யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்த 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது…!

லாஸ் ஏஞ்சல்ஸ், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. காட்டில் தாயை பிரிந்து தவிப்பது மற்றும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடித்து கும்கியாக மாற்றி வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். இதில் தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகளை வனத்துறையினர் மீட்டு முகாமுக்கு கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பாகன்கள், கால்நடை டாக்டர் கொண்ட மருத்துவ குழு கண்காணிப்பில் குட்டி யானைகள் வளர்க்கப்படுகிறது. இதில் கடந்த 2017-ம் ஆண்டில் … Read more

நாட்டு நாட்டு பாடலுக்கு கிடைத்த ஆஸ்கர் இந்திய சினிமாவின் வெற்றி – நடிகர் ராம் சரண்

“ரஷ்யாவுடன் போர் தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன் உக்ரைனின் கீவ் அரண்மனையில் நாட்டு நாட்டு பாடலை படமாக்கினோம்” என்று நடிகர் ராம் சரண் கூறியுள்ளார். ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்ற நிலையில் அதுகுறித்து நடிகர் ராம் சரண் அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், நாங்கள் படமாக்கியதிலேயே “நாட்டு நாட்டு” பாடல்தான் மிகவும் கஷ்டமாக இருந்தது. என்றும், அந்த பாடலுக்கு கிடைத்த ஆஸ்கர் … Read more

போருக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் புடினை சீன அதிபர் சந்திக்க திட்டம்| Chinese President Plans to Meet Russian President Putin Amid War

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் ரஷ்ய பயணம் மேற்கொண்டு, அதிபர் புடினை சந்திக்க திட்டமிட்டு உள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன்- ரஷ்யா இடையே, கடந்த ஆண்டு பிப்.,24ல் போர் துவங்கியது. கடந்த ஒராண்டாக நடந்து வரும் இப்போரில் ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன் பல நாடுகளின் உதவியோடு எதிர்கொண்டு வருகிறது. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது … Read more

இத்தாலியில் நடுக்கடலில் தவித்த 1,000 அகதிகள் பத்திரமாக மீட்பு

ரோம், துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் சட்ட விரோத பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அகதிகளாக தஞ்சம் அடைகின்றனர். கடல் மார்க்கமாக ஆபத்தான முறைகளில் மேற்கொள்ளப்படும் பயணங்கள் பல நேரங்களில் விபத்தில் முடிந்து விடுகிறது. அந்த வகையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இத்தாலியின் கலபிரியா பகுதியில் அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் 2 குழந்தைகள் உள்பட 76 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இத்தாலி … Read more

உக்ரைனின் பாக்முட்டில் கடும் மோதல்-இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரிப்பு

ரஷ்யா-உக்ரைன் மோதலால் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள பாக்முட்டில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக கடும் மோதல் நடைபெற்றுவரும் பாக்முட்டில் உள்ள உக்ரைன் வீரர்கள் இன்று கடும் தாக்குதலை எதிர்கொண்டனர். டொனெட்ஸ்க் பகுதியில் 24 மணி நேரத்தில் 220-க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளநிலையில், பாக்முட் நகரில் நடைபெற்றுவரும் மோதலில் கடந்த 6-ம் தேதியில் இருந்து ஒருவாரத்தில் மட்டும் 1100-க்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் … Read more

நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு – இஸ்ரேலில் வரலாறு காணாத போராட்டம்

டெல் அவிவ்: இஸ்ரேலில் நீதித்துறை அமைப்பை மாற்றியமைப்பதற்கான அந்நாட்டு அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 வாரங்களாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீதிதுறையின் அதிகாரத்தை கட்டுப்படுத்தவும், நீதித்துறை அதிகாரத்திற்கும், அரசாங்கத்தின் அதிகாரத்திற்கும் சம நிலையை மீட்டெடுக்கவும் நீதித்துறையில் மாற்றம் கொண்டுவர இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என எதிர்க்கட்சி தலைவர்களும், இஸ்ரேல் மக்களும் போராட்டத்தில் குதித்தனர். இஸ்ரேல் அரசின் முடிவை எதிர்த்து … Read more

தில்லி – தோஹா இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் மரணம்!

டெல்லியின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தோஹாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், கராச்சியில் உள்ள ஜின்னா டெர்மினல் சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது.  இண்டிகோவின் 6E-1736 விமானம் டெல்லியில் இருந்து தோஹாவுக்குப் பறந்து கொண்டிருந்த போது, மருத்துவ அவசரநிலை காரணமாக, பாகிஸ்தானின் கராச்சி நோக்கி திருப்பி விடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, இண்டிகோவின் 6E-1736 விமானம் மருத்துவ அவசரநிலை காரணமாக திருப்பி விடப்பட்டுள்ளது. இருப்பினும், கராச்சியில் தரையிறங்கிய பின்னர், … Read more

மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற வெனிசுலாவை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தம்!

மெக்சிகோ எல்லை வழியாக வலுக்கட்டாயமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற வெனிசுலாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். மெக்சிகோ எல்லை நகரமான Ciudad Juarez வழியாக முள்வேலிகள் மற்றும் தடுப்புகளை உடைத்துக்கொண்டு செல்ல முயன்ற அவர்களை அமெரிக்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். தஞ்சம் கோரி வந்த புலம்பெயர்ந்த பெண்கள் தங்களை அனுமதிக்கக்கோரி அதிகாரிகளிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர். சில புலம்பெயர்ந்தவர்கள் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் மீது வீச முயன்றதால் பெப்பர் ஸ்பிரேயை பயன்படுத்தி அவர்களை … Read more

அமெரிக்கா-தென்கொரியா கூட்டு பயிற்சி இன்று தொடங்கும் நிலையில் ஏவுகணைகளை ஏவி பரிசோதித்த வடகொரியா..!

அமெரிக்கா-தென்கொரியா இடையே கூட்டு ராணுவப் பயிற்சி இன்று தொடங்கும் நிலையில், வடகொரியா ஏவுகணைகளை ஏவி பரிசோதித்தது. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக, வடகொரியா அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. கொரியாவின் கிழக்கு கடற்கரையில் ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் 1500 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்த இலக்கை தாக்கி அழித்ததாக கூறப்படுகிறது. அமெரிக்கா-தென் கொரியா படையினர் இன்று முதல் 11 நாட்களுக்கு கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்கின்றனர். சுதந்திரக் கேடயம் 23 என அழைக்கப்படும் இப்பயிற்சி 2017-ம் … Read more

பெருவில் யாகூ சூறாவளியைத் தொடர்ந்து பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு

தென் அமெரிக்க நாடான பெருவில் யாகூ சூறாவளியைத்தொடர்ந்து பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். ஏராளானமான விவசாய நிலங்கள் நீரில் முழ்கி நாசமாகியுள்ளன. கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில்,அதிபர் டீனா பொலுவார்டே நேரில்சென்று பார்வையிட்டார். அப்பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  Source link