குடியரசு தலைவர் தேர்தல்! தமிழகத்தில் இருந்து யார், யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும்?

நாட்டின் 16வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. ஆளும் பாஜக கூட்டணி சார்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். நாளை வாக்குப்பதிவுக்காக டெல்லியில் உள்ள நாடாளுமன்றம், … Read more

சின்னசேலம் தனியார் பள்ளி மீது தாக்குதல் | நாளை முதல் தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தம்

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தனியார் பள்ளிகள் நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் நந்தகுமார் கூறியுள்ளார். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் நந்தகுமார் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், ” நாளை (ஜூலை 18) தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தொடர் விடுமுறையளித்து நாங்கள் வேலைநிறுத்தத்தை தொடங்குகிறோம். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியூர் என்ற பகுதியில், சக்தி … Read more

ரயில் முன் பாய்ந்த முதியவர்.. துண்டானது கால்.. கோவையில் பரபரப்பு சம்பவம்

கோவையில் ரயில் எஞ்சின் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற முதியவரின் கால் துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மத்திய ரயில் நிலையத்தில் தினந்தோறும் ஏராளமான ரயில்கள் வந்து செல்கின்றன. இதே போல ரயிலில் பயணம் செய்ய ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், கேரளா செல்லும் ரயில், கோவை ரயில் நிலையத்தில் வந்துள்ளது. அப்போது நடை மேடையில் நின்றிருந்த 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் அந்த ரயில் எஞ்சின் … Read more

இலங்கை நெருக்கடி; அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு; இந்தியா தலையிட தி.மு.க, அ.தி.மு.க கோரிக்கை

Sri Lanka crisis: Centre calls all-party meet on Tuesday; DMK, AIADMK demand India’s intervention: இலங்கை தொடர்ந்து அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், அண்டை நாடான இலங்கையின் நிலைமை குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை செவ்வாய்கிழமை நடத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போது, ​​நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இலங்கை நெருக்கடி குறித்து பல்வேறு … Read more

#தமிழகம் || வீடு புகுந்து இஸ்லாமிய பெண் வெட்டி படுகொலை.., நாடக காதலன் அரங்கேற்றிய கொடூரம்.! 

திருச்சியை மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள மேல கல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது சையது. இவரது மனைவி ஷகிதா பேகம். அதே பகுதியை சேர்ந்த ஜோசப் ராஜ் என்பவர் ஷகிதா பேகத்தின் மகளை  ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறும் ஷகிதா பேகத்திடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.  இதனால் ஜோசப் ராஜ், ஷகிதா பேகத்தின் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி மறைந்து இருந்து ஷகிதா வந்தவுடன் … Read more

சேலம் | காவிரியில் வெள்ள அபாயம்: பூலாம்பட்டி – நெருஞ்சிப்பேட்டை இடையே விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்

சேலம்: பூலாம்பட்டி – நெருஞ்சிப்பேட்டை இடையே காவிரி ஆற்றில் இயங்கிவந்த விசைப்படகு போக்குவரத்து தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள காவிரி கரையோர கிராமமான பூலாம்பட்டியில் இருந்து ஈரோடு மாவட்டம், நெருஞ்சிப்பேட்டைக்கு காவிரி ஆற்றில் நடந்து வந்த விசைப்படகு போக்குவரத்து, வெள்ளப்பெருக்கால் நிறுத்தப்பட்டுள்ளது. எடப்பாடி அருகே உள்ள காவிரி கரையோர கிராமமான பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை நீர்த்தேக்கத்தில், நீர் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. காவிரி ஆற்றில் உள்ள கதவணை … Read more

"மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்; பள்ளி முதல்வர் உட்பட மூவர் கைது”-டிஜிபி அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி இறந்த விவகாரத்தில் நீதி கேட்டு கடந்த 5 நாட்களாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை நடைபெற்ற மறியல் போராட்டத்தை காவல்துறையினர் கலைக்க முயன்றனர். அப்போது போராட்டம் வன்முறையாக மாறியது. இந்நிலையில் கலவரம் நடந்த பள்ளியை தமிழக உள்துறை செயலர் பனிந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் நேரில் … Read more

IND vs ENG: 3ஆவது ஒரு நாள் போட்டி; இந்திய அணிக்கு 260 ரன்கள் இலக்கு

IND vs ENG 3rd ODI Cricket Score Updates: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3 ஆவது ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளில் 2 அணிகளும் தலா 1 வெற்றியை பதிவுசெய்துள்ளன. எனவே தொடரை வெல்லும் அணி எது என்ற எதிர்ப்பார்ப்பு, இந்த போட்டியை சுவாரஸ்மாக்கியுள்ளது. இதையும் படியுங்கள்: ஒதுங்க வேண்டுமா விராட் கோலி? பிரபலங்கள் கூறுவது என்ன? இந்தப்போட்டியில் டாஸ் வென்ற … Read more

நீட் தேர்வு தற்கொலைகளை மறைக்க திட்டமிட்டு நடத்தப்பட்டதா.? கள்ளக்குறிச்சி கலவரம்.?! 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கடந்த ஜூலை 13-ஆம் தேதி பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஸ்ரீமதியின் தாய் மற்றும் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சரிவர பதில் அளிக்கவில்லை என்று அந்த தாய் குற்றம் சாட்டுகிறார். இதுவரை பள்ளி நிர்வாகமோ அல்லது மாவட்ட … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு: இபிஎஸ்

சென்னை: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு முழு ஆதரவளிக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் 6.8.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கு அதிமுக ஆதரவு கோரி, அக்கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் என்னிடம் தொலைபேசி … Read more