மழையால் ரத்தான ரயில்… சென்னை ரயிலைப் பிடிக்க காரை முன்பதிவு செய்த ரயில்வே; நன்றி சொன்ன மாணவர்

குஜராத்தில், கனமழை காரணமாக ரயில் ரத்து செய்யப்பட்டதால், ஏக்தா நகரில் இருந்து வதோதரா ரயில் நிலையம் செல்ல முடியாமல் தவித்த சென்னை ஐஐடி மாணவருக்கு காரை முன் பதிவு செய்து ரயில்வே உதவியுள்ளது. இதற்கு, அந்த மாணவர் நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. பொறியியல் மாணவர் சத்யம் காத்வி குஜராத்தின் ஏக்தா நகரில் இருந்து வதோதரா செல்லும் ரயிலில் முன்பதிவு செய்திருந்தார், அங்கிருந்து சென்னைக்கு செல்லவிருந்தார். ஆனால், கனமழை காரணமாக ஏக்தா நகரில் இருந்து … Read more

தேசிய தரவரிசை பட்டியலின் ‘டாப்’ இடங்களில் தமிழகக் கல்லூரிகள் எத்தனை? – முழு விவரம்

சென்னை: கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசைப் பட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பல கல்லூரிகள் டாப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அகில இந்திய அளவில் கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. ஓட்டு மொத்தம், பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, பார்மசி, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் இந்தப் பட்டியல் வெளியிடப்படுள்ளது. இதில் தமிழக கல்லூரிகள் முக்கிய இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளன. குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல கல்லூரிகளில் டாப் … Read more

அனல்பறந்த ஓபிஎஸ் – இபிஎஸ், காவல்துறை தரப்பு வாதங்கள் – நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன?!

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்திருப்பதை எதிர்த்து இபிஎஸ், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை நீதிபதி முதலில் படித்தார். அப்போது வீடியோ, போட்டோ ஆதாரங்களையும் காவல்துறை தாக்கல் செய்தது. அவற்றையும் பார்க்க வேண்டுமென காவல்துறை வக்கீல் கோரிக்கை விடுத்தார். மேலும், ‘கட்சி அலுவலகத்தை முதல் நாளில் மேலாளர் பூட்டியுள்ளார். அப்போது அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. முன்னமே A பார்ட்டி, B பார்ட்டி இடையே தகராறு ஏற்பட்டது. … Read more

Explained: சூழலியல் சென்சிடிவ் பகுதி ஆகும் மேற்கு தொடர்ச்சி மலை: கர்நாடகா எதிர்ப்பது ஏன்?

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சமீபத்திய வரைவு அறிவிப்பு மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த பகுதிகள் குறித்து கர்நாடகாவில் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்கிறது. அது என்ன சொல்கிறது? இந்த விஷயத்தில் கர்நாடகாவின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து பார்க்கலாம். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சமீபத்திய வரைவு அறிவிப்ப கர்நாடகாவில் கடும் எதிர்ப்பை எதிர்கொள்கிறது. இந்த அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை அமைச்சகம் ஜூலை 6ஆம் தேதி வெளியிட்டது. இந்த வரைவு … Read more

இரட்டை கொலையாளியை அலேக்கா தூக்கிய மோப்ப நாய் பைரவி..! ஒற்றையடி பாதையில் திக் திக்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நாடக கலைஞரின் இரண்டாவது  மனைவி  மற்றும் அவரது மகனை பூட்டிய வீட்டுக்குள் வைத்து  உயிரோடு தீவைத்து எரித்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை மோப்பம் பிடித்து அடையாளம் காட்டிய பைரவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த செங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்த நாடக கலைஞர் செந்தாமரை கண்ணன். இவருக்கு 3 மனைவிகள். முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில் ஒரே ஊரில் இரண்டு மனைவிகளுக்கும் தனி தனி வீடு எடுத்து … Read more

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கல்லணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறப்பு

சென்னை: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில் கல்லணணைக் கால்வாய்களில் முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் தற்போது சுமார் 1.08 லட்சம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை மதியம் 12.00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 114.81 … Read more

50,000 சாக்பீஸ்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட காமராஜர் உருவம் – பள்ளி மாணவர்கள் அசத்தல்

சங்கரன்கோவிலில் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 50,000 சாக்பீஸ்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட  பெருந்தலைவர் காமராஜர் உருவத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 120 ஆவது பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவிகள்,  50,000 சாக்பீஸ்களைக் கொண்டு காமராஜர் உருவத்தை தரையில் 30 அடி நீளத்தில் வடிவமைத்தனர்.  காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை … Read more

போட்டி போட்டு நிர்வாகிகள் நீக்கம்: ஓ.பி.எஸ் அடுத்த மூவ் என்ன?

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான மோதல் தமிழக அரசியலில் ஒவ்வொரு நாளும் உச்ச கட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். ஓ.பி.எஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் பி.எச். பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். அதே நாளில், மறுபுறம், ஓ. பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்தில் நுழைந்தார். அப்போது, இ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கும் … Read more

கஞ்சா கலந்த சாக்லேட்டை விற்பனை செய்த இருவர் கைது..!

கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம்,  பணிக்கம் பாளையத்தில் உள்ள இளைஞர்களிடம் போதை பழக்கத்திற்கு அடிமையாகி பலர் தகராறிலும் சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, காவல்துறையினர் அந்த பகுதியில் சோதனையில் ஈடுப்பட்டனர். அங்குள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த பகுதியில் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த இருவர் கஞ்சா கலந்த சாக்லேட்டை விற்பனை செய்ததை கண்டறிந்தனர். … Read more

“நான் மருத்துவம் படிக்க காமராஜரே காரணம்” – செல்லகுமார் எம்.பி.

ஓசூர்: “நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க பெருந்தலைவர் காமராஜர் போட்ட பிச்சையே காரணம்” என்று கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் செல்லகுமார் கூறினார். ஓசூரில் கர்மவீரர் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அப்பாவுபிள்ளை பொன்னம்மாள் அறக்கட்டளை சார்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் எழுதப்பட்ட காமராஜர் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா மற்றும் மூன்று மொழி பேசும் மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் வாழ்க்கை வரலாறு புத்தகம் வழங்கும் விழாவும் நடைபெற்றது. ஓசூர் … Read more