மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

தென்கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் தாக்கிய ஃப்ரெடி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 522 ஆக அதிகரித்துள்ளது. மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி என்ற பருவகால சூறாவளி புயல் காரணமாக கனமழை பெய்துவருகிறது. பல்வேறு பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் அடித்துச் செல்லப் பட்டன. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 522 ஆக அதிகரித்துள்ள நிலையில், அவற்றில் 438 உயிரிழப்புகள் மலாவி நாட்டில் மட்டும் பதிவாகியுள்ளது. கனமழையுடன் புயல் நீடித்து வருவதால் பலி … Read more

சேதி சொன்ன சிட்டுக் குருவியை மீட்டெடுப்போம்!

சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அழிந்து வருவதாக கூறப்படும் சின்னஞ்சிறு பறவையைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்ப்போம்… கேட்கக் கேட்க சலிக்காத ஓசைதான் இந்த சிட்டுக் குருவியின் குரல்….பன்னெடுங்காலமாக மனிதர்களோடு ஒன்றிப் பழகி விட்ட ஒரு அற்புதமான உயிரினம் சிட்டுக் குருவி… தமிழ்த் திரைப்பாடல்களில் சிட்டுக்குருவிக்கு தனி இடம் உண்டு. நிலவுக்கு அடுத்தபடியாக பாடல்களில் அதிகம் இடம்பெற்ற பேசுபொருள் சிட்டுக்குருவிதான்! சோகத்தில் ஆழ்ந்திருப்போருக்கும், சுதந்திரமாகச் சுற்றித் திரிய ஆசைப்படுவோருக்கும் … Read more

அமெரிக்காவுக்கு எதிரான போர்: வட கொரியாவில் 8 லட்சம் பேர் தயார்| War against America: 8 lakh people are ready in North Korea

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பியாங்காங் : அமெரிக்காவுக்கு எதிராக போர் புரிய எட்டு லட்சம் பேர் ராணுவத்தில் இணைய ஆர்வமாக உள்ளதாக வடகொரிய அரசு தெரிவித்துள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியா தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை வைத்து தன் அண்டை நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தி வருகிறது. சமீபகாலமாக அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவும் … Read more

ரஷ்ய படைகள் வசமுள்ள உக்ரைனின் மரியுபோல் நகருக்கு முதல் முறையாக சென்ற அதிபர் புடின்.!

ரஷ்ய படைகள் வசமுள்ள உக்ரைனின் மரியுபோல் நகருக்கு, முதல் முறையாக அதிபர் புடின் சென்ற விவகாரத்தில், திருடனைப் போல் சென்று வந்திருப்பதாக உக்ரைன் விமர்சித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், முதன்முறையாக உக்ரைனின் மரியுபோல் நகருக்கு ரஷ்ய அதிபர் புதின் நேற்று சென்றார்.  நகரின் கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து மதிப்பாய்வு செய்ய புதின் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மரியுபோலில் ரஷ்ய அதிபர் புதின் பொதுமக்களுடன் கலந்துரையாடும் வீடியோவை ரஷ்ய … Read more

குரோஷியாவில் 2ம் உலகப் போரின்போது ஜெர்மன் படைகளால் வைக்கப்பட்ட கடல் கண்ணிவெடி தகர்ப்பு

குரோஷியாவில், இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மன் படைகளால் கடலுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 690 கிலோ எடைகொண்ட கடல் கண்ணிவெடி தகர்க்கப்பட்டது. ரிஜேகா துறைமுகத்தில் உள்கட்டமைப்பு பணிகளின்போது இந்த கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டது. சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 500க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, சிறப்பு காவல்படை பிரிவினரால் தகர்க்கப்பட்டது.  Source link

உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய நகருக்கு சென்ற அதிபர் புடின்| President Putin visited a city captured by Russia in Ukraine

கிவ் : உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தொடரும் சூழலில், முதன் முறையாக உக்ரைனில் உள்ள மரியுபோல் நகருக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று சென்றார். ‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் முயற்சித்து வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ஓராண்டுக்கு மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. தொழிற்சாலை இந்த சண்டையால் உக்ரைன் தலைநகர் கீவ், … Read more