குடியரசுத் தலைவர் தேர்தல் | எமகண்டம், ‘செல்லாத வாக்கு’… இது புதுச்சேரி வாக்குப்பதிவு சுவாரஸ்யம்

புதுச்சேரி: புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்பி, முதல்வர், எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். நாளை அதிகாலை டெல்லிக்கு வாக்குப்பெட்டி எடுத்துசெல்லப்படுகிறது. எமகண்டம் நேரம் பார்த்தது, செல்லாத வாக்கை அளித்ததாக என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ கூறியது என சில சுவாரஸ்யங்கள் அரங்கேறின. நாடு முழுவதும் இன்று குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் கூட்டணி கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து … Read more

பட்டப்பகலில் ஆசிரியர் தம்பதியர் அடித்துக் கொலை: மிளகாய் பொடி தூவி நகை, பணம் கொள்ளை

அருப்புக்கோட்டையில் பட்டப்பகலில் ஆசிரியர் தம்பதியர்களை கொலை செய்து மிளகாய் பொடியை தூவி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகர் வடக்கு 2-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கர பாண்டியன். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், தனது மனைவியான ஓய்வு பெற்ற ஆசிரியை ஜோதிமணியுடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் சதீஸ் சென்னை வேளச்சேரியில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் இன்று பிற்பகலில் அவரது … Read more

“மாணவர்களின் பாதுகாப்புக்காக சின்னசேலம் தனியார் பள்ளியை அரசு ஏற்க வேண்டும்” – முத்தரசன்

சென்னை: “சின்னசேலம் தனியார் பள்ளியை அரசு ஏற்பது மாணவர்கள் பாதுகாப்புக்கும், கல்வி மேம்பாட்டிற்கும் அவசியமாகும்” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில், விடுதியில் தங்கி, பிளஸ் 2 பயின்று வந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கடந்த 13.02.2022ஆம் தேதி மாடியில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் … Read more

அதிக வட்டி தருவதாக 7 ஆண்டுகளாக பொதுமக்களிடம் பணம் வசூல் – பெண் முகவர் மீது புகார்!

அதிக வட்டிதரும் நிதி நிறுவனம் எனக்கூறி கடந்த 7 ஆண்டுகளாக பொதுமக்களிடம் பணம் வசூல் செய்த பெண் முகவரிடமிருந்து பணத்தை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் தேனி ஆட்சியரிடம் மனு அளித்தனர். தேனி மாவட்டம் போடி அருகே கீழ சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேனி ஆட்சியர் முரளிதரனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், மதுரை எஸ்எஸ்.காலனியில் Blessing acro farm என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருவதாகவும் அதன் முகவராக பணியாற்றுவதாக எங்கள் கிராமத்தில் வசிக்கும் … Read more

ஓராண்டு ஃபிக்சட் டெபாசிட்: வட்டியை அள்ளி வழங்கும் தனியார் வங்கிகள் எவை?

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் சென்ற ஜூன் மாதம் நடைபெற்றது. அப்போது, ரெப்போ விகிதம் 4.90 சதவீதம் ஆக உயர்த்தப்பட்டதால், நிலையான வைப்புத் தொகைக்கான (ஃபிக்ஸட் டெபாசிட்) வட்டி விகிதம் அதிகரித்துவருகிறது.இதில் நிதி முதலீட்டில் அபாயமும் குறைவு என்பதால் பெரும்பாலும் வாடிக்கையாளர்ள் இதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கிடையில் ஓராண்டு உள்ளிட்ட குறுகிய கால வைப்பு திட்டத்துக்கும் வங்கிகள் 6 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. மேலும் வங்கிகளும் 7 நாள்கள் முதல் … Read more

#ஈரோடு || இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து.! கல்லூரி மாணவர் உயிரிழப்பு.!

ஈரோடு மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டம் தொட்டம்பாளையம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் கரண்(20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்ற கரண் மீண்டும் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் தொட்டம்பாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக கரண் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தலையில் … Read more

4 ஆண்டுகளில் வெறும் ரூ.12,000 – தமிழக சிறுபான்மையினர் துறைக்கு மத்திய அரசு அளித்த நிதி – ஆர்டிஐ தகவல்

மதுரை: மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வெறும் ரூ.12 ஆயிரம் மட்டுமே சிறுபான்மையினர் நலத்துறைக்கு நிதிஒதுக்கீடு செய்துள்ளது. இதே கடந்த தமிழகத்துக்கு 2011-12 முதல் 2015-16 வரையிலான 5 ஆண்டுகளில் ரூ.172 கோடிகள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தி ஃபேக்ட் (The Fact) அமைப்பின் சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக் தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்ற தகவல்களை செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மத்திய அரசு ஆண்டுதோறும் மாநில சிறுபான்மையினர் … Read more

மேடையில் நடிக்கும்போதே திடீர் மாரடைப்பு.. சரிந்து விழுந்து உயிரிழந்த நாடக கலைஞர்!

சத்தியமங்கலம் அடுத்த ஊக்கரம் ஊராட்சி, குப்பந்துறையில் மேடை நடிக்கும்போது மாரடைப்பால் சரிந்து விழுந்த நாடக கலைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஊக்கரம் ஊராட்சி, குப்பந்துறையில் 25-க்கும் மேற்பட்ட தெருகூத்து கலைஞர்கள் உள்ளனர். இவர்கள் திருவிழா காலங்களில் கிராமந்தோறும் சென்று பாரம்பரிய தெருக்கூத்து நடத்தி மக்களை மகிழ்விப்பார்கள். இதில் குப்பந்துறையைச் சேர்ந்த நாடக கலைஞர் ராஜய்யன் தெருக்கூத்து கலைஞர்களை ஒருங்கிணைந்து நடத்துவர். நாரதர், நரசிம்மன் வேடத்தில் நடிக்கும் தனிசிறப்பு பெற்ற இவர், தற்போது திருவிழா இல்லாததால் … Read more

அதிர்ச்சி புகார்… நீட் தேர்வுக்கு வந்த மாணவிகளின் உள்ளாடையை அகற்றச் சொன்ன கொடூரம்!

கேரளாவில் ஜூலை 17-ம் தேதி நடைபெற்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் (NEET) தேர்வில் கலந்து கொண்ட மாணவி ஒருவர், தேர்வறைக்குள் நுழைவதற்கு முன்பு, தன்னையும் மற்ற மாணவிகளையும் உள்ளாடைகளை கழற்றச் சொன்னதாக காவல்துறையில் அதிர்ச்சிப் புகார் அளித்துள்ளார். கொல்லம், ஆயூரில் உள்ள மார்தோமா தகவல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் தேர்வெழுதிய சிறுமி, தேசிய தேர்வு முகமையால் நிர்ணயம் செய்யப்பட்ட ஆடைக் குறியீட்டை மீறி, மேலும் பல மாணவிகளை உள்ளாடைகளை அகற்ற வற்புறுத்தியதாக … Read more

பிளான் போட்டு கஞ்சா கும்பலை தூக்கிய காவல்துறை..!!

தமிழ்நாட்டில் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் ‘ஆபரேஷன் கஞ்சா 2.0’ என்ற பெயரில் காவல்துறை அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துவருகின்றனர். அந்த வகையில், தாம்பரம் மாநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தாம்பரம் மாநகர போலீசார் கண்காணித்து வந்த நிலையில், பழைய மாமல்லபுரம் சாலையில் … Read more