பழங்குடியினருக்காக ஒதுக்கிய ரூ.265 கோடி பயன்படுத்தாமல் அரசிடமே திருப்பி ஒப்படைப்பு: ஆர்டிஐ தகவல்

மதுரை: தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை (Tamilnadu government Tribal Welfare department) மூன்று ஆண்டுகளில் ரூ.265 கோடி நிதியை பயன்படுத்தாமல், அந்த நிதியை திருப்பி ஒப்படைத்துள்ளது. அந்த நிதி தற்போது வனத்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பிற துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திரட்டிய தகவல்களைப் பகிர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் எஸ்.கார்த்திக், ”மத்திய அரசு மற்றும் தமிழக அரசு … Read more

சென்னை: ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் – 12 மணிநேரத்தில் 9 பேர் கைது

ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் விவகாரத்தில் 12 மணி நேரத்தில் கடத்தல்காரர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவரை கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. குன்றத்தூர் அடுத்த கோவூர், ராயல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(48). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் நேற்று இவருக்கு சொந்தமான வீட்டை விற்பனை செய்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார். இந்நிலையில் வீட்டை வாங்குவதற்கு கணவன், மனைவி இரண்டு பேர் முன் தொகை கொடுக்கவந்து பேசி கொண்டிருந்தபோது வீட்டிற்குள் நுழைந்த 10 பேர் … Read more

சாதி, மதச் சண்டை இல்லாத அமைதிப் பூங்கா தமிழகம்: டெல்டா டூரில் ஸ்டாலின் பேட்டி

Stalin speech after visiting delta drain works: டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தது மன நிறைவு மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டே காவிரி வரத்து வாரிகளை தூர்வாரி தண்ணீர் தங்கு தடையின்றி செய்ய ஏற்பாடு செய்ததால், … Read more

நெல்லை.! மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தப்பி ஓட்டம்.!

நெல்லையில் குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தப்பி ஓடியுள்ளார். நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த தெற்கு வாகைகுளம் நடுதெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 8 வயதுடைய மகளும் உள்ளனர். கல்யாணசுந்தரம் திருப்பூரில் கார் மெக்கானிக் வேலையைப்பார்த்து அங்கேயே குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் திருப்பூரிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி … Read more

பென்னாகரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் புளிய மரத்தின் மீது மோதி விபத்து.!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த காவலரின் தாய் உயிரிழந்தார். ஏரியூரைச் சேர்ந்த விஜயகுமார், சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி, தாய் மற்றும் குழந்தைகளுடன் இன்னோவா காரில் ஏரியூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த நிலையில், காலை 6.30 மணியளவில் ஆதனூர் அருகே வந்த போது விபத்து நேர்ந்தது. இதில் படுகாயமடைந்த காவலரின் தாய் … Read more

மதுரை கோடை மழை | ஒரு சொட்டு தண்ணீர் கூட வராத கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம்

மதுரை: மதுரையில் பெரியார் பஸ் நிலையம், மாசி வீதிகள் மழை வெள்ளத்தில் தத்தளித்தும், அங்கிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட அருகில் உள்ள மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்திற்கு வரவில்லை. மதுரை டவுன் ஹால் ரோட்டில் உள்ள பழமையான கூடலழகர் பெருமாள் கோயில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை பெற்றுள்ளது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான இக்கோயிலுக்கு காலையும், மாலையும் பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்வார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அலைமோதும். கூடலழகரை … Read more

சென்னை: தங்கக் காசுகள் எனக் கூறி பித்தளை காசுகளை விற்று ரூ.30 லட்சம் மோசடி

(கோப்பு புகைப்படம்) தங்க காசுகள் எனக்கூறி பித்தளை காசுகள் கொடுத்து, 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை சவுகார்பேட்டை தங்கசாலைப் பகுதியை சேர்ந்தவர் ஜீத்மல் (74). இவர் சவுகார்ப்பேட்டை காசி செட்டி தெருவில் பை கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு ஜீத்மலுக்கு பழக்கமான நபர் ஒருவர் கடையில் அணுகி, தன்னிடம் ஒரு கிராம் எடையுள்ள 4 தங்கக் காசுகள் இருப்பதாகவும், அதை வைத்து வெறும் … Read more

குரங்கு அம்மை; விமான பயணிகளை கண்காணிக்க தமிழக சுகாதாரத்துறை உத்தரவு

Health department order to vigil international passenger on monkey box prevention: குரங்கு அம்மை பாதித்த நாடுகளில் இருந்து தமிழகம் வரும் விமானப் பயணிகளை கண்காணிக்க தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு மனிதருக்கு முதல்முறையாக 1970 ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று 2017 ஆம் ஆண்டு முதல் நைஜீரியா, … Read more

#தமிழகம் || காதலிக்க மறுத்த சிறுமியை 10 முறை கத்தியால் குத்திய நாடக காதலன் தப்பி ஓட்டம்.! வெளியான பரபரப்பு தகவல்.!

திருச்சி, மணப்பாறை அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த, மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வெளியான முதல் கட்ட தகவலின்படி, அந்த பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின்படி கீழ்கண்ட செய்தி சொல்லப்படுகிறது, திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர், திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து … Read more

கோமாவில் நித்தி மாமா.. ரஞ்சிதா சொல்வது என்ன..? சமாதின்னா ஆரோக்கியமாம்..!

பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவாக இருக்கும்  நித்தியானந்தா இறந்து விட்டதாகவும், சமாதியில் இருப்பதாகவும் கோமாவில் இருப்பதாகவும் வேறு வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் நித்தியின் பெயரில்  நித்தி பெயரில் மீண்டும் ஒரு அறிக்கை  முக நூலில் வெளியாகி உள்ளது. பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை கைப்பற்றும் ராஜமாதாவாக ரஞ்சிதா மாறிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு… ஒரு காலத்தில் நான் தான் கடவுள் என வித விதமான கெட்டபுகளில் கிராபிக்ஸ் உதவியுடன் … Read more