பறிமுதல் ஆன 1300 கிலோ கஞ்சா ஒரே நேரத்தில் அழிப்பு.. மாஸ் காட்டிய சென்னை கமிஷனர்!

சென்னை பெருநகர பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1300 கிலோ கஞ்சா போதைபொருட்கள் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் அழிக்கப்பட்டது.  செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியில் இயங்கிவரும் மருத்துவக்கழிவுகளை எரியூட்டும் பகுதியில் சென்னை பெருநகர பகுதியிலுள்ள காவல் நிலையங்களில் 37 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1300 கிலோ கஞ்சாவை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வடக்குமண்டல இணை இயக்குநர் ரம்யா பாரதி ஆகியோர் முன்னிலையில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை அழித்தனர். … Read more

பொறியியல் சேர்க்கை; குறைந்த கட் ஆஃப்-க்கும் டாப் காலேஜ் கிடைக்கும்; எப்படி?

Tamilnadu Engineering Admission 2022 low cut off also get top colleges: பிளஸ் 2வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து, கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைவாக உள்ளவர்களும் பொறியியல் படிப்புகளுக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம். உங்களுக்கு தமிழகத்தின் டாப் கல்லூரிகளிலே இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். பொறியியல் படிப்புகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், குறைந்த கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்கள் இடையே சற்று குழப்பம் இருக்கும். … Read more

இரட்டை இலை சின்னதுக்கே ஆப்பு….? இது என்ன புது டிவிஸ்ட்டா இருக்கே.. பீதியில் அதிமுகவினர்.!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மீண்டும் ஒரு ஒற்றை தலைமை வரவேண்டும் என்ற குரல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. மேலும் அந்த ஒற்றை தலைமையின் கீழ் அதிமுக முழு கட்டுப்பாட்டுடன் இயங்க வேண்டும் என்றும் பெரும்பாலான தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஏகோபித்த ஆதரவு இருந்ததால், பொதுக்குழு மொத்தமும் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருந்தது. மேலும் அதிமுகவின் … Read more

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.2.85 லட்சம் பணம் வழிப்பறி செய்த இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் போல் நடித்து 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்த இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த 15ம் தேதி புதுக்கோட்டையிலிருந்து தேவகோட்டைக்கு சென்று கொண்டிருந்த ஞான பாக்கியராஜ் என்பவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், அவரிடம் இருந்த பணத்தை வழிப்பறி செய்த நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.  Source link

நியாய விலை கடைகளை நவீனமாக மாற்ற நடவடிக்கை – முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

கோவை: தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாநில எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கோவைக்கு இன்று (ஜூன் 25-ம் தேதி ) மதியம் வந்தார். பீளமேடு புதூரில் உள்ள நியாய விலைக்கடை, ரயில் நிலையம் சாலையில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு அலுவலகம் ஆகிய இடங்களில் நேற்று … Read more

'இபிஎஸ்க்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுகிறேன்’ – மேலூரில் பேனரால் பரபரப்பு

ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டித்தேவன்வலசையில் ஒன்றிய கவுன்சிலர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது கூட்டாளிகளை செயல்பட்டதாகக் கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பினர். அதேபோன்று, எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெறுவதாக மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக நகரச் செயலர் பாஸ்கரன் என்பவர் பேனர் வைத்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வரும் , அதிமுக வின் … Read more

அசிங்கமான நாய்க்கு 1500 டாலர் பரிசு; வங்கதேசத்தில் பத்மா பாலம் திறப்பு… உலகச் செய்திகள்

Ugly dog win 1500 dollars, Thailand Ganja Chicken today world news: உலகம் முழுவதும் நடைபெற்ற முக்கியமான, சுவாரஸ்யான நிகழ்வுகளின் செய்திகளை இப்போது பார்ப்போம். வங்கதேசத்தின் நீண்ட பாலம் திறப்பு மைல்கல் பத்மா பாலம் செங்கல் மற்றும் சிமெண்ட் குவியல் அல்ல, ஆனால் வங்காளதேசத்தின் பெருமை, திறன் மற்றும் கண்ணியத்தின் சின்னம் என்று பிரதமர் ஷேக் ஹசீனா சனிக்கிழமையன்று, உள்நாட்டு நிதியுதவியுடன் கட்டப்பட்ட நாட்டின் மிக நீளமான பாலத்தை திறந்து வைத்து கூறினார். 6.15 … Read more

ஓபிஎஸ், இபிஎஸ்.,க்கு பதிலாக அதிமுகவின் புதிய ஒற்றை தலைமை…. அதிமுகவின் கொடியை ஏந்தி கோஷமிட்ட தொண்டர்கள்.!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விடுத்துள்ள நிலையில், இன்று சென்னை சசிகலா வீட்டின் முன்பு திரண்ட அவரின் ஆதரவாளர்கள் (அதிமுகவினர் என்று சொல்லப்படுகிறது), அதிமுகவை வழிநடத்த சசிகலா வரவேண்டும் என்ற கோஷத்தை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மீண்டும் ஒரு ஒற்றை தலைமை வரவேண்டும் என்றும், கட்சியை முழுமையாக அவர் தலைமையில் நடத்த வேண்டும் என்றும், பெரும்பாலான தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கை சற்று ஓங்கி … Read more

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு..!

மேற்குதிசை காற்று வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் … Read more

“பொறியியல், மருத்துவக் கனவுகளோடு மட்டும் நின்றுவிடாதீர்” – ‘கல்லூரி கனவு’ நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: “அரசுப் பள்ளியில், தமிழ் வழியில் படித்தாலும் நிச்சயம் முன்னேற முடியும்” என்று ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் நடந்த ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும், “பொறியியல், மருத்துவம் என்பது மிகச் சிறந்த படிப்புகள்தான். ஆனால், அந்த இரண்டு கனவுகளோடு மட்டும் நின்றுவிட வேண்டாம்” என்றார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை … Read more