கொள்ளிடம் ஆற்று திடீர் வெள்ளத்தில் சிக்கிய 4 பேர்.. இருட்டிலும் போராடி பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்..!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேட்டூர் அணை நிரம்பியதை அடுத்து அணைக்கு வரும் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் அப்படியே காவிரியில் திருப்பி விடப்படுகிறது. இதனால் சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் தற்போது திருவைகாவூர் கொள்ளிடம் ஆற்றில் செல்கிறது. நேற்று மாலை இந்த ஆற்றில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் தண்ணீர் அதிகமாக வருவதை அறிந்து … Read more

சின்னசேலம் பள்ளி வன்முறை திட்டமிட்டு நடந்ததா?

கள்ளக்குறிச்சி: பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதியின் சந்தேக மரணத்தை தொடர்ந்து, சின்னசேலம் தனியார் பள்ளியில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் திட்டமிட்டு நடைபெற்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதற்கு போலீஸார் மறுப்புத் தெரிவிக்கின்றனர். சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில், கடலூர் மாவட்டம் பெரியநெசலூரைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகள் மதி பிளஸ் 2 படித்து வந்தார். பள்ளிதிறந்த 10 நாட்களில் மாணவியை வேறு பள்ளிக்கு மாற்ற பெற்றோர் முடிவுசெய்து, அவரது மாற்றுச் சான்றிதழை கோரியுள்ளனர். இந்நிலையில் … Read more

Today Rasi Palan 19th July 2022: இன்றைய ராசிபலன்

Rasipalan 19th July 2022, Tuesday ராசிபலன் ஜூலை 19 செவ்வாய்க்கிழமை 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Today Rasi Palan 19th July 2022: இன்றைய ராசி பலன், ஜூலை 19ம் தேதி 2022ராசி … Read more

நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா? மின் கட்டண உயர்வு குறித்து அண்ணாமலை கேள்வி.!

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அறிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த 10 வருடங்களில் மின்சார துறையின் கடன் ரூபாய் 12647 கோடியாக உயர்ந்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானயத்தை நிறுத்துவோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும். 42% மின் இணைப்பாளர்களுக்கு கட்டணங்களில் மாற்றம் இருக்காது … Read more

வீட்டுக்கு ஒரு இணைப்பு மட்டும் தர திட்டம் – தமிழகத்தில் மின்சார கட்டணம் 27 சதவீதம் வரை உயருகிறது

சென்னை: வீடுகளுக்கான மின் கட்டணத்தை அதிகபட்சம் 27 சதவீதம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். இது தொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2011-12-ல் ரூ.18,954 கோடியாக இருந்த மின் வாரிய நிதியிழப்பு, கடந்த 10 ஆண்டுகளில், அதாவது 2021 மார்ச் 31 வரை ரூ.1.13 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2021-22-ல் இருந்து மின் வாரிய நிதியிழப்பை 100 சதவீதம் முழுமையாக அரசே ஏற்றுக் கொள்ளும் என தமிழக அரசு … Read more

விமானத்தில் பயணிக்க தடை; இண்டிகோவை சாடிய கேரள கம்யூனிஸ்ட் தலைவர்

Inflight protest against Pinarayi Vijayan: E P Jayarajan criticises IndiGo for slapping travel ban: சி.பி.ஐ(எம்) மூத்த தலைவரும் ஆளும் இடது ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளருமான ஈ.பி.ஜெயராஜன் திங்களன்று, இண்டிகோ ஏர்லைன்ஸ் ஒரு மோசமான மற்றும் தரமற்ற விமான நிறுவனம், அவர்களின் விமானத்தில் பயணிப்பதை விட நான் நடந்து செல்வதையே விரும்புவேன், என்று கூறினார். இண்டிகோவிற்கு எதிரான மூத்த சி.பி.ஐ(எம்) தலைவரான ஜெயராஜனின் சர்ச்சைக்குரிய கருத்து, கடந்த மாதம் விமானத்தில் அவர் முறையற்ற … Read more

#கன்னியாகுமரி || விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற மூன்று பேர் கைது.!

கன்னியாகுமாரி மாவட்டத்தில் விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் நேற்று மாலை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்பொழுது ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வேகமாக வந்து கொண்டிருந்தனர். அவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் விசாரித்ததில் அவர்கள் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்ததில், கோடியூரை சேர்ந்த மணிகண்டன், முகமாற்றூரை சேர்ந்த ரஞ்சித் மற்றும் பள்ளியாடி அருவிதோட்டம் … Read more

சின்னசேலம் மாணவி உயிரிழப்பு விவகாரம் – திட்டமிட்ட கலவரம் என உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

சென்னை: சின்னசேலம் பள்ளி மாணவியின் உடலை மறுபிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, பள்ளி மீதான கலவரம் திட்டமிட்டு நடந்துள்ளதாக கண்டனம் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்த 16 வயதான மாணவி, பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால், உடலை வாங்க மறுத்து பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் கலவரமாக வெடித்தது. இதற்கிடையில், மகள் … Read more

மேற்கூரையின் மீது தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.. தலைக்கீழாக குதித்ததில் மண்டை உடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

சென்னை அம்பத்தூர் பட்டரவாக்கம் சர்வீஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு மதுபோதையில் வந்த இளைஞர், திடீரென 25 அடி உயரம் கொண்ட மேற்கூரையின் மேல் ஏறி தற்கொலை செய்துக்கொள்ளபோவதாக மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்புத்துறையினர், இளைஞரின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதை அலட்சியப்படுத்திய இளைஞர், திடீரென மேற்கூரையில் இருந்து தலைக்கீழாக குதித்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். … Read more

நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் (பொறுப்பு) பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 19, 20-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு … Read more