நாகையில் மீன்களை சாலையில் கொட்டி மீனவர்கள் போராட்டம்.. டீசலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற மீனவரால் பரபரப்பு.!

நாகை மாவட்டத்தின் நாகூர் துறைமுகத்தில் மீன் விற்பனைக்கு ஒருதரப்பு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆவேசமடைந்த மற்றொரு தரப்பு மீனவர்கள், மீன்களை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மேல பட்டினச்சேரி மீனவர்கள் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய நிலையில், அந்த மீன்களை நாகூர் துறைமுகத்தில் விற்பனை செய்யக்கூடாது என கீழப்பட்டினச்சேரி மீனவர்கள் தடுத்துள்ளனர். இதனை கண்டித்து நாகூர் காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் மீன்களை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து கடுமையாக … Read more

இலங்கையில் பௌத்த அடையாள சின்னங்களை நிறுவி தமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்கும் முயற்சி: வேல்முருகன்

சென்னை: “இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் தொடர்ந்து பௌத்த விகாரைகள் கட்டப்பட்டு வரும் நிலையில், தமிழர் உரிமையை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2009-ஆம் ஆண்டு, இலங்கையில் போர் முடிவுக்கு பிறகு, பௌத்தர்களின் ஆக்கிரமிப்புகளும், அதிகாரமும் தலைதூக்கத் தொடங்கியது. ஈழத்தில் தமிழர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அங்கு சிங்களவர்களும், சிங்கள ராணுவமும் குடியமர்த்தப்பட்டன. தமிழர்களின் வழிபாட்டுத் … Read more

கொலை குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற அனுமதி கோரி மனு

கொலை வழக்கு குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற அனுமதி கேட்டு கும்பகோணம் போலீஸார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூன் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கட்டை ராஜா. இவர் மீது பட்டீஸ்வரம், கும்பகோணம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் 16 கொலை மற்றும் கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளன. கும்பகோணம் திப்பிராஜபுரம் அருகே சென்னியமங்கலத்தில் செந்தில்நாதன் என்பவரை 2013-ல் கொலை செய்த … Read more

பாசிப் பருப்பு- வெந்தயக் கீரை கூட்டு: இப்படிச் செஞ்சா ஒரு பிடி பிடிப்பீங்க!

நமது உணவில் கீரை மற்றும் ஊட்டச்சத்து உள்ள பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில் நாம் தினமும் வெண்டக்காய், அவரைக்காய், பீட்ரூட் என்று பலவகை பொரியல் செய்வோம். அல்லது கூட்டு வகைகளை செய்வோம். பருப்பு மற்றும் கீரை சேர்த்து கூட்டாக செய்வதையும் நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் பாசிப்பருப்பு- வெந்தயக் கீரை கூட்டு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். பாசிப்பருப்பில் புரத சத்து, நார்சத்து, இருக்கிறது. வெந்தயக்கீரையில் பொட்டாஷியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி6 இருக்கிறது. இதனால் இந்த … Read more

கொலையாளிகளைத் தண்டிக்காது காப்பாற்றத் துணைபோவதும் வெட்கக்கேடு இல்லையா? கொந்தளிக்கும் சீமான்.!

அதிகரித்து வரும் காவல்நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறையை சீர்திருத்தம் செய்து மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை, கொடுங்கையூரில் காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டிலிருந்த விசாரணை சிறைவாசி ராஜசேகரும், நாகப்பட்டினம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை சிறைவாசி சிவசுப்ரமணியனும் அடுத்தடுத்த நாட்களில் மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காவல்நிலைய மரணங்கள், காவல்துறை … Read more

குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 உரிமைத்தொகை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

மதுரை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான தரவுகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். மதுரையில் அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 25 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளி கட்டடத்தை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார். பின்னர் மதுரை மகபூப் பாளையம் பகுதியில் உள்ள சட்ட மன்ற அலுவலகத்தில் நிதியமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: … Read more

`அதிமுக ஒன்றும் பரிசோதனை எலி அல்ல!’- வாசகர்களின் கமெண்ட்ஸ் #Like#Dislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மே 20-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘அதிமுகவில் தீராமல் தொடர்கிறதா இரட்டைத் தலைமை விவகாரம்… என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் பொதுக்குழுவில்? ‘ எனக் கேட்டிருந்தோம். … Read more

கொ. கடலை, தண்ணீர் மட்டும் போதும்.. புரதம் நிறைந்த ’டோஃபு’ வீட்டில் செய்வது எப்படி?

உங்கள் உங்கள் உள்ளூர் சந்தையில் டோஃபு எளிதில் கிடைக்கவில்லையா? இனி கவலை வேண்டாம். இந்த சூப்பர் சிம்பிள் ரெசிபி மூலம் உங்கள் சொந்த டோஃபுவை நீங்களே வீட்டில் தயாரிக்கலாம். இந்த சுவையான டோஃபுவை செய்ய, உங்களுக்கு 1 கப் கொண்டைக்கடலை மற்றும் 2 கப் தண்ணீர் தேவை. வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த டோஃபு புரதத்தால் நிறைந்துள்ளது, அதே நேரத்தில் பட்ஜெட்டுக்கு ஏற்றது. இந்த கொண்டைக்கடலை டோஃபுவை 3-4 நாட்களுக்கு ஃபிரிட்ஜில் எளிதாக சேமிக்கலாம். நீங்கள் அடிக்கடி வீட்டில் … Read more

கருத்துக்கணிப்புகளுக்குத் தடை: தேர்தல் சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும் – மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்.!

பொதுத்தேர்தல்களில் ஒருவர் ஒரு தொகுதிக்கும் கூடுதலாக போட்டியிடக் கூடாது; தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை இந்திய தேர்தல் ஆணையம்  வலியுறுத்தியுள்ளது. சமவாய்ப்புடன் தேர்தலை நடத்துவதற்கான இந்த சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ராஜிவ்குமார், மக்களவை மற்றும்  சட்டப்பேரவைத் தேர்தல்களை … Read more

முதல்வர் ஸ்டாலின் உடன் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை குழு ஆலோசனை

சென்னை: தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை தயார் செய்ய அமைக்கப்பட்ட குழுவினர் இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து பேசினர். தமிழ்நாடு மாநிலத்திற்கென கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் கல்விக் கொள்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் உறுப்பினர்களாக சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எல்.ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமானுஜம், மாநிலத் திட்டக்குழு … Read more