‘9 ஆண்டுகளுக்கு முன் மாயமான விமானம்’.. மீண்டும் தேட விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் கோரிக்கை..!

9 ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை மீண்டும் தேடுவதற்கு அனுமதிக்குமாறு காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் மலேசிய அரசை கேட்டுக் கொண்டுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்ற MH370 என்ற விமானம் திடீரென மாயமானது. மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் நடத்திய தேடுதல் வேட்டையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஓஷன் இன்ஃபினிட்டி என்ற நிறுவனமும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. தற்போது … Read more

போதைப் பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபரின் 60 நீர்யானைகளை இந்தியாவுக்கு அனுப்ப கொலம்பியா திட்டம்..!

மறைந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபரால் வளர்க்கப்பட்ட நீர்யானைகளை இந்தியாவுக்கு அனுப்ப கொலம்பியா திட்டமிட்டுள்ளது. கடந்த 1993ல் எஸ்கோபர் இறந்த பின்னர் அவரது பண்ணை வீட்டில் வளர்த்த ஏராளமான விலங்குகள் இடம் மாற்றப்பட்டன. இதில் நீர்யானைகள் மட்டும் அங்கேயே இருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 160ஆக உயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை அடுத்த 20 ஆண்டுகளில் ஆயிரத்து 500ஐக் கடக்கலாம் என்று கூறும் அதிகாரிகள், இதன் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த 60 நீர்யானைகளை இந்தியாவுக்கும், … Read more

இந்தோனேஷியா எரிபொருள் கிடங்கில் பயங்கர தீ விபத்து: 19 பேர் உயிரிழப்பு; 3 பேர் மாயம்

ஜகார்தா: இந்தோனேஷியாவின் வடக்கு ஜகார்தாவில் மக்கள் அதிகம் வசிக்கும் தனா மெரா என்ற பகுதிக்கு அருகே, அரசின் பெர்டெமினா என்ற எரிபொருள் கிடங்கு உள்ளது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் எரிபொருள் கிடங்கு எரிந்தது. தீயணைப்பு படை வீரர்கள் 260,பேர், 53 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை போராடி அணைத்தனர். இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 3 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்பு … Read more

“அடுத்த தலைமுறை தலைவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள்…” குடியரசு கட்சி மாநாட்டில், டிரம்பின் முதுமை குறித்து நிக்கி ஹாலே மறைமுக விமர்சனம்..!

அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிக்கி ஹாலே, அடுத்த தலைமுறை தலைவர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு கட்சி பிரமுகர்களிடம் கேட்டுக்கொண்டது, முன்னாள் அதிபர் டிரம்பின் முதுமையை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. 76 வயதாகும் டிரம்ப், அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அதே கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளிகளான நிக்கி ஹாலேயும், விவேக் ராமசாமியும் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்ட தொடங்கியுள்ளனர். 75 வயதை … Read more

இம்ரான் கான் எங்கே? கைது செய்ய போலீஸ் தீவிரம்| Police unable to find Imran for arrest; PTI threatens protest

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தினால், நீதிமன்ற உத்தரவுப்படி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், வீட்டில் இம்ரான் கான் இல்லை. அங்கு, அவரது கட்சி தொண்டர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது. பாக்., பிரதமர் பதவியில் இருந்து விலகிய இம்ரான் கான் மீது, மற்ற நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட அரசு பரிசுப்பொருட்கள் குறித்த விவரங்களை, … Read more

பலத்தை கூட்டுகிறது சீனா :ராணுவ செலவு இந்தியாவை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம்| CHINA BUILDING STRENGTH :Military spending is three times higher than Indias

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: ராணுவத்தை பலப்படுத்துவதை குறிக்கோளாக கொண்டு ,இந்தியாவை காட்டிலும் மூன்று மடங்கு அதிமாக நிதி ஒதுக்கி உள்ளது சீனா. சீனாவில் உள்ள ராணுவம் மக்கள் விடுதலை ராணுவம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 2 மில்லியன் வீரர்கள் வரை உள்ளனர். உலகின் வலிமை மிக்க ராணுவமாக மாற்றவும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியான இரண்டாவது இடத்தை பிடிக்கும் வகையில் அதிபர் ஜிஜின்பிங் செயல்படுத்தி வருகிறார். வரும் 2027 ம் ஆண்டு சீன ராணுவத்தின் … Read more

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமறைவு..!

பாகிஸ்தான் அரசுக்கு சேரவேண்டிய பரிசுப்பொருட்களை சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய வந்த போலீசார் அவர் வீட்டில் இல்லாததால் திரும்பி சென்றனர். பிரதமர் பதவி வகித்தபோது, அவருக்கு கிடைத்த பரிசுப்பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல், கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்றதாக இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில், அவரால் ஜாமீனில் வெளிவர முடியாதபடி நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. இம்ரான் கான் இல்லத்தில் குவிந்த கட்சி தொண்டர்கள், போலீசாரை கண்டித்து … Read more

இம்ரான் கானை கைது செய்ய விரைந்த போலீஸ்; பாகிஸ்தானில் பரபரப்பு.!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஜாமீனில் வெளிவராத வகையில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம். பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி, அத்தியவசியப் பொருட்களின் உள்ளிட்ட காரணிகளால் பிரதமராக இருந்த இம்ரான் கானின் அரசு கவிழ்க்கப்பட்டது. ஆனால் அவர் உக்ரைன் ரஷ்யா விவகாரத்தில் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணியவில்லை என குறப்படுகிறது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என அமெரிக்கா கூறிய நிலையில் இம்ரான் கான் அதை ஏற்க மறுத்தார். அதை தொடர்ந்து … Read more

அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றால் உக்ரைன் போரை ஒரே நாளில் நிறுத்திவிடுவேன் : டிரம்ப் சூளுரை

அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றால், உக்ரைன் போரை ஒரே நாளில் நிறுத்திவிடுவேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேரிலேண்டில், ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும், தனது பேச்சுக்கு செவி சாய்ப்பார் என்றும் தெரிவித்தார். மேலும், தன்னால் மட்டும் தான் மூன்றாம் உலகப்போர் நேராமல் தடுக்க முடியும் என்றார். Source link