எப்படி அரசியல் பண்ணுவது யோசிப்பது நான் இல்ல: பாஜக தலைவர் அண்ணாமலை பதற்றம்

சென்னை: இதை எப்படி அரசியல் பண்ணுவது யோசித்துக் கொண்டிருக்கிறேன்…” என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் உயிரிழந்த இராணுவ வீரர் இலட்சுமணன் உடலுக்கு  அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்த சென்றிருந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பா.ஜ.க.வினரோடு ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக 3 பெண்கள் உட்பட 5க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கடந்த சட்டமன்ற … Read more

திருச்சி அருகே பள்ளி வேன், பள்ளி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து

திருச்சி: திருச்சி, ஶ்ரீரங்கம் அருகே பள்ளி வேன், பள்ளி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 3 மாணவர்கள் உட்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பரந்தூர் விமான நிலையம் அமைய வேண்டுமா ? 7 பேர் கொண்ட குழு அமைக்கிறோம்: அன்புமணி ராமதாஸ்  

ஜி.கே. மணி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து, பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மக்களின் எதிர்ப்புகளை ஆய்வு செய்ய உள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். காஞ்சிபுரம் அருகே பரந்தூர் பகுதியில் விமான நிலையம்,  அமைப்பதற்கு 12 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புகள் எடுக்கப்படுவதால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என கூறி விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பரந்தூர் … Read more

70-வது பிறந்தநாள் கொண்டாட்டம் | தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்: ஆளுநர் தமிழிசை, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது பிறந்தநாளையொட்டி கட்சித் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார். அவருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்து ம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகாலை முதலே தலைமை அலுவலகத்துக்கு வரத் தொடங்கினர். பகல் 12 மணி அளவில் விஜயகாந்த் வந்தார். … Read more

கால்சென்டர் அமைத்து பொதுமக்களிடம் பல லட்சம் மோசடி

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு அபிராமி நகரைச் சேர்ந்தவர் சண்முகவேல் மகன் மணிகண்டன்(36). மரவாடியில் கூலி வேலை பார்க்கும் இவரிடம் கடந்த ஏப்ரல் மாதம் தனியார் நிதி நிறுவனத்தில் (மகேந்திரா பைனான்ஸ்) இருந்து பாண்டிச்சேரியை சேர்ந்த சுந்தரபாண்டியன் என்று செல்பொனில் தொடர்பு கொண்ட நபர் ரூ.2 லட்சம் தனிநபர் கடன் தருவதாக கூறியுள்ளார். லோன் பெறுவதற்கு முதலில் லோன் பிராசஸிங்குக்கு இன்ஸியல் தொகையாக ரூ.8000-ஐ வங்கிக்கணக்கில் செலுத்தச் சொல்லியுள்ளார். மணிகண்டன் பணம் அனுப்பியதைத் தொடர்ந்து மறுநாள் ரூ.7340 … Read more

மக்கள் கோரிக்கைகளை துரிதமாக நடைமுறை படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் அறிவுறுத்தல்

தஞ்சை: தஞ்சாவூரில் மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவர் உஷா புன்னியமூர்த்தி தலைமையில் துணை தலைவர் முத்துச்செல்வன், ஊராட்சி செயலர் முன்னிலையில் நேற்று காலை பனகல் கட்டடத்தில் மாவட்ட ஊராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை கூறினார். இதில் ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் கூறியதாவது: அனைத்து புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அனைத்து ஆணையர்களுக்கும் வலிவுறுத்தினர். மேலும் அடுத்த கூட்டத்தில் … Read more

சென்னை: கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் – ஆவடி மக்கள் அவதி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக ஆவடி மாநகராட்சியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது இதன் காரணமாக தாழ்வான பகுதி மட்டுமின்றி பிரதான சாலைகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பிருந்தாவனம் நகர் பகுதியில் குடியிருப்புகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் … Read more

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க மாவட்டம்தோறும் பயிற்சி மையங்கள்: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு

சென்னை: கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க மாவட்டம்தோறும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தின் 3-வது ஆட்சிமன்றக் குழு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து அமைச்சர் கணேசன் பேசியதாவது: தமிழ்நாடு கட்டுமானக் கழகம் சீரமைக்கப்படும். அதன் செயல்பாடுகள் சிறப்பாக அமைய, செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் பயிற்சி … Read more

ராமநாதபுரம் ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு

National Award for Teachers: 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதை, தமிழ்நாட்டில் இருந்து ஒரே ஓர் ஆசிரியர் அதுவும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் பெற்றுள்ளார். மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றி, இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவரின் பணிகளைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதை அடுத்து நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு, இந்த நாளில் மத்திய … Read more

திருத்தணி ஒன்றியத்தில் உள்ள சுடுகாடுகள் சீரமைக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில் உள்ள அனைத்து சுடுகாடுகளையும் சீரமைக்கவேண்டும் என்று மக்களும் சமூகநல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்தில் அடங்கிய 27 ஊராட்சிகளில் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள அனைத்து கிராமங்களிலும் இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம் என மூன்று மதத்தினருக்குமான சுடுகாடு, இடுகாடுகள் தனித்தனியாக உள்ளது. இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான சுடுகாடு, இடுகாடுகள் பராமரிப்பின்றி விடப்பட்டதால் கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டிக் காணப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் அனைத்து சுடுகாடு … Read more