திருச்சி | தமிழ் பிராமி எழுத்துகளில் 1,330 குறட்பாக்களை கையால் எழுதி வெளியிட்ட தமிழாசிரியர்: பல்வேறு தமிழ் அமைப்பினர் பாராட்டு

திருச்சி: திருச்சியைச் சேர்ந்த தமிழாசிரியர் ஒருவர் தமிழ் பிராமி எழுத்துகளில் 1330 குறட்பாக்களை கையால் எழுதி அச்சிட்டு அதை நூலாக வெளியிட்டுள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சைவ.சற்குணன். தற்போது திருச்சியில் வசித்து வரும்இவர், தமிழில் முனைவர் பட்டம்,திருக்குறள் புலமையர் பட்டம், ஓலைச்சுவடியியல், கல்வெட்டியியல் பட்டயம், சமஸ்கிருதத்தில் பட்டயம் பெற்றுள்ளார். பட்டதாரி ஆசிரியர், முதுநிலைதமிழாசிரியர் மற்றும் தலைமையாசிரியராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர். தற்போது திருச்சி முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி … Read more

60 அடி ஆழ கிணற்றில் விழுந்து தத்தளித்த மயில் – பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை

60அடி ஆழ கிணற்றில் விழுந்த மயிலை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் தீயணைப்புத் துறை வீரர்கள் ஒப்படைத்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மலையாண்டிபட்டினத்தில் நடராஜன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மோட்டாரை இயக்கச் சென்றுள்ளார். அப்போது கிணற்றில் உயிருடன் மயில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அருகில் உள்ளவர்களின் உதவியுடன் உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து … Read more

நீங்க மனிதனா இல்லை ரோபாட்டா ஒரு டெஸ்ட்; இந்த ஓவியத்தில் இருக்கிற பெண்ணை கண்டுபிடிங்க

ஆப்டிகல் இல்யூஷன் ஒரு புயலைப் போல இணையத்தையும் சமூக ஊடகங்களையும் தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் பார்ப்பவர்களின் ஆளுமையை வெளிப்படுத்துவதால் நெட்டிசன்கள் ஆர்வத்துடன் ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து வருகின்றனர். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பாரவையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து பார்ப்பவர்களின் ஆளுமையைக் குறிப்பிடுகிறது. இது நெட்டிசன்களை முடிவில்லாத ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு பயனுள்ள உளவியல் கருவி. அது உங்கள் … Read more

#சற்றுமுன் || எடப்பாடியை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, தம்பிதுரை.!

சென்னையில் ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், சேலத்தில் ஈபிஎஸ் உடன் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை. அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஒற்றை தலைமை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனால், கடந்த இரு தினங்களாக அதிமுகவில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இன்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார். இந்த … Read more

போலீசில் காட்டி கொடுத்ததால் வியாபாரியை தாக்கி பெட்ரோல் குண்டை வீசிய இளைஞர்கள் இருவர் கைது.!

சென்னை மணலியில் போலீசில் காட்டி கொடுத்தாக கூறி மளிகை கடை வியாபாரி மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் இருவர் கைது செய்யப்பட்டனர். மணலி சர்.சி.வி ராமன் தெருவில் வசிக்கும் மளிகைக் கடை வியாபாரியான மாரியப்பனை, கடந்த 12ஆம் தேதி கஞ்சா போதையில் 5 இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதோடு அவரது கடை மீது பெட்ரோல் குண்டை வீசி சென்றனர். ஆனால் பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மாரியப்பன் அளித்த … Read more

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும்: சீமான்

சென்னை: “அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரத்தைச் சேர்ந்த சரண்யாவும், மோகனும் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களைப் பெண்ணின் சகோதரனும், மைத்துனனும் விருந்து வைப்பதாகக் கூறி, வீட்டுக்கு அழைத்து வெட்டிப்படுகொலை செய்திருக்கிற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். தங்களது விருப்பத்தின் பெயரில், காதலித்து, சாதியை … Read more

முதலமைச்சரை தகாத வார்த்தைகளால் விமர்சித்த நபரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் விமர்சித்த நபரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வேலப்பாடியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை பதிவுசெய்து பரப்பியதாக ஆரணி தாலுலா காவல் நிலையத்தில் ரவி என்பவர் புகார் அளித்திருந்தார். அதில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் … Read more

ஸ்ட்ராபெரி பழம் என்ன கலர் சொல்லுங்க? சிவப்பா? நீலமா? சாம்பல் நிறமா?

ஆப்டிகல் இல்யூஷன் படம் நெட்டிசன்களை பைத்தியமாக்கி வருகிறது. இந்த வைரல் ஆப்டிகல் இல்யூஷன் படம், உங்களை இருக்கும் நிறத்தை புறக்கணித்து, இல்லாத நிறத்தை இருக்கிறது என்று நம்பும்படி உங்களை ஏமாற்றுகிறது. பெரும்பாலான ஆப்டிகல் இல்யூஷன் படம் மனித மூளையைக் குழப்புவதன் மூலம் ஆச்சரியப்படுத்துகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷனும் அந்த வரிசையில் உங்களை குழப்பும் படம்தான். கீழே உள்ள படத்தில் இருக்கும் ஸ்ட்ராபெர்ரிகளைப் பார்த்துவிட்டு, நீங்கள் பார்த்தது என்ன கலர் என்று கூறுங்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை … Read more

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து வெடித்த நாட்டு வெடிகுண்டு.. காவல்துறை விசாரணை..!

இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நாட்டு வெடி குண்டு தவறி விழுந்து வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பரணிபுத்தூர் நான்கு வழி சாலையில் மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்தது. இதனால், அங்கிருந்த டீகடையில் கண்ணாடி நொறுங்கியதோடு இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் படுகாமடைந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுப்பட்டனர். அப்போது, காயமடைந்தவர் ஐப்பன்தாங்கலை சேர்ந்தவர்  வினோத்குமார் என்பதும் நண்பர்களுடன் சென்ற இவர் பேப்பர் … Read more

தனக்கு தானே கல்லறை கட்டி காத்திருந்த ரோஸி பாட்டி.. கேட்பாரின்றி சடலமாக கிடந்தார்..!

இறந்த பின்னர் தன்னை அடக்கம் செய்ய யாரும் இல்லை என்பதால் தனக்கு தானே கல்லறை கட்டி காத்திருந்த ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் , ஒருவாரமாக வீட்டில் கேட்பாரற்ற சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பல்லுளி பகுதியை சேர்ந்த 66 வயது ஆதரவற்ற மூதாட்டி ரோஸி..! இந்த மூதாட்டிக்கு உறவினர்கள் என்று சொல்லி கொள்ள யாரும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வந்தார். ஆரம்பத்தில் வீட்டு வேலைகள் செய்து வந்த … Read more