44வது செஸ் ஒலிம்பியாட்: பிரதமரை நேரில் அழைக்க டெல்லி செல்லும் முதல்வர்?

செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடிக்கு நேரடியாக அழைப்பு விடுப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில்டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், வருகிற 28-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு நேரு உள்விளையாட்டு அரங்கில் 28-ம் தேதி துவக்கவிழா பிரம்மாண்டமாக … Read more

சுகர் பேஷன்ட்ஸ் ப்ளீஸ் நோட்… பப்பாளி இலை ஜூஸ் ட்ரை பண்றீங்களா?

பப்பாளி பழம் என்றாலே பல நன்மைகளை கொண்டது. பப்பாளி பழத்தில் வைட்டமின் சி, இ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை இருப்பதால் இது உடலுக்கு முகவும் நல்லது. இதுபோலவே பப்பாளி விதைகளில் ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. மேலும் பப்பாளி எண்ணெய் எடுக்க முடியும்.  இந்நிலையில் இதுபோலவே பப்பாளி இலையின் சாறு அதாவது பப்பாளி இலை ஜீஸ் உடலுக்கு மிகவும் நல்லது குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக நன்மை அளிக்கிறது. ஜீரணம் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்துவதோடு வயிறு உப்புவதை … Read more

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்க போகும் கனமழை- சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் … Read more

“பிளஸ் டூ தேர்வு முடிவுகளை இந்த மாதத்திற்குள் சிபிஎஸ்இ வெளியிட வேண்டும்”-அமைச்சர் வலியுறுத்தல்

மாணவர்கள் நலன் கருதி பிளஸ் டூ தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இந்த மாதத்திற்குள் வெளியிட வேண்டும் என தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிபிஎஸ்இ முடிவுகள் வெளியாகததால் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதிகளில் மாற்றம் கொண்டுவர வாய்ப்புள்ளது என்றார். Source link

நீட் மசோதா விவகாரம் | “மக்கள் மன்றத்துக்கே அவமானம்” – ஆளுநர் குறித்து அப்பாவு ஆவேசம்

சென்னை: “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை புறக்கணிப்பதால் ஏற்படுகிற அவமானம் சட்டமன்றத்திற்கு அல்ல, மக்கள் மன்றத்துக்குத்தான்” என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஆவேசமாகக் கூறியுள்ளார். தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேரவையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளரா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், “ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிறைய மசோதாக்கள் ஒப்புதல் வழங்காமல் உள்ளது. இரண்டாவது முறையாக அனுப்பிவைக்கப்பட்ட நீட் … Read more

IND vs ENG 2nd ODI: கோலிக்கு ஓய்வு… தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!

IND VS ENG match at The Lord’s cricket stadium live news update in tamil: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், நேற்று முன்தினம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதனால், தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், … Read more

கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், ஜூலை 15ஆம் தேதியன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் … Read more

அதிமுக தற்போது சாதி ரீதியான கட்சியாக மாறி வருவதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

அரியலூர்: அதிமுக தற்போது சாதி ரீதியான கட்சியாக மாறி வருவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டினார். அரியலூரில் அமமுக செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 14) நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு பேசும்போது, ”தற்போது அதிமுகவில் நடைபெறக்கூடிய அனைத்து செயல்களையும் அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் பேசியுள்ளதாக வெளிவந்துள்ள ஆடியோவில், அதிமுகவில் நடப்பவை குறித்து உண்மையாக பேசியுள்ளார். ஆனால், அதனை அவர் … Read more

கோவை – திருச்சி மேம்பாலத்தில் விபத்து – 40 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட நபர்

கோவை மாவட்டம் திருச்சி சாலை மேம்பாலத்தின் 40 அடி உயரத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மேம்பாலம் திறக்கப்பட்ட 2 மாதங்களில் இது மூன்றாவது உயிரிழப்பாகும்.  கோவை மாவட்டம் ஒப்பணக்கார வீதி பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஆனந்தகுமார், ஒண்டிபுதூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இன்று வழக்கம்போல பணிக்கு ஒண்டிபுதூர் நோக்கி திருச்சி மேம்பாலத்தின்மீது அவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்திருக்கிறார். அப்போது சுங்கம் பகுதியின் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி … Read more

கேரள நெடுஞ்சாலை திட்டம்; சி.பி.எம் – பா.ஜ.க இடையே உரிமை போட்டி

Shaju Philip Jaishankar vs Vijayan: An elevated Kerala highway and a Centre-vs-Kerala gridlock: அவரது வழக்கமான பயணங்களின் தரத்தின்படி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கேரளா பயணம் என்பது குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்க வேண்டும். இருப்பினும், ஜெய்சங்கர் கேரளாவில் மூன்று நாட்கள் தங்கியிருப்பது பா.ஜ.க மற்றும் மாநிலத்தில் ஆளும் CPM இடையேயான மோதலின் சமீபத்திய புள்ளியாக மாறியுள்ளது. குறிப்பாக 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, கேரளாவின் வளர்ச்சியில் யாருக்கு அதிக பங்கு என … Read more