குஜராத், கர்நாடகத்தில் முடியும் போது, உங்களால் முடியாதா?! திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி!

ஜி.எஸ்.டி காரணம் காட்டி நான்கே மாதத்தில் இரண்டாவது முறையாக விலையேற்றம் செய்திருப்பது மக்களை பாதிக்கும் செயல், உடனடியாக திரும்ப பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.  அவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் ஆவின் தயிர், நெய் ஆகியவற்றின் விலைகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.45 வரை விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில், ஏழை மக்களை பாதிக்கும் வகையிலான இந்த விலை உயர்வு நியாயமற்றது; ஏற்றுக் கொள்ள முடியாதது.  கடந்த மார்ச் … Read more

அதிர்ச்சி கொடுத்த ஆவின்.. பால் பொருட்கள் விலை திடீர் உயர்வு..!

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்துவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 100 கிராம் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ஆக உயர்ந்துள்ளது. 200 கிராம் தயிர் விலை 25 ரூபாயில் இருந்து 28 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் நெய்க்கு 50 ரூபாயும், ஒரு லிட்டர் தயிருக்கு 10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரை லிட்டர் தயிர் 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. … Read more

மாணவர் நலனுக்காக தற்கொலை தடுப்பு படை: தமிழக அரசுக்கு கமல் வலியுறுத்தல்

சென்னை: மாணவர்களின் நலன் கருதி தற்கொலை தடுப்பு படையை அமைக்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான ஜூன் 20-ம் தேதி மட்டும் தமிழகத்தில் ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த சில நாட்களில் உயிர்க்கொல்லி நீட் என்னும் அநீதியால் 3 மாணவர்கள் தற்கொலை, மேச்சேரி அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவி … Read more

குட்கா ஊழல்; வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி சிபிஐ கடிதம்; தமிழக அரசு விரைவில் பரிசீலனை   

குட்கா ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் எதிராக சட்ட ரீதியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முன்அனுமதி கோரி தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில் தமிழக விரைவில் இது தொடர்பாக பரீசீலனை செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது.   சென்னை புறநகரில் உள்ள எம்டிஎம் என்ற பான் மசாலா நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் கடந்த 2016-ம் ஆண்டு நடத்திய சோதனையில் அந்நிறுவனம் ரூ.250 … Read more

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்புகிறார்.?

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வீடுதிரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வீடுதிரும்ப உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 4 நாட்களாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  கடந்த 18 … Read more

சின்னசேலம் மாணவி உடலை வாங்க பெற்றோர் மறுப்பு – உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரது வீட்டில் வருவாய்த் துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இதற்கிடையில், பெற்றோர் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தொடர்பாக இன்று (ஜூலை 21) விசாரணை நடைபெறுகிறது. கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கத்தின் 16 வயதான மகள், சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். … Read more

அதிமுக தலைமை அலுவலக சாவி இபிஎஸ் வசம் – உயர் நீதிமன்ற தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் ஓபிஎஸ் தரப்பு

சென்னை: சீல் வைக்கப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தின் சாவியை, இபிஎஸ் வசம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், ஒரு மாதத்துக்கு தொண்டர்களை கட்சி அலுவலகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என நிபந்தனை விதித்துள்ளது. ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக கடந்த 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் முன் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக் கொண்டனர். இதையடுத்து, கட்சி அலுவலகத்துக்கு கோட்டாட்சியர் சீல் வைத்தார். அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓபிஎஸ்-இபிஎஸ் … Read more

'தேர்தலில் வெற்றிப்பெற கூப்பனும் பணமும் முக்கியம்.. ஆனால்' – நத்தம் விஸ்வநாதன் பேச்சு

“வரும் காலங்களில் தேர்தலில் வெற்றி பெற கூப்பன்கள் மற்றும் பணம் வழங்குதல் முக்கியம்தான். ஆனாலும் பணம் மட்டுமே வெற்றியை தேடி தராது” என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் பேசிய சர்ச்சை பேசால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் – நத்தம் சாலையில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் அதிமுகவின் கழக துணை பொது செயலாளராக … Read more

காவிரியில் கரைபுரளும் வெள்ளம்: தடுப்புச் சுவர்களுக்கு ஆபத்து

க.சண்முகவடிவேல், திருச்சி மேட்டூரில் இருந்து 1 லட்சம் கனஅடிக்கும் மேல் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழந்திருக்கின்றது. மேலும் முக்கொம்புவில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் இருகரை தொட்டு தண்ணீர் ஆர்ப்பரிக்கின்றது. இதனால் கொள்ளிடம் கரையோரங்களில் வசித்து வந்தவர்கள் பாதிப்படைந்திருக்கின்றனர். மேலும், ஸ்ரீரங்கம் தாத்தாச்சாரியார் தோப்பு கிழக்கு பகுதி காவிரி அற்றில் 2010-ல் நபார்டு நிதி உதவியின் கீழ் கட்டப்பட்ட … Read more

சொத்து தகராறு.. அண்ணியை ஓட ஓட வெட்டிய கொழுந்தனார்.. கடலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

சொத்து பிரச்சனையால் பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் காவேரி. அவரது கணவர் இறந்துவிட்டதால் குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இவருக்கும் அவரது கணவரின் சகோதரருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், சம்பவதன்று சொத்து பிரச்சனை தொடர்பாக இருவருக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதனால், அங்கிருந்த அரிவாள் மனையால் சுப்ரமணியன் அண்ணி காவேரியை ஓட ஓட வெட்டியுள்ளார், அவரை மீட்ட … Read more