ஆப்கனில் நிலநடுக்கம்: புதுடில்லி உட்பட வட மாநிலங்கள் குலுங்கின| Earthquake in Afghanistan: Northern states including New Delhi were shaken

காபூல், ஆப்கானிஸ்தானில் உள்ள ஹிந்து குஷ் மலைத்தொடரை மையமாக வைத்து நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ளது. ஆப்கனை தொடர்ந்து பாகிஸ்தான், தஜிகிஸ்தான் நாடுகளிலும், நம் வட மாநிலங்களான புதுடில்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் உள்ள ஹிந்து குஷ் மலைத் தொடரில் இருந்து தென் கிழக்கே … Read more

டெல்லியில் நிலநடுக்கம்! நிலநடுக்கத்தின் மையம் லாகூர்! பாதிப்பு விவரங்கள் என்ன?

நியூடெல்லி: இன்று (2023 மார்ச் 21 செவ்வாய்க்கிழமை) இரவு சுமார் 10.20 மணியளவில் புது தில்லியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ஒரு நிமிடத்திற்கு மேல் நீடித்தது. இந்த நிலநடுக்கத்தின் மையம் பாகிஸ்தானின் லாகூரில் பதிவாகியுள்ளது. Earthquake tremors felt in Delhi. Details awaited. pic.twitter.com/Hs0A6BUEiU — ANI (@ANI) March 21, 2023 நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதாரம் தொடர்பான வேறு எந்த தகவல்களும் இதுவரை வரவில்லை. 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் … Read more

பிலிப்பைன்ஸ் வந்தது அமெரிக்க போர் கப்பல்..!

அமெரிக்க போர் கப்பல் ஒன்று, நட்பு ரீதியான பயணமாக பிலிப்பைன்ஸ் வந்துள்ளது. எண்ணெய் வளம் மிக்க தென் சீன கடலில் உள்ள சில தீவுகளுக்கு உரிமை கோருவதில் சீனாவிற்கும், பிலிப்பைன்ஸுக்கும் இடையே முரண் ஏற்பட்டது. சீனாவிற்கு நெருக்கடி ஏற்படுத்தி, அமெரிக்காவுடன் நட்பு பாராட்டும் விதமாக, பிலிப்பைன்ஸ் ராணுவத் தளவாடங்களை பார்வையிட அதிபர் மார்கோஸ் அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, 4 நாள் பயணமாக அமெரிக்க போர் கப்பல், மணிலா துறைமுகம் வந்துள்ளது. Source link

ஆபாச நடிகைகள் வெளியிட்ட பரபரப்பு ரகசியங்கள்….! டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்படுவாரா…?

வாஷிங்டன் அமெரிக்க ஜனாதிபதிகள் மீது பாலியல் புகார்கள் எழுவது வாடிக்கை. இந்த லிஸ்ட்டில் டொனால்ட் டிரம்ப்பும் ஒருவர். 3-க்கும் மேற்பட்ட நடிகைகள் இவர்மீது பாலியல் புகார்களை பொதுவெளியிலேயே அம்பலப்படுத்தி உள்ளனர். டிரம்ப் ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் மீது ஏற்கனவே பல பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவித்துள்ளனர். 10 அதிகமான பெண்கள், டொனால்டு டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர். கடந்த 2017ம் வருடக்கணக்குபடி, டிரம்ப் மீது மொத்தம் 19 பெண்கள் … Read more

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் தேசியக் கொடியை இறக்கி விட்டு காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதற்கு எதிர்ப்பு..!

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் தேசியக் கொடியை இறக்கி விட்டு காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏராளமான இந்தியர்கள் தேசியக்கொடியுடன் தூரதகம் முன்பு திரண்டனர். பிரிவினை பேசி வரும் பஞ்சாபைச் சேர்ந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீரென லண்டனிலுள்ள தூதரகம் முன்பு குவிந்து கற்களை வீசித் தாக்கியதோடு, இந்திய தேசியக் கொடியையும் கீழே இறக்கினர். இந்நிலையில், இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்தும், காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராகவும் ஏராளமான இந்தியர்கள் கையில் மூவர்ணக் கொடியுடன் திரண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். … Read more

92 வயதில் 5-வது திருமணத்திற்கு தயாராகும் தொழிலதிபர்

சிட்னி உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக். இவர் தனது 92 வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார். 66 வயதான ஆன் லெஸ்லி ஸ்மித் அவரது புதிய வருங்கால மனைவி. ஏற்கெனவே திருமணமாகி கணவரை இழந்தவர். மறைந்த இவரது கணவர் செஸ்டர் ஸ்மித், நாட்டுப்புற பாடகராகவும் மற்றும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகியாகவும் இருந்தவர். முர்டோக், லெஸ்ஸி இருவரும் வருகிற கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்துள்ளனர். நாங்கள் இருவரும் … Read more

இலங்கைக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து, தட்டுப்பாடும் நிலவியது. அன்றைய செலாவணி இருப்பு குறைந்ததால் அரசு திணறியது. மக்கள் போராட்டத்தால் ஆட்சி அதிகாரத்தில் இருந்து ராஜபக்சே குடும்பத்தினர் ராஜினாமா செய்த பிறகு புதிய அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரம சிங்கே பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிகள் செய்தன. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கடனுதவி கேட்டது. … Read more

உலகின் மிக முக்கியம் வாய்ந்த வெளிநாட்டு கட்சி பா.ஜ.க.: வால் ஸ்டிரீட் ஜர்னல் தகவல்

நியூயார்க், உலக அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு கட்சி பா.ஜ.க. என்று வால் ஸ்டிரீட் ஜர்னல் என்ற அமெரிக்க பத்திரிகையில் வால்டர் ரஸ்செல் மீட் என்பவர் எழுதிய கட்டுரை தெரிவிக்கின்றது. இதன்படி, இந்தியாவில் ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜ.க., அமெரிக்காவின் தேசிய நலன்களின்படி பார்க்கும்போது, உலக அளவில் மிக முக்கியம் வாய்ந்த கட்சியாக உள்ளது. எனினும், அக்கட்சி குறைவாகவே புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் தொடர் வெற்றி … Read more

இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வைத்து தன்னை கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக இம்ரான் கான் குற்றச்சாட்டு..!

இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் வைத்து தன்னை கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில், கடந்த சனிக்கிழமை இம்ரான் கான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்ற வளாகத்தில் சாதாரண உடையிலிருந்த உளவுத்துறை அதிகாரிகளை, மர்ம நபர்கள் என குறிப்பிட்ட இம்ரான் கான், அவர்கள் கயிற்றால் தனது கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, கலவரத்தில் தான் உயிரிழந்துவிட்டது போல் நாடகமாடத் திட்டமிட்டுருந்ததாக கூறியுள்ளார். நீதிமன்றத்தில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால், வரும் நாட்களில் காணொலி … Read more

ரஷிய போர்: உக்ரைனுக்கு ரூ.2,891.98 கோடி மதிப்பிலான ஆயுதம், போர் கருவிகளை அனுப்புகிறது அமெரிக்கா

வாஷிங்டன், உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது தொடர்ந்து தீவிரமடைந்து உள்ளது. உக்ரைனில் பாக்முக் பகுதியை கைப்பற்றும் நோக்குடன் ரஷியா போரிட்டு வருகிறது. உக்ரைனும் பதிலடியாக தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக தொடர்ந்து, ஆயுதம் உள்ளிட்டவற்றை வழங்க அமெரிக்கா முன்வந்து உள்ளது. இதுபற்றி அமெரிக்க வெளியுறவு மந்திரி பிளிங்கன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், அதிபர் பைடன் வழங்கிய அங்கீகாரத்தின் தொடர்ச்சியாக உக்ரைனுக்கு ரூ.2,891.98 கோடி மதிப்பிலான ஆயுதம் மற்றும் போர் கருவிகளை அமெரிக்கா அனுப்ப உள்ளது. … Read more