கண்ணீர் விட்டு கதறி அழுத இசைஞானி இளையராஜா – வைரல் வீடியோ.! 

பிரபல தனியார் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், எஸ் பி பாலசுப்ரமணியன் 75ஆவது நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.  இதில், இசைஞானி இளையராஜா கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சிகளைப் பார்க்கும் ரசிகர்களுக்கு மனம் நெகிழ்ந்து போய் உள்ளனர். பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த ஜூன் 3ஆம் தேதி முதல் எஸ்பிபி 75 என்ற நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி நடத்தி வருகிறது. இதில், இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா, இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், … Read more

கோவில் திருவிழாவின் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சப்பரம்.. பதறவைக்கும் வீடியோ காட்சிகள்.!

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே கோவில் திருவிழாவின் போது சப்பரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மாதேஹள்ளி கிராமத்தில் காளியம்மன் கோவிலில் திருவிழா நடைபெறும் நிலையில், முக்கிய நிகழ்ச்சியாக இன்று சப்பர ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, வயல்வெளி அமைந்த பகுதியில் சப்பரம் சென்றபோது போது திடீரென அதன் சக்கரத்தின் அச்சாணி முறிந்தாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, சப்பரம் சரிந்து விழுந்ததில் அதற்கு அருகே நின்றவர்கள் அதில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த … Read more

கும்பகோணத்தில் ஆணவக் கொலை: திருமணமான 5 நாட்களில் காதல் தம்பதி வெட்டிக் கொலை

கும்பகோணம்: கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியை, அப்பெண்ணின் அண்ணன் அரிவாளால் வெட்டில் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி அய்யாகோயில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சரண்யா (24). இவர் நர்சிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூரைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் மோகன் (31). இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இருவரும் … Read more

முதுபெரும் எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி உடல் நலக் குறைவால் காலமானார்

முதுபெரும் எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி உடல் நலக் குறைவு காரணமாக நாமக்கல்லில் இறந்தார். சர்க்கரை, சங்கம், தாகம், சுரங்கம், ஆகிய நாவல்களை இவர் எழுதியுள்ளார்.  1935 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இடதுசாரி சித்தாந்தந்தங்களை உள்ளடக்கி இலக்கியங்களைப் படைத்துள்ளார். இவரது புதினங்கள் இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, சிங்கள போன்ற அயல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கரும்பு விவசாயியாக, தொழிற்சங்க ஊழியராக, படைப்பாளியாக பல பரிமாணங்களில் இவர் இயங்கினார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த … Read more

அதானிக்காக மோடி அழுத்தம் கொடுத்ததாக கூறிய இலங்கை அதிகாரி பதவி விலகல்

தொழிலதிபர் அதானிக்கு மின் திட்டத்தை வழங்குமாறு இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாகக் கூறிய இலங்கை உயர் அதிகாரி பதவி விலகினார். இலங்கை மின்சார வாரியத் தலைமை அதிகாரியான எம்.எம்.சி ஃபெர்டினாண்டோ, தொழிலதிபர் அதானிக்கு மின் திட்டத்தை வழங்குமாறு இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாகக் கூறியதை விரைவாக திரும்பப் பெற்றார். இருப்பினும், அவருடைய பேசு இலங்கையில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இலங்கையில் மோடியின் நண்பர்கள் பின்வாசல் வழியாக … Read more

ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்து மூன்று மாத குழந்தை பலி.. திருவண்ணாமலை அருகே நிகழ்ந்த சோகம்..!

ஸ்பீக்கர் விழுந்து மூன்று மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், பிச்சானந்தல் பகுதியை சேர்ந்தவர் பரணி. இவருக்கு சுபஸ்ரீ என்ற மூன்றுமாத குழந்தை உள்ளது. இந்நிலையில், சம்பவதன்று ஹாலில் சுபஸ்ரீ படுக்க வைத்துவிட்டு பரணி வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்கு அலமாரியில் உள்ள ஸ்லாப்பில் அடுக்கி வைத்திருந்த ஸ்பீக்கர் குழந்தை மீது விழுந்தது. இதனை கண்டு பரணி கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் குழந்தையை மீட்டு … Read more

நாகப்பட்டினத்தில், 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி ஒருவர் உயிரிழப்பு

நாகை அரசு மருத்துவமனையில் 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த விசாரணைக் கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெண் ஒருவர் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சிவசுப்பிரமணியன் என்பவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நாகப்பட்டினம் மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த சிவசுப்பிரமணியனுக்கு வெள்ளிக்கிழமை உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அன்றைய தினமே நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 4 நாட்களாக அங்கு சிகிச்சை பெற்று … Read more

“திடீர் உடல்நல பாதிப்பு… 3 முறை மருத்துவமனை அழைத்துச் சென்றோம்” – கைதி ராஜசேகர் மரணம் குறித்து சென்னை காவல் துறை விளக்கம்

சென்னை: ராஜசேகரை மூன்று முறை மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததாகவும், அவர் திடீரென உடல்நிலை பாதிப்படைந்து இறந்துவிட்டதாகவும் சென்னை பெருநகர காவல் ஆணையரகம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் விசாரணையின்போது மரணமடைந்தார். இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “பி-6 கொடுங்கையூர் காவல் நிலைய எல்லையில் சமீபத்தில் ஒரு வீட்டில் 8 சவரன் தங்க நகைகள் திருடு … Read more

தருமபுரி: 18 கிராம மக்கள் நடத்திய திருவிழாவில் தேர் கவிழ்ந்து விபத்து – இருவர் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே தேர் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளி கிராமத்தில் காளியம்மன் தேர் திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கோவில் திருவிழாவை 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நாளான இன்று தேர் ஊர்வலம் நடைபெற்றது. அப்பொழுது வயல்வெளிகளில் தேர் வந்து கொண்டிருக்கும்போது திடீரென தேர் சக்கரத்தின் அச்சாணி முறிந்து தேர் சாய்ந்தது. … Read more

தாலுகா ஆபீஸில் ஜெயலலிதா, ஈ.பி.எஸ் புகைப்படங்கள் அகற்றம்; அ.தி.மு.க.,வினர் திரண்டதால் பரபரப்பு

EPS photos removed from Thiruvannamalai Taluk office issue: திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி புகைப்படங்கள் அகற்றப்பட்டது, சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அ.தி.மு.க.,வினர் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் அங்கு மீண்டும் வைக்கப்பட்டன. திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அறையில் முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், இன்று தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று தாசில்தார் அறையில் … Read more