தாலியை கழட்டிவைப்பது கணவருக்கு மன உளைச்சலைத் தரும்: விவகாரத்து வழக்கில் சென்னை ஐகோர்ட் கருத்து

சென்னை: தாலியை கழட்டிவைப்பது கணவருக்கு மன உளைச்சலைத் தரும் செயல் என்று விவாகரத்து வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் விஎம் வேலுமணி, எஸ்.சவுந்தர் அடங்கிய அமர்வின் முன் விவாகரத்து வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. ஈரோடு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக உள்ள சி.சிவகுமார் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரியிருந்தார். ஆனால், அவரது விவாகரத்து மனுவை கடந்த 2016-ஆம் ஆண்டு உள்ளூர் குடும்பநல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை ரத்து செய்யக் கோரி சிவகுமார் உயர் … Read more

சீரமைப்பு பணிக்காக மூடப்படும் காவிரி பாலம்: திருச்சி- ஸ்ரீரங்கம் டிராஃபிக் 5 மாதங்கள் திணறும் அபாயம்

1976-ல் பயன்பாட்டுக்கு வந்த திருச்சி காவிரி பாலம் பராமரிப்புக்காக மூடப்படவிருக்கிறது இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.   திருச்சி மாநகரில் இருந்து ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1976-ல் அகன்ற புதிய பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் பயன்பாட்டில் இருந்தாலும் சமீப காலமாக காவிரி பாலத்தில் ஆங்காங்கே சாலையின் நடுவே இருக்கும் இரும்பு கம்பிகள் பெயர்ந்தும், ஒவ்வொரு தூணுக்கும் இணைப்பாக இருக்கக்கூடிய பகுதிகளில் பள்ளங்கள் விழுந்தும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் … Read more

அரசு ஆரம்பப்பள்ளியில் திடீர் ஆய்வு.. மாணவிகளுடன் தானும் ஒரு மாணவியாக அமர்ந்து பாடங்களை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்!

காஞ்சிபுரம் அருகே காலூர் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் கழிவறைகள் சுகாதாரமாக உள்ளதா? குடிநீர் தரமானதாக உள்ளதா என ஆய்வு செய்த அவர், பின்னர் வகுப்பறைகளுக்குள்ளும் சென்று பார்வையிட்டார். அப்போது மாணவிகளுடன் தானும் ஒரு மாணவி போல் அமர்ந்துகொண்டு பாடங்கள் குறித்து அவர் கேட்டறிந்தார். முன்னதாக தொடக்கப்பள்ளி அருகே உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்ற ஆட்சியர் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவை சாப்பிட்டுப்பார்த்து அதன் தரம் குறித்து … Read more

புதுச்சேரியில் சிறுவன் மரணம் எதிரொலி: பள்ளி நேரங்களில் கூடுதல் போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபட உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து விழுப்புரம், கடலூர் செல்லும் சாலைகளில் பள்ளி நேரங்களில் கூடுதலாக போக்குவரத்து காவலர்களை பணியில் நியமிப்பதுடன், ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரவைத் தலைவர் செல்வம் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி – விழுப்புரம் மற்றும் புதுச்சேரி – கடலூர் சாலைகளில் அடிக்கடி ஏற்படுகின்ற விபத்துக்களால் தொடர்ந்து ஏராளமானோர் பலியாகியுள்ளனர். நேற்று பள்ளி சென்ற குழந்தை தந்தை கண் முன் இறந்த சம்பவம் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. பொதுமக்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் அரசின் செயல்பாடுகளையும், சாலை பணிகளை … Read more

மேலும் 44 பேரை கட்சியை விட்டு நீக்குவதாக ஓ.பி.எஸ் அறிவிப்பு: முழுப் பட்டியல்

அதிமுக கட்சியில் உள்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் சிக்கலாகிவரும் நிலையில், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜய பாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட 44 பேரை ஓ.பன்னீர் செல்வம் கட்சியிலிருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.யார் அந்த 44 நபர்கள்?:-அந்த அறிக்கையில், முன்னாள் அமைச்சர் சி. விஜய பாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன், கீர்த்திகா முனியசாமி, ஆர்.எஸ். ராஜேஷ், டி.ஜி. வெங்கடேஷ் பாபு, பாலகங்கா, சோமசுந்தரம், திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம், சிட்லப்பாக்கம் ச ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பென்ஜமின், … Read more

ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களை அடையாளம் காண ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களை அடையாளம் காண ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு மாதத்தில் குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய நிறுவன பணியாளர்கள் பணி நிபந்தனை விதிகளின் கீழ் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் அர்ச்சகர்கள் நியமனத்துக்கு தடை விதிக்க கோரி, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜகத்குரு ராமநாதாச்சார்யா சுவாமி ராம்பத்ராச்சார்யா ஸ்ரீ துளசி பீட சேவா நியாஸ் மற்றும் டெல்லி, … Read more

ஸ்டாலினுக்கு மேலும் சில நாட்கள் ஓய்வு தேவை: காவேரி மருத்துவமனை அறிக்கை

Tamil Nadu Chief Minister M K Stalin Tamil News: தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கடந்த செவாய்க்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். 2 நாட்கள் தனிமைபடுத்தலுக்குப் பிறகு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு … Read more

#காட்டுமன்னார்கோவில் || குடிசைக்குள் புகுந்த மணல் லாரி.! 10 மாத பெண்குழந்தை பலி.! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயம்.!

கடலூர் மாவட்டம்,  காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நெய்வாசல் கிராமத்தில் சாலையில் மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டிற்குள் சுவரை இடித்துக் கொண்டு நுழைந்து கவிழ்ந்தது.  அப்போது வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் 10 மாத பெண்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.  அப்பகுதி மக்கள் உடனடியாக அவர்களை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் … Read more

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளை அறிவிக்கவும்: திருமாவளவன்

அரியலூர்: நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அறிவித்து இருக்கும் போது, பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள் என்ன என்பதை அறிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனின், தந்தை நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு திருமாவளவன் இன்று (ஜூலை 15) மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது: “நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என பட்டியலை … Read more

நடிகர் விஜயின் சொகுசு கார் வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு

சொகுசு கார் மீதான நடிகர் விஜய் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு நடிகர் விஜய் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான காருக்கு, நுழைவு வரி செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டு இருந்தது. பொதுவாக கார் இறக்குமதி செய்யப்பட்ட மாதத்தில் இருந்து அபராதமாக 2 சதவீதம் மட்டுமே கணக்கிட வேண்டும், ஆனால், 40 சதவீதம் கணக்கிட்டு இருப்பதாக விஜய் தரப்பில் கூறப்பட்டது. இதனால், அபராதத்தை ரத்து செய்யக் … Read more