“அவன் இவன்” திரைப்பட நடிகர் ராமராஜ் உடல் நலக்குறைவால் காலமானார் – திரையுலகினர் அஞ்சலி!

“அவன் இவன்” திரைப்படத்தில் நடித்து பிரபலமான குணசித்திர நடிகர் ராமராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலச்சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நடிகர் ராமராஜ், அவன் இவன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட ராமராஜ் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். மேலச்சாக்குளத்தில் உள்ள வீட்டில் ராமராஜின் உடலுக்கு ஏராளாமானோர் அஞ்சலி செலுத்தினர். Source link

மேட்டூர் அணைக்கு 90,873 கன அடியாக நீர் வரத்து அதிகரிப்பு: 68-வது முறையாக 100 அடியை எட்டிய நீர் மட்டம்

மேட்டூர்: காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்துவரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 90,873 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அணை நீர்மட்டம் 102.10 அடியாக உயர்ந்துள்ளது. 90 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து: கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை பெய்துவரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று 8010 கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று ஒரே நாளில் 90873 … Read more

அ.தி.மு.க பொருளாளர் யார்? வங்கிகளுக்கு இ.பி.எஸ், ஓ.பி.எஸ் போட்டி கடிதம்

ADMK treasurer issue OPS – EPS writes letter to Banks: அ.தி.மு.க.,வின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அது தொடர்பாக இ.பி.எஸ் வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், அ.தி.மு.க.,வின் பொருளாளராக நான் தான் இருந்து வருகிறேன் என வங்கிகளுக்கு ஓ.பி.எஸ்-ம் கடிதம் எழுதியுள்ளார். அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை இந்த விவகாரம் முடிவை எட்டியது. அ.தி.மு.க.,வின் சிறப்பு பொதுக்குழுவில் … Read more

நாளை இந்த மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.. அரசு அறிவிப்பு.!

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிவபெருமான் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் எளிமையான முறையில் நடந்த விழா இந்த ஆண்டு … Read more

அரசு ஒப்பந்ததாரர்கள் இருவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை.. கணக்கில் வராத ரூ.500 கோடிக்கு மேல் வருமானம் கண்டுபிடிப்பு!

அரசு ஒப்பந்ததாரர்கள் இருவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 500 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஒப்பந்ததாரரர்கள் செய்யாத்துரை, சந்திரசேகர் ஆகியோர் தொடர்புடைய 40 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில், பல்வேறு பொருட்களை வாங்கியதற்கு கணக்கு காட்ட போலி ரசீதுகளை பயன்படுத்தி இருப்பது வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், போலி ரசீதுகள் மூலம் பல்வேறு துணை ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருமானத்தை ஈட்டிருப்பதும், அதன் கோப்புகளை மறைத்து வைக்க ரகசிய … Read more

உபர் ஓட்டூநர் டு அரசு ஓட்டுநர் – சிஎம்டிஏவின் முதல் பெண் ஓட்டுநர் இந்து பிரியா!

சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் முதல் பெண் ஓட்டுநராக இந்து பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். சிஎம்டிஏ என்று அழைக்கப்படும் என்று சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 10 ஓட்டுநர்களை நியமித்து நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி கடந்த திங்களன்று பணி ஆணைகளை வழங்கினார். இவற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்து பிரியா. 25-இல் ஒருவர் கொடுங்கையூரைச் சேர்ந்த 34 வயதான … Read more

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தலில் உள்ளார். இதுகுறித்து முதல்வர் தனது அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். தனது பதிவில் அவர், `இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்’ என்று தெரிவித்துள்ளார். இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, … Read more

Vijay Tv Serial: முகத் திரையை கிழிக்கும் கேள்விகள்; நடிப்பில் கோபியை விஞ்சிய பாக்யா!

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது பாக்கிய  லட்சுமி சீரியல் . இதன் புரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதில் கோபியை பார்த்து பாக்யா கேள்விகள் கேட்டு வெளுத்து வாங்குகிறார். மலையாளத்தில் தற்போது ஒலிபரப்பாகி கொண்டு இருக்கும் குடும்பவிளக்கு என்ற சீரியலின் தமிழ் ரீமேக் தான் பாக்கிய லட்சுமி. இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிப்பவரின் நடிப்புதான் சுப்பர் என்று பேச்சு நிலவியது. அவரின் கதாபாத்திரத்தை வைத்து நக்கல் செய்தும், விஜய் டிவில் காமெடி ஷோவில் … Read more

மதுரை || ஆன்லைன் மூலம் கஞ்சா விற்ற இளைஞர்கள் கைது..!

இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த ரகசிய தகவலை அடுத்து காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பதாக காவல்துறையினருக்கு உறுதியான தகவல் அளித்தனர். இதற்கிடையில், மதுரை ஜம்புரோபுரம் மார்கெட் பகுதியில் சிலர் மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலத்தை விற்பனை செய்து வந்தனர்.  அவர்களை கைது செய்த … Read more

கந்து வட்டி காரணமாக தற்கொலைக்கு முயற்சித்த இளைஞர் வெளியிட்ட வீடியோ அடிப்படையில் போலீசார் விசாரணை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கந்து வட்டி கொடுமை எனக்கூறி இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், அவர் பூச்சி மருந்து குடிக்கும் முன் கண்ணீர் மல்க பேசி வெளியிட்ட வீடியோவின் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கோடனூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். தனது சொந்த செலவிற்காக சேட்டு மற்றும் துரை ஆகியோரிடம் அவர் 40 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. கடனுக்கான வட்டியாக 4 லட்சத்து … Read more