அதிமுக பொதுக்குழு தொடர்பான இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு- நாளை விசாரணை

கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்து இருந்தார். பொதுக்குழு மற்றும் செயற்குழுவை ஒருங்கிணைப்பாளர், … Read more

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: காரைக்காலில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள், சரக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தனியார் பங்களிப்புடன் கப்பல் சேவை துவங்கப்பட உள்ளதாக பேரவையில் ரங்கசாமி கூறியுள்ளார். 

மேட்டுப்பாளையம்: மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்கள்

மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கல்லார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (39). விவசாயியான இவர், 10 ஏக்கர் விவசாய விளைநிலத்தை குத்தகைக்கு எடுத்து பாக்கு மற்றும் வாழைகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருவதோடு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். நாள்தோறும் காலையில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அருகே உள்ள மலையடிவார பகுதிக்கு அழைத்துச் சென்று மாலை நேரத்தில் திரும்பவும் ஓட்டி … Read more

இலவசங்கள் தமிழகத்தை ஏழ்மை நிலைக்கு தள்ளிவிடவில்லை: உச்ச நீதிமன்றத்தில் திமுக வாதம்

புதுடெல்லி: இலவசங்கள் என்று பொதுமைப்படுத்தி அழைக்கப்படும் நலத்திட்டங்களால் தமிழக அரசு ஏழ்மைக்கு தள்ளப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் சார்பில் எழுத்துபூர்வமாக வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்களால் மக்கள் மத்தியில் வருமான இடைவெளி குறைந்துள்ளது. மாநில வளர்ச்சிக்கு அது வித்திட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற திட்டங்கள் தான் தமிழகத்தை ஒட்டுமொத்த பொருளாதார வளார்ச்சி குறியீட்டின் அடிப்படையில் தேசத்தில் முதல் மூன்று மாநிலங்கள் பட்டியலில் இடம்பெறச் … Read more

ராஜிவ்காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி: காங்கிரஸ் செம பிளான்!

சென்னை வரும் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்க கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குமரி அனந்தன், திருநாவுக்கரசர், தங்கபாலு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன், எம்எல்ஏக்கள் ரூபி மனோகர், அசன் மவுலானா, மாவட்ட தலைவர்கள் சிவ … Read more

இது புதுசா இருக்கே..! மருந்து டப்பாவில் திருமண அழைப்பிதழ் அடித்த தம்பதி!

சென்னை அம்பத்தூர் பகுதி சேர்ந்த ஜெயக்குமாரி மகள் காயத்ரி, பார்மசிஸ்ட் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து விட்டு, கன்னிமாரா லைப்ரரியில் பணியாற்றி வருகிறார்.  இவருக்கும் தர்மபுரியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பார்மசிஸ்ட் படித்துள்ள விஸ்வநாதனுக்கும் ஆகஸ்ட் 31ஆம் தேதி தர்மபுரியில் திருமணம் நடைபெற உள்ளது.  மேலும் இவர்களது திருமண வரவேற்பு சென்னை வெப்பேரியில் உள்ள ஒய் எம் சி ஏ அரங்கில் நடைபெறுகிறது. இந்நிலையில் மணப்பெண் காயத்ரி தனது திருமணத்தின் அழைப்பிதழ் வித்தியாசமாகவும் அனைவராலும் கவரப்பட வேண்டும் என … Read more

புதுச்சேரியில் நடமாடும் கால்நடை மையம் அமைக்கப்படும்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் நடமாடும் கால்நடை மையம் அமைக்கப்படும் என்றும் காரைக்கால் மாவட்டத்தில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். பாரதியார் பல்கலைக்கூடத்தில் ரூ.16.18 கோடி மதிப்பில் தாகூர் கலை பண்பாட்டு வளாகம் நடப்பாண்டில் கட்டி முடிக்கப்படும் என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த 2022-2023-க்கான பட்ஜெட்டில் அறிவித்துள்ளது . 

இலங்கையைச் சேர்ந்த 8 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம் – போலீசார் விசாரணை

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வாழ வழியின்றி மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு நாளுக்கு நாள் இடம்பெயர்ந்து வருவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கெனவே இலங்கையில் இருந்து 142 நபர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், அவர்கள் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த மூன்று … Read more

Tamil news today live : பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் வழக்கு : இன்று விசாரணை

Go to Live Updates பெட்ரோல் டீசல் விலை இன்றைய பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும், டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. புதுக்கோட்டை சிறையில் விசாரணைக் கைதி மரணம் புதுக்கோட்டை சிறையில் விசாரணைக் கைதி திடீரென உயிழிந்துள்ளார். இந்நிலையில் அவரை கிராமத்திற்கு காவல்துறை பாதிகப்பு போடப்பட்டுள்ளது. தடைசெய்யபட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்ததாக இதுவரை நேற்று முன்தினம் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். மேலும் … Read more

மறக்க முடியுமா இந்த நாளை? அதிமுக முன்னாள் எம்.பி., பரபரப்பு டிவிட்.!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ பன்னீர்செல்வம் ஆளும் திமுக அரசுக்கு ஆதரவாகவும், டிடிவி, சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் வகையிலும் செயல்படுவதாக கூறி, எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் 2500 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் முற்றிய நிலையில், ஓபிஎஸ்-யை கட்சியில் இருந்து நீக்கியும், அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுத்தும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நிறைவேற்றியது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்து … Read more