அர்ஜென்டினாவில் சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங்: திருச்சி வீரர்கள் 9 பேர் தேர்வு

க.சண்முகவடிவேல், திருச்சி திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 9 பேர் உலகக் கோப்பை ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டுகளில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர். இதுகுறித்த விபரம் வருமாறு:சர்வதேச அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் வருடம் தோறும் நடைபெற்று வருவது வழக்கம். இந்தப் போட்டிகளில் ரோலர் ஹாக்கி, இன் லைன் ஹாக்கி, ரோலர் டெர்பி, பிரீ ஸ்டைல் என பல்வேறு பிரிவுகளில் பல்வேறு அணிகளாகவும், தனிப்பட்ட முறையிலும் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டிகளில் ஒவ்வொரு நாடும் தங்களது நாட்டின் வீரர்களை தேர்வு … Read more

திருப்பூர் | தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற பழங்குடியின மாணவர் குரூப்-1 தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட்ட தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவர் தனது இரண்டாவது முயற்சியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைத்தின் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், உதவி ஆணையர் (வணிக வரித்துறை), துணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) உள்ளிட்ட 66 காலிபணியிடங்கள் நிரப்புவதற்கான, குருப்-1 தேர்வு அறிக்கை வெளியிடப்பட்டு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடந்து … Read more

"கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து பேச எடப்பாடிக்கு என்ன தகுதி உள்ளது" – புகழேந்தி கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதை தொலைக்காட்சி வாயிலாக தெரிந்துகொண்டேன் என்ற எடப்பாடி, கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து பேச என்ன தகுதி உள்ளது என ஒசூரில் அளித்த பேட்டியில் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி வளாகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளருமான புகழேந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘’கள்ளக்குறிச்சி நான் பிறந்து வளர்ந்த இடம். விவசாயம் நிறைந்த இந்தப் பகுதியில் இதுபோன்ற மிகப்பெரிய கலவரத்தை நான் … Read more

நுபுர் ஷர்மாவை கொலை செய்ய எல்லை தாண்டிய பாகிஸ்தான் நபர் கைது

எல்லை பாதுகாப்புப் படை காவலர்கள் அந்த நபரைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர், அவர் இந்துமால்கோட் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். முகமது நபிகள் நாயகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கொலை செய்ய சர்வதேச எல்லையைத் தாண்டிய பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர், ராஜஸ்தானில் கடந்த வாரம் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மாண்டி … Read more

மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஜூலை 25-ல் தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்: இபிஎஸ்

சென்னை: மின் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 25-ம் தேதி திங்கட்கிழமையன்று, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “மத்தளத்திற்கு இரண்டு பக்கம் அடி. திமுக ஆட்சியில் அப்பாவி மக்கள் நான்கு பக்கமும் இடி வாங்கி நசுங்கி, தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பாதிப்பு, வேலை வாய்ப்பின்மை, வருமான இழப்பு என்று சிக்கி … Read more

'குடும்ப வன்முறையால் நானும் கடுமையாக பாதிக்கப்பட்டேன்' – நடிகை ரோஹினி உருக்கம்

”குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டதை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல்முறையாக வெளியே சொல்லியிருக்கிறேன்” என்று கூறினார் நடிகை ரோஹினி. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் மற்றும் குடும்ப வன்முறைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிறப்பு மாநாடு பாரிஸ் கார்னரில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கேரள மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா, திரைக்கலைஞர் ரோஹினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாநாட்டில் கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தில் சிபிசிஐடி முறையாக விசாரித்து,  … Read more

வெள்ளக் காடாக மாறிய ஸ்ரீரங்கம்- கல்லணை சாலை: விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்குமா?

க.சண்முகவடிவேல், திருச்சி கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததன் எதிரொலியாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியது. எனவே, அணைகளுக்கு வரக்கூடிய உபநீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து. அந்த அணை நிரம்பியது. இதனைத் தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து அணைக்கு வரக்கூடிய உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. … Read more

மின் கட்டண உயர்வை கண்டித்து ஜூலை 23ல் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் – அண்ணாமலை அறிவிப்பு

மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் வரும் 23ஆம் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். சேலத்தில் பேட்டியளித்த அவர், தனியாரிடம் மின் கொள்முதல் செய்வதை அரசு குறைக்க வேண்டும் என்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு சரியான நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். Source link

“மத்திய அரசைக் காரணம் காட்டி மின் கட்டணத்தை உயர்த்தினால்…” – முத்தரசன் எச்சரிக்கை

சென்னை: “மத்திய அரசைக் காரணம் காட்டி மின்கட்டணத்தை தமிழக அரசு உயர்த்துவது மக்கள் உணர்வில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக அரசின் மின்துறை அமைச்சர் வீட்டு உபயோக மின்கட்டணம் உள்ளிட்ட அனைத்து வகை மின் கட்டணங்களையும் உயர்த்தி அறிவித்துள்ளார். உயர்த்தப்படும் மின் கட்டணத்திற்கு ஒப்புதல் கேட்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. … Read more

அதிமுக அலுவலக சீல் வழக்கு: காரசார விவாதத்தில் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு

அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து ஒபிஎஸ், இபிஎஸ் தாக்கல் செய்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது. ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தபோது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் முன், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, ராயப்பேட்டை காவல்துறை பதிவுசெய்த வழக்கு அடிப்படையில் கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். … Read more