இலங்கைக்கு தமிழக அரசின் நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்டது கப்பல் – முதல்வர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்

சென்னை: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை சென்னை துறைமுகத்தில் இருந்து ஏற்றிச் செல்லும் கப்பலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: சென்னை துறைமுகத்தில், இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்வின் முதற்கட்டமாக 9000 மெட்ரின் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் ஆவின் பால்பவுடர் மற்றும் … Read more

EPFO Alert: இப்படி மெசேஜ்- கால் வந்தா உஷார் ஆயிடுங்க… இல்லாட்டி மொத்த பணமும் அம்பேல்!

EPFO Alert Tamil News: வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருக்கும் மக்கள் கவனத்திற்கு, நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை மோசடி செய்பவர்கள் திருட பல வழிகளை கண்டுபிடித்துள்ளார்கள். அவர்கள் உங்கள் பிஎஃப் கணக்கின் விவரங்களைக் கேட்பதன் மூலம் ஆன்லைன் மோசடிகள் முதல் உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஹேக் செய்வது வரை அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் ஆன்லைன் மோசடி அச்சுறுத்தல் இருந்து வருகிறது. அதுபோன்ற ஆன்லைன் மோசடி அச்சுறுத்தலை நீங்கள் தவிர்க்க உங்களுக்கு சில குறிப்புகளை இங்கு வழங்கியுள்ளோம். … Read more

திருமூர்த்தி மலையில் சாரல் மழை.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை.!

திருமூர்த்தி மலையில் சாரல் மழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கை எழில் நிறைந்த ரம்மியமான சூழலில் அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவில் அடிவாரத்திலிருந்து 650 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதில் குளித்து மகிழ தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் … Read more

என் விடுதலைக்காகப் போராடிய அனைவருக்கும் நன்றி – பேரறிவாளன்

தனது விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகத் கூறியுள்ள பேரறிவாளன், விடுதலை கிடைத்துள்ளதால் சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். ராஜுவ்காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின் விடுதலையான அவர், மரண தண்டனையே கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கூறினார். பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது எனக் கூறிய அவரது தாயார் அற்புதம்மாள், மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை எனவும் கூறினார். Source link

பலத்த பாதுகாப்புடன் மதுரை மாநகராட்சிக் கூட்டம்: மேயரை செல்லவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று நடந்த மதுரை மாநகராட்சி கூட்டத்தில் பேச வாய்ப்பு கொடுக்காததால் திமுக கவுன்சிலர்கள் மேயருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கூச்சல் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த வாரம் நடந்த மதுரை மாநகராட்சி கூட்டம் அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம், மேயர் கணவர் ஆதரவாளர்கள், செய்தியாளர்கள் மீது தாக்குதல் போன்ற ரகளையால் விவாதமில்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்தவுடன் முடிந்தது. அதனால், இன்று மீண்டும் மாநகராட்சி கூட்டம் உதவி ஆணையர் மேற்பார்வையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் … Read more

இதில் வாத்து மட்டும்தான் தெரிஞ்சுதா? உங்க மூளை பவர் இதுதான் பாஸ்!

சமூக ஊடகங்களில் சமீப காலமாக ஆப்டிகல் இலுசியன் என்கிற மனதை மருளச் செய்யும் படங்கள் அதிக அளவில் வெளியாகி பகிரப்பட்டுவருகிறது. இந்த ஆப்டிகல் இலுசியன் படங்கள் புதிர் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் ஆளுமையைக் குறிப்பதாகவும் இருப்பதால் பலரும் அதைப் பார்த்து தங்கள் ஆளுமையையும் குணலனையும் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். அந்த வகையில், இந்த ஆப்டிகல் இலுசியன் படம் உங்கள் மூளை பவரை குறிப்பிடுவதாக அமைந்துள்ளது இந்த படத்தில் உங்களுக்கு வாத்துமட்டும்தான் தெரிகிறது என்றால் உங்கள் மூளை பவர் இதுதான் என்று … Read more

பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக பிரான்ஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை.!

சென்னைப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக பிரான்ஸ் நாட்டு தூதரக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்துவதற்காக பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப்படுத்துதல், ஒருங்கிணைத்தல் மற்றும் நிலைத்திருத்தலுக்கான நகர முதலீடுகள் (City Investments To Innovate, Integrate and Sustain – CITIIS) திட்டத்தின் … Read more

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு!

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கப்பட்டது. 2018ம் ஆண்டு மே மாதம் 22ந் தேதி நடைபெற்ற அந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விசாரணையின் இறுதிகட்ட அறிக்கையை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அருணா ஜெகதீசன் தாக்கல் செய்தார். Source link

“வெங்காயம் உரிக்கும் வேலையை பாருங்க” – அண்ணாமலை கருத்தை கலாய்த்த திமுக எம்.பி

சென்னை: பேரறிவாளன் தீர்ப்பு தொடர்பான பாஜக தலைவர் அண்ணாமலை கருத்தை கலாய்க்கும் விதமாக பதில் அளித்துள்ளார் திமுக எம்.பி செந்தில்குமார். பேரறிவாளன் விடுதலை குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழ்நாடு பாஜக ஏற்றுக் கொள்கிறது. நம் ஒற்றுமையையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்!” என்று குறிப்பிட்டிருந்தார். தீர்ப்பே … Read more

TNPSC Group 2 Final Tips: ஓ.எம்.ஆர் ஷீட் ஷேடிங்; டைம் மேனேஜ்மென்ட் செய்வது எப்படி?

TNPSC group 2 exam OMR shading and Time Management tips: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு வருகின்ற மே 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வில் ஓ.எம்.ஆர் ஷீட்டை எப்படி நிரப்புவது? தேர்வுக்கான கால அவகாசத்தை எப்படி முறையாக பயன்படுத்துவது என்பது குறித்து இப்போது பார்ப்போம். முதலில் தேர்வாணையம் அறிவித்துள்ளப்படி கருப்பு நிற பந்துமுனை பேனாவை மட்டுமே தேர்வில் பயன்படுத்துங்கள். வேறு நிற பேனாக்களை பயன்படுத்த வேண்டாம். அடுத்ததாக, ஓ.எம்.ஆர் ஷீட் … Read more