பேரழிவை ஏற்படுத்தும் நவீன ஆயுதம்; வடகொரியாவின் செயலால் உலகநாடுகள் அச்சம்.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் கதிரியக்க சுனாமியை உருவாக்கக்கூடிய புதிய அணுசக்தி திறன் கொண்ட, நீருக்கடியில் தாக்குதல் நடத்தும் ஆளில்லா விமானத்தை வட கொரியா சோதித்துள்ளது. தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய கூட்டு இராணுவப் பயிற்சிகள் பிராந்தியத்தில் பதட்டத்தை அதிகரிப்பதாகக் வடகொரியா குற்றம் சாட்டியது. பயிற்சியின் போது, புதிய வட கொரிய ஆளில்லா விமானம் நீருக்கடியில் 80 முதல் 150 மீட்டர் (260-500 அடி) ஆழத்தில் 59 மணி நேரத்திற்கும் மேலாக … Read more

தாய்லாந்தில் வீட்டில் புகுந்து மர்ம நபர் துப்பாக்கி சூடு – 3 பேர் உயிரிழப்பு

பாங்காக், தாய்லாந்தின் பெட்சபுரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்து தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சுட ஆரம்பித்தார். அப்போது அங்கிருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். இதனால் அவர் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். … Read more

பிரபல ஐ.டி.தனியார் நிறுவனத்தில் ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்?

வாஷிங்டன், ஐடி சேவை துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் மத்தியில் அக்சென்சர் முதல் நிறுவனமாக தனது வருவாய் கணிப்பை வெளியிட்டது மட்டும் அல்லாமல் செலவுகளை குறைக்க 19000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொருளாதார மந்தநிலை அதாவது ரெசிஷன் அச்சம் மற்றும் டெக் சேவைகள் மீதான செலவின குறைப்புகள் குறித்த எச்சரிக்கை கணிப்புகள் மூலம் அக்சென்சர் நிறுவனம் வியாழன் அன்று அதன் வருடாந்திர வருவாய் வளர்ச்சி மற்றும் இலாப கணிப்புகளை குறைத்துள்ளது. அமெரிக்காவில் … Read more

தாலிபான் அமைச்சரவை கூட்டத்தில் சண்டை! அமைச்சரின் கையை உடைத்த தேர்வு வாரிய தலைவர்!

ஆப்கானிஸ்தானில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தேர்வுத் தாள்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உள்ளூர் பத்திரிகையாளர் பிலால் சர்வாரி, தலிபான் அமைச்சரவைக் கூட்டங்களில் கைகலப்புகள் அன்றாட நிகழ்வாகிவிட்டதாக ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். பிலால் சர்வாரி தனது ட்வீட்டில், “தாலிபானின் MoHE ஷேக் நெய்டா மற்றும்  தேர்வு வாரியத் தலைவர் ஷேக் பாக்கி ஹக்கானி ஆகியோர் வாரியத் தேர்வுத் தாள்களுக்கு மதிப்பெண் அளிப்பது தொடர்பாக சர்ச்சையில் ஈடுபட்டனர். ஷேக் பாக்கி ஹக்கானியிடம் … Read more

அமெரிக்கர்களை உளவு பார்க்கவில்லை: நாடாளுமன்றக் குழு முன்பு டிக்டாக் சிஇஓ விளக்கம்

வாஷிங்டன்: அமெரிக்கர்களை உளவு பார்த்து சீன அரசுக்கு தகவல் வழங்கி வருவதாக எழுந்த குற்றச்சாட்டை டிக் டாக் சிஇஓ சவ் சி சூவ் மறுத்துள்ளார். அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக டிக் டாக் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க மக்களை உளவு பார்த்து அமெரிக்க நாட்டை பற்றிய ரகசிய தகவல்களை சீனா அரசுக்கு டிக் டாக் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் அரசு துறையில் பணி செய்பவர்கள டிக் டாக் செயலியை … Read more

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: ரேடியோ ஆக்டிவ் சுனாமியை ஏற்படுத்தும் பரிசோதனையை செய்த வட கொரியா

பியாங்யோங்: கடலுக்கு அடியில் ரேடியோ ஆக்டிவ் சுனாமியை ஏற்படுத்தும் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக வட கொரியா தெரிவித்துள்ளது. வட கொரியாவின் தென் பகுதியில் உள்ள ஹம்க்யோங் மாகாணத்தில் கடலுக்கு அடியில் ரகசிய ஆயுதத்தை செலுத்தினோம். இது 80 முதல் 150 மீட்டர் ஆழத்தில் 59 மணி நேரத்திற்கும் மேலாக பயணித்து அதன் கிழக்கு கடற்கரையில் வெடித்தது . இதன்மூலம் ரேடியோ ஆக்டிவ் சுனாமியை ஏற்படுத்தினோம் . இந்தச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு வட கொரிய அதிபர் கிம் … Read more

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்த புதிய கிரகம்..!

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள ஒரு தொலைதூரக் கோளின் வளிமண்டலத்தில் சிலிக்கேட் மேக அம்சங்களைக் கண்டறிந்துள்ளது. VHS 1256 b என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம் பூமியிலிருந்து 40 ஒளியாண்டுகள் தொலைவிலும், அதனை சுற்றிவரும் நட்சத்திரத்திற்கும் இடையே உள்ள தொலைவானது, சூரியனில் இருந்து புளூட்டோ கிரகம் உள்ள தொலைவை விட 4 மடங்காகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கிரகத்தில் மீத்தேன், கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றுடன், தண்ணீரும் … Read more

இலங்கையில் உணவு நெருக்கடி… இந்தியாவிடம் இருந்து 2 மில்லியன் முட்டைகள் இறக்குமதி!

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறை நிலைவும் நிலையில், உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்தியாவில் இருந்து இரண்டு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்துள்ளது. வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனை வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். அரசின் வர்த்தக பொதுக் கூட்டு அமைப்பு முட்டைகளை இறக்குமதி செய்துள்ளதாகவும், முட்டைகள் இலங்கை வந்துள்ளதாகவும் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மூன்று நாட்களுக்குள் முட்டைகள் சந்தைக்கு அனுப்பப்படும். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அமைச்சரவைக் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் முட்டைகளை … Read more

அதானி குழுமத்தை அடுத்து, ஜாக் டோர்சியின் நிறுவனம் மீது ஹின்டன்பர்க் புகார்..!

அதானி குழுமத்தை தொடர்ந்து ட்விட்டரின் இணை நிறுவனரும், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சியின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹின்டன்பர்க் புகார் தெரிவித்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஜாக் டோர்சி, பிளாக் என்னும் டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். பணம் செலுத்துவதற்கு பிளாக் தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை மிகைப்படுத்தி காட்டியதாகயும், போலி கணக்குகள் தொடங்க வாடிக்கையாளர்களை பிளாக் நிறுவனம் அனுமதித்ததாகவும் ஜாக் மீது அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹின்டன்பர்க் நிறுவனம் குற்றஞ்சாட்டி … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்கு இலங்கை நன்றி..!

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 3 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து இருப்பதற்கு அந்தநாட்டு அரசு நன்றி தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் உதவி வழங்கி இருப்பதை நாடாளுமன்றத்தில் தெரிவித்த அதிபர் ரனில் விக்ரமசிங்கே, இந்த உதவி இலங்கையின் நிர்வாக மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் என்றார். சர்வதேச நாணய நிதியத்தின் இந்த நடவடிக்கை இலங்கையின் வரலாற்றில் மைல்கல் என்றும் பாராட்டப்பட்டது. இதனிடையே இலங்கையின் பெரிய பொருளாதார சிக்கல் மற்றும் … Read more