குன்னூரை முழுவதுமாக மறைத்த 'மிஸ்ட்' – கடுமையான குளிரில் மக்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான டால்பினோஸ், லேம்ஸ்ராக் உள்ளிட்ட காட்சி முனைகளில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால் சுற்றுதலங்களை காணமுடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் குன்னூர் நகரப் பகுதியில் காலை முதல் சாரல் மழைப் பெய்வதால் குளிர்ந்த கால நிலை நிலவுகிறது. நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான லேம்ஸ்ராக்,டால்பினோஸ் போன்ற காட்சிமுனைகளில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது, இதன் காரணமாக காட்சிமுனைகளை காண முடியாமல் சுற்றுலாப் பயணிகளில் ஏமாற்றத்துடன் … Read more

சென்னையில் பல இடங்களில் புதன்கிழமை (ஜூன்:22) மின்தடை.. எங்கெங்கே தெரியுமா?

பராமரிப்புப் பணிகளுக்காகப் பின்வரும் பகுதிகளில் புதன்கிழமை (22.06.2022) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிந்தால் மதியம் 02.00 மணிக்கு முன் விநியோகம் தொடங்கப்படும். சென்னையில் புதன்கிழமை (ஜூன்;22) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. எந்தெந்த பகுதிகளில்? அண்ணாசாலை: பூதபெருமாள் கோயில் தெரு, … Read more

நம் சித்தர்கள் உருவாக்கிய அற்புதக் கலை யோகாசனம் – மருத்துவர் இராமதாஸ்.!

நோயில்லா வாழ்க்கையை உறுதி செய்ய நமது சித்தர்கள் உருவாக்கிய அற்புதக் கலை யோகாசனம். இன்று உலக யோகாசன நாள் கொண்டாடப்படுகிறது.  இதனை முன்னிட்டு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  “அகமும், புறமும் நலம் பெறுவதற்கான அருமருந்து யோகாசனம் :  நோயில்லா வாழ்க்கையை உறுதி செய்ய நமது சித்தர்கள் உருவாக்கிய அற்புதக் கலை யோகாசனம். உடலையும், மனதையும் வலுப்படுத்தும் அருமருந்து யோகாசனம். இதை அனுபவித்து உணர்ந்தவன் நான். உலக யோகா நாளான இன்று முதல் அனைவரும் … Read more

ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துக்கள் முடக்கம்.!

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 70 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. அதிக வட்டி தருவதாக அறிவிக்கப்பட்ட, கவர்ச்சிகரமான திட்டங்கள் தொடர்பாக எழுந்த புகாரின் பேரில், கடந்த மே மாதம் 24ம் தேதி இந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. அதில் கணக்கில் காட்டப்படாத 3 கோடியே 41 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, ஆருத்ரா … Read more

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் திறப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 24 அடியாகும். இன்று காலை நிலவரப்படி ஏரியில் தண்ணீர் இருப்பு 23.48 அடியாக உள்ளது. எனவே செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு அளவான … Read more

ஓபிஎஸ் பலம் குறைகிறதா? எத்தனை மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு?

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. அவருக்கு ஆதரவாக இருந்த 2 மாவட்டச் செயலாளர்கள் திடீரென எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறியதால் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 10-ஆக குறைந்துள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் மீண்டும் எழுந்ததை அடுத்து, கட்சிக்கு ஓ. பன்னீர்செல்வம் தான் தலைமை வகிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்களும், இதற்கு பதிலடியாக, எடப்பாடி பழனிசாமிதான் தலைமை பதவிக்கு வர வேண்டும் என … Read more

O Panneerselvam vs Edappadi Palanisamy LIVE: ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை சிறப்பாக வழிநடத்தியவர் இ.பி.எஸ்- தச்சை கணேச ராஜா!

Go to Live Updates அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கட்சியில் தற்போது வெடித்துள்ள ஒற்றை தலைமை என்ற விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டு போகிறது. இந்த விவரகாரம் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக தொடர்ந்து 8 வது நாளாக ஆலோசனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒற்றை தலைமை வேண்டும் என்று தான் சொல்கிறோம். யார் … Read more

பரிதவிக்கும் ஓபிஎஸ்.. திடீரென இபிஎஸ் பக்கம் தாவிய முக்கிய நிர்வாகிகள்.!!

அதிமுகவில் வருகின்ற 23-ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஒன்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைமையை கைப்பற்ற ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடிபழனிசாமி இடையே உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.  தலைமையை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். ஓ பன்னீர்செல்வம் இரட்டைத் தலைமையே  தொடர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இதனிடையே 8-வது நாளாக இன்றும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  … Read more

ஈரோடு அரசு மருத்துவர்கள் இருவர் சஸ்பெண்ட்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நாமக்கல்: ஈரோடு அரசு மருத்துவமனையில் பணி நேரத்தின்போது பணியில்லாத மருத்துவர் மற்றும் மகனை மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதித்த மருத்துவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போதைமலைக்கு உட்பட்ட மலைக் கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். … Read more

முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை – 27 ஆம் தேதி கூடும் தமிழக அமைச்சரவை

தமிழக அமைச்சரவைக்கூட்டம் வரும் ஜூன் 27ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைப்பெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், நடைப்பெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில், இதில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், … Read more