US Congressmen write to Speaker Kevin McCarthy urging to invite PM Modi for delivering joint address to Congress | அமெரிக்க பார்லி கூட்டத்தில் பிரதமர் மோடி உரை: அமெரிக்க எம்.பி.,க்கள் கோரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்க பார்லிமென்ட்டின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை உரையாற்ற அழைக்க வேண்டும் என பிரதிநிதிகள் சபையின் தலைவர் கெவின் மெக்கர்த்திக்கு, எம்.பி.,க்கள் ரோ கண்ணா மற்றும் மிச்சல் வால்ட்ஜ் ஆகியோர் கடிதம் எழுதி உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் வரும் ஜூன் 22ல் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டிற்கு செல்ல உள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். மோடியின் இந்த … Read more

கோவிட் 19-ஐ விட ஆபத்தான பெருந்தொற்று ஏற்பட வாய்ப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனிவா: கோவிட் தொற்றுநோயைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் அதன் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் ஆற்றிய உரை: “கோவிட் தொற்றுநோயைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது. அது பரவாமல் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். கோவிட் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் 2 … Read more

ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் மீதான தாக்குதல்களை குறிப்பிட்ட பிரதமர் மோடி!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சிட்னியில் இந்திய சமூகத்தினரிடம் அவர் உரையாற்றினார். தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸை சந்தித்தார்.

மர்மகோவா போர்க் கப்பலில் ஏவுகணை சோதனை

புதுடெல்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் மர்மகோவா போர்க் கப்பல் 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய கடற்படையுடன் இணைக்கப்பட்டது. இந்தப் போர்க் கப்பலில் அதிநவீன ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன்கொண்ட ஏவுகணைகள் இதில் உள்ளன. 163 மீட்டர் நீளமும் 17 மீட்டர் அகலமும் கொண்ட இந்தப் போர்க் கப்பலின் எடை 7 ஆயிரத்து 400 டன் ஆகும். மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். இந்தப் போர்க் கப்பலில் இருந்த ஏவுகணை … Read more

Like T20 cricket, India-Australia relationship has gone to the next level: PM Modi | ‛டி20 கிரிக்கெட் போல அடுத்த கட்டத்திற்கு சென்ற இந்தியா – ஆஸி., உறவு: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிட்னி: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உறவு என்பது ‛டி20′ கிரிக்கெட் போட்டி போல் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதாக சிட்னியில் பிரதமர் மோடி கூறினார். ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடி, சிட்னியில் நேற்று (மே 23) நடைபெற்ற கலாசார விழாவில் அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ் உடன் பங்கேற்றார். அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான இந்திய வம்சாவளியினரை மத்தியில் இருவரும் உரையாற்றினர். இன்று சிட்னியில் உள்ள அட்மிரால்டி ஹவுஸ் சென்று பார்வையிட்டார். … Read more

பென்டகன் அருகே வெடிவிபத்து போல் போலி புகைப்படம்: அமெரிக்க பங்குச் சந்தை சரிந்து மீண்டது

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அருகே வெடிவிபத்து ஏற்பட்டதாக திங்கள்கிழமை அன்று செய்தி பரவியது. பென்டகன் அலுவலக கட்டிடத்துக்கு அருகே வெடிவிபத்தால் கரும்புகை பரவுவது போன்ற படம் ஒன்று இணையதளத்தில் வைரலானது. இதையடுத்து அன்றைய தினம் அமெரிக்க பங்குச் சந்தையில் சில நிமிடங்கள் கடும் சரிவு ஏற்பட்டது. 500 பில்லியன் டாலர் (ரூ.41 லட்சம் கோடி) அளவில் அமெரிக்க பங்குச் சந்தை சரிந்தது. பின்னர், அந்தப் படம் போலியானது என்று தெரியவந்தது. இதன் பிறகு பங்குச் … Read more

லண்டனில் ஷெல் நிறுவன சி.இ.ஓ-ஐ அடிக்க பாய்ந்த சூழலியல் ஆர்வலர்கள்.. குண்டுகட்டாக வெளியேற்றிய பாதுகாவலர்கள்!

லண்டனில், ஷெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியை அடிக்க பாய்ந்த சூழலியல் ஆர்வலர்களை பாதுகாவலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றினர். எரிசக்தி நிறுவனங்களின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தின்போது திடீரென உள்நுழைந்த சூழலியல் ஆர்வலர்கள் மேடையேறி ஷெல் நிறுவனத்தின் சி.இ.ஓ-வான வேல் சாவன் மற்றும் நிர்வாக இயக்கு நர்களை தாக்க முயன்றனர். நிலைமையை உணர்ந்த பாதுகாவலர்கள் மனிதசங்கிலி போல் செயல்பட்டு போராட்டக்காரர்களை தடுத்ததுடன் அவர்களை குண்டுகட்டாக வெளியேற்றினர். Source link

ஆஸ்திரேலிய பிரதமருடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை – சிட்னியில் பிரதமர் மோடி உற்சாகம்

சிட்னி: இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. திறமை மிக்க இளைஞர்களை உருவாக்கும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஜப்பான், பப்புவா நியூ கினி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இரவு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு சென்றார். அங்கு உள்ள ஒலிம்பிக் பார்க்கில் நேற்று நடந்த இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் அவர்பங்கேற்றார். இதில் 20 ஆயிரத்துக்கும் … Read more