கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதிகேட்டு போராட்டம் என பரவிய தகவல்: கல்லூரி முன் குவிந்த போலீஸ்

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப்போவதாக வந்த தகவலையடுத்து சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் கந்தசாமி கல்லூரிக்கு போலீஸ் பாதுகாப்பு விடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் படித்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாக, கல்லூரி மாணவர்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தப்போவதாக வாட்ஸ்-அப்பில் தகவல்கள் பரவியுள்ளது. குறிப்பாக அண்ணா நகர் கந்தசாமி கல்லூரி மற்றும் கீழ்பாக்கம் பச்சையப்பன் கல்லூரிகளில் போராட்டம் நடக்க … Read more

துணை ஜனாதிபதி தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் விலகி இருக்க முடிவு

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியின் இல்லத்தில் ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னாள் மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கரை நிறுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டுள்ளார். எம்.பி.க்கள் கூட்டத்திற்குப் பிறகு, அகில இந்திய … Read more

மதுரை.! இருசக்கர வாகனம் லாரி மீது மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.!

மதுரையில் இருசக்கர வாகனம் லாரி மீது மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தன்(23). இவர் டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஆனந்தன், உறவினரான முத்து கணேசனுடன் இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது தொட்டப்பநாயக்கனூர் தனியார் பள்ளிய அருகே சென்ற போது திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி முன்னாள் சென்ற லாரி மீது மோதி … Read more

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பாடப் புத்தகம் வழங்கப்படாமல் இல்லை: தமிழிசை விளக்கம்

புதுச்சேரி: “மாணவர்கள் தினம் ஒரு சுதந்திர போராட்ட வீரர் பற்றி படித்து தெரிந்துகொள்ள வேண்டும்” என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகம், சீருடை வழங்கப்படாமல் இருப்பது குறித்து குற்றச்சாட்டுக்கும் அவர் பதில் அளித்தார். இந்திய நாட்டின் 75வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில முழுவதும் உள்ள 75 பள்ளிகளுக்கு சென்று பார்வையிட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியை … Read more

எச்சரித்தும் அனுமதியின்றி நடத்தப்பட்ட விடுதி: கள்ளக்குறிச்சி பள்ளி குறித்த பகீர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளி விடுதி அனுமதி இன்றி செயல்பட்டு வந்தது மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விசாரணையில் தெரிய வந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தியது. ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி தலைமையில் உறுப்பினர்கள் துரைராஜ், சரண்யா ஜெயக்குமார் மற்றும் முரளி ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். முன்னதாக கள்ளக்குறிச்சி … Read more

‘எனக்கும் ரக்ஷிதாவுக்கும் டைவர்ஸ் ஆகவில்லை; தற்காலிக பிரிவு’: சீரியல் நடிகர் தினேஷ்

திரைப்படங்களை விட தற்போது சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவர்களுக்காக ரசிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் பல நடிகைகள் பட வாய்ப்பு கிடைத்து சினிமாவில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் சீரியல் தொடங்கி சமீபத்தில் நிறைவடைந்த நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. இதில் சரவணன் மீனாட்சி சீசன் … Read more

#ஈரோடு || மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து.! ஒருவர் உயிரிழப்பு.!

ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொங்கு நகரை சேர்ந்தவர் பீட்டர்(46). இவருக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை தனது இரண்டு மகள்களையும் மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு பீட்டர் பள்ளியில் விடுவதற்காக சென்றுள்ளார். பின்பு பள்ளியில் மகள்களை இறக்கிவிட்டு, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது ஐயப்பன் நகர் பகுதியில், அந்த வழியாக வந்த லாரி ஒன்று பீட்டர் மீது மோதியது. … Read more

அனுமதியே பெறாமல் விடுதி நடத்திய கள்ளக்குறிச்சி பள்ளி: மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல்

கள்ளக்குறிச்சி: “கள்ளக்குறிச்சியில் மாணவி மர்மமான உயிரிழந்த பள்ளியில் விடுதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், விடுதியை நடத்துவதற்கான அனுமதி இதுவரை பள்ளி நிர்வாகம் வாங்கவில்லை. அனுமதி வாங்காமல் விடுதியை நடத்தி வந்தது மிகப்பெரிய தவறு” என்று மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் மர்ம மரணமடைந்த மாணவி இறப்பு குறித்து மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையிலான … Read more

’’அதிமுக எம்.பி.யாக ரவீந்திரநாத்தை கருத வேண்டாம்”- இபிஎஸ் எழுதிய கடிதம்

நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுகவில் இல்லை என சுட்டிக்காட்டி, மக்களவை சபாநாயகருக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட அன்றே ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப் உள்ளிட்டோரையும் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பின் அடிப்படையில், ஓ.பி.ரவீந்திரநாத் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் அவர் அதிமுகவில் இல்லை … Read more

நயன்தாரா- விக்கி கல்யாண வீடியோ: வருமா, வராதா?

தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடியாக வலம் வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்தி ஹோட்டலில் நடைபெற்ற இந்த திருமணத்தில் உறவினர்கள் மற்றும் திரைத்துரையின் முக்கி பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்றனர் மேலும் திருமணத்திற்கு வருபவர்கள் செல்போன் கொண்டுவரக்கூடாது என பல தடைகள் விதிக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் பிரபல ஒடிடி தளமான நெட்.ஃபிளிக்ஸ் விக்கி நயன் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமத்தை ரூ 25 … Read more