வெளிநாட்டில் இருந்து தமிழக கோவில்களைச் சேர்ந்த 10 சிலைகள் மீட்பு.!

வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட தமிழக கோவில்களை சேர்ந்த 10 சிலைகளை டெல்லியில் மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார். தமிழக கோவில்களில் இருந்து களவாடப்பட்ட விலை மதிப்பற்ற 10 புராதன உலோக மற்றும் கற்சிலைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியாக நாட்டு அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை இயக்குநர் ஜெயந்த் முரளி ஆகியோர் பங்கேற்றனர். … Read more

கல்லார் அரசு தோட்டக்கலை பழப் பண்ணை இலவ மரங்களில் பஞ்சு பறிக்கும் பணிகள் தீவிரம்

கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் அரசு பழப் பண்ணையில் சீசன் தொடங்கியுள்ளதால், இலவ மரங்களில் இருந்து காய்களை தட்டி பஞ்சு சேகரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கல்லார் அரசு பழப் பண்ணை உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இப்பழப் பண்ணை இயற்கை எழில் மிகுந்த சூழலில் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் சீரான சீதோஷன நிலை நிலவும் இப்பண்ணையில் துரியன், மங்குஸ்தான், வெண்ணைப்பழம், ரம்புட்டான், வாட்டர் ஆப்பிள் என மிக … Read more

வைகை அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு

வைகை அணையிலிருந்து நாளை(02.06.2022) தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 62.57 அடியாக உள்ளது. போதிய நீர் இருப்பு உள்ளதால் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பெரியாறு பிரதான கால்வாய் பாசன நிலங்களுக்கு நாளை (ஜூன் 2aaம் தேதி) காலை 10 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் முன்னிலையில் நடக்கும் தண்ணீர் திறப்பு … Read more

சசிகலா வந்தால் பா.ஜ.க வலுப் பெறும்: நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran welcomes VK Sasikala to BJP: சசிகலா பா.ஜ.க.,வுக்கு வந்தால் முழுமனதோடு வரவேற்போம் என்றும், அவர் கட்சியில் இணைந்தால் பா.ஜ.க வலுப்பெறும் என்றும், பா.ஜ.க சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சசிகலா பா.ஜ.கவுக்கு வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பா.ஜ.க சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொண்டால் அக்கட்சி வளரும், அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்ளவில்லை என்று கூறினால் பாஜகவில் இணையுமாறு நாங்கள் அவரை … Read more

‘என்னை கட்டிக்கலைன்னா ஏன் உயிரோட இருக்க, செத்துப் போ!’ சிறுமியை கத்தியால் குத்திய நாடக காதலன் ரயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு.!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர், திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பொத்தமேட்டுப்பட்டி … Read more

திறமையான கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் பொறுப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கங்களுக்கு உள்ளது – மகேந்திரசிங் தோனி!

திறமையான கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் பொறுப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கங்களுக்கு உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி தெரிவித்துள்ளார்.  சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற்ற, திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 25ம் ஆண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய தோனி, கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும் என்றார். முன்னதாக பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் தமிழகத்தை சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு தோனி விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் … Read more

ரூ.738 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரம்: இம்முறை வெள்ள பாதிப்பின்றி தப்புமா சென்னை?

சென்னை: பருவமழை தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி உட்பட பல மழைநீர் வடிகால் பணிகளை ஆரம்பித்துவிட்டது. இதன்படி ரூ.738 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் 2071 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் உள்ளன. இந்த மழை நீர் வடிகால் முறையாக தூர்வாரி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டால்தான் மழை காலங்களில் தண்ணீர் எந்த தடையும் இன்றி செல்ல முடியும். ஆனால், … Read more

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட கலைநயம் மிக்க உறைகிணறு

கீழடியில் நடைபெற்று வரும் எட்டாம் கட்ட அகழாய்வில் பானையுடன் கூடிய கலைநயம் மிக்க உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. அகரத்தில் இரண்டாவதாக தோண்டப்பட்ட குழியில் மூன்று அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதிலும் முதன் முதலாக அகரத்தில் தற்போது 40 சென்டி மீட்டர் உயரமும் 63 சென்டிமீட்டர் விட்டமும் கொண்ட உறைகிணறு வெளிப்பட்டுள்ளது. இதுவரை உறைகிணறுகளின் பக்கவாட்டில் கயிறு போன்ற வடிவம் தென்பட்டுள்ள நிலையில் தற்போது உறைகிணற்றின் மேற்புறம் கலைநயம் மிக்க வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. உறைகிணற்றின் மூன்று அடுக்குகள் மட்டுமே … Read more

TNPSC Group 4: குரூப்-4 வி.ஏ.ஓ தேர்வு; முதலில் படிக்க வேண்டிய பாடம் எது?

TNPSC group 4 VAO exam preparation strategies in Tamil: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், எப்படி படிப்பது? என்ன படிப்பது? எதை முதலில் படிக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான அறிவிப்பில், 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. … Read more

வெயிலுக்கு மோர் குடித்த தமிழர்கள், தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடையில் பீர் குடித்து வருவது அம்பலம்.!

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், தமிழ் பாரம்பரிய முறைப்படி வெயிலை சமாளிக்க மோர் அருந்துவதற்கு பதிலாக, பீர் அருந்தி அவலமான ஒரு சாதனையை தமிழர்கள் செய்து உள்ளனர். கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த மாதம் 28ஆம் தேதி முடிந்துவிட்டது. இருப்பினும் கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தில் கோடை வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டு வருகிறது. இந்த கோடை வெயிலை சமாளிப்பதற்காக வழக்கமாக தமிழர்கள் பாரம்பரியப்படி மோர் அருந்துவது வழக்கம், … Read more