அதிமுகவின் முடிவால் உற்சாகத்தில் திமுகவினர்.. இன்று வெளியாகப் போகும் அறிவிப்பு.!!

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு ஜூலை 9ஆம் தேதி தற்செயல் தேர்தல் நடைபெறும் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 510 பதவியிடங்களில், 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது.  உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்து பதவிகளுக்கும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது.  … Read more

பெண்களை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிக்கும் வடமாநில கும்பலுக்கு சிம்கார்டு விற்றவர் கைது.!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிக்கும் வடமாநில கும்பலுக்கு சிம்கார்டு விற்றவரை கொல்கத்தா சைபர் கிரைம் கைது செய்தனர். செல்போன் கடை உரிமையாளர் ராஜேந்திரனிடம் சிம் கார்டு கேட்ட வட மாநில நபர், ராஜேந்திரனின் பெயரிலே சிம் கார்டு வழங்கினால் மாதந்தோறும் பணம் தருவதாக கூறி 5 சிம் கார்டுகளை வாங்கியதாக கூறப்படுகிறது. சமூக வலைதளத்தில் உள்ள பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களிடம் வடமாநில கும்பல் பணம் பறித்து வந்த நிலையில், … Read more

கே.பி.அன்பழகனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவித்ததாக முன்னாள்அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் குடும்பத்துக்கு எதிரான வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கே.பி.அன்பழகன். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 2001 முதல் தற்போது வரை அதிமுக எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இவர்,வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி கிருஷ்ணமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்திருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய … Read more

சரியான உச்சரிப்புடன் தமிழில் பேசி ஆச்சரியமளித்த ஆளுநர்

வேலூரில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பாக புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசினார். 5வது நாள் நடைபெற்ற பாலாறு பெருவிழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி சந்நியாசிகள் முன்னிலையில் சனாதன தர்மம் பற்றி பேசினார். அதைவிட, அவர் முழுக்க முழுக்க தமிழில் பேசியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுதி வைத்து பார்த்து … Read more

இறங்கி வந்த ஓபிஎஸ்.. ஏற்க மறுத்த இபிஎஸ்.. திக்குமுக்காடும் 34 வேட்பாளர்கள்.!!

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு ஜூலை 9ஆம் தேதி தற்செயல் தேர்தல் நடைபெறும் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 498 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு என 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற … Read more

படிக்கிற வயசுல இது தேவையா..!! பேருந்தின் கூரைமீது நடனமாடிய பள்ளி மாணவர் படுகாயம்..!!

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து கொளத்தூர், பெரியார் நகருக்கு நேற்று மாலை ஒரு மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பேருந்தில் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சம்பத் (53), மாதவரம் பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் (42) ஆகிய இருவரும் பணியில் இருந்தனர். பேருந்து பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை அருகே சென்றபோது, அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தில் ஏறி உள்ளனர். இதில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த … Read more

மூக்குத்தியை கூட விடல.. இதை வெளிய சொன்னா ரத்தம் கக்கி செத்துரூவீங்க..! சொல்வதெல்லாம் பொய்யான சோகம்.!

79 வயது முதியவரின் நோய் தீர்க்க பூஜை செய்வதாகக் கூறி, மாமியார் மற்றும் மருமகளிடம் இருந்து 20 லட்ச ரூபாய் பணத்தையும், 37 சவரன் நகைகளையும் ஏமாற்றிய பெண் மந்திரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர். ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்று மாந்த்ரீகத்தை நம்பி வீதிக்கு வந்த பெண்ணின் பரிதாபம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. மாமியார் மற்றும் மருமகளிடம் நோய்களை குணப்படுத்த பரிகார பூஜை செய்வதாகப் பேசி மயக்கி மொத்தமாக நகை பணத்தை ஆட்டையை போட்டுச்சென்றதாக போலீசில் … Read more

குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: நேர்காணலுக்கு 137 பேர் தேர்ச்சி

சென்னை: குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில் நேர்காணலுக்கு 137 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர் உட்பட குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 66 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டது. முதல்நிலை,முதன்மை, நேர்முகத் தேர்வுகள்அடிப்படையில் இதற்கான பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். … Read more