அங்கோலாவிலிருந்து வியட்நாமிற்கு கடத்தப்பட்ட 7,000 கிலோ யானை தந்தங்கள் பறிமுதல்.!

மத்திய ஆப்ரிக்க நாடான அங்கோலாவில் இருந்து வியட்நாமிற்கு கடத்தப்பட்ட 7,000 கிலோ யானை தந்தங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஹைபோங் நகரின் லோம் துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வேர்க்கடலை இருப்பதாகக் கூறப்பட்ட கண்டெய்னரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது, சிங்கப்பூருக்கு கடத்திச் செல்லப்படவிருந்த 7 டன் அளவிலான யானை தந்தங்கள் சிக்கியுள்ளன. Source link

சர்வதேச ஊடகத்துறையின் ஜாம்பவான் 92 வயதில் 5வது திருமணம்

சர்வதேச ஊடகத்துறையின் ஜாம்பவான் மற்றும் ஃபாக்ஸ் நியூஸின் நிறுவனருமான ரூபெர்ட் முர்டாச், தனது 92 வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், திருமணமாகி கணவரை இழந்த ஆன்லெஸ்லி ஸ்மித் உடன் காதல் வயப்பட்டதாகவும், இது தனது கடைசி காதலாக இருக்கும் என்றும், வருகிற கோடைகாலத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறினார்.  Source link

அதிபர் மேக்ரான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட 2 நம்பிக்கை இல்லா தீர்மானங்களும் தோல்வி

பிரான்சு அதிபர் மேக்ரான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட 2 நம்பிக்கை இல்லா தீர்மானங்களும் தோல்வி அடைந்தன.  பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஓய்வூதிய சீர்திருத்த மசோதா அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62-ல் இருந்து 64ஆக மாற்ற வழிவகை செய்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. … Read more

மகிழ்ச்சி நாடுகள் பின்லாந்து முதலிடம்| Finland tops the list of happiest countries

நியூயார்க் :உலகின் மகிழ்ச்சியான நாடுகளுக்கான தரவரிசைப் பட்டியலில், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, ஐரோப்பிய நாடான பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. உலக மகிழ்ச்சி தினம் ஆண்டுதோறும், மார்ச் 20ல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலை, ஐ.நா.,வின் நீடித்த வளர்ச்சி தீர்வுகள் அமைப்பு வெளியிட்டு உள்ளது. வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய- காரணிகள் அடிப்படையில், 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது. இந்தப் பட்டியலில், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, … Read more

லண்டன் இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட தேசியக் கொடி – காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு பாடம் புகட்டிய இந்தியா

லண்டன்: பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாதத்தைத் தூண்டிய அம்ரித்பால் சிங் என்பவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள் 114 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் செயல்படும் இந்திய தூதரகத்தில் நேற்று முன்தினம் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் புகுந்து அங்கிருந்த தேசியக் கொடியை அகற்றினர். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் பணியாற்றும் இங்கிலாந்து தூதரை மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வரவழைத்து கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது. இதுகுறித்து மத்திய … Read more

கொலம்பியாவில் இராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து 4 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடானா கொலம்பியாவில் இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்ததில் பெண் அதிகாரி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். குயிப்டோ என்ற பகுதியில் ராணுவ தளவாடங்களை வினியோகம் செய்யும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்தது. அதில் ஒரு பெண் உள்பட 4 ராணுவ அதிகாரிகள் இருந்தனர். அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் நான்கு பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். Source … Read more

ரஷ்யாவில் சீன அதிபர்| Chinese President in Russia

மாஸ்கோ, : ரஷ்யா – உக்ரைன் போர் ஓராண்டை கடந்து தொடர்கிறது. போரில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. சமீபத்தில் சர்வதேச நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக போர் குற்றத்தில் கைது வாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் சீன அதிபர் ஷீ ஜின்பிங் மூன்றுநாள் பயணமாக நேற்று ரஷ்யா சென்றார். மாஸ்கோ விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்தார். இன்று இரு தலைவர்களும் … Read more

நகரத்திற்கு ஒரேயொரு மதுபான விடுதி கென்ய துணை ஜனாதிபதி அதிரடி | Kenyas vice-president takes action in the citys only bar

நைரோபி-கென்யாவில் மது அருந்துவதைக் கட்டுப்படுத்த, நகரத்திற்கு ஒரு மதுபான விடுதியை மட்டுமே அனுமதிக்கும்படி, நகர நிர்வாகங்களுக்கு, அந்நாட்டின் துணை ஜனாதிபதி ரிகாதி கச்சகுவா உத்தரவிட்டு உள்ளார். கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில், இளைஞர்கள், பொது மக்களிடையே மதுப் பழக்கம் அதிகரித்து வருகிறது. மேலும், அதிக எண்ணிக்கையில் சட்ட விரோத ‘பார்’கள் இயங்கி வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில், கென்யாவில் மது அருந்துவதைக் கட்டுப்படுத்த, நகரத்திற்கு ஒரு மதுபான விடுதியை மட்டுமே அனுமதிக்கும்படி, அனைத்து நகர நிர்வாகங்களுக்கும், அந்நாட்டு … Read more