#தமிழகம் || வீடு புகுந்து இஸ்லாமிய பெண் வெட்டி படுகொலை.., நாடக காதலன் அரங்கேற்றிய கொடூரம்.! 

திருச்சியை மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள மேல கல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது சையது. இவரது மனைவி ஷகிதா பேகம். அதே பகுதியை சேர்ந்த ஜோசப் ராஜ் என்பவர் ஷகிதா பேகத்தின் மகளை  ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறும் ஷகிதா பேகத்திடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.  இதனால் ஜோசப் ராஜ், ஷகிதா பேகத்தின் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி மறைந்து இருந்து ஷகிதா வந்தவுடன் … Read more

சேலம் | காவிரியில் வெள்ள அபாயம்: பூலாம்பட்டி – நெருஞ்சிப்பேட்டை இடையே விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்

சேலம்: பூலாம்பட்டி – நெருஞ்சிப்பேட்டை இடையே காவிரி ஆற்றில் இயங்கிவந்த விசைப்படகு போக்குவரத்து தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள காவிரி கரையோர கிராமமான பூலாம்பட்டியில் இருந்து ஈரோடு மாவட்டம், நெருஞ்சிப்பேட்டைக்கு காவிரி ஆற்றில் நடந்து வந்த விசைப்படகு போக்குவரத்து, வெள்ளப்பெருக்கால் நிறுத்தப்பட்டுள்ளது. எடப்பாடி அருகே உள்ள காவிரி கரையோர கிராமமான பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை நீர்த்தேக்கத்தில், நீர் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. காவிரி ஆற்றில் உள்ள கதவணை … Read more

"மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்; பள்ளி முதல்வர் உட்பட மூவர் கைது”-டிஜிபி அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி இறந்த விவகாரத்தில் நீதி கேட்டு கடந்த 5 நாட்களாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை நடைபெற்ற மறியல் போராட்டத்தை காவல்துறையினர் கலைக்க முயன்றனர். அப்போது போராட்டம் வன்முறையாக மாறியது. இந்நிலையில் கலவரம் நடந்த பள்ளியை தமிழக உள்துறை செயலர் பனிந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் நேரில் … Read more

IND vs ENG: 3ஆவது ஒரு நாள் போட்டி; இந்திய அணிக்கு 260 ரன்கள் இலக்கு

IND vs ENG 3rd ODI Cricket Score Updates: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3 ஆவது ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளில் 2 அணிகளும் தலா 1 வெற்றியை பதிவுசெய்துள்ளன. எனவே தொடரை வெல்லும் அணி எது என்ற எதிர்ப்பார்ப்பு, இந்த போட்டியை சுவாரஸ்மாக்கியுள்ளது. இதையும் படியுங்கள்: ஒதுங்க வேண்டுமா விராட் கோலி? பிரபலங்கள் கூறுவது என்ன? இந்தப்போட்டியில் டாஸ் வென்ற … Read more

நீட் தேர்வு தற்கொலைகளை மறைக்க திட்டமிட்டு நடத்தப்பட்டதா.? கள்ளக்குறிச்சி கலவரம்.?! 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கடந்த ஜூலை 13-ஆம் தேதி பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஸ்ரீமதியின் தாய் மற்றும் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சரிவர பதில் அளிக்கவில்லை என்று அந்த தாய் குற்றம் சாட்டுகிறார். இதுவரை பள்ளி நிர்வாகமோ அல்லது மாவட்ட … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு: இபிஎஸ்

சென்னை: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு முழு ஆதரவளிக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் 6.8.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கு அதிமுக ஆதரவு கோரி, அக்கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் என்னிடம் தொலைபேசி … Read more

'மாணவி மர்ம மரணம்: திமுக அரசு முறையாக கையாளவில்லை' – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த பிரச்னையை திமுக அரசு சரியான முறையில் கையாளவில்லை என டிடிவி தினகரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த பிரச்னையை தி.மு.க. அரசு சரியான முறையில் கையாளாததால் அந்தப் பகுதியில் வன்முறை வெடித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது பாதிக்கப்பட்டவர்களின் குரலை செவிமடுத்து கேட்டு ஆரம்பத்திலேயே காவல்துறையினர் அக்கறையுடன் செயல்பட்டிருந்தால் இந்தச் சூழல் ஏற்பட்டிருக்காது. இதன் பிறகும் பிரச்னையை மேலும் பெரிதாக்காமல் அங்கே அமைதி திரும்புவதற்கும் … Read more

கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது.!

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மீளவிட்டான் வடக்கு தெருவை சேர்ந்த ஜெகநாதன் என்பவருடைய மகன் ஜெகதீஷ் (21).  இவர் கே.டி.சி.நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில் ஜெகதீஷ் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.  இதுயடுத்து காவல்துறையினர் ஜெகதீஷை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த … Read more

குடியரசுத்தலைவர் தேர்தல் | முழுப் பாதுகாப்பில் புதுச்சேரி சட்டப்பேரவை

புதுச்சேரி: குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை முழு பாதுகாப்பில் உள்ளது, வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்குப் பெட்டி டெல்லி எடுத்துச் செல்லப்பட உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி முழு பாதுகாப்பில் சட்டப்பேரவையுள்ளது. அலுவலகங்கள் அனைத்தும் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளோர் மட்டுமே நாளை அனுமதிக்கப்படுவர். நாளை வாக்குப்பதிவு முடிந்த பிறகு டெல்லிக்கு பாதுகாப்புடன் வாக்குப்பெட்டி எடுத்துச் செல்லப்படும். இத்தேர்தலில் நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்களிக்க அனுமதியில்லை. தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இம்மாதத்துடன் … Read more

விசாரணை முடியும்முன் பள்ளிக்கு தொடர்பில்லை என டிஜிபி எப்படி கூறினார்: இபிஎஸ் சரமாரி கேள்வி

‘விசாரணை முடிவதற்கு முன்பாகவே டிஜிபி தீர்ப்பு தெரிவித்துள்ளார். பள்ளி நிர்வாகத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்று எவ்வாறு அவர் கூறுகிறார்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி இறந்த விவகாரத்தில் நீதி கேட்டு கடந்த 5 நாட்களாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை … Read more