ஏக்கருக்கு ரூ.5,000 வரை மிச்சம்: குறுவை சாகுபடியில் நேரடி நெல் விதைப்பில் டெல்டா விவசாயிகள் ஆர்வம்

தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் வழக்கத்தைவிட நிகழாண்டு நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். இதனால் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வரை செலவை மிச்சப்படுத்தி உள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகமும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் குறுவை சாகுபடியில் குறுகியகால ரகங்களான 110 நாள் வயது உடைய நெல் ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்து சாகுபடி மேற்கொள்வது வழக்கம். இதற்காக பம்பு … Read more

போதையில் மட்டையான பாஜக பிரமுகர் – தூக்கிச் சென்ற தொண்டர்கள்

திருப்பூர் மாவட்டத்தில் மது போதையில் நடக்க முடியாமல் இருந்த மாதப்பூர் பஞ்சாயத்து தலைவரை பாஜகவினர் தூக்கி சென்ற காட்சி வெளியாகி உள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூர் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் அசோக்குமார். பாஜகவை சேர்ந்த இவர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். கடந்த 17ம் தேதி பல்லடம் ராயர்பாளையத்தில் பாஜவின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்து … Read more

‘டிஎன்பிஎஸ்சி தேர்வு விண்ணப்பங்களில் இனி இறுதிநாள் வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம்’

சென்னை: டிஎன்பிஎஸ்சியில் இனிவரும் காலங்களில் வெளியிடப்படும் அறிவிக்கைகளுக்கான இணையவழி விண்ணப்பங்களில், விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த விவரங்களை, விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் வரை மாற்றிக்கொள்ள வாய்ப்பளிக்கப்படும் என்று தேர்வாணைய செயலாளர் பி.உமா மகேஸ்வரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பல்வேறு தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை இணையவழியே பெற்றுவருகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை, இணையவழியில் சமர்ப்பிக்கும் போது அறியாமல் சில தகவல்களை தவறாகப் பதிவு செய்துவிடுகின்றனர். இதனால், ஒருசில விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படவேண்டிய … Read more

விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: லடாக் சென்று திரும்பிய இளைஞர்களுக்கு பாராட்டு

ஜெயங்கொண்டத்தில் இருந்து லடாக் வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்ட இளைஞர்கள் மீண்டும் ஜெயங்கொண்டம் திரும்பினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த வினோத், ராசு ஆகிய இரு இளைஞர்களும் கடந்த ஜூன் 1-ஆம் தேதி சைக்கிள் மூலம் ஜெயங்கொண்டத்தில் இருந்து புறப்பட்டு ஜூன் 31-ஆம் தேதி லடாக்கை சென்றடைந்தனர். ஒருநாள் அங்கு தங்கியிருந்த நிலையில் ஜூலை 2-ஆம் தேதி லடாக்கில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கிய அவர்கள் இன்று 20ஆம் தேதி ஜெயங்கொண்டத்தை … Read more

580 பில்லியன் ஆக குறைந்த அமெரிக்க டாலர் கையிருப்பு- எச்சரிக்கும் எஸ்பிஐ தலைவர்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.80 ஆக சரிந்துள்ளது. வரும் நாள்களில் இது ரூ.80 ஆக கூட சரிய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தலைவர் தினேஷ் குமார் ஹாரா இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு சிறப்பு பேட்டி அளித்திருந்தார். அப்போது செயற்கையான செயல்கள் மூலம் இந்த சரிவை ஈடுகட்ட முடியாது என்றார். இது குறித்து பேசிய அவர், “இந்திய பணமதிப்பு சரிந்துவரும் விவகாரத்தில் செயற்கையான தலையீடு … Read more

தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.!

 தமிழகம் உள்ளிட்ட  9 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, இன்று அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம், கேரளம், மேற்குவங்கம், மகாராஷ்டிரம், மிசோரம், அசாம், ஆந்திரம், ஹிமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த மாநிலங்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரமாக பின்பற்றுமாறும் அறிவுறுத்தி இருக்கிறார். மேலும், … Read more

“மத்திய அரசின் முகவர் போல நடந்துகொள்கிறது காவிரி மேலாண்மை ஆணையம்” – அமைச்சர் துரைமுருகன்

புதுடெல்லி: “மத்திய நீர் ஆணையமும், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையமும் தற்போது நியாயப்படி நடக்கவில்லை. மத்திய அரசின் முகவர் போல நடந்துகொள்கின்றன. எனவேதான் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது” என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். டெல்லியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இதற்கு முன் தீர்ப்பாயம், பின்னர் நீதிமன்றம் இரண்டிலும் காவிரி தொடர்பான வழக்கை விசாரித்தனர். இந்த இரண்டு … Read more

காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க உச்சநீதிமன்றம் தடை

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என கர்நாடக அரசு தரப்பில் ஆணையத்தின் தலைவர் ஹல்தரிடம் முறையிடப்பட்டது. இதற்கு ஆணையமும் அனுமதி அளித்த நிலையில், இது உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிரானது எனக் கூறி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கின் விசாரணை இன்றைய தினம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி கண்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் … Read more

அசிடிட்டி பிரச்னை இருக்குதா? மண்பானை தண்ணீர் குடிச்சுப் பாருங்க!

அந்த காலத்தில் பெரும்பாலான சமையல் பொருட்கள் மண்பாண்ட பொருட்களாக இருந்தன. நாளடைவில் பிளாஸ்டிக் எனப் பலவித பொருட்கள் சமையல் அறையில் நுழைந்தன. பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல. பழங்காலத்தில் தண்ணீர் சேமித்து வைக்க மண்பானையை பயன்படுத்தின. இப்போது அது காட்சிப்பொருளாக பார்க்கப்படுகிறது. மண்பானை தண்ணீர் குடிப்பால் என்னென்ன நம்மைகள் என மருத்துவர். திக்ஷா பவ்சர் விவரிக்கிறார். மண்பானையில் தண்ணீர் சேமித்து வைத்து குடிப்பதால் அசிடிட்டி, ஒற்றைத் தலைவலி, அடிவயிற்றில் எரிச்சல், உடல் சூடு போன்ற வெப்பப் பிரச்சினைகள் … Read more

கன்னியாகுமரி.! விஷம் குடித்து வாலிபர் தற்கொலை.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கன்னியாகுமாரி மாவட்டம் தலைக்குளம் கீழவிளை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ்(35). இவருடைய மனைவி வாணி. சுபாஷ் கடந்த சில நாட்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது அருந்தி வந்துள்ளார்.  இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் சுபாஷ் குடித்து வந்ததால், இதனை அவரது மனைவி வாணி மற்றும் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சுபாஷ் சம்பவத்தன்று விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்து உள்ளார். இதைப்பார்த்த குடும்பத்தினர் அவரை … Read more