அதிமுக அலுவலகத்திலிருந்து ஓபிஎஸ் கொள்ளையடித்ததாக புகார்

அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதலில் ஈடுபட்டவர்களை கண்டறிய 3 காவல் உதவி ஆணையர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கொள்ளையடித்துச் சென்றதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமைக்கழகம் முன் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் … Read more

Explained: பதவி விலகும் கோட்டாபய ராஜபக்ச, இலங்கையில் இப்போது என்ன நடக்கிறது?

புதன்கிழமை (ஜூலை 13) உறுதியளித்தபடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்வார் என இலங்கை காத்திருக்கிறது. இதற்கிடையில், GoGotaGo எதிர்ப்பாளர்கள் தற்போதைய ஆட்சியில் யாரும் இருக்க முடியாது என்பதை உறுதிசெய்ய தயாராக உள்ளனர். இன்னும் கூடுதலான போராட்டங்களை எதிர்பார்த்து, சில GoGotaGo எதிர்ப்பாளர்கள், தங்களை அரசு தொலைக்காட்சியில் நேரடியாக நாட்டு மக்களுக்கு உரையாற்ற அனுமதிக்க வேண்டும் என்று கோரினர். இதனால் பாதுகாப்பு கருதி, அரச ஒலிபரப்பான இலங்கை ரூபவாஹினி கார்பிரேஷன் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) மாலை … Read more

கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: அன்புமணி ராமதாஸ் 

சென்னை: ” மக்களுக்கும், நீதிபதிகளுக்குமான விகிதாச்சாரம் இந்திய சராசரியை விட தமிழகத்தில் மோசமாக உள்ளது. இந்திய அளவில் 50,726 பேருக்கு ஒரு நீதிபதி இருக்கிறார் என்றால், தமிழ்நாட்டில் 60,240 பேருக்குத் தான் ஒரு நீதிபதி இருக்கிறார். அதிலும் காலியிடங்களை கழித்தால், 75,973 பேருக்குத் தான் ஒரு நீதிபதி இருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க இது எந்த வகையிலும் போதாது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழ்நாட்டில் உள்ள … Read more

சாலையோர தடுப்புச் சுவரில் ஜாலியாக சென்ற சிறுத்தை – அச்சத்தில் வாகன ஓட்டிகள்

திம்பம் மலைப்பாதையோர தடுப்புச் சுவரில் ஹாயாக நடந்து சென்ற சிறுத்தையை கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் … Read more

நீண்ட இடைவேளைக்கு பிறகு நித்தியானந்தா.. வெளியான அறிவிப்பு.!!

சர்ச்சைகளுக்கு பெயர் போன தமிழகத்தை சேர்ந்த நித்யானந்தா, பாலியல் வன்கொடுமையால், ஆட்கடத்தல், மோசடி என்று இந்தியாவில் பல மாநிலங்களில் வழக்குகளில் சிக்கி கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க தனது சீடர்களுடன் தலைமறைவாகியுள்ளார். கோவில் கட்ட நிதி என்று கூறி தன்னை நம்பிவந்தவர்களிடம் மோசடி செய்தும், அந்த பணத்தில் தனித் தீவு ஒன்று குத்தகை எடுத்து கைலாசா என்ற நாட்டை அறிவித்தார். இந்தியாவில் இருந்து தற்போது கைலாச நாட்டில் இருக்கும் நித்தியானந்தாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.  கடற்காற்று, இந்திய உணவு … Read more

அதிமுக விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே ஆலோசனை

சென்னை: அதிமுக விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவது தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் சட்ட நிபுணர்கள், கட்சி நிர்வாகிகளுடன் தனித்தனியே தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், உயர் நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து, பழனிசாமி தரப்பினர் கடந்த 11-ம் தேதி வானகரத்தில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தினர். இதில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் … Read more

திருவள்ளூர்: கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்தபோது கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி அடுத்த கரும்புகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் (28). ஓட்டுனரான இவர், வேலையின்மை காரணமாக கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வெளியே உள்ள கழிவுநீர் தொட்டியின் இணைப்பை சுத்தம் செய்த ஹரீஷ், திடீரென மயக்கம் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்ட தொழிற்சாலை நிர்வாகத்தினர் கும்மிடிப்பூண்டி கோட்டைக்கரையில் … Read more

12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. அரசு தேர்வுகள் இயக்கம்.!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து, பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 20-ந் தேதி வெளியானது. தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டதை அடுத்து மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் அடிப்படையில் உயர் கல்விக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதில், ஒரு சில மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், ஜூலை 14-ந் தேதி மதியம் 12 மணி முதல் https://www .dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விடைத்தாள் நகலை … Read more

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு குறித்து ஆகஸ்டில் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: வாக்காளர் அட்டையுடன் ஆதார்இணைப்பு தொடர்பாக ஆகஸ்ட் மாதம் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக உள்ள ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஜூலை 6-ம் தேதி ஆலோசனை நடத்திய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த அறிவுறுத்தல்களை தெரிவித்தார். அதன்படி, ஆகஸ்ட் 1-ம் தேதிமுதல் … Read more