வெளி மாவட்ட மக்களுக்கே அதிகம் பயன்படும் தேனி ரயில்: பகலிலும் இயக்க உள்ளூர் மக்கள் எதிர்பார்ப்பு

வெளிமாவட்டங்களில் இருந்து தேனி வந்து சுற்றுலாத்தலம் மற்றும் பாரம்பரிய கோயில்களை தரிசிக்கும் வகையிலேயே மதுரை-தேனி ரயிலின் நேர அட்டவணை அமைந்துள்ளது. இதனால் உள்ளூர் மக்களுக்கு இந்த ரயில் பெரியளவில் பலன் தராத நிலையே உள்ளது. அகல ரயில் பாதைப் பணிகள் முடிந்து, மதுரையில் இருந்து தேனிக்கு கடந்த மாதம் 26-ம் தேதி ரயில் சேவை தொடங்கியது. மதுரையில் இருந்து தினமும் காலை 8.20 மணிக்கு கிளம்பும் ரயில் (06701) தேனிக்கு 9.35 மணிக்கு வருகிறது. அதன்பிறகு, மாலை … Read more

நுபுர் சர்மா விவகாரம்; ராஞ்சியில் வன்முறை; துப்பாக்கி சூட்டில் 10-ம் வகுப்பு மாணவர் உட்பட இருவர் பலி

Abhishek Angad  Boy awaiting Class X results among 2 killed in Ranchi, police face probe: சனிக்கிழமை அதிகாலையில் மற்றொரு நபர் தோட்டாக் காயங்களால் இறந்ததை அடுத்து, வெள்ளிக்கிழமை ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் நடந்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது. இறந்தவர்கள் 20 வயதான சாஹில் என்றும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த 15 வயது முடாசிர் ஆலம் என்றும் போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். ஜார்கண்ட் முக்தி … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (12.06.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 12/06/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 26/24/20 நவீன் தக்காளி 60 நாட்டு தக்காளி 50/45 உருளை 34/30/23 சின்ன வெங்காயம் 35/30/25 ஊட்டி கேரட் 45/42/35 பீன்ஸ் 60/50/40 பீட்ரூட் ஊட்டி 45/40 கர்நாடக பீட்ரூட் 35/30 சவ் சவ் 30/27 முள்ளங்கி 20/16 முட்டை கோஸ் 45/30 வெண்டைக்காய் 35/20 உஜாலா கத்திரிக்காய் 25/20 வரி கத்திரி 25/22 காராமணி … Read more

வைகாசி விசாகத் திருவிழா… அதிகாலை முதலே கோவில்களில் சிறப்பு வழிபாடு..!

வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் அபிஷேகம் செய்தும், நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபட்டு வருகின்றனர். ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு நடைபெறும் திருவிழாவில் அதிகாலை 3 மணி முதல் இடைவிடாமல் பாலாபிஷேகம் செய்தும் பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, இளநீர் காவடி எடுத்தும் பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு … Read more

ஒரு கட்டு வாழை இலை ரூ.4,000 வரை விற்பனை: திருமணம், திருவிழாக்களால் விலை உச்சம்

கோயில் திருவிழாக்கள், திருமணங்கள் களை கட்ட ஆரம்பித்துள்ளதால் ஒரு கட்டு வாழை இலை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரத்துக்கு விலை உயர்ந்து விற்பனையாகிறது. மதுரை மாவட்டம் சோழவந்தான், திருமங்கலம், வாடிபட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாழை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. உள்ளூர் விற்பனை போக இங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் வாழை இலைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ‘கரோனா’ ஊரடங்கு காலத்தில் வாழை இலைகளுக்கு தேவை குறைந்ததால் 250 இலைகள் கொண்ட ஒரு கட்டு … Read more

“மதவெறிப் பேச்சுகளை மதுரை ஆதினம் உடனடியாக நிறுத்த வேண்டும்”- முரசொலி

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், `மத நம்பிக்கைகளில் திமுக அரசு தலையிடுவதில்லை’ என்றும், மதுரை ஆதீனம் எல்லை மீறுகிறார் என்றும் எழுதப்பட்டுள்ளது. திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் சிலந்தி என்ற பெயரில் மதுரை ஆதீனத்திற்கு பதில் தரும் வகையில் `அத்துமீறும் மதுரை ஆதினம் அறிவதற்கு’ என்ற பெயரில் கட்டுரையொன்று வெளியாகியுள்ளது. அதில் `சமீப காலங்களாக பெருமைமிகு மதுரை ஆதினத்துக்கு கர்த்தர்களாக வருபவர்கள் வரம்பு மீறி, வாய்த்துடுக்காய் பேசி அந்த ஆதினத்தின் சிறப்பை சீரழித்து வருகின்றனர்’ என்று கடுமையாக … Read more

விபத்து குறித்து விசாரணையில் இருந்த 2 காவலர்கள் வேன் மோதி பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நள்ளரவில் நடந்த விபத்து குறித்து விசாரணை செய்து கொண்டிருந்தபோது, கூட்டத்திற்கு திடீரென புகுந்த வேன் மோதி காவலர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கள் மாவட்டம் ராசிபுரம் தேசிய நெருங்சாலையல் ஏ.கே.சமுத்திரம் பகுதியில், சாலை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், போக்குவரத்து மாற்றுப்பாதையில் செல்ல மணல் மூட்டைகள் மற்றும் ட்ரம்கள் வைத்து பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் இன்று அதிகாலை மதுரையில் ஒசூர் … Read more

நாமக்கல் சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி.. தமிழக முதலமைச்சர் அறிவிப்பு.!

நாமக்கல் அருகே வேன் மோதி உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஏ.கே.சமுத்திரம் தனியார் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியும், காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை அடுத்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த டூரிஸ்ட் வேன் மோதியதில் புதுசத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர், இராசிபுரம் காவல் … Read more

போட்டிப் போட்டுக் கொண்டு இளைஞர்கள் பைக் ரேஸ்… இருசக்கர வாகனம் மோதியதில் 50 வயது பெண் சம்பவ இடத்திலேயே பலி.!

சென்னையை அடுத்த வண்டலூர் அருகே வெளிவட்டப்பாதையில் போட்டி போட்டுக் கொண்டு பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களின் பைக் மோதியதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னையை அடுத்த வண்டலூர் அருகே போட்டிப் போட்டுக் கொண்டு இளைஞர்கள் பைக் ரேஸ் 3 இருசக்கர வாகனங்களில் 6 இளைஞர்கள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டியதால் நேர்ந்த விபத்து நவீன் என்ற இளைஞர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் 50 வயது மதிக்கத்தக்க பெண் உயிரிழப்பு ரேஸில் ஈடுபட்ட இளைஞர் … Read more

குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்படும் சிறார்களுக்கான சிறப்பு பயிற்சி மையங்கள் மீண்டும் இயங்குமா?

குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்படும் சிறார்களுக் கான சிறப்பு பயிற்சி மையத்தை மத்திய அரசு நிரந்தரமாக மூடியது. இந்த மையத்தை மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும் என திட்ட பணியாளர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். வறுமையின் காரணமாக, சிறார்களை பள்ளிக்கு அனுப்பாமல், வேலைக்கு அனுப்புவதை தடுக்ககடந்த 1986-ம் ஆண்டு குழந்தைத்தொழிலாளர் தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் குழந்தைத்தொழிலாளர் தடுப்புப் பிரிவினர், வருவாய்த்துறையினர், காவல்துறையினர், சுகாதார மற்றும் தொழிலக பாதுகாப்புத்துறையினர், தொழிலாளர் … Read more