அரசு பங்களாவில் அதிமுக அலுவலகம் நடத்தி வருவதாக ஈபிஎஸ்மீது புகார்-தலைமை செயலாளருக்கு கடிதம்

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தங்கியுள்ள அரசு பங்களாவில் அதிமுகவின் எம்எல்ஏகள் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தமிழக தலைமைச்செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் வரும் 17-ம் தேதி கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறப் போவதாக ஊடகங்களிலும் செய்தி வெளியாக இருப்பதை கோவை செல்வராஜ் சுட்டிக்காட்டியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவராகவே அந்த பங்களாவிலிருந்து செயல்பட வேண்டிய … Read more

நடிகை நீது சந்திராவிடம் பேரம் பேசிய தொழில் அதிபர்: ‘மனைவியாக வாழ மாதம் ரூ25 லட்சம் சம்பளம்’

நடிகை நீது சந்திரா சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், “தனக்கு சினிமாவில் வேலை இல்லாததால், பெரிய தொழிலதிபர் ஒருவர் மாதம் ரூ.25 லட்சம் சம்பளத்துக்கு மனைவியாக இருக்க முடியுமா என்று கேட்டு பேரம் பேசினார்” என்ற அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார். ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என பிஸியாக இருந்த நடிகை நீது சந்திராவுக்கு சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் அவர் திரையில் தோன்றுவது குறைந்தது. பின்னர், பட வாய்ப்புகளே இல்லாமல் போனது. நடிகை நீது சந்திரா, நேர்காணல் ஒன்றில் … Read more

அதிமுக அலுவலக வன்முறை: அறிக்கை தாக்கல் செய்ய போலீஸுக்கு ஐகோர்ட் உத்தரவு – முத்தரப்பு வாதங்கள் என்னென்ன?

சென்னை: கடந்த ஜூலை 11-ம் தேதியன்று, அதிமுக தலைமை அலுவலகம் முன் நடந்த சம்பவங்கள் குறித்து நாளை (ஜூலை 15) விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒற்றைத் தலைமை பிரச்சினையால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டி, வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்துள்ளார். … Read more

44-வது செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவிற்கான பணிகள் தீவிரம் – அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

28-ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள 44 வது செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா, ஏற்பாடுகள் பற்றி நேரு உள்விளையாட்டு அரங்கில், விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன், ஜூலை மாதம் 28-ம் தேதி , 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான தொடக்க விழா நடைபெற உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கினை ஆய்வு மேற்கொண்டேன். நேரு உள் விளையாட்டு அரங்கின் பராமரிப்பு … Read more

#திருச்சி || தனியார் பள்ளி வேன் மீது மோதிய கார்.. ஒருவர் பலி..!

தனியார் பள்ளி வேன் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், துறையூரில் தனியார் பள்ளியின் வேன் ஒன்று பெரம்பலூர்-துறையூர் சாலையில் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மாணவ-மாணவிகளை ஏற்றுவதற்காக சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தது.  அப்போது,  அந்த சாலையில் வந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையில் உள்ள மின்கம்பத்தில் மோதியது. அதன் பின், அந்த காரின் பின்பக்கம் பள்ளி வேனின் இடது பக்கம் மோதி விபத்துக்கு உள்ளானது. … Read more

கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் தவித்த மாணவனுக்கு கட்டணம் செலுத்திய முதலமைச்சர்

தனியார் கலை கல்லூரியில் கல்வி கட்டணம் செலுத்தமுடியாமல், அரசு கல்லூரியில் இடம் கேட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு கொடுத்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த மாணவர் நவீன் குமாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே கல்விக்கட்டணம் செலுத்தியுள்ளார். கடந்த ஞாயிறு அன்று அந்த மாணவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர், அவரது பெற்றோரிடமும் பேசி நலம் விசாரித்தார். மாணவரின் பெற்றோர் நோய்வாய்பட்டு இருப்பதை அறிந்துக்கொண்ட முதலமைச்சர், அவர்கள் கோரிக்கை விடுத்தப்படி, மளிகைக்கடை வைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று … Read more

"இபிஎஸ் உட்பட 22 பேர் நீக்கம்" – ஓபிஎஸ் 'பதிலடி' அறிவிப்பு

சென்னை: எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி உட்பட 22 பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் பதிலடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் கொள்கை – குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சி.சீனிவாசன், … Read more

18 பேரை ஈ.பி.எஸ் நீக்கிய நிலையில் ஈபிஎஸ் உள்ளிட்ட 22 பேரை நீக்கி ஓபிஎஸ் அதிரடி!

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், செங்கோட்டையன், சி.வி. சண்முகம் ஆகியோரை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம் மேலும் ஓ.எஸ் மணியன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி, கோகுல இந்திரா ஆதிராஜாராம், தி.நகர் சத்யா ஆகியோரையும் நீக்குவதாக அறிவித்துள்ளார். வேளச்சேரி அசோக், விருகை ரவி, ஜக்கையன், ராஜன் செல்லப்பா, தி.நகர் சத்யா, … Read more

ராஜினாமா கடிதத்தை மெயிலில் அனுப்பிய கோத்தபய: இலங்கை அப்டேட்ஸ்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினரே காரணம் என அந்நாட்டு மக்கள் அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா கடிதத்தை அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினரே காரணம் என அந்நாட்டு மக்கள் அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு தப்பிச் சென்று அங்கிருந்து சிங்கப்பூர் சென்ற இலங்கை அதிபர் கோத்தபய … Read more

அது எதுமே செல்லாது.,  செல்லாது., ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி.!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 18 பேரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி, அதிமுகவின் தலைமை எடப்பாடி கே பழனிசாமி நடவடிக்கை எடுத்து இருந்தார். அதன்படி,  பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப், அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளர் சையது கான், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சுப்ரமணியம், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் வைரமுத்து, தெற்கு மாவட்ட செயலாளர் சைதை பாபு ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். … Read more