15 வயது சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்.. போக்சோவில் கைது.!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் விளையாட்டு மூலம் பாலா (வயது 24) என்ற இளைஞர் அறிமுகமானார். இந்நிலையில் விக்னேஷ் சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார்.  இதனையடுத்து சிறுமியை ஆபாசமாக வீடியோ காலில் பேச வற்புறுத்தி அதனை செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்னர் விக்னேஷ் அந்த வீடியோவை காட்டி சிறுமியை மிரட்டி அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.  … Read more

தங்கையின் காதலனை மிதித்துக் கொன்று மூட்டை கட்டிய அண்ணன்..! கொத்தனார் பையனுக்கு நேர்ந்த சோகம்.!

திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவியை காதல் வலையில் வீழ்த்திய கொத்தனாரை கழுத்தில் மிதித்து கொலை செய்து, சடலத்தை மூட்டையாக கட்டி புதருக்குள் வீசியதாக மாணவியின் அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே சேடபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அழகுவிஜய் . கொத்தனார் வேலை செய்து வரும் இவர், இதே பகுதியை சேர்ந்த அஜித் என்பவரின் 17 வயது தங்கையை காதலித்து வந்துள்ளார். கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வரும் அந்த மாணவி … Read more

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓபிஎஸ் தரப்பிலும் முறையீடு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஒ.பன்னீர்செல்வம் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முன், ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் நேற்று மோதிக்கொண்டனர். இதைத் தொடர்ந்து, சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். மேலும், அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25-ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு … Read more

தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Tamilnadu Forest Department jobs 2022 Apply soon: தமிழ்நாடு வனத்துறையின் கீழ் செயல்பட்டு வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனத்தில் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 22.07.2022 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 8 திட்ட உதவியாளர் (Project Assistant – DNA) காலி இடங்களின் எண்ணிக்கை: … Read more

தாய் இறந்த துக்கத்தில் மகனுக்கு ஏற்பட்ட விபரீதம்.. சோகத்தில் குடும்பத்தினர்.!

தாய் இறந்த துக்கத்தில் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் மருதம்மாள்(வயது 93) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வயது முதிர்வு காரணமாக மருதம்மாள் உயிரிழந்தார். இந்நிலையில் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை அவரது மகன் பழனியப்பன் (வயது 56) செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து தாய் இறந்த துக்கத்தில் மன உளைச்சலில் இறந்த பழனியப்பன் நேற்று காலை திடீரென நெஞ்சு வலியால் இறந்து விட்டார். பின்னர் … Read more

ஒரு சுங்கச்சாவடி வழியே பேருந்து எத்தனை முறை பயணிக்கும் என்பதன் அடிப்படையில் பாஸ் வழங்க நடவடிக்கை – உயர்நீதிமன்ற கிளை

ஒரு மாதத்தில் ஒரு சுங்கச்சாவடி வழியே பேருந்து எத்தனை முறை பயணிக்கும் என்பதன் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்து ஒரு மாதத்திற்கு பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மாத சலுகை பாஸ் வழங்குவதை சுங்கசாவடி மையங்களில் முறைப்படுத்தக்கோரி மதுரை மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் நல சங்கச் செயலர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதன் விசாரணையில், பேருந்துகள் மாதந்தோறும் பெறும் கட்டணச் சலுகை பாஸ், 50 முறை மட்டுமே செல்லுபடியாகும் என்றும் 10 … Read more

உயர் கல்வி அமைச்சர் புறக்கணித்தாலும் திட்டமிட்டபடி நடக்கவுள்ள காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா

மதுரை: தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் புறக்கணித்தாலும், திட்டமிட்டபடி காமராசர் பல்கலையின் 54 வது பட்டமளிப்பு விழா நாளை நடக்கிறது. இது பல்கலை. நிர்வாகம் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 3 மாதத்திற்கு முன்பு, ஜெ. குமார் பொறுப்பேற்றார். இவர், பொறுப்பேற்ற பிறகு பல்கலையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 54-வது பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடும் செய்யப்பட்டது. இதன்படி, பட்டமளிப்பு விழா டாக்டர் மு.வ. அரங்கில் இன்று ( ஜூலை … Read more

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்.. முதல் இலக்குகள் இங்கே..

விண்வெளியில் மில்லியன் மைல் பயணத்திற்குப் பிறகு, ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோபில் இருந்து எடுக்கப்பட்ட தொலைதூர பிரபஞ்சத்தின் முதல் படத்தை நாசா மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இதைத்தான் நாசா “இன்றுவரை தொலைதூர பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் கூர்மையான அகச்சிவப்பு படம்” என்று அழைக்கிறது. இன்றுவரை தொலைதூர பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் கூர்மையான அகச்சிவப்பு படம் வெப்ஸ் ஃபர்ஸ்ட் டீப் ஃபீல்ட் என அழைக்கப்படும் இது கேலக்ஸி கிளஸ்டர் SMACS 0723 ஐக் … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் நலமடைய வேண்டும் – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகாரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, தமிழகத்தில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும், கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று தமிழக முதலமைச்சர் மு.க‌.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், … Read more

“அவன் இவன்” திரைப்பட நடிகர் ராமராஜ் உடல் நலக்குறைவால் காலமானார் – திரையுலகினர் அஞ்சலி!

“அவன் இவன்” திரைப்படத்தில் நடித்து பிரபலமான குணசித்திர நடிகர் ராமராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலச்சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நடிகர் ராமராஜ், அவன் இவன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட ராமராஜ் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். மேலச்சாக்குளத்தில் உள்ள வீட்டில் ராமராஜின் உடலுக்கு ஏராளாமானோர் அஞ்சலி செலுத்தினர். Source link