சிங்கப்பூரில் லஞ்சம் வாங்கிய இந்திய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியான பிரேம் குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் விமானத்துக்குள் வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் வழங்கும் அதிகாரியாக கடந்த 2015 முதல் 2017-ம் ஆண்டு வரை பணியாற்றினார். அப்போது லஞ்சம் வாங்கிக் கொண்டு தகுதி இல்லாதவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு அந்த நாட்டின் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் முடிவடைந்தது. இதில் பிரேம் மீதான … Read more

வாழும் தெய்வங்களை வணங்குவோம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்| Lets Worship the Living Gods: Today is International Mothers Day

வாழும் தெய்வங்களான அன்னையர்களை போற்றும் வண்ணம் ஆண்டு தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்று கிழமை (மே 8) அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் அன்னையர்களின் ஆசிர்வாதங்களை பெறுவது ஒவ்வொருவரின் கடமை. அவர்களுக்கு இன்று வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்களை வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்து ஆசிர்வாதங்களை பெறலாம். உலகில் பல நாடுகளில் வெவ்வேறு தினங்களில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக அன்னா ஜார்விஸ் என்பவரால், அமெரிக்காவின் … Read more

ஈரானில் 25 ராணுவ வீரர்களை கொன்ற பயங்கரவாதிக்கு மரண தண்டனை

ஈரானின் தெற்கு மாகாணமான குசெஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு ராணுவ அணிவகுப்பு நடந்தது. அதில் பயங்கரவாதிகள் சிலர் ராணுவ வீரர்கள் போல வேடமிட்டு கலந்து கொண்டனர். திடீரென அந்த பயங்கரவாதிகள் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சுட்டு தள்ளினர். இதில் 25-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மேலும் சிறுவன் உள்பட 70 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த பராஜோல்லா சாப் என்பவரை 2020-ம் ஆண்டு சுவீடனில் வைத்து ஈரான் போலீசார் கைது செய்தனர். … Read more

சுகாதார அவசர நிலை முடிந்தாலும் கொரோனா அச்சுறுத்தல் தொடரும்| Corona threat will continue even after health emergency is over

லண்டன்-உலக நாடுகளை மூன்று ஆண்டுகளாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் குறித்த சுகாதார அவசரநிலை அறிவிப்பை, உலக சுகாதார அமைப்பு திரும்பப் பெற்றது. அதே நேரத்தில், வைரஸ் பாதிப்பு தொடர்கிறது என எச்சரித்துள்ளது. கடந்த ௨௦௧௯ இறுதியில், நம் அண்டை நாடான சீனாவில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு தென்பட்டது. பொருளாதார பாதிப்பு இது மிக வேகமாக உலக நாடுகள் முழுதும் பரவியது. இதையடுத்து, கொரோனா வைரஸ் பரவலை, சர்வதேச சுகாதார அவசரநிலையாக, உலக … Read more

இத்தாலியில் தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் பிரதமர் மீது தாக்குதல்

இத்தாலியின் டஸ்கனி மாகாணத்துக்கு முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சி தலைவருமான கியூசெப் கோன்டே தேர்தல் பிரசாரம் செய்வதற்காக சென்றார். அவர் அங்குள்ள மாசா என்ற பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது அவரது ஆதரவாளர்கள் பலர் அவரை வரவேற்றனர். அப்போது அதில் ஒருவர் கை குலுக்குவது போல நடித்து அவரது கன்னத்தில் பளாரென அறைந்தார். உடனடியாக அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் கியூசெப் கொன்டே பிரதமராக இருந்த காலத்தில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு … Read more

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஆலோசகராக இந்திய வம்சாவளி நீரா டாண்டன் நியமனம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தான் பதவியேற்ற நாள் முதலே தன்னுடைய நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வகையில் ஜனாதிபதி ஜோ பைடனின் அரசில் இந்தியர்கள் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது ஜோ பைடனின் உள்நாட்டு கொள்கைக்கான ஆலோசகராக இந்திய வம்சாவளி பெண் நீரா டாண்டன் நியமிக்கப்பட்டுள்ளார். சட்ட வல்லுநரான நீரா டாண்டன் தற்போது ஜோ பைடனின் மூத்த ஆலோசகராகவும், பணியாளர் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். அதோடு கூடுதலாக … Read more

பாகிஸ்தானில் தொடர்ந்து கொல்லப்படும் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதிகள்! யார் செய்யும் வேலை!

பாகிஸ்தானில் கடந்த ஓராண்டாக இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது காலிஸ்தான் கமாண்டோ படையின் தலைவர் பரம்ஜித் சிங் பஞ்ச்வாட் கொல்லப்பட்டுள்ளான்.

உலகளவில் கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

உலகளவில் கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் அவசரக்குழு கூட்டத்திற்கு பின், இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம், கொரோனா பாதிப்புகளிலிருந்து உலகம் முற்றிலும் விடுபட வில்லை என்றும், உலகளவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த வாரம் கூட மூன்று நிமிடங்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறினார். வைரஸின் இறப்பு விகிதம் ஜனவரி 2021-இல் வாரத்திற்கு ஒரு லட்சத்துக்கும் … Read more

பிரிட்டன் மன்னராக முடிசூட்டப்பட்டார் மூன்றாம் சார்லஸ் – நிகழ்வின் சிறப்பு அம்சங்கள்

லண்டன்: பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் மகுடம் சூட்டப்பட்டார். கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து, அவரது மூத்த மகனான சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரிட்டன் மன்னராக சார்லஸ் பதவியேற்றார். அரசர் சட்டத்தையும் இங்கிலாந்து திருச்சபையையும் நிலை நிறுத்துவேன் என்று … Read more

King Charles III crowned: இங்கிலாந்து மன்னராக மகுடம் சூடினார் சார்லஸ்… ராணி ஆனார் கமிலா!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று அதிகாரப்பூர்வமாக முடி சூடிக்கொண்டார். அவரது மனைவி கமிலாவும் அதிகாரப்பூர்வமாக இங்கிலாந்து ராணியானார். மன்னர் மூன்றாம் சார்லஸ்கடந்த 70 ஆண்டுகளாக இங்கிலாந்தை ஆட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவை தொடர்ந்து அவரின் மகனான இளவரசர் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். மன்னர் … Read more