பூமி நேரம் இன்று கடைபிடிப்பு – இரவு 8.30 மணி முதல் ஒரு மணிநேரம் விளக்குகளை அணைக்க வேண்டுகோள்

காலநிலை மாற்றங்கள் மற்றும் ஆற்றல் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக தனிநபர்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள அனைத்து விளக்குகளையும் ஒரு மணி நேரம் அணைக்க ‘பூமி நேரம்’ என்ற நிகழ்வு ஊக்குவிக்கிறது. இந்த ‘பூமி நேரம்’ நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இன்று (மார்ச் 25) ‘பூமி நேரம்’ கடைபிடிக்கப்படுகிறது. 190-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து மில்லியன் கணக்கான ஆதரவாளர்கள் … Read more

சர்வதே கடல் எல்லையில் தத்தளித்த 78 புலம்பெயர்ந்தோர் பத்திரமாக மீட்பு..!

இத்தாலி அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் சர்வதே கடல் எல்லையில் தத்தளித்த 78 ஆப்ரிக்க புலம்பெயர்ந்தோரை தனியார் தொண்டு நிறுவனத்தினர் மீட்டுள்ளனர். ஆப்ரிக்காவிலிருந்து இத்தாலியில் தஞ்சமடைவதற்காக புலம்பெயர் மக்கள் வந்துக்கொண்டிருந்த படகு பழுதாகி விட்டதாக, இத்தாலியிலுள்ள தொண்டு நிறுவனத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கப்பலில் சென்று, மால்டிஸ் பகுதியில் மூழ்கிக்கொண்டிருந்த படகிலிருந்த 28 சிறுவர்கள், கர்ப்பிணி உள்பட 3 பெண்களையும் தொண்டு நிறுவனத்தினர் பத்திரமாக மீட்டனர். மார்ச் மாதம் வரையில் 20 ஆயிரம் பேர் அகதிகளாக இத்தாலிக்கு வந்துள்ளதாக … Read more

நமாமி கங்கை திட்டம்: ஐ.நா., பிரதிநிதி புகழாரம்| Namami Ganga Project: UN, Representative Praise

நியூயார்க்: ‘இந்தியாவின், மிகப்பெரிய நதியான கங்கை நதியை துாய்மைப்படுத்தும், ‘நமாமி கங்கை’ திட்டம், நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது’ என, ஐ.நா., பிரதிநிதி புகழாரம் தெரிவித்து உள்ளார். தஜிகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து இணைந்து நடத்தும், ஐ.நா., நீர்வளத் துறை மாநாடு – 2023, ஐ.நா.,வில் 22ல் துவங்கியது. மாநாட்டின் கடைசி நாளான நேற்று, நெதர்லாந்தின் சர்வதேச நீர் விவகாரங்களுக்கான சிறப்புத் துாதர் ஹென்க் ஓவிங்க் பேசியதாவது: இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நதியான கங்கை, முக்கிய நீரோடை களில் … Read more

சாக்லேட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – 2 பேர் பலி, 9 பேர் மாயம்

வாஷிங்டன், அமெரிக்காவின் பெல்சின்வேனியா மாகாணம் மேற்கு ரீடிங் பாரோ பகுதியில் சாக்லேட் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை 5 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சாக்லேட் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். இந்த வெடிவிபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் மாயமாகினர். மாயமான 9 பேரை … Read more

பல நாள் போராட்டத்துக்குப் பின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, கிழக்கு வெலன்சியாவின் காட்டுத்தீ..!

ஸ்பெயினில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான வனப்பகுதியை தின்று விழுங்கிய காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவை பெற்றதால், ஸ்பெயின் ஒரு நீண்ட கால வறட்சியில் சிக்கியுள்ளது. இதனால் காட்டுத்தீ ஏற்படும் நிகழ்வு அடிக்கடி அரங்கேறி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் அப்படி 493 இடங்களில் ஏற்பட்ட தீ விபத்துகளில் சிக்கி, 3 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலம் அழிவுக்குள்ளானதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில், … Read more

பெரும்பாலான இந்து மதத்தினர் என்னை விரும்புகின்றனர் – இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்

மஸ்கட், இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக். இவர் இந்தியாவில் இஸ்லாமிய மத ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் அமைதி டிவியின் தலைவராக இருந்து வந்தார். இதனிடையே, அமைதி டிவி மற்றும் மத பிரசாரங்கள் மூலம் பிற மதத்தினர் குறித்து வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து, ஜாகிர் நாயக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டல், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுதல், பணமோசடி உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு … Read more

உக்ரைனுக்கு எதிரான போரில், மேலும் 4 லட்சம் வீரர்களை களமிறக்க உள்ளதாக, ரஷ்யா தகவல்..!

உக்ரைனுக்கு எதிரான போரில், மேலும் 4 லட்சம் வீரர்களை ரஷ்யா களமிறக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் ஓராண்டை கடந்தும் நீடிக்கும் நிலையில், ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்து போர்க்களத்திற்கு அனுப்பி வைக்க ரஷ்யா முடிவெடுத்துள்ளது. சீன அதிபரின் ரஷ்ய விஜயத்திற்கு பிறகு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், போருக்கு முன்பே தனது படை பலத்தை, 11 லட்சத்திலிருந்து 15 லட்சமாக உயர்த்த எடுத்த முடிவின் அடிப்படையிலேயே வீரர்கள் தேர்வு செய்யப்படுவதாக ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது. … Read more

சீன செயலிகளுக்கு பிரான்ஸ் செக்| France Czech for Chinese apps

பாரீஸ், : சீன மற்றும் அமெரிக்கா நிறுவனங்களின் செயலிகளை கட்டுப்படுத்த வேண்டும் என பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் உள்ள பைட்டான்ஸ் நிறுவனத்தின் டிக்- டாக் செயலிக்கு பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அதன்படி பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் டிக்-டாக் செயலியை அரசின் மின்னணு சாதனங்களில் பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இவை தனியுரிமையை மீறுவதாக குற்றச்சாட்டுஎழுந்தது. அதுபோல ரஷியாவில் டிக்-டாக், ஸ்னப்-சாட், டெலிகிராம், வாட்ஸ் அப் போன்றவை பயங்கரவாத செயலிகளாக பரிந்துரை … Read more

வேலையே செய்யாம இருக்கணும்; அதுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்: மெட்டா நிறுவன பெண் ஊழியரின் அனுபவம்…

வாஷிங்டன், மெட்டா நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியரான மேடலின் மசாடோ என்பவர் டிக்டாக் வீடியோ ஒன்றில் வெளியிட்ட செய்தியில், வேலையில் எதுவும் செய்யாமல் ஓராண்டுக்கு ரூ.1.5 கோடி என்ற அளவில் தனக்கு சம்பளம் அளிக்கப்பட்டது என தெரிவித்து உள்ளார். மெட்டா நிறுவனத்தில், வேலை எதுவும் செய்யாமல் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம், என்ற தலைப்பிலான அந்த வீடியோவில், மேடலின் வேலையில் இருந்தபோதே, வேறு புதிய பணியாளர்கள் யாரையும் பணியில் சேர்க்காமல் தனது நிறுவனம் எப்படி செயல்பட்டது என்பது … Read more

சவுதி அரேபிய டிவியில் அதிக பார்வையாளர்களை ஈர்த்த அமெரிக்க அதிபர், துணை அதிபரின் கேலி வீடியோ..!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலாஹாரிஸ் ஆகியோரை கேலியாக சித்தரித்து சவுதி அரேபியா தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட கேலி வீடியோ அதிக பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. அமெரிக்க கொடிக்கு முன்னால் நிற்கும் பைடன் கை குலுக்குவதற்கு ஆள் கிடைக்காமல் அங்கும் இங்கும் கைகளை நீட்டியவாறு செல்வதும், அப்போது அங்கு வரும் கமலாஹாரிஸ் உதவுவது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு காட்சியில், விமானத்தில் சல்யூட் செய்துக் கொண்டே ஏறும் பைடன் சறுக்கி கீழே விழுவதையும் அதனை கமலா … Read more