திருச்சி, உத்தமபாளையம்… தமிழகத்தில் சனிக்கிழமை இந்த ஊர்களில் மின்தடை!

திருச்சி மாவட்டத்தில் பஞ்சவர்ணசுவாமி திருக்கோயில் தேரோட்டம் நடைபெற இருப்பதால் பக்தர்களின் பாதுகாப்பு காரணமாக ஒரு சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்சி மாவட்டம் அருள்மிகு பஞ்சவர்ணசுவாமி திருக்கோயில் தேரோட்டம் நடைபெற உள்ளதால், இந்த விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திருச்சி மாவட்டம் உறையூரின் சுற்றுவட்டாரத்தில் உள்ள சில பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 11) காலை 7 மணி … Read more

குடியரசு தலைவர் தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, பாமகவின் வாக்கு மதிப்பு எவ்வளவு தெரியுமா?  

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்பே, தேர்தலை நடத்தி புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை மாதம், 18ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் தேதியும் நடைபெறும். புதிய குடியரசுத் தலைவர் வரும் ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வார், இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் … Read more

Polimer News – Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே விபத்தை சரி செய்ய வந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் மீது வேன் மோதியதில் 2பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராசிபுரம் அடுத்த தனியார் கல்லூரி அரு… Source link

ஆன்லைன் சூதாட்டம் | அவசர சட்டம் இயற்ற பழனிசாமி வலியுறுத்தல் – ஆய்வுக் குழு அமைத்ததற்கு விஜயகாந்த் வரவேற்பு

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதேசமயம், ஆன்லைன் சூதாட்டத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்திருப்பதை தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வரவேற்றுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தின் தாக்கம் தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சியினர் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: ஆன்லைன் சூதாட்டத்தால் … Read more

ஆன்லைன் சூதாட்டம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவுக்கான பணிகள் குறித்து அரசாணை

ஆன்லைன் ரம்மி சட்டம் இயற்றுவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்ட நிலையில், அதற்கான அரசாணையை தமிழகத்தின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ளார். உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டிருக்கும் அந்த அரசாணையில், இந்த ஆன்லைன் விளையாட்டுகள் உண்மையிலேயே திறன்களை வளர்கிறதா என்பது குறித்து இந்த குழு ஆராயும் என தெரிவித்துள்ளார். மேலும், `ஆன்லைன் விளையாட்டு தொடர்பான விளம்பரங்களை தடை செய்வது எவ்வாறு என்பது குறித்தும் இந்தக் குழு ஆராய வேண்டும். ஆன்லைன் விளையாட்டுக்களால் … Read more

பீட்ரூட், பூண்டு… பி.பி அதிகம் இருக்கிறவங்க இந்த 4 உணவுகளை மிஸ் பண்ணாதீங்க!

நம்மில் பலர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்போம். மேலும் உயர் ரத்த அழுத்தத்தை மாத்திரைகளால் மட்டும் கட்டுப்படுத்திவிடலாம் என்று யோசிப்போம். ஆனால் நம் வாழ்க்கை முறையில் செய்துகொள்ளும் மாற்றங்கள் மற்றும் உணவு முறையில் செய்யப்படும் மாற்றம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக இந்த 4 உணவுகளை தவறாமல் சாப்பிடுவது அவசியம். கீரை வைகள்: கேல் கீரை, லெட்யூஸ் போன்ற கீரை வகைகளில் பொட்டாஷியம், மான்கனிஸ், கால்ஷியம் , ஆன்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதில் இருக்கும் … Read more

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்.. பொதுமக்கள் கடலில் இறங்க தடை.!

தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பொதுமக்களுக்கு கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதியில் சூறைக்காற்று வீச தொடங்கியது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.  இதனால் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும், தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்தின் காரணமாக முகுந்தராயர் சத்திரம் பகுதியில் உள்ள மீன் … Read more

சத்தியமங்கலம் அருகே கரும்புத் துண்டுகளை ருசிக்க குட்டியுடன் உலாவந்த காட்டு யானை!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆசனூர் மலைப்பகுதி சாலையில் குட்டியுடன் கரும்புத் துண்டுகள் சாப்பிடும் யானையால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் – மைசூரு தேசிய நெடுஞ்சாலையில்  ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் அருகே  நேற்றிரவு காட்டு யானை ஒன்று குட்டியுடன்  உலா வந்தது. அப்போது சாலையில் கிடந்த கரும்புத்துண்டுகளை கண்டதும் அவை இரண்டும் அதை எடுத்து ருசித்தபடி தின்றன. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை நிறுத்தி அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.  … Read more

ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க மாட்டு வண்டிகளில் வந்த கிராம மக்கள்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க, தோகைமலை பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் வந்தனர். கரூர் மாவட்டம் தோகைமலையை அடுத்த காரணாம்பட்டி, காவல்காரன்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு மாட்டு வண்டிகளில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி ரங்கநாதரை தரிசிப்பது வழக்கம். அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு கோயிலுக்கு வந்தனர். இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டுக்குப் பதிலாக, நேற்றுமுன்தினம் 100-க்கும் மேற்பட்ட மாட்டு … Read more