வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச மனைப்பட்டா நகல் பெற 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய எழுத்தர் கைது.!

திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச மனைப்பட்டா நகல் பெற 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய எழுத்தரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைதுசெய்தனர். ஆசூரை சேர்ந்த கலைமணி என்பவருக்கு வழங்கப்பட்ட இலவச மனைப்பட்டாவை கிராம கணக்கு மற்றும் வட்ட கணக்கில் திருத்தம் செய்ய அவரது மகன் யுவராஜ் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அங்கு எழுத்தராக உள்ள சிவஞான வேலு பதிவேடுகளை எடுத்து கொடுக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு … Read more

சட்டத்திற்குப் புறம்பான தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம்: அதிமுக பொதுக்குழு மேடையில் வைத்திங்கம் ஆவேசம்

சென்னை: “சட்டத்திற்கு புறம்பான தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்” என்று அதிமுக பொதுக்குழு மேடையில் ஆவேசமாக அறிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார் வைத்திலிங்கம். அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு இன்று காலை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்படுவதாக கே.பி.முனுசாமி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் அறிவிக்கப்பட்டார். அவரிடம் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க அடுத்த பொதுக்குழு கூட்ட தேதியை … Read more

வீட்டுல பீட்ரூட் இருக்கா? ஹோம்மேட் வைட்டமின் சி ஃபேஸ் பேக் இப்படி பண்ணுங்க!

பீட்ரூட்டில் இரும்பு மற்றும் வைட்டமின் சி போன்ற தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக அதன் வைட்டமின் சி உள்ளடக்கம், சருமத்திற்கு மிகவும் நல்லது. எனவே, பீட்ரூட் வயதாவதை தடுக்கிறது, முகப்பரு வராமல் தடுக்கிறது மற்றும் சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது என்று ஹெல்த்லைன் குறிப்பிடுகிறது. எனவே பளபள முகத்துக்கு இந்த ஹோம்மேட் வைட்டமின் சி ஃபேஸ் பேக்கை நீங்கள் முயற்சி செய்யலாம். வைட்டமின் சி … Read more

கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் பலி.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல்.!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். கடலூர் மாவட்டம் எம்.புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சிறிய அளவிலான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. அதில் இன்று வழக்கம்போல ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வானவேடிக்கை பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளது. இதனால் பட்டாசு ஆலை உருகுலைந்த நிலையில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும்,  இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more

சாமி என்ன மன்னிச்சிடு.. இதுக்கு மேல சோதனை வேண்டாம்.. சிவன் கோவிலில் திருடிய பணத்தை மீண்டும் உண்டியலில் போட்ட நபர்!

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையில் உள்ள சிவன் கோவிலில் பணம் திருடிய நபர் ஒருவர்,  மன்னிப்பு கேட்டு மீண்டும் உண்டியலில் போட்டுள்ள விநோதம் நடந்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி பௌர்ணமி தினத்தன்று தாம் இந்த பணத்தை கோவிலில் இருந்து திருடியதாகவும், ஆனால் அதன்பிறகு தனது குடும்பத்திற்கு பல்வேறு இன்னல்கள் நேர்ந்ததாகவும் தனது மன்னிப்பு கடிதத்தில் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார். உண்டியலை வழக்கம் போல் திறந்து எண்ணிய போது இந்த மன்னிப்பு கோரும் கடிதத்தையும், அதனுடன் 10 ஆயிரம் … Read more

பொதுக்குழு சலசலப்புகளுக்கு இடையே அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு

சென்னை: ஒற்றைத் தலைமை விவகாரத்தில் உச்சகட்ட சலசலப்புகளுக்கு மத்தியில், அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் இன்று கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் இன்று நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், அவருக்கு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின்னர், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் பேசியது: “கடந்த 1972-ம் ஆண்டு, எம்ஜிஆரை திராவிட இயக்கத்திலிருந்து நீக்கியபோது, நான் ஓட்டிவந்த பேருந்தை சாலையிலேயே … Read more

சுப்மான் கில் கவர் டிரைவ்: இங்கிலாந்தில் சாதகமாக இருக்குமா?

Shubman Gill Tamil News: இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி முதலில் லீசெஸ்டர்ஷைர் கிளப் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியிடப்பட்டது. அதன் ஒரு சிறிய வீடியோவில், சுப்மான் கில் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங் செய்வது காட்டப்பட்டது. எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் கேப்டன் ரோகித்துடன் பெரும்பாலும் ஓபன் செய்யவுள்ள கில், அவர் ஒரு டிரைவ் ஆடுவதை பிரமிப்புடன் பார்த்தார். அவர் … Read more

ஈரோட்டில் மொபட் மீது லாரி மோதி விபத்து.! பெண் ஒருவர் உயிரிழப்பு.!

ஈரோடு மாவட்டத்தில் மொபட் மீது லாரி மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டடிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு கணவர் சண்முகம் மொபட்டில் அழைத்து சென்றுள்ளார். பின்பு சிகிச்சை பெற்று கணவன்-மனைவி இருவரும் மீண்டும் வீட்டிற்கு மொபட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சாந்தி தியேட்டர் பிரிவு அருகே ஈரோடு சத்தி மெயின் ரோட்டில் திடீரென பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக … Read more

சுமூக பேச்சுவார்த்தைக்கு ஓ.பன்னீர்செல்வம் எப்போதும் தயார் – வைத்தியலிங்கம்

தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதன் மூலம், பொதுக்குழுக் கூட்டமே செல்லாததாகி விட்டதாகவும், சுமூக பேச்சுவார்த்தைக்கு ஓ.பன்னீர்செல்வம் எப்போதும் தயாராக உள்ளதாகவும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னையில் பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை நடத்தியபின் பேட்டியளித்த அவர், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் பொதுக்குழுவை கூட்ட அவருக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், தீர்மானங்கள் ரத்து செய்தது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாகவும் வைத்தியலிங்கம் கூறினார். Source link

'அழைப்பு வந்தது, அதனால் செல்கிறேன்' – டெல்லி புறப்பட்டுச் சென்ற ஓபிஎஸ்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பாஜக கூட்டணயின் வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இவர் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவைச் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்லம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தனித்தனியாக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, … Read more