சிறையில் இருந்து ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டி கொலை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மணவாளநல்லூர் பகுதியை சேர்ந்த 28 வயதான சந்தோஷ்குமார் என்பவர் கொலை வழக்கில் இரண்டு மாதம் சிறையில் இருந்துவிட்டு கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தார். இன்று தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடைத்தெருவிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதில் சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  Source link

சிறுவாணி அணை நீர் சேமிப்பு: கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்க வேண்டும் என்றும் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் … Read more

ஸ்டாலினுக்கு காய்ச்சல்: 2 நாள் அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், நாளை (20.06.2022) ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், நாளை மறுநாள் (21.06.2022) திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் கலந்து … Read more

ராணிப்பேட்டை.! விவசாய கிணற்றில் குளித்த இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாய கிணற்றில் குளித்த 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் குறிஞ்சி நகரை சேர்ந்த ராஜ்குமாரின் மகன் ரோஷன்(26). சென்னை பெரம்பலூரை சேர்ந்த ரோஷனின் நண்பர் யுவராஜ் நேற்று அரக்கோணம் வந்த நிலையில் இருவரும் காவனூரில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று மது அருந்தி உள்ளனர். இதையடுத்து அங்கிருந்த கிணற்றில் இருவரும் குளித்தபோது நீச்சல் தெரியாத யுவராஜ் நீரில் மூழ்கியுள்ளார். இவரை மீட்க முயன்ற ரோஷனும் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. … Read more

அதிமுகவில் ஒற்றைத் தலைமைக் கோரிக்கை.. எடப்பாடி பழனிசாமிக்குப் பெருகும் ஆதரவு..!

அதிமுகவில் ஒற்றைத் தலைமைக் கோரிக்கைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடினால் அதைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமி தயாராக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமைக் கோரிக்கை தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் தீவிரமடைந்துள்ள நிலையில் அந்தக் கோரிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வத்தை இணங்கச் செய்வதற்காகச் செங்கோட்டையன், தம்பிதுரை ஆகியோர் பேச்சு நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், தற்காலிகமாகப் பொதுக்குழுக் கூட்டத்தை ஒத்தி வைக்கக் கோரி நீதிமன்றத்தை நாட ஓ.பன்னீர்செல்வம் … Read more

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் புதுமண்டபத்தில் நூலகம் இருந்ததற்கான கல்வெட்டு கண்டெடுப்பு

தென்தமிழகத்தின் முதல் அருங் காட்சியகமும், முதல் புத்தகக் கடையும் உருவான இடம் மதுரை புதுமண்டபம்தான் என்பதற் கான கல்வெட்டு கண்டெடுக்கப் பட்டுள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மதுரையில் கி.பி.1800-களின் பிற்பகுதியில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தின் தொடக்க விழா நிகழ்வினை ‘காவல் கோட்டம்’ நாவலில் எழுதி உள்ளேன். பழங் காலத்தில் ஓலைகளில் தயாரான ஏடுகள் புத்தகங்களாக மாறி, அந்த புத்தகங்களை விற்க ‘புத்தகக் கடைகள்’ முதன்முதலில் உருவான இடம் மதுரை … Read more

கவனக்குறைவால் நேர்ந்த விபரீதம் : கட்டிலில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி

திருத்தணி அருகே கட்டிலில் இருந்து தவறி விழுந்த 10 மாத பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த ராஜா திவ்யா தம்பதியினரின் 10 மாத பெண் குழந்தை பேரரசி. நேற்று இரவு குழந்தை பேரரசியை கட்டிலில் படுக்கவைத்து வீட்டு வாசலில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென குழந்தை அலறல் சத்தம் கேட்டு உள்ளே சென்று பார்த்த போது கட்டிலில் படுத்திருந்த குழந்தை கீழே விழுந்தது தெரியவந்தது. அதில் தலையில் பலத்த … Read more

ரூ.350 கோடி கல்விக் கடன் வழங்க தமிழக அரசு இலக்கு; அமைச்சர் செந்தில் பாலாஜி

Tamil Nadu govt sets target of Rs 350 crore to provide education loans: Minister: இந்த ஆண்டு ரூ.350 கோடி கல்விக் கடன் வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சனிக்கிழமை தெரிவித்தார். இதையும் படியுங்கள்: எல்.முருகனை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்; கோவை விமான நிலையத்தில் பரபரப்பு வங்கிகளின் கல்விக் கடன் வழங்கும் விழா கோவையில் நடந்தது. இந்த விழாவில் கலந்துக் கொண்ட மின்சாரத்துறை … Read more

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று … Read more

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும், ஜூன் 22, 23ல் வட தமிழகம், குமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் … Read more