உணவக உரிமையாளரை சரமாரியாக தாக்கிய பெண் கவுன்சிலரின் மகன்..

சேலம் மாவட்டத்தில், உணவக உரிமையாளரை சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படும் பெண் கவுன்சிலரின் மகன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரவிந்த் என்ற அந்த நபர், தாரமங்கலத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்ற போது உரிமையாளர் செந்தில் குமார் கண்டிப்புடன் பேசி பணத்தை பெற்றதாகக் கூறப்படுகிறது. மறுநாள் இரவு குடிபோதையில் கூட்டாளிகள் 10 பேருடன் மீண்டும் வந்த அரவிந்த், வித விதமாக ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு இறுதியாக ஆம்லெட் வேகவில்லை … Read more

மயிலாடுதுறை | கிராம ஊராட்சி மன்ற அலுவலங்களில் கட்சி அடையாளங்கள் நீக்கப்படுமா?

மயிலாடுதுறை: தமிழகத்தில் கட்சி அரசியலுக்குள் புதைந்து கொண்டிருக்கும் கிராம ஊராட்சிகளை மீட்டெடுப்பதுடன், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் உள்ள கட்சி அடையாளங்களை நீக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்டஊராட்சி, ஒன்றியக் குழு, கிராம ஊராட்சி என்ற படிநிலைகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. இவற்றுள் கிராம ஊராட்சி தவிர்த்து மற்ற அமைப்புகளுக்கு போட்டியிடும் கட்சி சார்பிலான வேட்பாளர்களுக்கு அரசியல் கட்சிகளின் சின்னங்களும், சுயேச்சை வேட்பாளர்களுக்கு சுயேச்சை சின்னங்களும் ஒதுக்கப்படுகின்றன. … Read more

”ரத்த தான முகாமை நாங்கள் ஆரம்பிக்க காரணமே இதுதான்” – கமல் சொன்ன காரணம்!

இன்று ரத்த தான தினத்தை முன்னிட்டு கமல் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் ‘Kamal’s Blood Commune’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். கடந்த 40 ஆண்டு காலமாக தமிழகம் முழுவதும் இயங்கிவரும் ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்க நண்பர்களை ‘Kamal’s Blood Commune’ மூலம் ஒருங்கிணைத்து, உதவி தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் கிடைக்க உதவ இருக்கிறது இந்த அமைப்பு. இதன் துவக்க விழாவான இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த கமல் “40 ஆண்டுகளாக … Read more

வகுப்பறையில் மாணவர்களோடு அமர்ந்து பாடம் கவனித்த ஸ்டாலின்; அரசுப் பள்ளியில் ஆய்வு

MK Stalin inspects Govt school in Tiruvallur: தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அரசு பள்ளியில் ஆய்வு நடத்திய முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளிகளில் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ கற்றல் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார். 8 வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன் … Read more

#திண்டுக்கல் || தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு.

திண்டுக்கல் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். திண்டுக்கல் அருகே அம்மையநாயக்கனூர் அம்மாபட்டியை சேர்ந்தவர் ஜான்கென்னடி. இவருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டது போல் சுற்றி திரிந்து உள்ளார். இந்நிலையில் இன்று காலை கொடைரோடு அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது சென்னையில் இருந்து மதுரை நோக்கி வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். … Read more

ஓசூர் வட்டத்தில் தொடர் மழையால் முள்ளங்கி மகசூல் இருமடங்கு அதிகரிப்பு: விலை குறைவால் விவசாயிகள் வேதனை

ஓசூர் வட்டத்தில் கோடை காலத் தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக முள்ளங்கி மகசூல் இருமடங்கு உயர்ந்துள்ளது. அதேநேரம் சந்தையில் விலை பாதியாக குறைந்துள்ளது. ஓசூர் வட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முள்ளங்கி, பீட்ரூட், கேரட், பீன்ஸ், தக்காளி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட காய்கறி வகைகள் பயிரிடப்படுகின்றன. இப்பகுதியில் நடப்பாண்டு கோடை காலத்தில வழக்கத்தை விட மழை தொடர்ச்சியாக பெய்ததால் இங்குள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின. மேலும், கோடை மழையால் நிலத்தடி நீர்மட்டமும் … Read more

'அரசியலில் நுழைந்தபிறகும் நான் ஏன் சினிமாவை விடவில்லை?' – கமல் ஓபன் டாக்

‘சிறையில் இருந்தால் தான் தலைவர் என்பது இல்லை; திரையில் இருந்தாலும் தலைவர் தான்’ எனக் கூறியுள்ளார் கமல்ஹாசன். உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யும் வகையில் கமல் ரத்ததான குழு துவக்க விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ரத்ததானக் குழுவை துவக்கி வைத்தார். பின்னர் மேடையில் பேசிய கமல்ஹாசன், “சிறையில் இருந்தால் தான் தலைவர் என்பது இல்லை; திரையில் … Read more

ஒரு கடினமான சவால்… இந்த டி-சர்டில் எத்தனை ஓட்டைகள் இருக்கு சரியா சொல்லுங்க

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் வைரலாகும் காலம் இது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனதை மருளச் செய்யும் ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு புதிராக மட்டுமல்லாமல், முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து ஆளுமையை வெளிப்படுத்துவதால் நெட்டிசன்களையும் சமூக ஊடக பயனர்களையும் ஈர்த்து வருகிறது. அதே நேரத்தில் எல்லா ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் ஆளுமையை வெளிப்படுத்துபவை அல்ல என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். … Read more

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பட்டுள்ள நிலையில், சற்றுமுன் தமிழக முதல்வர் பிறப்பித்த அதிரடி உத்தரவு.!

கோடை விடுமுறைக்கு பின்பு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான நேரடி வகுப்புகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வழக்கமாக தொடங்கப்படும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளது  அனைத்து பள்ளிகளும் காலை வணக்கம் கூட்டங்கள் கண்டிப்பாக நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை அதற்கு … Read more

பாலியல் புகார் : தனியார் நர்சிங் கல்லூரி சேர்மன் 8 பிரிவுகளின் கீழ் கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், தனியார் செவிலியர் கல்லூரி தலைவர், மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசிய விவகாரத்தில கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தாங்கள் கட்டிய கல்வி கட்டணம் மற்றும் தங்களது சான்றிதழ்களை திரும்ப பெறவும், வேறு கல்லூரியில் கல்வி கற்க ஏற்பாடு செய்யுமாறும் விருதுநகர் ஆட்சியர் மேகநாத ரெட்டியிடம் மாணவிகள் முறையிட்டுள்ளனர்.   Source link