புதுச்சேரியில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு

கோவை: கோவைக்கு கொண்டு வரப்பட்ட, செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு அமைச்சர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்க உள்ளது. இதையொட்டி கடந்த மாதம் 19-ம் தேதி டெல்லி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றி வைத்து, ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட ஒலிம்பியாட் ஜோதி, … Read more

ஓ.பி.எஸ் நியமித்த புதிய நிர்வாகிகள்: வைத்திலிங்கம்- இணை ஒருங்கிணைப்பாளர்

OPS appoints ADMK new functionaries Vaithilingam as Joint coordinator: அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களாக 3 பேரை நியமனம் செய்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட ஒற்றை தலைமை கோரிக்கை காரணமாக, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஒரு அணியும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு அணியும் உருவானது. இதில் பெரும்பாலான நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றறிருந்ததால், அ.தி.மு.க.,வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். … Read more

பேருந்துகளில் நடத்துனர்கள் செல்போன் பயன்படுத்த தடை – போக்குவரத்து துறை.!

பேருந்துகளில் நடத்துனர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து கழகம் சார்பாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் பேருந்துகளில் நடத்துனர்கள் செல்போன் பயன்படுத்தவும், முன் இருக்கைகளில் அமர்ந்து தூங்குவதற்கும் தடை செய்து போக்குவரத்துக்கழகம் உத்தரவிட்டுள்ளது. நடத்துனர்கள் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டு செல்போன் பார்ப்பது, உறங்குவதாக பயணிகள் புகார் தெரிவித்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்தில் 2 படிக்கட்டுகளையும் கண்காணிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. Source link

அரசு உதவி பெறும் பள்ளி விடுதி அறையில் பிளஸ் 2 மாணவி தற்கொலை – சிபிசிஐடி விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பதற்றம் நிலவுவதால் பள்ளி, விடுதி, திருத்தணி அருகே மாணவியின் கிராமம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. திருத்தணி அடுத்ததெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசனம் மகள் சரளா (17), இந்தப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அவர் பள்ளி விடுதியிலேயே … Read more

சினிமா ஆகிறார், சரவணபவன் அண்ணாச்சி? சூர்யா பட இயக்குனர் அதிரடி பிளான்

தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சரவணபவன் ராஜகோபால் – ஜீவஜோதி வழக்கை திரைப்படமான எடுக்க உள்ளதாக ஜெய்பீம் படத்தின் இயக்குநர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் இன மக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் பாராட்டை பெற்றது. டி.ஜே.ஞானவேல் இயக்கிய இந்த படத்தில் … Read more

திண்டுக்கல்.! தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தவர் பலி

திண்டுக்கல் மாவட்டத்தில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தவர் உயிரிழந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நாக கோணனூரை சேர்ந்தவர் பழனிசாமி(31). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி படுகாயமடைந்து கையில் கட்டு போட்டுள்ளார். இதையடுத்து பழனிசாமி தொட்டியில் தண்ணீர் எடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக தவறி தொட்டியில் விழுந்துள்ளார். இந்நிலையில் காயமடைந்ததால் பழனி சாமியால் தொட்டியில் இருந்து எழுந்திருக்க முடியவில்லை. இதனால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.  இதையடுத்து இந்த சம்பவம் … Read more

பழனிசாமிக்கு எதிரான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி: முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிரான ரூ.4,800 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ள நடைபெற்ற டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குறிப்பாக ஒட்டன்சத்திரம் – தாராபுரம் … Read more

மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உட்பட 4 எம்.பி-க்கள் சஸ்பெண்ட்: நாடாளுமன்ற ஹைலைட்ஸ்

நாடாளுமன்றத்தில் போராட்ட வாசகங்கள் அடங்கிய அட்டைகளைக் காட்டியதால் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் டி.என்.பிரதாபன் ஆகிய 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட நாடாளுமன்றத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம். இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்றுக்கொண்ட திரௌபதி முர்மு, பல ஆண்டுகளாக வளர்ச்சியில்லாமல் இருந்த ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் – தன்னைத் தங்களின் பிரதிபலிப்பாகப் பார்ப்பது … Read more

“மடிக் கணினி எப்போது வழங்கப்படும்?” – மாணவியின் கேள்விக்கு முதலமைச்சர் பதில்

மடிக் கணினி எப்போது வழங்கப்படும் என்ற பள்ளி மாணவியின் கேள்விக்கு, விரைவில் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். கடந்த கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு முடித்த ஆறு லட்சத்து 35 ஆயிரம் மாணவர்களுக்கு 323 கோடி ரூபாய் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை தமிழக அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தை தொடக்கிவைக்கும் விதமாக சென்னை நுங்கம்பாக்கம், சென்னை மேல்நிலைப் பள்ளியில் 10 மாணவர்களுக்கு முதலமைச்சர் மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர் முதலமைச்சர் மாணவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொள்ள … Read more

தமிழகத்தில் இலவச வேட்டி, சேலை திட்டம் விரைவில் நிறுத்தம்: தங்கமணி கணிப்பு

நாமக்கல்: “இலவச வேட்டி, சேலை திட்டம் நிறுத்தப்படவுள்ளது. இதனால் லட்சணக்கான தொழிலாளர்கள் வாழ்வதாரம் இழக்கப் போகின்றனர்” என நாமக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி பேசினார். நாமக்கல் பூங்கா சாலையில் அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி தலைமை வகித்துப் பேசியது: ”கடந்த 10 ஆண்டு காலம் தமிழகத்தில் மின்வெட்டு என்பதே இல்லை. ஆனால், ஆட்சியேற்ற பத்தே நாளில் தமிழகத்தில் மின்வெட்டு … Read more