தப்பித்த சைக்கிளுடன் பாழுங்கிணற்றில் விழுந்த சைக்கோ ஆசாமி பலி..!

திருப்பூர் அருகே தாயையும், இரு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தொப்பியுடன் சைக்கிளில் தப்பிய வட மாநில சைக்கோ ஆசாமி பாழுங்கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. திருப்பூர் அருகே உள்ள சேடர்பாளையம் மெட்டுவாதோட்டம் பாலாஜி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த திருவாரூரை சேர்ந்த முத்துமாரி என்ற பெண்ணையும், அவரது இரு மகன்களையும் கொலை செய்து விட்டு வட மாநிலத்தை சேர்ந்த கொலையாளி ஒருவன் தலைமறைவானான். முத்துமாரியுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்த … Read more

“நீங்கள் வளைந்து, நெளியலாம்… ஆனால், எங்களிடம் சமரசத்திற்கு இடமில்லை” – ராம்குமாருக்கு முத்தரசன் பதில்

சென்னை: வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதில் சமரசத்திற்கு இடமில்லை என்று ராம்குமாருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், பிரதமர் நரேந்திர மோடி குறித்து எமது விமர்சனத்தை தரம் குறைந்ததாக மதிப்பிட்டு, இனிமேல் எமது தந்தையின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று ஊடகங்கள் வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார். ராம்குமாருக்கு சிவாஜி கணேசன் உயிரியல் வழி தந்தையாவார். ஆனால், என் போன்ற … Read more

ஃபோர்டு தொழிற்சாலை செட்டில்மெண்ட் விவகாரம்: 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலையில் செட்டில்மெண்ட் பேச்சுவார்த்தை நடத்தக்கோரி தொடர்ந்து மூன்றாவது நாளாக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் இயங்கி வரும் பிரபல ஃபோர்டு கம்பெனியை ஜூன் 30-ஆம் தேதி நிரந்தரமாக மூடப்போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பெனி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து போராட்டம், ஆர்ப்பாட்டம் என பலதரப்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. போராட்டம் தொடங்கிய ஆரம்பகால கட்டத்தில் ஊழியர்களுக்கான செட்டில்மெண்ட் பணம் முறையாக பணிக்கால அடிப்படையில் வழங்கப்படும் என கம்பெனி … Read more

இரவில் வெதுவெதுப்பான நீருடன் கிராம்பு… இந்த மேஜிக் நடக்குதான்னு பாருங்க!

Tamil Health Update : சமையலில் பயன்படுத்தப்படும் ஆரோக்கியமான மசாலா பொருட்களில் கிராம்புக்கு தனி இடம் உண்டு. இந்தியாவில் பெரும்பாலும் சமையலறையில் கிராம்பு முக்கிய ஆரோக்கிய பொருமாள பயன்படுகிறது. ஒரு பசுமையான மரத்திலிருந்து சுவை பல நன்மைகளை கொடுக்கும் இந்த சிறிய உலர்ந்த பூ மொட்டுகள் சமையலுக்கு மட்டுமல்லாது பல்வேறு நோய்களை குணப்படுத்தவும் உதவுகிறது. இந்தியாவில் அதிகம் உண்ணப்படும் பெரும்பாலான வெளிநாட்டு உணவு பொருட்களுக்கு சுவை அதிகரிக்க கிராம்பு சேர்க்கப்படுகிறது. இதில்  யூஜெனால் இருப்பதால், மன அழுத்தம், … Read more

மாற்றுதிறனாளி பெண்ணை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை.. திருப்பூரில் நடந்த அவலம்..!

மாற்றுதிறனாளி பெண்ணை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், உடுமலையை சேர்ந்தவர் மணிகண்டன்.  இவர் கருத்துவேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டின் அருகே இருந்த மாற்று திறனாளி பெண்ணை அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.  அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் மணிகண்டனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர்  அவரை கைது … Read more

சாலையில் நடந்து சென்ற எஸ்.ஐ., மனைவியிடம் நகை பறிக்க முயற்சி -24 மணி நேரத்திற்குள் கைது செய்த காவல்துறை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சாலையில் நடந்து சென்ற எஸ்.ஐ மனைவியிடம் நகையை பறிக்க முயன்ற கொள்ளையனை சிசிடிவிக் காட்சிகளை கொண்டு போலீசார் 24மணி நேரத்தில் கைது செய்தனர். செய்யாறு பகுதியைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரனின் மனைவி அனுசியா, நேற்றிரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த ஒருவன் அனுசியா அணிந்திருந்த 12 சவரன் தங்க நெக்லசை பறிக்க முயன்ற போது அது காதில் இருந்த … Read more

ஆர்.டி.ஐ ஆர்வலரை நள்ளிரவில் விசாரித்த கோவை போலீஸ் – ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம்

கோவை: ஆர்.டி.ஐ சட்டம் மூலம் கேள்வி கேட்ட ஆர்வலரை நள்ளிரவில் விசாரித்த காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவை திருமலையாம்பாளையம் விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். கல்லூரி பேராசிரியர். சமூக ஆர்வலரான இவர், சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், ‘‘நான் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் திடக்கழிவு … Read more

எம்.பி தேர்தல்: தமிழகத்திலிருந்து 6 பேரின் மனுக்கள் ஏற்பு…யார் யார்? முழு விவரம்

மாநிலங்களவை தேர்தலுக்கு தமிழகத்திலிருந்து மனுத்தாக்கல் செய்த அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. காலியாகும் இடங்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று மாநிலங்களவை வேட்பாளர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. திமுக வேட்பாளர்களான கல்யாண சுந்தரம், கிரி ராஜன், ராஜேஸ்குமார், அதிமுக வேட்பாளர்கள் சி.வி சண்முகம், தர்மர், காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. … Read more

பிளஸ்-1 மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் மர்ம மரணம்: தண்டவாளத்தில் பிணமாக மீட்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரின் 16 வயது மகள் உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். திருச்சி மாவட்டம் மணப்பாறை திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று பள்ளியில் இறுதித் தேர்வை எழுதி முடித்துவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார்.  அப்போது  திருச்சி சாலையில் உள்ள ரயில்வே … Read more

கட்டம் கட்டப்படும் PFI (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா).! அமலாக்கத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை.!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்தை முடக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், கேரளாவில் கேரள மாநிலத்தில் நடைபெற்ற பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிகழ்ச்சியில், கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கு எதிராகவும், கிறிஸ்தவ மதத்தினருக்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் கோஷங்களை எழுப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே கேரள … Read more