தருமபுரி மாவட்டத்தில் 2வது நாளாக அன்புமணி ராமதாஸ் நடைபயணம்: ஏரி, குளங்களில் காவிரி உபரிநீரை நிரப்ப கோரிக்கை..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 2வது நாளாக நடைபயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். காவிரி உபரிநீர் திட்டத்தை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களில் நிரப்பக்கோரி ஒகேனக்கல்லில் நேற்று அவர் நடைப்பயணத்தை தொடங்கினார். 2வது நாளாக குறும்பட்டி டீக்கடை என்ற இடத்தில் இருந்து நடைபயண பரப்புரையை தொடங்கினார். சோலைக்கொட்டாய், நடுபட்டி, ஒடசல்பட்டி, கடத்தூர், சில்லாரஹள்ளி, நத்தமேடு பேருந்து நிறுத்தம், ஜாலியூர் வரை … Read more

கோவை: முக பிளீச்சிங் செய்தபோது சிறுவனின் முகம் சிதைந்த விவகாரம்: 2 வடமாநில இளைஞர்கள் கைது

கோவையில் முக பிளீச்சிங் செய்ய சலூன் சென்ற பள்ளிச் சிறுவனின் முகம் நீராவி பட்டு சிதைந்த விவகாரம் தொடர்பாக சலூன் கடை நடத்தி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பீகார் மாநிலம் மாத்வானியை சேர்ந்தவர் 22 வயதான வித்யானந்தன். இவரும் இவரது உறவினரான 32 வயதான சஞ்சய் தாஸ், பால் கம்பெனி பகுதியில் ‘ராக் மென்ஸ்பியூட்டி சலூன்” என்ற பெயரில் அழகு நிலையம் நடத்தி வருகின்றனர். இந்த சலூனுக்கு … Read more

சென்னையில் 10,664 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு

சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக மழைநீர் வடிகாலில் கொடுக்கப்பட்டிருந்த 10,664 கழிவுநீர் இணைப்புகளை மாநகராட்சி துண்டித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 2,071 கி.மீ. நீளமுள்ள 8,835 மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பல மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் இணைப்பு சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால், மழைநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, மழைக் காலங்களில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவற்றை தடுக்கும் வகையில், மழைநீர் வடிகாலில், சட்டவிரோதமாக கொடுக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்க, மாநகராட்சி வார்டு வாரியாக குழு அமைக்கப்பட்டு … Read more

பாராளுமன்ற தேர்தலில் திமுக – பாஜக கூட்டணி?.. விபி துரைசாமி பரபரப்பு பேட்டி!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர் மாவீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அவரது நினைவு தினத்தை ஒட்டி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில துணை தலைவர் விபி.துரைசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது: “பாகுபாடு இல்லாமல் அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் பாஜக அஞ்சலி செலுத்தி வருகிறது. விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரனுக்கு இன்று தபால் தலை வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் சொத்து வரி, … Read more

"மு.க ஸ்டாலின் வைத்த செக்" பதறியடித்து கடிதம் எழுதிய ஆளுநர் ஆர்.என் ரவி!

தமிழகம் முழுவதும் 13 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இந்த பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் இன்றுவரை ஆளுநர் வசம் இருந்து வருகிறது. அதேபோல், மாநில அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிக்கும்போது, அம்மாநில அரசிடம் கலந்தாலோசிக்கப்படுவது வழக்கம். ஆனால் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள  ஆர்.என் ரவி தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் தற்போது வரை 3 துணைவேந்தர்களை நியமித்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்நிலையில் இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் பேசப்பட்ட நிலையில், மாநில … Read more

சிவகங்கை அருகே விபத்தில் சாலையில் சிதறி கிடந்த கண்ணாடி துண்டுகளை அகற்றிய சிறுவனுக்கு பலரும் பாராட்டு

சிவகங்கை: சிவகங்கை விபத்தில் சாலையில் சிதறி கிடந்த கண்ணாடி துண்டுகளை அகற்றிய சிறுவனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து  வருகின்றனர். சிவகங்கை பேருந்து நிலையம் அருகே அண்மையில் அரசு பேருந்தும், காரும் மோதிக் கொண்டன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், கண்ணாடித் துண்டுகள் உடைந்து சாலையில் சிதறிக் கிடந்தன. அப்போது அப்பகுதியில் ஊசி, பாசி விற்றுக் கொண்டிருந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த சிறுவன் அருகேயுள்ள கடையில் இருந்த துடப்பத்தை எடுத்து வந்து கண்ணாடி துண்டுகளை கூட்டி சாலையோரம் … Read more

மெடிக்கலில் போதை ஊசி விற்ற விவகாரம்: முன்ஜாமீன் மனு தள்ளுபடி

மருத்துவத்துறையில் அரிதாக பயன்படுத்தக்கூடிய மருந்துகளை போதைக்காக உபயோகப்படுத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது; இதை தீவிர குற்றமாக நீதிமன்றம் கருதுகிறது எனவும், இதுபோன்ற வழக்கில் காவல்துறை விசாரணை தேவைப்படுவதால் முன்ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த அண்ணாதுரை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “புதுக்கோட்டையில் நகர் பகுதியில் சொந்தமாக மெடிக்கல் வைத்து நடத்தி வருகின்றேன். என் மீது போதை ஊசி விற்றதாக வழக்குப்பதிவு … Read more

சேலத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்பு திட்ட இயக்குநர் ஒப்புதல் இல்லாமலும் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், அரிசிபாளையத்தில் செயல்பட்டு வந்த சாய் விஹார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்பு திட்ட இயக்குனர் ஒப்புதலும் இல்லாமல் செயல்பட்டு வருவதாக கூறி, பள்ளியை மூன்று நாட்களில் மூடும்படியும், மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கவும் சேலத்தில் உள்ள வட்டார … Read more

'இந்தியாவே அந்த நாயோட பெருமையத்தான் பேசுது'… அமர் பிரசாத்துக்கு இயக்குனர் நவீன் பதிலடி

நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 15 அன்று 75 வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கோடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, நாட்டு மக்கள் அனைவரும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 5 இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும் என்று கூறி ஒவ்வொன்றாக பட்டியலிட்டார். அந்த வகையில், 5 வது இலக்கை பிரதமர் விவரித்தபோது, மாநில அரசுகள் மக்களுக்கு இலவசங்களை அறிவிக்காமல் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சி … Read more

கள்ளக்காதலியை மிரட்ட முயன்று தவறுதலாக தற்கொலை செய்துகொண்ட பாடகர்!

வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த இடையகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (42). இவர் இசை கச்சேரி குழு வைத்து நடத்தி வந்துள்ளார். திருமணமாகி (மனைவி மேரி) 2 பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், இவருடைய இசைக்குழுவில் பாடகராக உள்ள சித்ரா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பில்  இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுடன் பொன்னை அடுத்த மாதாண்டகுப்பம் பகுதியில் வீட்டிற்கு தெரியாமல் தனியாக வீடு எடுத்து ராஜா வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து கள்ளத்தொடர்பில் இருந்த சித்ராவுக்கும், … Read more