வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு 

சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மற்றும் கோவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மற்றும் … Read more

தனியார் பள்ளி விடுதியில் தங்கிப்படித்த மாணவி எடுத்த விபரீத முடிவு

சின்னசேலம் அருகே தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த 12-ஆம் வகுப்பு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டினர். கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பில் பயின்று வந்தார். இந்நிலையில், அவர் இன்று அதிகாலை விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து … Read more

"நல்ல ஆரோக்கியத்துடன் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன்" – முதல்வருக்கு ஆளுநர் வாழ்த்து

சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் நல்ல ஆரோக்கியத்துடன் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் முதல்வர் நல்ல ஆரோக்கியத்துடன் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதியுள்ள கடிதத்தில், “கோவிட்-19 தொற்றினால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து நான் மிகுந்த கவலையுற்றேன். வலிமைமிக்க தலைவரான தாங்கள், முக்கியமாக பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால், இந்தத் தொற்றுக்கு ஆட்பட்டிருக்கிறீர்கள். … Read more

`பேசியது பொன்னையன்தான்; மிமிக்கிரில்லாம் செய்யல’- அதிரவைக்கும் அதிமுகவின் ஆடியோ அரசியல்!

நேற்றைய தினம் வெளியான ஆடியோவில் ’பொன்னையன்போல யாரும் மிமிக்ரி செய்யவில்லை, பேசியதே பொன்னையன்தான்’ என்றும், அது அவருடைய பேச்சே என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பன் கூறியுள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமானபொன்னையன், ஓ.பி.எஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பனிடனிடம் பேசிய ஆடியோவொன்று நேற்று வெளியாகியிருந்தது. அதில் அவர், “தொண்டர்கள் இரட்டை இலை பக்கம் உள்ளனர். தலைவர்கள் பணத்தின் பக்கம் உள்ளனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி தன்னை காப்பாற்றிக்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் பக்கம் செல்கிறார். கே.பி.முனுசாமியும் ஸ்டாலினை … Read more

சென்னையில் இன்று (ஜூலை:13) மின்தடை ஏற்படும் பகுதிகள்!

சென்னையில் இன்று (ஜூலை:13) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தி.நகர், மயிலாப்பூர், தாம்பரம், போரூர்,  வியாசர்பாடி, பெரம்பூர், கே.கே நகர், கிண்டி, ஆவடி, அம்பத்தூர், ஐடி காரிடர், பொன்னேரி, அடையார் ஆகிய துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது. மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். தி.நகர்; மேற்கு … Read more

தனியார் சிமென்ட் ஆலையை கண்டித்து கோவில்பட்டியில் கிராம மக்கள் போராட்டம்

புதூர் வட்டாரம் மேல வெங்கடாசலபுரம் கிராமம் அருகே தனியார் சிமென்ட் ஆலையை கண்டித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் தலைமை வகித்தார். பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் அளித்த மனு விவரம்: மேல வெங்கடாசலபுரம், சிவலார்பட்டி, கம்பத்துப்பட்டி, எல்.வி.புரம், மேல அருணாசலபுரம், மணியக்காரன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 1974-ம் ஆண்டு தனியார் சிமென்ட் நிறுவனத்தினர் விவசாயிகளிடம் நிலங்களை விலைக்கு வாங்கினர். 1984-ம்ஆண்டு முதல் அந்த … Read more

தொடரும் இபிஎஸ் – ஓபிஎஸ் மோதல்: தேர்தல் ஆணையம் பரிசீலணை

இபிஎஸ் – ஓபிஎஸ் மோதல் குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்துவருவதாக தகவல் தெரிவித்துள்ளது. இபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர். ஓபிஎஸ் தரப்பு புகாரும் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் தெரிவிக்கும் தகவலில், `ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இரண்டு பக்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது. விரைவில் தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக முடிவெடுக்கும். நோட்டீஸ்சுக்கு பதில் கிடைத்தபிறகு, தேவைப்பட்டால் நேரில் ஆஜராகி … Read more

Tamil News Live Update: முதல்வர் நலம்பெற ஆளுநர் வாழ்த்து

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamil News Latest Updates கோத்தபய ராஜபக்சே ராஜினாமா? இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, விமானப்படை விமானம் மூலம் இலங்கையை விட்டு வெளியேறி, மாலத்தீவுகளில் தஞ்சமடைந்துள்ளார். இன்று கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை … Read more

வீராவேசமாக ஓடிச்சென்று வீதி வீதியாக அடிவாங்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்..!

திருப்பூரில் மாணவர்கள் இருதரப்பாகப்  பிரிந்து வீதிகளில் விரட்டி விரட்டி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் ரயில்நிலையம் அருகேயுள்ள நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும், ((SPL gfx in )) குமார் நகர் பிஷப் அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே யார் கெத்து என்பது தொடர்பாக கடந்த ஒரு வாரமாக பிரச்சனை நீறுபூத்த நெருப்பாக இருந்துள்ளது. இந்நிலையில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ரயில்நிலையம் அருகே … Read more

நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதா? -தமிழக அரசு விளக்க வேண்டும் – ராமதாஸ் 

சென்னை: நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ”தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பட்ட வினாக்களுக்கு நேரடியாக பதில் அளிக்க ஆளுநர் மாளிகை மறுத்திருக்கிறது. இது நியாயமல்ல. … Read more