இலங்கைக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து, தட்டுப்பாடும் நிலவியது. அன்றைய செலாவணி இருப்பு குறைந்ததால் அரசு திணறியது. மக்கள் போராட்டத்தால் ஆட்சி அதிகாரத்தில் இருந்து ராஜபக்சே குடும்பத்தினர் ராஜினாமா செய்த பிறகு புதிய அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரம சிங்கே பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிகள் செய்தன. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கடனுதவி கேட்டது. … Read more

உலகின் மிக முக்கியம் வாய்ந்த வெளிநாட்டு கட்சி பா.ஜ.க.: வால் ஸ்டிரீட் ஜர்னல் தகவல்

நியூயார்க், உலக அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு கட்சி பா.ஜ.க. என்று வால் ஸ்டிரீட் ஜர்னல் என்ற அமெரிக்க பத்திரிகையில் வால்டர் ரஸ்செல் மீட் என்பவர் எழுதிய கட்டுரை தெரிவிக்கின்றது. இதன்படி, இந்தியாவில் ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜ.க., அமெரிக்காவின் தேசிய நலன்களின்படி பார்க்கும்போது, உலக அளவில் மிக முக்கியம் வாய்ந்த கட்சியாக உள்ளது. எனினும், அக்கட்சி குறைவாகவே புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் தொடர் வெற்றி … Read more

இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வைத்து தன்னை கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக இம்ரான் கான் குற்றச்சாட்டு..!

இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் வைத்து தன்னை கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில், கடந்த சனிக்கிழமை இம்ரான் கான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்ற வளாகத்தில் சாதாரண உடையிலிருந்த உளவுத்துறை அதிகாரிகளை, மர்ம நபர்கள் என குறிப்பிட்ட இம்ரான் கான், அவர்கள் கயிற்றால் தனது கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, கலவரத்தில் தான் உயிரிழந்துவிட்டது போல் நாடகமாடத் திட்டமிட்டுருந்ததாக கூறியுள்ளார். நீதிமன்றத்தில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால், வரும் நாட்களில் காணொலி … Read more

ரஷிய போர்: உக்ரைனுக்கு ரூ.2,891.98 கோடி மதிப்பிலான ஆயுதம், போர் கருவிகளை அனுப்புகிறது அமெரிக்கா

வாஷிங்டன், உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது தொடர்ந்து தீவிரமடைந்து உள்ளது. உக்ரைனில் பாக்முக் பகுதியை கைப்பற்றும் நோக்குடன் ரஷியா போரிட்டு வருகிறது. உக்ரைனும் பதிலடியாக தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக தொடர்ந்து, ஆயுதம் உள்ளிட்டவற்றை வழங்க அமெரிக்கா முன்வந்து உள்ளது. இதுபற்றி அமெரிக்க வெளியுறவு மந்திரி பிளிங்கன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், அதிபர் பைடன் வழங்கிய அங்கீகாரத்தின் தொடர்ச்சியாக உக்ரைனுக்கு ரூ.2,891.98 கோடி மதிப்பிலான ஆயுதம் மற்றும் போர் கருவிகளை அமெரிக்கா அனுப்ப உள்ளது. … Read more

ரஷ்யாவை எதிர்கொள்ள ரூ.2,893 கோடிக்கு ஆயுதம்: உக்ரைனுக்கு உதவும் அமெரிக்கா| US to send Ukraine USD 350 million in weapons, equipment as battles with Russian forces continues

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ரஷ்யா உடனான போரை எதிர்கொள்ள ரூ.2,893 கோடி மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. உக்ரைனுடன் கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் புரிந்து வரும் ரஷ்யாவிற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், ரஷ்யாவை எதிர்கொள்ள உக்ரைனுக்கு சில நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்த வகையில் தற்போது ரூ.2,893 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது … Read more

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் கைது செய்யப்படலாம்! அரசியல் பரபரப்பு உச்சகட்டம்

பிரபல ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்ட் டிரம்ப் இன்று கைது செய்யப்படலாம். ஆபாச நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டால், அது அமெரிக்க அதிபருக்கு எதிரான முதல் கிரிமினல் வழக்காக இருக்கும். பிரபல ஆபாச நடிகை ஒருவருடன் முறையற்ற உறவு கொண்ட குற்றச்சாட்டு விசாரணை தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. அண்மையில் டிரம்ப் மீது பல நடிகைகள் பாலியல் புகார்களை தெரிவித்த நிலையில், தற்போது விவகாரம் … Read more

உலகின் மகிழ்ச்சியான நாடு பட்டியலில் பின்லாந்து முதலிடம்; 126-வது இடத்தில் இந்தியா!

நியூயார்க்: ‘உலகின் மகிழ்ச்சியான நாடு’ தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதலிடம் வகிப்பதாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் எந்த அளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்; அதற்கான சூழல் எந்த அளவு இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு மகிழ்ச்சியான நாடுகளை தரவரிசைப்படுத்தி அதனை அறிக்கையாக வெளியிடுவதை ஐ.நா. வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் தற்போது வெளியான அதன் அறிக்கையில், மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையும், அதற்கான காரணங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஐரோப்பிய நாடான பின்லாந்து தரவரிசையில் முதலிடம் … Read more

மேலும் 9 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய அமேசான் முடிவு

அமேசான் நிறுவனம் மேலும் 9 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பேஸ்புக், மெட்டாவை தொடர்ந்து அமேசான் இரண்டாவது சுற்று பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.நிறுவனத்தின் மந்த நிலையை எதிர்கொள்ளும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அமேசான் அறிவித்துள்ளது.  கடந்த சில ஆண்டுகளில் கணிசமான அளவு பணியாளர்களை சேர்த்து இருந்தாலும் நிச்சயமற்ற பொருளாதாரம் மற்றும் செலவு தற்போதைய பணியாளர் நீக்கத்தை கட்டாயப்படுத்தி இருப்பதாக அதன் சிஇஓ Andy Jassy தெரிவித்துள்ளார் … Read more

அங்கோலாவிலிருந்து வியட்நாமிற்கு கடத்தப்பட்ட 7,000 கி. யானை தந்தங்கள் பறிமுதல்

மத்திய ஆப்ரிக்க நாடான அங்கோலாவில் இருந்து வியட்நாமிற்கு கடத்தப்பட்ட 7,000 கிலோ யானை தந்தங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஹைபோங் நகரின் லோம் துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வேர்க்கடலை இருப்பதாகக் கூறப்பட்ட கண்டெய்னரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது, சிங்கப்பூருக்கு கடத்திச் செல்லப்படவிருந்த 7 டன் அளவிலான யானை தந்தங்கள் சிக்கியுள்ளன. Source link

அங்கோலாவிலிருந்து வியட்நாமிற்கு கடத்தப்பட்ட 7,000 கிலோ யானை தந்தங்கள் பறிமுதல்.!

மத்திய ஆப்ரிக்க நாடான அங்கோலாவில் இருந்து வியட்நாமிற்கு கடத்தப்பட்ட 7,000 கிலோ யானை தந்தங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஹைபோங் நகரின் லோம் துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வேர்க்கடலை இருப்பதாகக் கூறப்பட்ட கண்டெய்னரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது, சிங்கப்பூருக்கு கடத்திச் செல்லப்படவிருந்த 7 டன் அளவிலான யானை தந்தங்கள் சிக்கியுள்ளன. Source link