கூடலூர்: இடிந்து விழுந்த நூலகத்திற்குள் கிடந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள்

கூடலூரில் இடிந்து விழுந்த நூலகத்திற்குள் உள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை மீண்டும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூரில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நகர் பகுதியில் உள்ள நூலக கட்டிடம் நேற்று மாலை இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த இடிபாடுகளுக்குள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் சிக்கி கொண்டன. நேற்று மாலை புத்தகங்களை மீட்பதற்கான பணிகள் நடந்த நிலையில் கனமழை காரணமாக முடியாமல் போனது. இன்று காலை மழை குறைந்த … Read more

சென்னையில் இந்த ஏரியாக்களில் தண்ணீருக்கு அடியில் மெட்ரோ ரயில்!

Chennai Tamil News: சென்னையில் உள்ள அடையாறு ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய்களுக்கு அடியில் மெட்ரோ கட்டுவதற்கு தமிழ்நாடு கடலோர மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. சுமார் 55 கிலோமீட்டர் இடைவெளிக்கு ஒரு மெட்ரோ ரயில்கள் என இயங்கிக்கொண்டிருக்கும் சென்னையில், இரண்டாம் கட்டமாக 118.9 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை கட்ட முடிவெடுத்துள்ளனர். இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் கட்டுமானத்திற்கு ரூ.63,200 கோடி செலவாகும் என கூறுகின்றனர். மேலும், … Read more

பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறைப்படி நீர்மட்டத்தை நிலைநிறுத்த அதிகாரிகள் ஆய்வு

குமுளி: கனமழையினால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆகவே, ரூல்கர்வ் முறைப்படி நீர்மட்டத்தை நிலைநிறுத்துவதற்கான ஆய்வினை தமிழக அதிகாரிகள் மேற்கொண்டனர். முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்மட்டம் 139.6 அடியை கடந்துள்ளதுடன் விநாடிக்கு 11 ஆயிரத்து 893 கனஅடிநீர் வரத்தும் உள்ளது. மத்திய நீர்வள ஆணையத்தின் ரூல்கர்வ் விதிமுறைப்படி ஆக.10-ம் தேதி வரை 137.5 அடி அளவிற்கே நீரைத் தேக்க வேண்டும். ஆனால் அதீத … Read more

விட்ருங்க… ரஜினியை சீரியசாக எடுத்துக்காதீங்க- வைகோ பளார்!

கோவை காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள மதிமுக அலுவலகத்தில் கழக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வைகோ, அண்ணா பிறந்தநாள் அன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் கோவை மாவட்டத்தில் மதிமுக செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, மதிமுக புத்துணர்ச்சி பெற்று மீண்டும் தமிழகத்தின் … Read more

மாமியார் – மருமகள் சண்டை தீர மாந்திரீகம் செய்வதாக கூறி தங்க நகைகளை அபேஸ் செய்த இளைஞர்!

ஆம்பூரில் மாமியார்-மருமகள் சண்டைகள் தீரும், தங்க நகை இரட்டிப்பாக கிடைக்கும் எனக் கூறி மாந்தீரீகம் செய்து தருவதாக இளைஞர் ஒருவர் 4 சவரன் தங்க நகையை ஏமாற்றி வாங்கிக்கொண்டு தப்பிசென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கெங்காபுரம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் இன்று காலை வந்த இளைஞர் அப்பகுதியில் உள்ள பெண்களிடம் மாமியார்-மருமகள் சண்டைகள் தீரும், நகைகள் இருட்டிப்பாக கிடைக்கும் எனக் கூறி மாந்திரீகம் செய்து தருவதாக கூறி வீட்டில் உள்ள தங்க நகைகளை … Read more

நிதிஷ் பாஜக மோதல்; பிகார் சட்டப்பேரவையில் யாருக்கு பலம்!

பிகாரில் பாரதிய ஜனதா உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று (ஆகஸ்ட் 09) தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பாகு சௌகானிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ராப்ரி தேவி இல்லத்தில் இரண்டாவது முறையாக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ்வை சந்தித்து அவரின் ஆதரவுடன் ஆட்சியமைக்க மீண்டும் ஆளுநர் பாகு சௌகானை சந்தித்து ஆதரவு கோரினார். 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தனிப்பெரும் கட்சியாக … Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயில் மோதி பலி

திருப்பத்தூர் மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சீனிவாசன்(36). இவருடைய மனைவி கல்பனா. இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சீனிவாசன் சோமனநாயக்கன்பட்டி பச்சூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து பெங்களூர் நோக்கி சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து … Read more

கட்டிலுக்கு அடியில் கேமராவை திருப்பு.. வீடியோ கால் வில்லங்கம்.. குற்றமற்றவளாக உயிரை மாய்த்த பெண்..!

சிங்கப்பூரில் இருந்து தினமும் வீடியோ கால் பேசி மனைவியை வேவு பார்த்த கணவனின் விபரீத செயல் தெரியவந்த நிலையில் குற்றமற்றவள் என்பதை நிரூபித்த மனைவி உயிரைமாய்த்துக் கொண்ட விபரீத சம்பவம்  நாகர்கோவில் அருகே அரங்கேறி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள பெரியவிளையை சேர்ந்தவர் செந்தில். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஞானபாக்கியபாய் , கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். சிங்கப்பூரில் இருந்து தினமும் … Read more

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: சிவமணியுடன் இணைந்து டிரம்ஸ் வாசித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் சிவமணியுடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிரம்ஸ் வாசித்தார். சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று நிறைவு பெற்றது. இதில் 186 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. நிறைவு விழா மேடையில் தமிழக முன்னாள் முதல்வர்களான … Read more

வாண்டடா வண்டியேறிய ரஜினிகாந்த் – சீறிப் பாயும் அரசியல் கட்சிகள்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசி உள்ளதற்கு, அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இவர், அரசியலுக்கு வருவேன் எனக் கூறுவதும், பிறகு, அரசியலுக்கு வர மாட்டேன் எனக் கூறுவதும் தமிழக மக்களுக்கு புளித்துப் போன செய்தி. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு படு தீவிரமாக தயாராகிய ரஜினிகாந்த், அதே தீவிரத்துடன், உடல் நலத்தை காரணம் காட்டி, அரசியலில் … Read more