதியவர் ஒருவர் அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோ வெளியானதால் முதியவர் உள்ளிட்ட 5 பேர் கும்பல் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த 2 வயது சிறுமியை தாய் விட்டுச்சென்ற நிலையில் தந்தையும் உயிரிழந்ததால். திருவள்ளூர் மாவட்டம் எரும வெட்டி பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் வளர்ந்து … Read more

“ஆட்சியாளர்கள் சேவைத் துறையில் லாபம் பார்க்க நினைப்பது நல்லதல்ல” – தங்கமணி

திருச்சி: “போக்குவரத்தும், மின்சாரமும் மக்களுக்கான சேவைத் துறை. எனவே சேவைத் துறையில் லாபம் பார்க்க நினைப்பது ஆட்சியாளர்களுக்கு நல்லது இல்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில், திருச்சி அண்ணாசிலை அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி, தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், முன்னாள் அமைச்சர் … Read more

உலகம் போற்றும் வரலாற்று நாயகன்! தோல்வியே காணாத மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள்!

ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு புதிய தலைமுறையின் ‘மெய்ப்பொருள்’ நிகழ்ச்சியில் மாமன்னர் ராஜேந்திர சோழன் எவ்வளவு முக்கியமான மன்னராக இருந்தார் என்பது குறித்து விரிவாகக் காணலாம். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

பைசா செலவு இல்லாமல் வருமான வரித் தாக்கல்: எப்படின்னு பாருங்க!

நடப்பு நிதியாண்டில் ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் பெற்ற அனைத்து தனிநபர்களும் வருமான வரி தாக்கல் செய்வது கட்டாயமாகும். மாதச் சம்பளம் பெறும் நபர்கள் கணக்கை தணிக்கை செய்ய தேவையில்லை. நீங்கள் 2021-22 ஆம் ஆண்டிற்கான வருமான வரியை வருகிற 31ஆம் தேதிக்குள் செலுத்திட வேண்டும். பொதுவாக வரி தாக்கல் சேவைகளை வழங்கும் பல தனியார் இணையதளங்கள் உள்ளன. இருப்பினும், அவர்கள் தங்கள் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். தற்போதைய பணவீக்க காலங்களில், சம்பளம் பெறும் நபர்கள் வருமான … Read more

முன்விரோதத்தால் மரவியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. மூவர் கைது..!

முன்விரோதத்தால் பெட்ரோல் குண்டு வீசிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துகுடி மாவட்டம், அண்ணாநகரை சேர்ந்தவர்  செல்வகணேஷ். அந்த பகுதியில் இவர் மரவியாபாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில், இருவருக்கும் மகாகிருஷ்ணன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், மகாகிருஷ்ணன் சிலரை வைத்து செல்வகணேஷ் வீட்டில் பெட்ரோல் வீசவைத்துள்ளார். இதுகுறித்து செல்வகணேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். அவர் வீட்டில் உள்ள சிசிடிவி … Read more

தினசரி ஓர் அதிகாரிக்கு தலா 150 வழக்குகள் இலக்கு: ரூ.100 செலுத்த அரை மணி நேர காத்திருப்பு; சென்னைவாசிகள் அவதி

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக போக்குவரத்துக் காவலில் ஈடுபட்டு வரும் போலீஸார் செய்து வரும் வாகன சோதனையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இலக்கு வைத்து வழக்குப் பதிவு செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தலைக்கவகம் அணியாமல் செல்பவர்கள், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள், அதிக வேகத்தில் செல்பவர்கள் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்குபவர்களை கண்டறிய போக்குவரத்துக் காவல் துறை சார்பில் தினசரி வாகன சோதனை நடத்தப்படும். பகலில் … Read more

திமுக கட்சித் தலைமை மீது அதிருப்தி – உறுப்பினர் அட்டையை ஒப்படைப்பதாக அறிவித்த நிர்வாகிகள்

பட்டுக்கோட்டையில் திமுக கட்சித் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து கட்சி உறுப்பினர் அட்டையை ஒப்படைப்பதாக 63 ஒன்றிய திமுக நிர்வாகிகள் அறிவித்தனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பார்த்திபனை ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப் போவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 14 திமுக கிளைச் செயலாளர்கள் மற்றும் 49 ஒன்றிய பிரதிநிதிகள் உட்பட 63 திமுக பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றிய நிர்வாகிகள், கட்சியின் உறுப்பினர் அட்டைகளை … Read more

குஜராத்தில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு

குஜராத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் கள்ளச் சாராயம் குடித்த பலர் ஞாயிற்றுக்கிழமை நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தனர். கள்ளாச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 30 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கள்ளச் சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 51 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். ரசாயன விஷத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாகக் குஜராத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை கள்ள மதுவை உட்கொண்டதாகக் கூறப்படும் பலர் நோய்வாய்ப்பட்டதால் இறந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 30 ஆக … Read more

போதையில் லாரி ஓட்டிய டிரைவருக்கு ஓனர் கொடுத்த பரிசு..! சட்டையை கிழித்து தர்ம அடி

கோவையில் இருந்து பல்லடம் நூற்பாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சரக்கை உரிய இடத்தில் கொண்டு சேர்க்காமல்,  மதுபோதையில் லாரியை நடுவழியில் நிறுத்தி சாலையோரம் படுத்து உறங்கிய ஓட்டுனரின் சட்டையை கிழித்து, லாரி சர்வீஸ் உரிமையாளர் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிக்கு முன்பாக ஒரு போதை ஆசாமியை ஒயிட் அண்ட் ஒயிட் ஆசாமி ஒருவர் சட்டையை பிடித்து கம்பால் அடித்துக் கொண்டிருந்தார். விசாரித்த போது அடித்தவர் … Read more

பதிவாளர் மீதான பாலியல் புகார் எதிரொலி: பெரியார் பல்கலை.யில் கூடுதலாக சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பதிவாளர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் தொடர் நடவடிக்கையாக பல்கலைக்கழகத்தில் கூடுதலாக புதிய இடங்கள் கண்டறிந்து சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கூறும்போது, ”பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் (பொறுப்பு) கோபியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு … Read more