#கள்ளக்குறிச்சி: மாணவிகளை வேலை செய்ய சொல்லி வற்புறுத்தல்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் மதிய உணவு சமைக்க பள்ளி மாணவிகளை தண்ணீர் எடுக்கச் சொல்லி வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் பொட்டியம் பகுதியில் உண்டு உரைவிட நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.  இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளை மதிய உணவு சமைப்பதற்காக குழாயில் இருந்து தண்ணீர் எடுத்து வரச் சொல்லி ஆசிரியர்கள் வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் … Read more

தனியார் தங்கும் விடுதிக்குள் பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்திய நபர்கள் பெட்ரோல் குண்டு தயாரிக்க பொருட்கள் வாங்கும் சிசிடிவி காட்சி

சென்னையில் தனியார் தங்கும் விடுதிக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள், ஹார்டுவேர்ஸ் கடை ஒன்றில் பெட்ரோல் குண்டு தயாரிக்க பொருட்கள் வாங்குவது போன்ற சி.சி.டி.வி. காட்சிகளின் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வடபழனியைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவர் அதே பகுதியில் தங்கும் விடுதியை நடத்தி வருகிறார். இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் விடுதியில் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விடுதியில் … Read more

மாநகராட்சி சார்பில் படகுகள் மூலம் கூவம், அடையாற்றில் கொசு மருந்து தெளிக்கும் பணி: ஆகஸ்ட் 29-ம் தேதி தொடக்கம்

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் ஆறு, அடையாறு ஆகிய நீர்வழித்தடங்களில் 10 படகுகள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி 29-ம் தேதி தொடங்க உள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சி சார்பில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வழித்தடங்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வீடுகள் தோறும் சென்று கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, தீவிர கொசு ஒழிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு … Read more

உயிரை பணயம் வைத்து உக்ரைன் நாட்டிற்கு மீண்டும் மருத்துவம் படிக்க செல்லும் இந்திய மாணவர்கள்

கோவை: ரஷ்யா-உக்ரைன் இடையான போரின் காரணமாக உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் நாடு திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் மருத்துவ படிக்க உயிரை பணயம் வைத்து உக்ரைன் செல்கின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், அங்கு பல்வேறு இடங்களில் மருத்துவம் பயின்று வந்த இந்திய மாணவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் நாடு திரும்பினர். கடந்த 6 மாதத்துக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. அந்நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் போர் … Read more

இந்தியாவிடம் ரயில்வே ஒப்பந்தத்தை மீறியதாக ரூ.443 கோடி நஷ்டஈடு சீனா கேட்டது ஏன்?

லடாக்கில் நிலவிய எல்லைப் பிரச்னையால் நெருக்கடிக்குள்ளான அரசியல் உறவுகளை சரிசெய்வதில் இந்தியாவும் சீனாவும் சுணக்கமாக காணப்படுகின்றன.இதற்கிடையில், இந்தியாவும்-சீனாவும் நிறுத்தப்பட்ட ஒரு ரயில்வே ஒப்பந்தம் தொடர்பாக போராடுகின்றன.இந்த ஒப்பந்தம் ரூ.471 கோடி மதிப்பிலானது. 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம், கான்பூர் மற்றும் தீன் தயாள் உபாத்யாய் சந்திப்பிற்கு இடையே 417 கிமீ தூரத்தில் சிக்னலிங் மற்றும் டெலிகாம் அமைப்புகளை நிறுவ சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமான CRSC ரிசர்ச் & டிசைன் இன்ஸ்டிட்யூட் குழுமத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை … Read more

சிங்காநல்லூர் – வெள்ளலூர் வழித்தடத்தில் புதிய பாலத்தை விரைவில் கட்டி முடிக்க கோரிக்கை

கோவை: சிங்காநல்லூர் – வெள்ளலூர் வழித்தடத்தில், பழைய பாலத்தை இடித்து அகற்றி, புதிய பாலத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை சிங்காநல்லூர் சந்திப்பில் இருந்து வெள்ளலூருக்கு செல்லும் சாலையில் நொய்யலாற்றின் குறுக்கே கடந்த 62 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் பழுதடைந்தது. இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைத்துறையின் ஊரக சாலைகள் பிரிவின் சார்பில் ரூ.4 கோடியே 40 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, பழைய … Read more

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இரு அணைகளும் நிரம்பிய நிலையில் இருப்பதால், பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 88 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் 1 லட்சம் அடியாக அதிகரித்தது. மேட்டூர் அணை … Read more

தூத்துக்குடி சிப்காட்டில் மறைத்துவைத்து கலப்பட டீசல் விற்பனை.. வெளியான பகீர் தகவல்கள்!

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட்டில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தூத்துக்குடியில் இருந்து பயோடீசல் மற்றும் கலப்பட டீசல்கள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் இதனை தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து இன்று இந்த கலப்பட டீசல் தயாரிக்கும் குடோன் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் சந்திஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், … Read more

அதிர்ச்சி: பள்ளி தாளாளரின் கணவரால் பாலியல் பலாத்காரம்.. மாணவிக்கு ஏற்ப்பட்ட கொடுமை.! 

பள்ளி தாளாளரின் கணவரால் திருவண்ணாமலை மாவட்ட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை அரங்கேறியுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் அருகே கங்கை சூடாமணி என்ற கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் யுகேஜி படித்துக் கொண்டிருந்த சிறுமிக்கு திடீரென்று உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் பெற்றோருக்கு தெரிய … Read more

ஸ்பைசஸ் இந்தியா மற்றும் ஆகாஷ் ஷ்ருதி ஸ்பைசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஸ்பைசஸ் இந்தியா மற்றும் ஆகாஷ் ஷ்ருதி ஸ்பைசஸ் ஆகிய நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அந்நிறுவனங்கள் மிளகு, ஏலக்காய், போன்றவற்றை ஏற்றுமதி செய்து வருகின்றன. இந்நிலையில், ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் எட்டாயிரம் ரூபாய் வரை பெறலாம் என அறிவிப்பு வெளியிட்டு அந்நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் துரைராஜ், அவரது மனைவி சாரதாவை … Read more