நிலுவையில் உள்ள 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்த பின்னணி

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர்மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசினார் அப்போது, நிலுவையில் உள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளிட்ட 21 சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தினார். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதற்காக நன்றியும் தெரிவித்துக் கொண்டார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்ட மசோதா, கடந்த ஆண்டு செப்டம்பரில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் … Read more

டாம்பாய் கெட்டப்புக்கு மாறிய வனிதா : அட இதுகூட நல்லாத்தான் இருக்கு

Tamil Actress Vanitha Vijayakumar New Getup Update : தமிழ் சினிமாவில் தற்போது வைரல் நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். விஜய்க்கு ஜோடியாக சந்திரலோகா படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான வனிதா அதன்பிறகு சில படங்களில் நடித்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிய அவர், ஒரு கட்டத்தில் திருமணம் தோல்வியில் முடிந்ததால் மீண்டும் திரைத்துறையில் ரீ- எண்ட்ரி கொடுத்தார். சின்னத்திரையின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமான வனிதா பிக்பாஸ் … Read more

கல்குவாரி குளத்தில் குளிக்க சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!

நீச்சல் தெரியாமல் கல்குவாரியில் குளித்த மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் தேவா. இவர் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் அங்கு உள்ள கல்குவாரி குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார் நீச்சல் தெரியாததால் தினேஷ் தர்மாகோல் உதவியுடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனையடுத்து அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் … Read more

வழக்குகளை துரிதமாக முடிக்க நீதிமன்றம், வழக்கறிஞர் மன்றம் இணைந்து செயல்பட வேண்டும்: தலைமை நீதிபதி

உதகை: வழக்கு விசாரணைகளை துரிதமாக முடிக்க நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர் மன்றம் இணைந்து செயல்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் உதகை பிங்கர்போஸ்ட் அடுத்த காக்காதோப்பு பகுதியில் சுமார் 3½ ஏக்கர் பரப்பளவில் ரூ.37.79 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்த நீதிமன்ற வளாக திறப்பு விழா இன்று நடந்தது. உதகை பழங்குடியினர் பண்பாட்டு ஆய்வு மையத்தில் நடந்த விழாவில், … Read more

இண்டேன் கேஸ் மானியம்; இப்படி ஈஸியா செக் பண்ணுங்க!

Indane Gas Subsidy Status in tamil: இந்தியாவின் பல வீடுகளில், சமையல் எரிவாயுவாக கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் பெரும்பாலும் இண்டேன் கேஸ் சிலிண்டர்கள் தான் நாடு முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இண்டேன் சமையல் எரிவாயு மானிய நிலையைச் சரிபார்க்க, படத்துடன் படிப்படியான வழிகாட்டியுடன் விரிவான தகவலைப் பகிர்ந்துள்ளோம். நீங்கள் சமையலுக்கு இண்டேன் கேஸ் சிலிண்டர்கள் (Indane Liquid Petroleum Gas) பயன்படுத்தினால், இந்திய அரசு எங்களுக்கு மானியம் வழங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியும். … Read more

பள்ளி மாணவியின் கருமுட்டை திருட்டா? தமிழகத்தில் புதுவிதமான ஒரு திருட்டு., கள்ளக்காதலன் சையது அலி உள்ளிட்ட 3 பேர் கைது.!

தமிழகத்தில் புதுவிதமான ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 16 வயது சிறுமி ஒருவரின் கருமுட்டைகளை திருட்டுத்தனமாக எடுத்து விற்பனை செய்த, சிறுமியின் தாய், அவரின் கள்ளக்காதலன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் பிரபல கருத்தரிப்பு மருத்துவமனையில் சிறுமி ஒருவரை அழைத்துச் அழைத்துச் செல்லப்பட்டு, சிறுமியின் கருமுட்டை தானம் செய்யப்பட்டு, பணம் பெறப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து … Read more

“தமிழகத்தில் ஈழத் தமிழர்கள் வதைபடுகின்றனர்” – சிறப்பு முகாம்களை மூட சீமான் வலியுறுத்தல்

திருச்சி: “தமிழத்தில் சிறப்பு முகாம் என்ற சித்ரவைதை முகாம்களை மூடுங்கள், க்யூ பிரிவை கலைத்து விடுங்கள்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பேரறிவாளன் விடுதலையை யார் கொண்டாடியது? கொண்டாடியிருந்தால் என் தம்பி விடுதலையை நான்தான் கொண்டாடியிருக்க வேண்டும். பேரறிவாளன் நிரபாரதி இல்லை என்று கூறும் அண்ணாமலை, அமித் ஷாவுக்கும், மோடிக்கும் குஜராத் … Read more

கார்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாய உத்தரவு; உற்பத்தியாளர்களின் கோரிக்கை என்ன?

Anil Sasi  Explained: The case for six airbags: இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி, கடந்த நான்கு ஆண்டுகளாக விற்பனையில் சரிவை எதிர்கொண்டுள்ள பட்ஜெட் விலை கார் பிரிவில் அதன் தாக்கத்தை காரணம் காட்டி, பயணிகள் வாகனங்களில் ஆறு ஏர்பேக்குகளை கட்டாயமாக்கும் திட்டத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியுள்ளது. ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவில் குறிப்பிடத்தக்க சந்தை இருப்பைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளரான … Read more

#தமிழகம் || மளிகை கடைக்குள் புகுந்து, பொதுமக்கள் முன்னிலையில் வியாபாரி கடத்தல்.! 

சேலம் அருகே மளிகை கடை உரிமையாளர் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை, ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பட்டை கோவில் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் ஜெயராமன். வட மாநிலத்தை சேர்ந்த வியாபாரியான இவர், இன்று அதிகாலை வழக்கம் போல கடையை திறந்து வியாபாரம் நடத்தி வந்துள்ளார். அப்போது திடீரென கடைக்குள் புகுந்த 6 பேர் கொண்ட வட இந்திய மாநிலத்தை சேர்ந்த … Read more

நடிகர் ரஜினிகாந்துடன் அஜித் சந்திப்பு..? வைரலாகும் புகைப்படம் குறித்து விளக்கம்.!

நடிகர் ரஜினிகாந்தை அஜித் நேரில் சந்தித்ததாக இணையதளத்தில் புகைப்படங்கள் வெளியான நிலையில், அது போன்ற சந்திப்பு ஏதும் நிகழவில்லை என நடிகர் அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். இணையதளத்தில் உலா வரும் அந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  Source link