ட்ரம்ப் கைது செய்யப்பட்டால் எப்படி இருக்கும்: வைரலான புகைப்படங்கள்..!

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது செய்யப்படுகிறார் என்ற தகவல் வெளியான நிலையில் அவர் கைது செய்யப்படுவது போன்ற போலியான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடனான பாலியல் தொடர்பை மறைக்க அமெரிக்கா மாடல் ஸ்டோமி டேனியல்ஸ்க்கு ட்ரம்ப் 1,30,000 டாலர் வழங்கி இருந்ததாக கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டில் ட்ரம்ப் விரைவில் கைதாவார் என்று செய்திகள் வெளியாகின.இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை ட்ரம்ப் தொடர்ந்து மறுத்து வந்தார். எனினும் ட்ரம்ப் உறுதியாக கைதாவார் என்று … Read more

அர்ஜென்டினா அணிக்காக விளையாட சொந்த ஊர் திரும்பிய மெஸ்ஸியைக் காண குவிந்த ரசிகர்கள்..!

அர்ஜென்டினா அணிக்காக விளையாட  சொந்த ஊர் திரும்பிய கால்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸியை காண ரசிகர்கள் அவர் தங்கி இருந்த ஓட்டல் முன்பாக குவிந்தனர். உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டத்தில் கோப்பை வென்று அர்ஜென்டினாவுக்கு பெருமை சேர்த்தவர் மெஸ்ஸி. இவர் ஐரோப்பிய கிளப் போட்டிகளில் விளையாடி வந்த நிலையில் பியூனஸ் அயர்ஸ் திரும்பினார். அவர் தங்கி இருந்த ஓட்டல் முன்பாக ரசிகர்கள் குவிந்தனர். அவரை பெயர் சொல்லி அழைத்து தங்களை காண வருமாறு முழக்கமிட்டனர். மெஸ்ஸி … Read more

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 11 பேர் பலி; பலர் படுகாயம்

கராச்சி: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6.5 ரிக்டர்: அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையமானது நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக இருந்தது என்றும். பூமிக்கு அடியில் 116 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்தது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானின் ஹிண்டுகுஷ் மலைகளின் தெற்கு தென் கிழக்கு பகுதியை ஒட்டிய ஜுர்ம் நகரில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது. … Read more

இந்தியா, பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்! குறைந்தது 11 பேர் பலி!

Latest updates on Pakistan-Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறினர். இதுமட்டுமின்றி, இந்த நிலநடுக்கம் தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இரு நாடுகளின் பல பகுதிகளில் நிலநடுக்கத்தால் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்திய தலைநகரம் புதுடெல்லி வரை உணரப்பட்டது.  பூகம்பத்தின் மையம் … Read more

இலங்கைக்கு ரூ.24,600 கோடி கடன் வழங்க ஐஎம்எஃப் ஒப்புதல்

கொழும்பு: கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் இலங்கைக்கு 3 பில்லியன் டாலர் (ரூ.24,600 கோடி) கடன் உதவி வழங்க சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்தத் தொகை நான்கு ஆண்டுகால அடிப்படையில் வழங்கப்படும் என்றும் முதற்கட்டமாக தற்போது 333 மில்லியன் டாலர் (ரூ.2,700 கோடி) நிதி வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக அந்நாட்டின் வெளிநாட்டுக் கடன் அதிகரித்து வந்த நிலையில், சென்று ஆண்டு தொடக்கத்தில் இலங்கையில் அந்நிய செலாவணி … Read more

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா உக்ரைனுக்கு பயணம்..!

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். புச்சா நகருக்கு சென்ற ஃபுமியோ, போரில் உயிரிழந்தவர்களுக் காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அதிபர் ஜெலன்ஸ்கியுடன் போர் நிலவரம் குறித்தும், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கிஷிடா பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஜப்பான் மற்றும் ஜி7 நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என அதிபர் ஜெலன்ஸ்கியிடம், ஜப்பான் பிரதமர் … Read more

ரஷ்யாவில் புதின், ஜின்பிங் சந்திப்பு – மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக கூட்டு சேர விருப்பம்

மாஸ்கோ: ரஷ்யா சென்றுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், அதிபர் புதினை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக கூட்டு சேர அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. இதனால் ரஷ்யா – சீனா வர்த்தக உறவுகள் அதிகரிக்கத் தொடங்கின. இது இரு நாடுகள் இடையே நெருக்கத்தை அதிகரித்துள்ளது. இந்திய பயணத்தை முடித்துக்கொண்ட ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, உக்ரைனுக்கு திடீர் … Read more

பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கில் நிலநடுக்கத்திற்கு 9 பேர் உயிரிழப்பு..!

ஆப்கானிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, பாகிஸ்தானிலும் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டு இடிபாடுகளில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், பாகிஸ்தான், இந்தியா, தஜிகிஸ்தான், கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் 1,000 கிலோமீட்டர் வரை நில அதிர்வுகள் உணரப்பட்டதாக, ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வால் பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கில் பல கட்டங்களின் சுவர்களில் நீளமான வெடிப்புகள் ஏற்பட்டதோடு சில இடங்களில் … Read more