சென்னையில் போக்குவரத்து விதிமீறல்: அழைப்பு மையங்கள் மூலம் 84 நாட்களில் ரூ.11 கோடி அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் அழைப்பு மையங்கள் மூலம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 84 நாட்களில் ரூ.11 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல் துறையில் 2018 மார்ச் மாதம் முதல் பணமில்லா பரிவர்த்தனை முறைக்கு அமல்படுத்தப்பட்டது. தொடக்க காலங்களில் அபராதம் செலுத்துவது அதிகமாக இருந்தபோதிலும், காலப்போக்கில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் பலர் அபராதம் செலுத்தவில்லை. இதை சரி செய்ய கடந்த ஏப்ரல் மாதம் அழைப்பு மையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்படி 12 காவல் … Read more

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு: துணை நடிகைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அளித்த புகாரை திரும்பப் பெற்றுக்கொண்டதாக துணை நடிகை தெரிவித்ததையடுத்து, அமைச்சருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி ஏமாற்றியதாக திரைப்பட துணை நடிகை சாந்தினி அளித்த புகாரின்பேரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட … Read more

ட்விட்டரில் சர்ச்சை பதிவு: பா.ஜ.க சவுதாமணி கைது

மத கலவரத்தை தூண்டும் வகையில் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமீப காலமாக சமூகவலைதளங்களில் சர்ச்சை கருத்து பதிவிடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த கருத்துக்களை பதிவிடும் நபர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டாலும் இந்த விவகாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜகவில் செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வரும் சவுதாமணி, சமூக … Read more

போராட்டத்தில் களமிறங்கிய அதிமுக எம்எல்ஏ., கறுப்புக்கொடி கொடியுடன் 2000 பேர்.!

பரங்கிப்பேட்டை : சாமியார்பேட்டையில் சுருக்குமடி வலைக்கு எதிராக கருப்பு கொடியுடன் 2000 மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் அதிமுக எம்எல்ஏ.,வும் கலந்துகொண்டார்.  கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் சுருக்குமடி வலைக்கு எதிராக கடலூர், மயிலாடுதுறை,  புதுச்சேரி வீராம்பட்டினம் ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பரங்கிப்பேட்டை விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அரசால் … Read more

ஆக்கிரமைப்பை அகற்றிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் மீது தாக்குதல்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஆக்கிரமைப்பை அகற்றிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பனெரி புதுக்குடி கிராமத்திற்கு உட்பட்ட பன்னீர்குளத்தை மேலகடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் மற்றும் ஆல்பர்ட் ஆகியோர் ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளதாக புகார் எழுந்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து முள்வேலைகளை அகற்றினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த … Read more

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளைக் கண்காணிக்க பொறியாளர்கள் நியமனம்

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளைக் கண்காணிக்க பொறியாளர்களை நியமித்து சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0 பகுதி 1, பகுதி 2, மூலதன நிதி, வெள்ளத் தடுப்பு நிதி, உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதி ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.608.24 கோடி மதிப்பில் 179.45 கி.மீ நீளத்திற்க்கும், உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.120 கோடி மதிப்பில் 44.88 கி.மீ நீளத்திற்க்கும், கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதிகளில் ஆசிய … Read more

எளியோரின் வலிமைக் கதைகள் 36: எங்களுக்கும் உடம்பு வலிக்கும்ங்க! மசாஜ் தொழிலாளியின் கதை!

சாதாரணமாக யாராவது உடம்பை பிடித்து விட்டால் நமக்கு ஒரு இதமாக இருக்கும். சில நேரங்களில் வலி இருக்கிற பகுதியில் யாராவது தடவி விட்டாலோ அழுத்தி பிடித்தாலோ வலி போனது போல ஒரு எண்ணம் இருக்கும். வலி போக குழந்தைகளை மிதிக்க சொல்வது கூட உண்டு. முன்பெல்லாம் சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கிற பழக்கம் இருந்தது. இப்போது நாகரீக உலகம் என்கிற பெயரில் அவை நம்மை விட்டு பிரிந்து போய்விட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் பழமையானவர்கள் இல்லங்களில் மட்டுமே இன்றைக்கும் … Read more

வயசானால் லவ் பண்ண கூடாது… அப்படி சட்டம் இருக்கு… கோபி வெளியிட்ட வீடியோ

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வயதாகிவிட்டால் லவ் பண்ணக்கூடாது இது சட்டம் என்று கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ் பேசியுள் வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தால என்னென்ன நடக்கும் என்பதையும் ஒரு குடும்ப தலைவி தன் வாழக்கையில் சந்திக்கும் பிரச்சினைகளையும் மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும சீரியல் பாக்கியலட்சுமி. கோபி பாக்யா தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் கோபி பாக்யாவின் நெருங்கிய … Read more

ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தவர்களை ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டியிருக்கிறது – மருத்துவர் இராமதாஸ்.!

இலங்கையில் மக்கள் சக்தி வென்றிருக்கிறது: போர்க்குற்றவாளிகள் தப்ப அனுமதிக்கக் கூடாது என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பில். “இலங்கையை திவாலாக்கிய ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இலங்கை அதிபர் மாளிகையை மக்கள் கைப்பற்றியுள்ளனர். மக்கள் சக்திக்கும், ஆத்திரத்திற்கும் அஞ்சி அதிபர் கோத்தபாய தப்பியோடியுள்ளார்! இலங்கையில் ஊழலில் திளைத்த ராஜபக்ச குடும்பம் அதை மறைக்க தமிழர்களை இனப்படுகொலை செய்தது, அதற்காக … Read more

புது நோட்டு முத்துசாமி.. மொத்த நோட்டையும் பறிகொடுத்த சோகம்..! வீடு தேடி வரும் கொள்ளையர்..

திருச்சி மாவட்டம் முசிறி  அருகே ஓய்வு பெற்ற வங்கி காசாளரை கடத்திச்சென்று வீட்டுச்சாவியை பறித்து மொத்த பணத்தையும் கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. வீட்டு வேலைக்கு வருவோருக்கு புது ரூபாய் நோட்டுக்கள் கொடுத்ததால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தா. பேட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி காசாளர் முத்துச்சாமி என்பவர் தான் கிட்னாப் கொள்ளையர்களிடம் மொத்த பணத்தையும் பறி கொடுத்தவர். 63 வயதான முத்துச்சாமி கனரா … Read more