ஒலிம்பிக் சாதனையை முறியடித்த நீரஜ் சோப்ரா… சர்வதேச போட்டியில் புதிய சாதனை!

Neeraj Chopra Tamil News: இந்தியாவில் முன்னணி தடகள வீரராக வலம் வருபவர் நீரஜ் சோப்ரா. கடந்த ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிந்தல் பிரிவில் கலந்து கொண்ட இவர் 87.58 மீட்டர் தூரம் வரை மிகச்சிறப்பாக ஈட்டியை எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டச் சென்றார். இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் நடந்து முடிந்து 10 மாதங்களுக்கு பிறகு தற்போது சர்வதேச போட்டியில் கலந்து கொண்ட நீரஜ் சோப்ரா தனது ஒலிம்பிக் சாதனையை முறியடித்து புதிய … Read more

தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில்  … Read more

அதிர்ச்சி! நாட்டில் 8 ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா!!

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்த நிலையில் நேற்று அதிரடி மாற்றம் ஏற்பட்டது. தினசரி பாதிப்பு 7 ஆயிரத்துக்கு கீழே வந்தது. இந்தநிலையில் இந்தியாவில் ஒரே நாளில் 8,822 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று முன் தினம் 8,084, நேற்று 6,594 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 8,822 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,32,36,695 லிருந்து 4,32,45,517 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் … Read more

MGM தலைமை அலுவலகத்தில் ஐ.டி.ரெய்டு.!

எம்ஜிஎம் குழுமத்தில் சோதனை MGM தலைமை அலுவலகத்தில் ஐ.டி.ரெய்டு சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் இயங்கி வரும் எம்ஜிஎம் குழுமத்தின் தலைமை அலுவலகத்தில் வருமானத் துறை அதிகாரிகள் சோதனை 10-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் சாந்தோம் பகுதியில் உள்ள எம்ஜிஎம் குழுமத்தின் நிர்வாகி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் தமிழகம் முழுவதும் எம்ஜிஎம் குழுமம் தொடர்புடைய 40-க்கு மேற்பட்ட இடங்களில் வருமானவரி சோதனை பெங்களூரில் உள்ள எம்ஜிஎம்-க்கு சொந்தமான … Read more

'அதிமுகவுக்கு ஓபிஎஸ் தலைமை': சென்னையின் முக்கிய இடங்களில் ஆதரவாளர்கள் போஸ்டர்

சென்னை: அதிமுகவுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வலியுறுத்தி, சென்னையின் முக்கிய இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பொதுக்குழுத் தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் … Read more

நள்ளிரவில் ஓ.பி.எஸ். வீட்டுக்கு படை எடுத்த நிர்வாகிகள்: வைத்திலிங்கம் விளக்கம்!

நள்ளிரவில், முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், மணிகண்டன், ஆர்.பி உதயகுமார், வைத்தியலிங்கம் ஆகியோர் திடீரென ஓ.பி.எஸ். வீட்டுக்கு படையெடுத்த நிகழ்வு, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தை நடத்துவது தொடா்பாக, ஆலோசனைக் கூட்டம் செவ்வாய் கிழமை (ஜூன்;14) நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளா்கள், தலைமை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். … Read more

திமுக முன்னாள் எம்எல்ஏ., திடீர் மரணம்.!

நாமக்கல் : முன்னாள் திமுக சட்டமன்ற சுறுப்பினர் கே.கே.வீரப்பன் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 1996-2001ம் ஆண்டு வரை கபிலர்மலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே.கே.வீரப்பன். 1996 ஆம் ஆண்டு தேர்தலில், நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இவருக்கு 2001 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கவில்லை என்றும், இதனால் தி.மு.க.,வுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கே.கே.வீரப்பன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  இந்நிலையில் … Read more

தடைகாலம் நிறைவு! உற்சாகமாக மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்!!

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 15 முதல் விசைப்படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்தனர். இந்த தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை சரி … Read more

வதந்திகளை நம்பாதீர்.! டி.ஆர் உருக்கம்.!

தனது உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக மேல்சிகிச்சைக்காக நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் டி,.ராஜேந்தர் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் கல்யாணி நித்யானந்தன் மறைவு

சென்னையை சேர்ந்த பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் கல்யாணி நித்யானந்தன் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 87. சென்னையில் கடந்த 1935-ல்பிறந்த மருத்துவர் கல்யாணி நித்யானந்தனின் பூர்வீகம் மதுரை அடுத்த மேலூர். சென்னை லேடி வெலிங்டன் பள்ளி, ராணி மேரி கல்லூரியில் படித்த பிறகு, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம்பயின்றார். பல்கலைக்கழகத்திலேயே முதலாவதாக வந்து தங்கப்பதக்கம் பெற்றார். ஸ்டான்லியிலேயே முதுகலைப் படிப்பை முடித்தார், தமிழகத்தில் முதன்முதலாகமாரடைப்பு நோய் அவசர சிகிச்சைப் பிரிவு … Read more