#BigBreaking || டெல்லியிலிருந்து வந்ததுமே ஆட்டத்தை ஆரம்பித்த ஓபிஎஸ்.! நாள் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு.! அம்மாவாசை நாளில் பிள்ளையார் சுழி.!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மீண்டும் ஒரு ஒற்றை தலைமை வரவேண்டும் என்ற குரல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. மேலும் அந்த ஒற்றை தலைமையின் கீழ் அதிமுக முழு கட்டுப்பாட்டுடன் இயங்க வேண்டும் என்றும் பெரும்பாலான தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி வேட்புமனுத்தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற ஓ பன்னீர்செல்வம், இன்று மாலை சென்னை வந்தடைந்தார். சென்னை வந்தடைந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தப் பயணம் … Read more

விஜயகாந்த் உடல்நிலை குறித்த தவறான தகவல்கள்-2 யூ-டியூப் சேனல்கள் மீது புகார்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்த தவறான தகவல்களை வெளியிட்ட யூ-டியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் உள்ள நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளன. இச்சூழ்நிலையில் இரு யூ-டியூப் சேனல்கள் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதாகத் தெரிகிறது. அவை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். Source … Read more

வட்டார மருத்துவ அலுவலர் மீது நடவடிக்கை: கேளம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த மா.சுப்பிரமணியன் உத்தரவு

சென்னை: கேளம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவக் கட்டமைப்புகளின் பல்வேறு பிரிவுகள் சரிவர செயல்படாத காரணத்தால், வட்டார மருத்துவ அலுவலர் சாந்தகுமார் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பட உதவி: ட்விட்டர் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள … Read more

“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!

எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் ஒற்றை தலைமையாக்க ஆதரவு அளிக்காத நபர்களை கட்சியில் இருந்து நீக்குவோம் என தெரிவித்ததால் மட்டுமே அவருக்கு ஆதரவு அளித்தேன் என்று மீண்டும் ஓபிஎஸ் அணிக்கு திரும்பிய பின் தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் ஜெயதேவி பேட்டி அளித்துள்ளார். தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் ஜெயதேவி பேட்டி நீண்ட காலமாக ஓபிஎஸ் ஆதரவாளராக பார்க்கபட்டவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் எடப்பாடி … Read more

அமித் ஷா பேட்டி எதிரொலி; முன்னாள் டிஜிபி, சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா கைது

 Vaibhav Jha , Yogesh Naik , Jayprakash S Naidu Quoting SC order clearing Modi in 2002, Gujarat Police arrests former DGP, activist Teesta: 2002 குஜராத் கலவரத்தில் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என சிறப்பு புலனாய்வுக் குழு என்று சான்றளித்ததை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த ஒரு நாளுக்குப் பிறகு, நீதிமன்றத்தால் அவரது பங்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட ஓய்வு பெற்ற குஜராத் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமார் மற்றும் மனுதாரரான ஜாகியா ஜாஃப்ரிக்கு … Read more

முகம் சிதைந்த நிலையில் நிர்வாணமாக இறந்து கிடந்த பெண்.! அதிர்ச்சியில் அக்கம்பக்கத்தினர்.! 

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் அவரது வீட்டில் முகம் சிதைந்த நிலையில் நிர்வாணமாக இறந்து கிடந்ததால் அப்பகுதியில் பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கணாபுரம் பகுதியில் அமைந்திருக்கும் கோணசமுத்திரம் என்ற கிராமத்தில் ராதா என்ற பெண் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.  எனவே அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் பெண்ணின் வீட்டிற்கு சென்று … Read more

பேனரில் இருந்த ஓபிஎஸ்,வைத்திலிங்கம் ஆகியோரது உருவப்படங்களை கிழித்து இபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் நகர அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல் பேனரில் இருந்த ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோரது உருவப்படங்களை கிழித்து இபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவிடைமருதூர் தாலுகா திருபுவனம் கடைவீதியில் அமைந்துள்ள தண்ணீர் பந்தலுக்கு சென்ற அதிமுக நகர செயலாளர் சிங்.செல்வராஜ் தலைமையிலான நிர்வாகிகள் ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கத்தின் உருவப்படங்களை கிழித்தெறிந்ததுடன் ஓபிஎஸ் ஒழிக என்றும், மூன்றாம் புரட்சித்தலைவர் இபிஎஸ் வாழ்க என்றும் முழக்கமிட்டனர். Source link

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பன்னாட்டு விமான சேவைகள் அதிகரிப்பு

திருச்சி: திருச்சி விமானநிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், மலிண்டோ, ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகிய விமான நிறுவனங்கள் விமான சேவை அளித்து வருகின்றன. தமிழக அளவில் சென்னைக்கு அடுத்தப்படியாக திருச்சி விமான நிலையம் உள்ளது. இந்நிலையில், 2019-ம் ஆண்டில் உலக நாடுகள் முழுவதும் கரோனா பரவலால், வெளிநாட்டு சேவை மட்டுமின்றி உள்நாட்டு விமான சேவையும் பாதிக்கப்பட்டது. இருந்தபோதும் … Read more

மதுரை: கட்டிடப் பணியின்போது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாப பலி!

மதுரையில் கட்டிட பணியின்போது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் விரகனூர் ரிங்ரோடு சந்திப்பு அருகே அருப்புக்கோட்டை சாலையில் ஜெகதீசன் என்பவருடைய மகன் விவேக் என்பவருக்கு சொந்தமான திருமண மண்டபத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த கட்டுமான பணியானது நீர்நிலைப்பகுதியில் கட்டப்படுவதாக ஏற்கனவே புகார் எழுந்த நிலையில் தொடர்ந்து பணிகள் நடைபெற்றுவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருந்த போது திடீரென கட்டிடத்தின் சுவர் ஒன்று இடிந்து … Read more

ட்ரெண்டிங் என்ஜினீயரிங் கோர்ஸ் இதுதான்… கோவை டாப் 5 கல்லூரிகள் லிஸ்ட் இதோ!

Top 5 Engineering colleges in Kovai for AI and Data Science courses: செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தரவு அறிவியல் (Data Science), இணைய பாதுகாப்பு (Cyber Security), Internet of Things, 5G தொழில்நுட்பம் போன்ற படிப்புகளுக்கு தற்போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிக ஆர்வம் இருந்து வருகிறது. இவை சம்பந்தப்பட்ட துறைகளின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு காரணமாக இந்த படிப்புகளை படிக்க மாணவர்கள் விரும்புகின்றனர். இந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் … Read more