இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவர்கள் செய்த செயலால் அதிர்ச்சி -3 பேர் கைது

மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலையில் அருகருகே இரண்டு தனியார் கல்லூரிகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாகவும், குறிப்பாக மாநகரின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வைத்து கஞ்சா பொட்டலங்களை மாணவர்களக்கு விற்பனை செய்வதாகவும் மாநகர காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை … Read more

ஹிட் லிஸ்டில் 200 பொறியியல் கல்லூரிகள்; ஜூலை 16 டெட்லைன்: அண்ணா பல்கலை கறார்

Anna University says affiliated colleges to fulfil infrastructure before deadline: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகள் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஜூலை 16 ஆம் தேதிக்குள் ஏற்படுத்தாவிட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா? ஆய்வக வசதி உள்ளதா? தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உள்ளனரா? என பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. இது வழக்கமாக நடக்கின்ற … Read more

எடப்பாடி பழனிச்சாமியின் உறவினருக்கு நெருக்கமான இடத்தில் நடத்த ஐடி ரெய்டு.. சிக்கியது 500 கோடி ரூபாய்.!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செய்யாத்துரை. இவரும் இவரின் மகன் நாகராஜனும் இணைந்து நடத்திவரும் எஸ்பிகே குழுமம், தமிழக அரசின் சாலை ஒப்பந்தப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளைச் எடுத்து செய்து வருகிறது.  அதிமுக எடப்பாடி பழனிசாமியின் சம்மந்திக்கு செய்யாத்துரை நெருக்கமானவர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு எஸ்.பி.கே குழுமத்துக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, 150 கோடி ரூபாய் பணமும், தங்க … Read more

ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, வெள்ளாளபுரம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. வருவாய்த்துறையினரும், பொதுப்பணித்துறையினரும் போலீஸ் பாதுகாப்போடு ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டனர். அப்போது ஜே.சி.பி முன்பு சூழ்ந்துக் கொண்ட மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை குண்டுக் கட்டாக தூக்கிச் சென்ற பின்னர் வீடுகள் இடிக்கப்பட்டன. பின்னர், மக்கள் மேலும் ஒரு வார காலம் அவகாசம் கேட்டதையடுத்து பாதி வீடுகளை இடிக்காமலேயே அதிகாரிகள் திரும்பச் … Read more

அரசுப் போக்குவரத்து கழகம் தனியார்மயமானால் பாதிக்கப்படுவது ஏழைகள்தான்: டிடிவி தினகரன்

சென்னை: அரசுப் போக்குவரத்து கழகம் இனி தனியார்மயமா என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தை தனியார்மயமாக்குவதற்கான முயற்சிகள் நடப்பதாக வெளிவரும் செய்திகளுக்கு திமுக அரசு இதுவரை எந்த விளக்கமும் அளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் நம்பியிருக்கும் அரசுப் போக்குவரத்து கழகத்தில் தனியாரை நுழைத்தால் பொதுமக்கள் பெருமளவில் … Read more

`ஜெயலலிதா, சசிகலாவுக்கு செய்ததுபோல ஓபிஎஸ்க்கும் துரோகம் செஞ்சுட்டார் இபிஎஸ்”-வைத்திலிங்கம்

“தன்னை முதல்வராக்கிய சசிகலாவிற்கு துரோகம் செய்ததை போல, ஓ.பன்னீர்செல்வத்துக்கும் துரோகம் செய்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி” என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் பேட்டியளித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வம் இல்லத்தில் இன்று அவருடன் ஆலோசனையில் ஈடுபட்டார் வைத்தியலிங்கம். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம், “அதிமுகவில் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையிலேயே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அடிப்படை தொண்டர்களால் ஒற்றை வாக்கு முறையில் தேர்வு செய்யப்பட்டனர். ஒருங்கிணைப்பாளர்களின் பதவி 5 … Read more

காமராஜர் பல்கலை விழா; எல்.முருகனுக்கு அழைப்பு ஏன்? ஆளுனருக்கு எதிராக கொந்தளித்த பொன்முடி

Tamil News in tamil: ஆளும் திமுக அரசிற்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. நீட் தேர்வு முதல் தமிழக அரசின் திட்டங்களை ஆய்வு செய்தது வரை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசின் செயல்படுகளில் மூக்கை நுழைத்து வருவதாக அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், நீட் தேர்வு பிரச்சனையில் தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளுநர் கொடுத்த விருந்தையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் … Read more

ஆசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில், மதுரையை சேர்ந்த பாலமுருகன் தேர்வு.!

மதுரை மாநகராட்சி, கருப்பாயூரணியை சேர்ந்தவர் பாலகுமரன். இவர் கடந்த 8 ஆண்டுகளாக தேசிய-மாநில அளவில் நடக்கும் பாக்சிங், கிக் பாக்சிங், டேக்வாண்டோ ஆகிய போட்டிகளில்  பங்கேற்று பதக்கங்களை வென்று வருகிறார். இந்த நிலையில், இந்தோனேசியாவில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் பாலகுமரன் பங்கேற்க உள்ளார். ஆசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் பாலமுருகன் பங்கேற்பது மதுரை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.  இது குறித்து பாலகுமரன் தெரிவித்துள்ளதாவது,  “தேசிய அளவிலான பாக்சிங், … Read more

அ.தி.மு.க. தலைமை அலுவலக கலவரம் தொடர்பாக தனிப்படை அமைப்பு.!

சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலக கலவரம் தொடர்பாக மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்ய மூன்று உதவி ஆணையர்கள் தலைமையில் மூன்று வெவ்வேறு தனிப்படைகள் அமைகப்பட்டுள்ளன. அ.தி.மு.க. அலுவலக சாலையில் நேற்று நடைபெற்ற கலவரம் தொடர்பாக ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Source link

முதல்வர் மு.க.ஸ்டாலின் கரோனா தொற்றால் பாதிப்பு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 2448 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை கரோனா உறுதி செய்யப்பட்ட 18,802 பேர் மருத்துவமனையில் சிகிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இது … Read more