கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் குப்பை தொட்டியின் கீழ் காணப்பட்ட வெள்ளை நிற புலிக்குட்டி.. அதை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட கால்நடை மருத்துவர்கள்

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் குப்பை தொட்டியின் கீழ் கண்டெடுக்கப்பட்ட வெள்ளை நிற புலிக்குட்டியை காப்பாற்றும் முயற்சியில் கால்நடை மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். பிறந்து 3 மாதமான புலிக்குட்டி கடந்த மாதம் 28-ம் தேதி அட்டிகா உயிரியல் பூங்காவின் வாகன நிறுத்துமிடத்தில் உள்ள குப்பைத் தொட்டியின் கீழ், துப்புறவு தொழிலாளியால் கண்டெடுக்கப்பட்டது. உடல் மெலிந்தும், நீர்ச்சத்து குறைவாகவும் இருந்த புலிக்குட்டி ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. எக்ஸ் ரே பரிசோதனையில் பின் கால் ஒன்றில் உலோக முள் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. … Read more

ஈரான் சிறையில் சிறுமிகளுக்கு பலாத்காரம், மின் அதிர்ச்சி, கடுமையான சித்ரவதைகள்… அதிர்ச்சி தகவல்

தெஹ்ரான், ஈரான் நாட்டின் தெஹ்ரான் நகரில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந்தேதி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண்ணை ஈரான் அறநெறி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாஷா அமினியை போலீசார் தாக்கியதில் அவர் கோமா நிலைக்கு சென்றார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா செப்டம்பர் 16-ந்தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் மாத கணக்கில் … Read more

நான் திரும்பி வந்து விட்டேன்… முகநூலில் பதிவிட்ட டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்  2017 முதல் 2021 ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக இருந்த நிலையில், 2021ம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததார். தேர்தல் வெற்றி பெற்ற ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். தேர்தல் தோல்விக்குப் பிறகு, டொனால்ட் டிரம்ப் தேர்தல் முடிவுகள் குறித்த கேள்விகளை எழுப்பினார். இதைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து நாடாளுமன்றத்திலும் தெருக்களிலும் வன்முறையில் ஈடுபட்டனர்.   அமெரிக்காவில் நடந்த வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து வன்முறையை … Read more

நியூசிலாந்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.0 ஆக பதிவு

வெலிங்டன், நியூசிலாந்து நாடு பல தீவு கூட்டங்களை உள்ளடக்கி இருக்கிறது. அடிக்கடி சூறாவளி, நிலநடுக்கம் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள கூடியது. உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் நியூசிலாந்து அமைந்துள்ளது. இதனால், நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், நியூசிலாந்தின் கெர்மடெக் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை 3.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.0 ஆக … Read more

கைது செய்யப்படுவாரா ரஷ்ய அதிபர் புடின்.? – சர்வதேச நீதிமன்றம் அதிரடி.!

உக்ரைன் குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக தொடரப்பட்ட போர்க்குற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) வெள்ளிக்கிழமை கைது வாரண்ட் பிறப்பித்தது. இதேபோன்ற குற்றச்சாட்டின் பேரில் ரஷ்யாவின் குழந்தைகள் உரிமைகளுக்கான ஜனாதிபதி ஆணையர் மரியா லவோவா-பெலோவாவுக்கு எதிராகவும் பிடியாணை பிறப்பித்துள்ளதாக ஹேக் அடிப்படையிலான ஐசிசி தெரிவித்துள்ளது. சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கின் அடுத்த வாரம் ரஷ்யா செல்ல உள்ளநிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்டை பிறப்பித்துள்ளது குறிப்பிடதக்கது. உக்ரைனின் … Read more

அமெரிக்காவின் 30 நகரங்களை ஏமாற்றிய நித்யானந்தா? வெளியான பரபரப்பு தகவல்

வாஷிங்டன், சர்ச்சை சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற பெயரில் நாட்டை உருவாக்கி இருப்பதாக சொல்லி வருகிறார். கைலாசா நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்ததாக அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் புகைப்படம் வெளியிட்டு அவ்வபோது நித்யானந்தா பரபரப்பை கிளப்பி வருகிறார். இந்த நிலையில் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்காவின் 30 நகரங்களை நித்யானந்தா ஏமாற்றியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா முழுக்க இருக்கும் 30 நகரங்களுடன் கைசாலா கலாச்சார … Read more

‘மகாபிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா..!’ – அமெரிக்காவை அலற விட்ட நித்தியானந்தா.!

அமெரிக்காவின் 30 நகரங்களுடன் போலியான ஒப்பந்தத்தை நித்தியானந்தா மேற்கொண்டது தற்போது அம்பலமாகியுள்ளது. தன்னை கடவுள் என்று அறிவித்துக் கொண்ட சர்ச்சை நாயகன் நித்தியானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்குகள், பணமோசடி உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய நித்தியானந்தா, கைலாசா என்ற பெயரில் நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்தார். இந்தநிலையில் நித்யானந்தாவின் சொந்த நாடான கைலாசா 30 அமெரிக்க நகரங்களை ஏமாற்றியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு ஊடக அறிக்கையின்படி, … Read more

தெற்கு சூடானில் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 11 சிறுவர்கள் பலி..!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில், உள்நாட்டு போரின் போது வீசப்பட்டு வெடிக்காத குண்டுகள், வெடித்து சிதறியதில் 11 சிறுவர்கள் உயிரிழந்தனர். தலைநகர் ஜூபாவின் வடமேற்கில் உள்ள தொலைதூர கிராமத்தில் கடந்த வியாழக்கிழமையன்று இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடானில் இருந்து தெற்கு சூடான் சுதந்திரம் அடைந்த பின், கடந்த 2013ம் ஆண்டு அந்நாட்டில் உள்நாட்டு போர் மூண்டது. 5 ஆண்டுகள் நீட்டித்த போரால் 4 லட்சம் மக்கள் பலியாகினர். போரின் போது வீசப்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் … Read more

மியான்மரில் 22 பேர் சுட்டுக் கொலை – இது இனப் படுகொலையா என சந்தேகம்

நேபியேட்டோ: மியான்மரில் மடாலாயத்தின் அருகே 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மியான்மர் ராணுவ செய்தித் தொடர்பாளர் சா மின் துன் கூறும்போது, “நான்நியண்ட் கிராமத்து மக்களுக்கு மியான்மர் ராணுவம் பாதுகாப்பு அளிக்கும்போது, கரேனி நேஷனலிட்டிஸ் டிஃபென்ஸ் ஃபோர்ஸ் மற்றும் கிளர்ச்சிக் குழுக்கள் அங்கு நுழைந்தனர். பின்னர் கிளர்ச்சியாளர்கள் மடாலயத்தின் அருகே இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதில் சம்பவ இடத்திலே 22 பேர் பலியாகினர். பலியானவர்களில் 3 பேர் … Read more

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுடன் சென்ற கான்வாய் வாகனம் விபத்து..!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுடன் சென்ற கான்வாய் வாகனம் விபத்துக்குள்ளானது. தோஷகானா வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக லாகூரில் இருந்து புறப்பட்டு இஸ்லாமாபாத்திற்கு பி.டி.ஐ கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இம்ரான்கான் இன்று சென்றுகொண்டிருந்தார். கல்லாறு கஹார் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கான்வாயில் வந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்தனர். அதிவேகமாக வந்த கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மற்ற வாகனங்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது.  Source link