பிரபல ஐ.டி.தனியார் நிறுவனத்தில் ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்?

வாஷிங்டன், ஐடி சேவை துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் மத்தியில் அக்சென்சர் முதல் நிறுவனமாக தனது வருவாய் கணிப்பை வெளியிட்டது மட்டும் அல்லாமல் செலவுகளை குறைக்க 19000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொருளாதார மந்தநிலை அதாவது ரெசிஷன் அச்சம் மற்றும் டெக் சேவைகள் மீதான செலவின குறைப்புகள் குறித்த எச்சரிக்கை கணிப்புகள் மூலம் அக்சென்சர் நிறுவனம் வியாழன் அன்று அதன் வருடாந்திர வருவாய் வளர்ச்சி மற்றும் இலாப கணிப்புகளை குறைத்துள்ளது. அமெரிக்காவில் … Read more

தாலிபான் அமைச்சரவை கூட்டத்தில் சண்டை! அமைச்சரின் கையை உடைத்த தேர்வு வாரிய தலைவர்!

ஆப்கானிஸ்தானில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தேர்வுத் தாள்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உள்ளூர் பத்திரிகையாளர் பிலால் சர்வாரி, தலிபான் அமைச்சரவைக் கூட்டங்களில் கைகலப்புகள் அன்றாட நிகழ்வாகிவிட்டதாக ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். பிலால் சர்வாரி தனது ட்வீட்டில், “தாலிபானின் MoHE ஷேக் நெய்டா மற்றும்  தேர்வு வாரியத் தலைவர் ஷேக் பாக்கி ஹக்கானி ஆகியோர் வாரியத் தேர்வுத் தாள்களுக்கு மதிப்பெண் அளிப்பது தொடர்பாக சர்ச்சையில் ஈடுபட்டனர். ஷேக் பாக்கி ஹக்கானியிடம் … Read more

அமெரிக்கர்களை உளவு பார்க்கவில்லை: நாடாளுமன்றக் குழு முன்பு டிக்டாக் சிஇஓ விளக்கம்

வாஷிங்டன்: அமெரிக்கர்களை உளவு பார்த்து சீன அரசுக்கு தகவல் வழங்கி வருவதாக எழுந்த குற்றச்சாட்டை டிக் டாக் சிஇஓ சவ் சி சூவ் மறுத்துள்ளார். அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக டிக் டாக் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க மக்களை உளவு பார்த்து அமெரிக்க நாட்டை பற்றிய ரகசிய தகவல்களை சீனா அரசுக்கு டிக் டாக் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் அரசு துறையில் பணி செய்பவர்கள டிக் டாக் செயலியை … Read more

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: ரேடியோ ஆக்டிவ் சுனாமியை ஏற்படுத்தும் பரிசோதனையை செய்த வட கொரியா

பியாங்யோங்: கடலுக்கு அடியில் ரேடியோ ஆக்டிவ் சுனாமியை ஏற்படுத்தும் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக வட கொரியா தெரிவித்துள்ளது. வட கொரியாவின் தென் பகுதியில் உள்ள ஹம்க்யோங் மாகாணத்தில் கடலுக்கு அடியில் ரகசிய ஆயுதத்தை செலுத்தினோம். இது 80 முதல் 150 மீட்டர் ஆழத்தில் 59 மணி நேரத்திற்கும் மேலாக பயணித்து அதன் கிழக்கு கடற்கரையில் வெடித்தது . இதன்மூலம் ரேடியோ ஆக்டிவ் சுனாமியை ஏற்படுத்தினோம் . இந்தச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு வட கொரிய அதிபர் கிம் … Read more

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்த புதிய கிரகம்..!

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள ஒரு தொலைதூரக் கோளின் வளிமண்டலத்தில் சிலிக்கேட் மேக அம்சங்களைக் கண்டறிந்துள்ளது. VHS 1256 b என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம் பூமியிலிருந்து 40 ஒளியாண்டுகள் தொலைவிலும், அதனை சுற்றிவரும் நட்சத்திரத்திற்கும் இடையே உள்ள தொலைவானது, சூரியனில் இருந்து புளூட்டோ கிரகம் உள்ள தொலைவை விட 4 மடங்காகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கிரகத்தில் மீத்தேன், கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றுடன், தண்ணீரும் … Read more

இலங்கையில் உணவு நெருக்கடி… இந்தியாவிடம் இருந்து 2 மில்லியன் முட்டைகள் இறக்குமதி!

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறை நிலைவும் நிலையில், உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்தியாவில் இருந்து இரண்டு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்துள்ளது. வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனை வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். அரசின் வர்த்தக பொதுக் கூட்டு அமைப்பு முட்டைகளை இறக்குமதி செய்துள்ளதாகவும், முட்டைகள் இலங்கை வந்துள்ளதாகவும் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மூன்று நாட்களுக்குள் முட்டைகள் சந்தைக்கு அனுப்பப்படும். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அமைச்சரவைக் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் முட்டைகளை … Read more

அதானி குழுமத்தை அடுத்து, ஜாக் டோர்சியின் நிறுவனம் மீது ஹின்டன்பர்க் புகார்..!

அதானி குழுமத்தை தொடர்ந்து ட்விட்டரின் இணை நிறுவனரும், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சியின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹின்டன்பர்க் புகார் தெரிவித்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஜாக் டோர்சி, பிளாக் என்னும் டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். பணம் செலுத்துவதற்கு பிளாக் தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை மிகைப்படுத்தி காட்டியதாகயும், போலி கணக்குகள் தொடங்க வாடிக்கையாளர்களை பிளாக் நிறுவனம் அனுமதித்ததாகவும் ஜாக் மீது அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹின்டன்பர்க் நிறுவனம் குற்றஞ்சாட்டி … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்கு இலங்கை நன்றி..!

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 3 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து இருப்பதற்கு அந்தநாட்டு அரசு நன்றி தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் உதவி வழங்கி இருப்பதை நாடாளுமன்றத்தில் தெரிவித்த அதிபர் ரனில் விக்ரமசிங்கே, இந்த உதவி இலங்கையின் நிர்வாக மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் என்றார். சர்வதேச நாணய நிதியத்தின் இந்த நடவடிக்கை இலங்கையின் வரலாற்றில் மைல்கல் என்றும் பாராட்டப்பட்டது. இதனிடையே இலங்கையின் பெரிய பொருளாதார சிக்கல் மற்றும் … Read more

நீருக்கு அடியில் அணுசக்தி தாக்குதல் நடத்தும் ட்ரோனை பரிசோதனை செய்த வட கொரியா.?

நீருக்கு அடியில் அணுசக்தி தாக்குதல் நடத்தும் ட்ரோனை பரிசோதனை செய்து இருப்பதாக வட கொரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. நீருக்குள் கதிரியக்கத்தை ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த ட்ரோன், வரம்பற்ற அணுசக்திப் போரில் எச்சரிக்கையுடன் செயல்படும் என அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா- தென் கொரியப் படைகள் கடல் எல்லையில் கூட்டாகப் பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில் வட கொரியா நீருக்குள் சென்று அணுசக்தி தாக்குதல் நடத்தும் ட்ரோனை பரிசோதனை செய்து இருப்பது முக்கியத்துவம் … Read more

ஏர்போர்ஸ் ஒன் பாதுகாப்பு சான்றுகள் குறித்து பென்டகன் ஆய்வு..!

ஏர் ஃபோர்ஸ்-1  போயிங் பாதுகாப்புச் சான்றுகளில் தவறியதை பற்றி அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் ஆய்வு செய்து வருகிறது.  ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானங்களில் பணிபுரியும் சுமார் 250 ஊழியர்களுக்கு வழங்கப்படும் “யாங்கி ஒயிட்” எனப்படும் அமெரிக்க குடியுரிமை மற்றும் நம்பகத்தன்மை தொடர்பான சான்றுகள் காலாவதியானதை மார்ச் 14 அன்று போயிங் நிறுவனம் கண்டுபிடித்தது. “இந்த நிர்வாக சிக்கலை போயிங் கண்டறிந்ததும், நாங்கள் விமானப்படைக்கு விரைவாக அறிவித்ததாக போயிங் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.  Source link