மேகதாது; காவிரி ஆணையம் விவாதிக்கலாம்; முடிவு எடுக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்

மேகதாது விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்கலாம் ஆனால் முடிவெடுக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேகதாது உள்ளிட்ட விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் விசாரிக்க கூடாது என தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் ஆஜராண மூத்த வழக்கறிஞர் வாதிட்டபோது,  மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கான நீரின் அளவு குறையும் என்பதை குறிப்பிட்டார். … Read more

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. … Read more

நீட் விலக்கு | மத்திய அரசின் பதிலை தமிழக அரசு விளக்க வேண்டும்: அன்புமணி

சென்னை: நீட் விலக்கு சட்டம் தொடர்பாக மத்திய அரசு தெரிவித்த கருத்துகளின் விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழக அரசின் நீட் விலக்கு சட்டம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் ஆகியவை சில கருத்துகளை கூறியிருப்பதாகவும், அவை குறித்த விளக்கங்களைக் கோரி தமிழக அரசுக்கு அவற்றை அனுப்பி வைத்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு … Read more

குட்கா முறைகேடு: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிய அனுமதி கோரும் சிபிஐ

குட்கா முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இரண்டு பேர் என மொத்தம்  12 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி சிபிஐ, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. மாநில அரசிடம் அனுமதி பெற்று முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய முடியும் என்ற  அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்துள்ளனர். டெல்லி சிபிஐ பிரிவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள், … Read more

6,892 ஏக்கர் நிலம் முறைகேடாக விற்பனை: தமிழக பதிவுத் துறை அதிகாரிகள் 9 பேர் சஸ்பெண்ட்!

சென்னை: உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் 6,892 ஏக்கர் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. முன்னதாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு இந்த சொத்துக்களை பதிவு செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. நில மோசடி குறித்த விவரங்களை அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்று வெளியிட்டார். மேலும், இதில் பதிவுத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக … Read more

உற்சாகத்தில் ஓபிஎஸ்.. சரியத் தொடங்கிய இபிஎஸ்.. ஒன்று கூடும் முன்னாள் நிர்வாகிகள்.?

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து, கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவில், இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பொதுக்குழு கூட்டத்தில் கட்சிக்கு விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், பொருளாளராக இருந்த ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர்.  தன்னை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை எனவும், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை தான் கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ பன்னீர்செல்வம் … Read more

தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருநங்கைகள் நலன்: திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு

புதுடெல்லி: தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் திருநங்கைகள் நலன் மீது திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் பேசினார். அப்போது அவர், இந்த இருவரையும் கருக்கலைப்புக்கான அணுகல் தேவைப்படக் கூடியவற்றில் உள்ளடக்குவதற்கு ‘பெண்கள்’ என்ற வரையறையை விரிவுபடுத்த வலியுறுத்தினார். இது குறித்து மக்களவையில், தென் சென்னை தொகுதி எம்.பி.,யான தமிழச்சி தங்கபாண்டியன் விதி 377இன் கீழ் பேசியதாவது: உலகளவில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட சமூக உறுப்பினர்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் மிருகத்தனமான பாகுபாட்டிற்கு உள்ளாகியுள்ளனர். … Read more

வால்பாறை டூ சாலக்குடி: 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் துவங்கிய அரசுப் பேருந்து பயணம்

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் அரசுப் பேருந்து இயக்கம், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் இன்று முதல் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை பகுதி கேரளா- தமிழக எல்லையில் அமைந்துள்ளது. வால்பாறையில் வசிக்கும் 30 சதவீதம் பேர்கள் கேரளா பகுதியைச் சேர்ந்தவர்கள், மேலும் வால்பாறையில் இருந்து கேரளா மாநிலம் சாலக்குடி பகுதிக்கு செல்ல வனப்பகுதியில் சாலை உள்ளது. இந்நிலையில், வால்பாறைக்கு வரும் சுற்றுலா … Read more

Tamil news today live: மேகதாது; காவிரி ஆணையம் விவாதிக்கலாம்; முடிவு எடுக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்

Go to Live Updates மேகதாது அணை விவகாரம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை (ஜூலை20) நடந்தது.அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை வாரியம் விவாதிக்கலாம், ஆனால் முடிவெடுக்கக் கூடாது என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வழக்கை ஜூலை 26ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது. பெட்ரோல் டீசல் விலை சென்னையில் பெட்ரோல் – டீசல் விலையில் … Read more

#நீட் விலக்கு மசோதா., கேள்வி கேட்ட மத்திய அரசுக்கு, பதில் தயாரித்துள்ளோம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இடம், நீட் விலக்கு மசோதா குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மா.சுப்பிரமணியன்,  “நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் மிக முக்கிய கொள்கை, திட்டம். அந்த வகையில் தான் தமிழக முதல்வர் அவர்கள் ஆட்சியை பொறுப்பேற்ற முதல் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறவதற்கு தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  இதுவரை நீட் … Read more