பாதுகாப்பு காரணங்களுக்காக ‘டிக்டாக்’ செயலிக்கு இங்கிலாந்தில் தடை..!

இங்கிலாந்து அரசு அலுவலக செல்போன்களில் டிக் டாக் செயலிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா, கனடா மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட சில ஐரோப்பியநாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்த நிலையில், இங்கிலாந்து அரசின் முக்கிய தகவல்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கே முன்னுரிமை என்றும் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கணினி, தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் சீன வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாகவும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. தங்கள் சொந்த தொலைபேசிகளில் … Read more

தென் சீனக் கடலில் அமெரிக்க போர்க்கப்பல் சட்டவிரோதமாக நுழைந்ததாக சீனா கூறிய குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அமெரிக்கா

தென் சீனக் கடலில் அமெரிக்க போர்க்கப்பல் சட்டவிரோதமாக நுழைந்ததாக சீனா கூறிய குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அர்லீக் பர்க் வகை தாக்குதல் கப்பலான யு.எஸ்.எஸ் மிலியஸ் கடந்த சில தினங்களுக்கு முன், தென் சீன கடலில் ரோந்து வந்தது. அதனை சீன கடற்படை சட் டத்தின்படி விரட்டி அடித்ததாகவும், இதனால் தென் சீன கடல் பிராந்தியத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மையை குலைப்பதாகவும் சீனா குற்றம் சாட்டியிருந்தது. இந்த நிலையில், யுஎஸ்எஸ் மிலியஸ் … Read more

8 அடி 3 அங்குல நீளத்துக்கு தாடி வளர்த்து சொந்த கின்னஸ் சாதனையை மீண்டும் முறியடித்தார் கனடா சீக்கியர்

ஒட்டவா: ஸ்வீடனை சேர்ந்த பிர்ஜெர் பெலாஸ் என்பவர் 5 அடி 9 அங்குலம் நீளத்துக்கு தாடி வளர்த்ததுதான் கின்னஸ் உலக சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை கடந்த 2008-ம் ஆண்டு கனடாவில் வசிக்கும் சீக்கியர் சர்வன் சிங் முறியடித்தார். அப்போது அவரது தாடியின் நீளம் 7 அடி 8 அங்குலமாக இருந்தது. அதன்பின் கடந்த 2010-ம் ஆண்டில் இவரது தாடியை இத்தாலியில் நடந்த நிகழ்ச்சியில் அளந்தபோது அது 8 அடி 2.5 அங்குலமாக வளர்ந்திருந்தது. கடந்தாண்டு … Read more

இத்தாலியில் ஆழ்கடலில் சிக்கித் தவித்த 700 அகதிகள் பத்திரமாக மீட்பு..!

தெற்கு இத்தாலி கடற்பகுதியில் படகு பழுதாகி ஆழ்கடலில் சிக்கித் தவித்த 700-க்கும் மேற்பட்ட அகதிகளை இத்தாலி கடலோரக் காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் சட்டவிரோதமாக கடல்வழி பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சென்ற படகு துனிசிய கடற்கரை பகுதியருகே மூழ்கியதில், 5 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 33 பேர் மாயமாகினர். இதையடுத்து கலாப்ரியா கடற்பகுதியில் படகு ஒன்றில் இருந்த 295 அகதிகளும், சிசிலியன் தீவான … Read more

இஸ்ரேலில் சர்ச்சைக்குரிய சட்டம் நிறைவேற்றம்| Passage of Controversial Law in Israel

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டெல் அவிவ்-இஸ்ரேலில் நீதித் துறையில் மறுசீரமைப்பை உருவாக்கும் சர்ச்சைக்குரிய சட்டங்களில் முதல் சட்டம், அந்நாட்டு பார்லிமென்டில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மேற்காசிய நாடான இஸ்ரேலில் நீதித் துறையின் அதிகாரத்தை கட்டுப்படுத்தவும், நீதித்துறை அதிகாரத்திற்கும், அரசாங்கத்தின் அதிகாரத்திற்கும் இடையே சம நிலையை மீட்டெடுக்கவும், நீதித் துறையில் மாற்றம் கொண்டுவர இருப்பதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். ‘இது, ஜனநாயகத்துக்கு எதிரான செயல்’ என குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும், இஸ்ரேல் மக்களும் போராட்டத்தில் … Read more

3 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு வீட்டிற்குள் பதுங்கிய இளைஞரை சுட்டு கொன்ற ‘கமாண்டோ’ படையினர்

தாய்லாந்தில், 3 பேரை சுட்டு கொன்றுவிட்டு வீட்டில் பதுங்கிய நபரை 14 மணி நேர போராட்டத்திற்கு பின் கமாண்டோ படையினர் சுட்டு கொன்றனர். போதை பொருள் கடத்தல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜாராகுமாறு அனுவாட் என்ற 29 வயது இளைஞனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், தன்னோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பக்கத்து வீட்டு நபர்கள் 2 பேரையும், ஒரு டெலிவரி பாயையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு, வீட்டின் 2ஆம் தளத்தில் அவன் பதுங்கிகொண்டான். போலீசார் அவனது தாயாரை வரவழைத்து, மெகாபோன் … Read more

சிறிய ரக விமானம் மூலம் ரூ.125 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் – 5 பேர் கைது..!

ஆஸ்திரேலியாவில், ரேடாரில் சிக்காத வண்னம், விமானத்தை தாழ்வாக இயக்கி போதைப்பொருள் கடத்த முயன்ற கும்பலை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அருகிலுள்ள தீவு நாடான பப்புவா நியூ கினி-க்கு ( Papua New Guinea ), சிறிய ரக  விமானம் மூலம் மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது. ரேடாரில் சிக்காமலிருக்க, விமானத்தை மலைகளுக்கு இடையே மிகவும் தாழ்வாக கடத்தல் கும்பல் இயக்கியுள்ளது. இருந்தபோதும், எரிபொருள் நிரப்புவதற்காக, குயின்ஸ்லாந்தில் உள்ள தனியார் விமான தளத்தில் தரையிறக்கப்பட்டபோது, போலீசார் விமானத்தை சுற்று … Read more

”புதினை கைது செய்தால் ஜெர்மனி மீது போர் தொடுப்போம்..” – ரஷ்ய முன்னாள் அதிபர் எச்சரிக்கை..!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உத்தரவின் அடிப்படையில் ரஷ்ய அதிபர் புதினை கைது செய்ய முயற்சிப்பது ரஷ்யா மீதான போர் அறிவிப்பாகவே கருதப்படும் என்று முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் எச்சரித்துள்ளார். போரின் போது, உக்ரேனிய குழந்தைகளை நாடு கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு புதினை கைது செய்ய ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், மெத்வதேவ் கருத்து தெரிவித்துள்ளார். அணு ஆயுத பலம் கொண்ட ரஷ்யாவின் அதிபர் ஜெர்மனியின் எல்லைக்குள் வைத்து கைது செய்யப்படுகிறார் என்றால் … Read more

பிரிட்டனின் பணவீக்கம் அதிகரிப்பு பொருளாதார நிபுணர்கள் அதிர்ச்சி| Britains rising inflation shocks economists

புதுடில்லி:பிரிட்டனின் பணவீக்கம், கடந்த பிப்ரவரி மாதத்தில் 10.4 சதவீதம் அளவுக்கு உயர்வைக் கண்டுள்ளது. கடந்த 4 மாதங்களில், முதன் முறையாக இந்த அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்த உயர்வு, பொருளாதார நிபுணர்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. பணவீக்கம் இந்த அளவுக்கு அதிகரிக்கும் என பலர் எதிர்பார்க்கவில்லை. மேலும், இந்த பணவீக்க உயர்வு, பிரிட்டனின் மத்திய வங்கியான ‘பேங்க் ஆப் இங்கிலாந்து’ வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கும் தள்ளியுள்ளது. கடந்த ஜனவரியில், பிரிட்டனின் சில்லரை விலை பணவீக்கம் 10.1 … Read more