ரூ.2,877 கோடி..  ஐடிஐ நிறுவனங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயா்த்தும் திட்டம்!

ரூ.2,877 கோடியில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை, தொழில்நுட்ப மையங்களாக தரம் உயா்த்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு பின்வருமாறு: தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் திறன் மேம்பாடு அவசியம். தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாநிலத்தில் உள்ள 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப திறன்பெற்ற தொழிலாளர்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. கடந்த 2021-22-ம் ஆண்டு தொழிலாளர் துறை மானியக் … Read more

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.!!

சென்னையில் கொரோனா தொற்றை குறைத்தால் மற்ற பகுதிகளில் குறையும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னையில் கொரோனா தொற்று பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை  கட்டுபடுத்த சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை சமீபத்தில் அறிவித்துள்ளது.  தற்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் – இன்று மனுத்தாக்கல் தொடக்கம்!!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதி முடிகிறது. புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25ஆம் தேதி பதவி ஏற்க வேண்டும். அதற்குள் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும். இதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடக்கிறது. இந்நிலையில் தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஆனால், மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியோ, எதிர்க்கட்சிகளோ தங்களது வேட்பாளரை இன்னும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பான ஆலோசனைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. … Read more

முதல் பயணத்தில் முதல் தனியார் ரயில்..!

நாட்டிலேயே முதல் முறையாக தனியாரால் இயக்கப்படும் ரயில் கோவையில் இருந்து சீரடிக்கு பயணத்தை தொடங்கியது. திருப்பூர், ஈரோடு,சேலம், பெங்களூரு, மந்திராலயம் வழியாக செல்லும் ரயிலில் 1,500 பேர் பயணித்தனர். மத்திய அரசின் ‘பாரத் கௌரவ்’ திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 5 நகரங்களில் இருந்து ஷீரடிக்கு தனியார் ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாகக் கோவையில் இருந்து ஷீரடிக்கு முதலாவது ரயில் சேவை தொடங்கியது. கோவையைச் சேர்ந்த எம் என் சி … Read more

கோவில்பட்டி | தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து புதுமாப்பிள்ளை உட்பட 3 பேர் பலி

கோவில்பட்டி: கயத்தாறு அருகே அரசன்குளம் பகுதியில் தனியார் ஆம்னி பேருந்து, தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புதுமாப்பிள்ளை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை ராஜபாளையத்தைச் சேர்ந்த பாண்டி செல்வன்(28) என்பவர் ஓட்டினார். ஆம்னி பேருந்தில் இரு ஓட்டுநர்கள் ஒரு கிளீனர் மற்றும் 28 பயணிகள் பயணம் செய்தனர் திருநெல்வேலி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறையடுத்த அரசங்குளம் விலக்கு அருகே நேற்று … Read more

ஒலிம்பிக் சாதனையை முறியடித்த நீரஜ் சோப்ரா… சர்வதேச போட்டியில் புதிய சாதனை!

Neeraj Chopra Tamil News: இந்தியாவில் முன்னணி தடகள வீரராக வலம் வருபவர் நீரஜ் சோப்ரா. கடந்த ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிந்தல் பிரிவில் கலந்து கொண்ட இவர் 87.58 மீட்டர் தூரம் வரை மிகச்சிறப்பாக ஈட்டியை எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டச் சென்றார். இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் நடந்து முடிந்து 10 மாதங்களுக்கு பிறகு தற்போது சர்வதேச போட்டியில் கலந்து கொண்ட நீரஜ் சோப்ரா தனது ஒலிம்பிக் சாதனையை முறியடித்து புதிய … Read more

தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில்  … Read more

அதிர்ச்சி! நாட்டில் 8 ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா!!

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்த நிலையில் நேற்று அதிரடி மாற்றம் ஏற்பட்டது. தினசரி பாதிப்பு 7 ஆயிரத்துக்கு கீழே வந்தது. இந்தநிலையில் இந்தியாவில் ஒரே நாளில் 8,822 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று முன் தினம் 8,084, நேற்று 6,594 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 8,822 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,32,36,695 லிருந்து 4,32,45,517 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் … Read more

MGM தலைமை அலுவலகத்தில் ஐ.டி.ரெய்டு.!

எம்ஜிஎம் குழுமத்தில் சோதனை MGM தலைமை அலுவலகத்தில் ஐ.டி.ரெய்டு சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் இயங்கி வரும் எம்ஜிஎம் குழுமத்தின் தலைமை அலுவலகத்தில் வருமானத் துறை அதிகாரிகள் சோதனை 10-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் சாந்தோம் பகுதியில் உள்ள எம்ஜிஎம் குழுமத்தின் நிர்வாகி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் தமிழகம் முழுவதும் எம்ஜிஎம் குழுமம் தொடர்புடைய 40-க்கு மேற்பட்ட இடங்களில் வருமானவரி சோதனை பெங்களூரில் உள்ள எம்ஜிஎம்-க்கு சொந்தமான … Read more

'அதிமுகவுக்கு ஓபிஎஸ் தலைமை': சென்னையின் முக்கிய இடங்களில் ஆதரவாளர்கள் போஸ்டர்

சென்னை: அதிமுகவுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வலியுறுத்தி, சென்னையின் முக்கிய இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பொதுக்குழுத் தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் … Read more