அரசு மருத்துவமனை கழிப்பறையில் சடலமாக கிடந்த ஆண் சிசு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள கழிப்பறையில் குறைபிரசவத்தில் 7 மாதத்தில் பிறந்த ஆண் சிசு சடலமாக கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அளித்த புகாரின் பேரில், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை கழிவறையில் வீசிச் சென்றவர்கள் யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. Source link

ராமேசுவரம் அருகே அரியமான் கடலில் ஆபத்தான படகு சவாரி

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே அரியமான் கடலில் ஆபத்தான படகு சவாரி நடத்துபவர்கள் மீது மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ராமேசுவரம் அருகே அரியமான் கடற்கரை சுற்றுலாவுக்கு புகழ்பெற்று விளங்குகிறது. தினந்தோறும் அரியமான் கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்கள் என்றால் பயணிகளின் கூட்டம் இரண்டு மடங்காகிவிடும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடலோரத்தில் குளிப்பதற்கும், குடும்பத்துடன் வருவோர் படகு சவாரி செய்யவும் அதிகளவில் … Read more

'குலசேகரபட்டினத்தில் நவீன வசதிகளுடன் ராக்கெட் ஏவுதளம்' – மயில்சாமி அண்ணாதுரை

உலக அளவில் நவீன வசதிகளுடன் குலசேகர பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளம் மூலம் உருவாகும் வேலை வாய்ப்பை தமிழக இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மயில்சாமி அண்ணாதுரை பேசினார். கலைஞர் கணினி கல்வியகத்தின் சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் சைதாப்பேட்டை தொகுதியில் 12 ஆம் வகுப்பில் 500-க்கு மேல் மதிப்பெண் பெற்ற சுமார் 200 மாணவ, மாணவிகளுக்கு 2000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் விழா சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் … Read more

புதிய பாதை 2… பார்த்திபன் இயக்கத்தில் சிம்பு?

தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குநர்களின் பெயர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயமாக பார்த்திபனின் பெயர் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் சினிமாவில் அவர் செய்யும் வித்தியாசமான முயற்சிகளும், நடிப்பில் அவர் காட்டும் வித்தியாசமும்தான். 90-களின் தொடக்கத்தில் புதிய பாதை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பார்த்திபன், தொடர்ந்து பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள், உள்ளே வெளியே, சரிகம பதனி. புள்ளக்குட்டிக்காரன், ஹவுஸ்புல், கதை திரைக்கதை வசனம் இயக்கம். உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதில் கடந்த … Read more

தமிழக தபால் துறையில் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!

தமிழக தபால் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில்  பணியாளர் கார் டிரைவர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக தமிழ்நாடு கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : தமிழக தபால் துறை பணியின் பெயர் : பணியாளர் கார் டிரைவர் கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு பணியிடம் … Read more

புதிதாக கட்டப்பட்டுள்ள அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் தென்மாத்தூர் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ரிப்பன் வெட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை, மருத்துவத்தின் தந்தை என்று அழைக்க கூடிய ஹிப்போகிரேட்ஸ், உலகளாவிய பரிகாரத்தின் தெய்வம் பனாசியா ஆகிய மூன்று சிலைகளையும் திறந்து வைத்த முதலமைச்சர், 20 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினியை வழங்கினார். Source link

பரங்கிப்பேட்டை | சுருக்குமடி வலைக்கு எதிராக 2,000 மீனவர்கள் கருப்பு கொடியுடன் போராட்டம்

கடலூர்: பரங்கிப்பேட்டை சாமியார்பேட்டையில் சுருக்குமடி வலைக்கு எதிராக 2 ஆயிரம் மீனவர்கள் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் சுருக்குமடி வலைக்கு எதிராக கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி வீராம்பட்டினம் ஆகிய 3 மாவட்ட மீனவர்கள் ஆலோசனை கூட்டம் கடந்த 7ம் தேதி நடந்தது. பரங்கிப்பேட்டை விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலை, இரட்டை … Read more

சுங்கச்சாவடியில் சசிகலா காரின் கண்ணாடியில் விரிசல் – ஆதரவாளர்கள் திடீர் மறியல்!

திருச்சி சுங்கச் சாவடியில் சசிகலா காரின் கண்ணாடி மீது தானியங்கி தடுப்பு விழுந்து கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால், ஆதரவாளர்கள் சுங்கச் சாவடியை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் பயணமாக சசிகலா தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சசிகலா நேற்று சென்னையில் இருந்து திருச்சி வழியாக காரில் தஞ்சைக்கு சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை 2 மணியளவில் திருச்சி துவாக்குடி சுங்கச் சாவடியில் அவர் கார் கடந்த போது தானியங்கி தடுப்பு, காரின் … Read more

அன்று மோசமான தோல்வி… ‘கேப்டன் ட்ராவிட்’டிடம் இருந்து ‘கோச்’ டிராவிட் பாடம் படித்தாரா?

அன்புள்ள வாசகர்களே, ஒரு நிலைத்தன்மை இல்லாத அணி அதன் மூத்த வீரர்கள் மீதும், ஐசிசி நடத்தும் தொடர்களில் அந்த செயல்பட உள்ள விதம் குறித்து கேள்வியை எழுப்புகிறது. இப்படியான இந்த குறுகிய பாதையில் ராகுல் டிராவிட் இதற்கு முன்பு நடந்துள்ளார். அது முதலில் 2007 உலகக் கோப்பைக்கான அணியின் கேப்டனாகவும், இப்போது அணியின் பயிற்சியாளராகவும் தான். அதனால் அவர் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான அணி வீரர்களின் விருப்பங்களை ஆராயும் பணியில் … Read more

தமிழக வாக்காளர்கள் கவனத்திற்கு :  ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் – தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிக்கை.!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ள நிலையில், வாக்காளர்கள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியர்கள்) மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் காணொலி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக … Read more