‘எந்த காண்டாமிருகத்திடமும் அப்படி பேச அவசியமில்லை’ – ஆடியோ குறித்து சி.பொன்னையன் விளக்கம்

அதிமுக கட்சியில் பிளவு ஏற்பட்டு குழப்பம் நிலவி வருகிற சூழலில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் முன்பு அதிமுக மூத்த உறுப்பினர் சி.பொன்னையன், கன்னியாகுமரி நாஞ்சில் கே.எஸ்.கோலப்பனிடம் போனில் பேசியதாக ஆடியோ ஒன்றினை ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். அதில், தலைவர் காலத்திலிருந்து கஷ்டப்பட்டு வளர்த்த கட்சியின் நிலைமையை பார்க்கும்போது கஷ்டமாக இருப்பதாகவும், தொண்டர்களின் நிலையை நினைத்துப் பார்க்குமாறும் கூறும் கோலப்பனிடம், ஒன்றும் ஆகாது என சி. பொன்னையன் கூறுவது போல உள்ளது. மேலும் அந்த ஆடியோவில், … Read more

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்… தி.மு.க அதிக இடங்களில் வெற்றி

Tamilnadu local body elections results: தமிழகத்தில் காலியாக உள்ள நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தமிழகத்தில் பல்வேறு காரணங்களால், காலியாக இருந்த 510 நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையும் படியுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி இவற்றில் மாநகராட்சியில் 2 பதவிகளும், நகராட்சியில் 2 பதவிகளும், பேரூராட்சியில் 8 பதவிகளும் காலியாக இருந்தன. ஊரக உள்ளாட்சி பதவிகளைப் … Read more

எல்.முருகனுக்கு அடுத்து பேசுவது கவுரவக் குறைவு என்று அமைச்சர் பொன்முடி எண்ணுகிறாரா? இதான் திமுகவின் சமூகநீதி சகிப்புத்தன்மையா?! – பாஜக.!

பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் எனக்கு அடுத்து பேசுவதற்காக கவுரவ விருந்தினர் ஒருவரை அழைத்து பேச வைக்கவுள்ளனர். இது வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம்.  இவற்றைப் பார்க்கும்போது, பல்கலைக்கழகங்களிலே மாணவர்களிடையே அரசியலை புகுத்துகிற நடவடிக்கைகளிலே ஆளுநர் ஈடுபடுகிறாரோ என்ற ஐயம் எங்களுக்கு வருகின்ற காரணத்தால், நான் ப்ரோ சான்சலர் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையிலும், மதுரை … Read more

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் தீர்மானம் குறித்து மனுக்களை சமர்பிக்க முடிவு.!

அ.தி.மு.க. பொதுக்குழு – செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் தீர்மானத்தை அங்கீகரித்தது தொடர்பாக உறுப்பினர்களின் கையொப்பம் அடங்கிய மனுக்கள் தேர்தல் ஆணையத்திற்கு விரைவில் அனுப்பிவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள உறுப்பினர்களிடமும் மனுக்கள் பெற்று அந்தந்த மாநில செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்குவதாக கூறப்படுகிறது. உறுப்பினர்களின் ஒப்புதலோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தெரிவிக்கும் வகையில் மனுதாக்கல் செய்யப்பட உள்ளது. Source link

பிளாஸ்டிக் மாற்றாக மாட்டுச் சாணத்திலிருந்து பாசி மாலைகள்: புதிய முயற்சியில் இயற்கை விவசாயி

மதுரை: நாட்டு மாட்டுச் சாணத்திலிருந்து கழுத்தில் அணியும் பாசி மாலை எனும் மதிப்புக்கூட்டிய பொருட்களை உருவாக்குவதன் மூலம் ஒரு கிலோ சாணத்திற்கு ரூ.300 விலை கிடைப்பதாக இயற்கை விவசாயி பா.கணேசன் தெரிவித்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரைச் சேர்ந்தவர் பா.கணேசன் (வயது 52). இயற்கை விவசாயியான இவர் நாட்டு மாட்டுச் சாணம் மற்றும் கோமியத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தற்போது கழுத்தில் அணியும் பாசிமாலைகளையும் உருவாக்கி வருகிறார். … Read more

’தலைவர்கள் பணத்தின் பின்னால் இருக்கிறார்கள்’ – வைரலாகும் சி.பொன்னையன் பேசிய ஆடியோ

தொண்டர்கள் இரட்டை இலை பின்னாலும், தலைவர்கள் பணம் பின்னாலும் இருக்கிறார்கள் என பொன்னையன் பேசியதாக ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கட்சியில் பிளவு ஏற்பட்டு குழப்பம் நிலவி வருகிற சூழலில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் முன்பு அதிமுக மூத்த உறுப்பினர் சி.பொன்னையன், கன்னியாகுமரி நாஞ்சில் கே.எஸ்.கோலப்பனிடம் போனில் பேசியதாக ஆடியோ ஒன்றினை ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ளார். அதில், தலைவர் காலத்திலிருந்து கஷ்டப்பட்டு வளர்த்திய கட்சியின் நிலைமையை பார்க்கும்போது கஷ்டமாக இருப்பதாகவும், … Read more

முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி

Stalin tests positive for corona: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருதோடு, தடுப்பூசி பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. இந்தநிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் … Read more

நீட் விலக்கு மசோதா.. தகவலை தர முடியாது – ஆளுநர் மாளிகை.!

தமிழக சட்டப்பேரவையில், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் விதமாக ‘தமிழ்நாடு இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான சட்டம்’ ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெறும் வகையில் இந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக தமிழக  சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் … Read more

பாஸ்தா சாப்பிட்டதால் இளம்பெண் உயிரிழப்பு ? போலீசார் தீவிர விசாரணை.!

விழுப்புரம் மாவட்டம் அன்னியூரில், பாஸ்தா சாப்பிட்டதால் இளம்பெண் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த மாதம் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட விஜய குமார், பிரதீபா தம்பதியர் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது “டீ பார்” என்ற உணவகத்தில் வொயிட் பாஸ்தா சாப்பிட்டுள்ளனர். இரவு பிரதீபாவுக்கு உணவு செரிக்காமல் வாந்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பிரதீபாவின் தந்தை தனது மகளுக்கு உணவில் … Read more

“எல்.முருகனை புறக்கணிப்பது ஏன்?” – பல்கலை. பட்டமளிப்பு விழா விவகாரத்தில் பொன்முடிக்கு தமிழக பாஜக கேள்வி

சென்னை: “எல்.முருகனுக்கு அடுத்து பேசுவது கவுரவக் குறைவு என்று அமைச்சர் பொன்முடி எண்ணுகிறாரா?” என்று மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா விவகாரத்தில் தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து இன்று பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் எனக்கு அடுத்து பேசுவதற்காக கவுரவ விருந்தினர் ஒருவரை அழைத்து பேச வைக்கவுள்ளனர். இது வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். இவற்றைப் பார்க்கும்போது, பல்கலைக்கழகங்களிலே … Read more