புதுச்சேரி காங். அலுவலக தர்ணாவில் வாக்குவாதம்: முன்னாள் அமைச்சர் வெளியேறி சாலையில் அமர்ந்து போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் அலுவலக வளாகத்தில் நடந்த தர்ணாவில் வாக்குவாதம், கருத்து மோதல் ஏற்பட்டு முன்னாள் அமைச்சர் தனது ஆதரவாளர்களுடன் வெளிநடப்பு செய்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்து 3-வது நாளாக இன்று ராகுல்காந்தியை விசாரணைக்கு அழைத்துள்ளது. சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது பொய்வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி மத்திய பாஜக அரசை கண்டித்து புதுவை காங்கிரசார் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி … Read more

’’பணம் வாங்கிகிட்டு ஒருதலைப் பட்சமாக செய்றாங்க’’ – காங். உட்கட்சி தேர்தலில் வாக்குவாதம்

கூடலூரில் காங்கிரஸ் உட்கட்சி தேர்தலில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒரு தரப்பிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு ஒருதலைப் பட்சமாக செயல்பட்டதாக மற்றொரு தரப்பினர் குற்றம்சாட்டி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் கூடலூரில் இன்று காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. மாவட்டம், நகரம் மற்றும் பூத் அளவிலான நிர்வாகிகளிடம் இருந்து வேட்பு மனு பெறப்பட்டு உட்கட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்களாக கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த பவுலோஸ் மற்றும் திருப்பூர் … Read more

‘ஓ.பி.எஸ் ஒற்றைத் தலைமை’: தமிழகம் முழுக்க முளைத்த போஸ்டர்கள்

ராமநாதபுரம், சென்னை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்  ’தொண்டர்கள் விரும்பும் ஒற்றைத் தலைமையே’ என்று ஓபிஎஸ்-க்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் மற்றும் மாவட்டச் செயலர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். நடைபெற்ற கூட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில்”  வரும் 23-ம் தேதி அமைதியான முறையில் … Read more

#தமிழகம் || கொத்து பரோட்டா வித் கோழிக்கால் குருமாவா? பல்லி குருமாவா? பதறிப்போன நாலுபேர்.! பதட்டத்தில் பகுதி மக்கள்.!

ரயில் நிலையம் அருகே, உணவகத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட நான்கு பேர், வாந்தி மயக்கத்துடன் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாற்றுத்திறனாளி அலுவலகத்திற்கு, அரச்சலூர் பகுதியை சேர்ந்த அமுதா, சந்திரன் தம்பதியினர், சுரேஷ், சண்முகம் ஆகிய 4 பேர் வந்துள்ளனர். பின்னர், தங்கள் பணியை முடித்துவிட்டு ரயில் நிலையம் அருகே உள்ள கருப்பண்ணன் என்ற உணவகத்தில் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கொத்து புரோட்டா ஆர்டர் செய்து செய்துள்ளனர். … Read more

“அரசியல் ஸ்டண்ட்”.. பசவராஜ் பொம்மை கூறுவது ஜனநாயகத்திற்கு அழகல்ல – அமைச்சர் துரைமுருகன்

தமிழக முதலமைச்சர் மேகதாது விவகாரத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது அரசியல் ஸ்டண்ட் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுவது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்று நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூரில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் பேசிய அமைச்சர் துரைமுருகன், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு தான் அனைத்திலும் தமிழகத்திற்கு தடைக்கல்லாக இருக்கிறது என்றார். Source link

பாமாயில் இறக்குமதிக்கு மானியம்; விளைச்சல் அதிகரிப்பால் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி: அரசு உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

புதுக்கோட்டை: தேங்காய் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் 10.5 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. தேங்காயை வீடுகளில்நேரடியாக பயன்படுத்துவதுடன், எண்ணெய், பவுடர், பால் என பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்டபொருட்களாகவும் மாற்றி விற்பனை செய்யப்படுகிறது. தென்னை மரங்கள் விவசாயிகளுக்கு நிரந்தர வாழ்வாதாரமாக இருந்து வருவதால், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. இந்தநிலையில், … Read more

வடசென்னை: நிலக்கரி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி பலி

வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நிலக்கரி கையாளுதல், கன்வேயர் பெல்ட் தூய்மைபடுத்துதல் என பல்வேறு பணிகளில் 1000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பரசுராம் சிங் (24) என்பவர் கன்வேயர் பெல்ட்டில் … Read more

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நுழைந்த காவல்துறை… தொண்டர்களை தாக்கியதால் பரபரப்பு

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் தொடர்ந்து மூன்றாவது நாளாக அமலாக்க இயக்குனரகம் முன்பு ஆஜரான நிலையில், டெல்லி போலீஸார் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அலுவலக நிர்வாகிககள் மற்றும் தொண்டர்களை தாக்கியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ பதிவை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் காங்கிஸ் தலைமை அலுவலகத்திற்குள் நுழையும் காவல்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சி … Read more

தமிழகத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு வரும் 18-ம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில், 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 12-ஆம் வகுப்புக்கு ஜூன் 20ம் தேதியும், 11-ஆம் வகுப்புக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.  இந்த நிலையில் பள்ளிகள் திறந்ததை அடுத்து, 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு பாடங்களையும் நடத்த … Read more

பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி மதுபானக்கடை மீது மாட்டுச்சாணம் வீசிய உமா பாரதி

மத்திய பிரதேசத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி பாஜக மூத்தத் தலைவர் உமா பாரதி, மதுபானக்கடை மீது மாட்டுச்சாணம் வீசியுள்ளார். நிவாரி மாவட்டத்தில் உள்ள உர்ச்ஷா (Orchha) நகரில் உமா பாரதி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கிருந்த மதுபானக்கடை மீது மாட்டுச்சாணத்தை வீசி தனது எதிர்ப்பை காட்டினார். இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் போபாலில் உள்ள ஆசாத் நகரில் மதுபான கடைக்குள் புகுந்து உமா பாரதி கற்களை வீசிய வீடியோ சமூகவலைதளத்தில் வெளியானது. Source link