இன்றைய (01.06.2022) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4775 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 38200-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more

நகை வியாபாரியிடம் இருந்து 6.6 கிலோ தங்கம், ரூ.14 லட்சம் கொள்ளை… கைவரிசை காட்டிய வெள்ளை சட்டை கும்பல்

தஞ்சாவூரில், நகை வியாபாரியிடம் இருந்து 6 கிலோ 600 கிராம் தங்கம் மற்றும் 14 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச்சென்ற 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். தஞ்சையை சேர்ந்த மணி என்பவர், பல்வேறு பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் ஆர்டர் எடுத்து மொத்தமாக நகை விற்பனை செய்து வருகிறார். நேற்று இரவு ஆர்டர் எடுத்த நகைகளை, அவர் கடைகளில் கொடுத்து வந்த போது, மணியை பின்தொடர்ந்து வந்த வெள்ளை சட்டை அணிந்த 9 பேர் கொண்ட … Read more

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று: ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் சுற்றறிக்கை

சென்னை: சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று காரணமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவருகிறது. ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த அன்றாட கரோனோ பாதிப்பு தற்போது 100 ஆக பதிவாகி வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் மற்றும் வார இறுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நோய்த் தடுப்பு … Read more

`பாஜகவை அதிமுகவினர் அம்பலப்படுத்த வேண்டும்’-பொன்னையன் சர்ச்சை பேச்சு

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு விவகாரத்தில் தமிழக பாஜக குரல் எழுப்பாததை மக்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் மூலம் அம்பலப்படுத்துமாறு அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் பேசியுள்ளார். அதிமுகவின் அம்மா பேரவை மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன், `காவிரி நீர் பங்கீடு தமிழக்திற்கு வர பாஜக போர்க்கொடி பிடித்திருக்க வேண்டும். அதுதான் பாஜகவை வளர்க்கும். இதையும் படிங்க… `அனுமதியோடுதான் தொலைநிலைக்கல்வி படிப்புகள் … Read more

Tamil News Live Update: இந்தியாவில் மேலும் 2,745 பேருக்கு கொரோனா

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24  காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. பத்திரப்பதிவுத் துறையில் புதிய முயற்சி! பத்திரப்பதிவுத் துறையில் புதிய முயற்சியாக அவசர முன்பதிவுக்கு ரூ. 5,000 கட்டணமாக நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக அதிக ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 சார்பதிவாளர் … Read more

மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு.. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்.!!

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 55 ஆயிரத்து 474 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 44 பேருக்கும், செங்கல்பட்டில் 46 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இந்நிலையில், சென்னை … Read more

குன்றத்தூரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சேலத்தில் மீட்பு.. 9 பேர் கைது..!

சென்னை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் சம்பவத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், தனக்கு சொந்தமான வீட்டை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்திருந்த நிலையில், அவரது வீட்டிற்கு வந்த கணவன்-மனைவி 2 பேர் பேசி கொண்டிருந்த போது, வீட்டிற்குள் நுழைந்த கும்பல் சுரேஷ்குமாரை தாக்கி காரில் கடத்தி சென்றனர். தகவலின் பேரில் வந்த போலீசார், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, தனிப்படை அமைத்து தேடி … Read more

பாஜகவுக்கு ஆதரவு பிரச்சாரம் செய்ததாக காவலர் சஸ்பெண்ட்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளபட்டி அருகே அம்பாத்துரை காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருந்தவர் சுரேஷ்(48). இவர் முகநூல் உள்ளிட்ட வலைதளங்களில் பாஜகவின் கொள்கை, தகவல்களை பகிர்ந்து அக்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் இவர் மீதான குற்றச்சாட்டை ஆய்வு செய்தனர். இதில் அவர் மீதான புகார் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், தலைமைக் காவலர் சுரேஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். Source link

நான் இனி பேசவில்லை… எங்க எழுதுங்க பாப்போம்… நடிகை ஸ்ரீநிதியை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Tamil Serial Actress Srinidhi Instagram Viral : ஜீ தமிழின் யாரடி நீ மோகினி, மற்றும் புதுப்புது அர்த்தங்கள் தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி. சர்ச்சைகளுக்கு பெயர் போன இவர், வலிமை படத்திற்கு விமர்சனம் செய்து அஜித் ரசிகர்களிம் சிக்கிக்கொண்டார். அதனைத்தொடர்ந்து சமீபத்தில் சிம்பு தொடர்பான மீம்ஸ் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அதில் அனைவருக்கும் ஒருநாள் திருமணம் நடக்கும். ஆனால் நானும் சிம்புவும் மட்டும் எப்போதும் சிங்கிளாக இருப்போம். என்று … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (01.06.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 01/06/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 18/14/12 நவீன் தக்காளி 60 நாட்டு தக்காளி 50/45 உருளை 34/24/22 சின்ன வெங்காயம் 45/30/26 ஊட்டி கேரட் 35/30/28 பெங்களூர் கேரட்  பீன்ஸ் 60/50 பீட்ரூட். ஊட்டி 45/40 கர்நாடக பீட்ரூட் 30 சவ் சவ் 20/17 முள்ளங்கி 20/17 முட்டை கோஸ் 35/30 வெண்டைக்காய் 30/15 உஜாலா கத்திரிக்காய் 30/25 வரி கத்திரி … Read more