“சிறுவர்கள் பள்ளிக்குச் செல்வதை பார்க்கும்போது மனம் உடைகிறது” – ஆப்கன் சிறுமிகளின் துயரக் குரல்

“நான் பள்ளிக்குச் சென்றுவிடுவேன் என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு நாளும் எழுகிறேன். தலிபான்கள் பள்ளிக்கூடம் திறக்கப்படும் என்று கூறுகிறார்கள்; ஆனால் இரண்டு வருடங்களாக பள்ளிக்கூடம் திறக்கவில்லை. நாங்கள் இனியும் அவர்களை நம்பபோவதில்லை. இந்த நிலை என் இதயத்தை உடைக்கிறது. எங்களுக்கு முன்னராவது சிறிய சுதந்திரம் இருந்தது, தற்போது அதுவும் பறிக்கப்பட்டுவிட்டது” என்கிறார் 17 வயதான ஹபிபா. ஹபிபா உட்பட ஆப்கானைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிறுமிகள், தலிபான்களின் முடிவால் பள்ளிக்கூடம் செல்ல முடியாமல் வீட்டிலே அடைப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க … Read more

பாகிஸ்தான், இலங்கை என திவாலாகும் நிலையிலிருந்த 22 நாடுகளுக்கு சீனா 240 பில்லியன் டாலர் கடனுதவி..!

பாகிஸ்தான், இலங்கை என திவாலாகும் நிலையிலிருந்த நாடுகளுக்கு, 20 லட்சம் கோடி ரூபாய் வரை சீனா கடனுதவி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் உடனான வர்த்தக உறவை மேம்படுத்தவதாக கூறி, ”பெல்ட் அண்ட் ரோடு” (Belt and Road) என்ற திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்திய சீனா, அதில் இணைந்துள்ள 150 நாடுகளை சாலை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் சீனா உடன் இணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. கடந்த 20 ஆண்டுகளில், அந்த நாடுகளுக்கு 20 … Read more

கிரீஸ் நாட்டில் மே 21-ல் பொதுத் தேர்தல்: பிரதமர் மிட்சோடாகிஸ் அறிவிப்பு

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் வரும் மே 11-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான கிரீஸில் வலதுசாரி கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் ஆட்சி உள்ளது. அக்கட்சியின் தலைவரான கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் கடந்த 4 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் உள்ளார். முன்னாள் பிரதமர் கான்ஸ்டான்டைன் மிட்சோடாகிஸின் மகன் இவர். கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் பிரதமராக பதவியேற்றது முதல் இவரது ஆட்சி மீது மக்களுக்கு நன்மதிப்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. … Read more

துருக்கி நோக்கி அனுப்பப்பட்ட 20 மில்லியன் டாலர் மதிப்பிலான கொக்கைனை பறிமுதல் செய்த பெரு போலீசார்

துருக்கி நோக்கி சென்றுகொண்டிருந்த 20 மில்லியன் டாலர் கொக்கைன் போதைப்பொருளை பெரு நாட்டு போலீசார் கைப்பற்றினர். டைல்ஸ் கற்கள் போல செய்து மரப்பெட்டிகளுக்குள் வைத்து கடல் வழியாக அனுப்பப்பட்ட 2.3 டன் கொக்கைன் போதைப்பொருள்களை போலீசார் கண்டுபிடித்தனர். கடந்த ஆண்டு மட்டும் 28 டன் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐ.நா சபையின் கூற்றுப்படி, உலக அளவில் பெரு மற்றும் கொலம்பியா நாடுகளில் கொக்கைன் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

“கரோனா முதலில் பரவியது எப்படி? உண்மையைச் சொல்லி ஆக வேண்டும்…” – பாரிஸ் விஞ்ஞானி

பாரிஸ்: “விலங்குகளிடமிருந்தே கரோனா வைரஸ் மனிதர்களுக்குப் பரவியது என்ற தனது ஆராய்ச்சி முடிவு பொய்யல்ல. உண்மையானது” என்று பாரிஸ் விஞ்ஞானி ஃப்ளாரன்ஸ் டெபார் தெரிவித்துள்ளார். 2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உயிர்களைப் பறித்துவிட்டது. இன்னமும் கூட கரோனா அச்சுறுத்தல் முழுமையாக தீர்ந்துவிடவில்லை என்றே உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கின்றது. இந்நிலையில், கரோனா வைரஸ் வூஹான் உணவுச் சந்தையில் இருந்த விலங்குகள் மூலமே மனிதர்களுக்குப் பரவியது என்று … Read more

மெக்காவிற்கு யாத்ரீகர்களுடன் சென்ற பேருந்து பாலத்தில் மோதி தீப்பிடித்து விபத்து… 20 பேர் உயிரிழப்பு!

சவுதி அரேபியாவிலுள்ள மெக்காவிற்கு யாத்ரீகர்களுடன் சென்ற பேருந்து ஆசிர் பகுதியில் பாலத்தில் மோதி தீப்பிடித்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில், 29 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புனித நகரங்களான மெக்கா மற்றும் மதீனாவிற்கு பல நாடுகளைச் சேர்ந்த யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தெற்கு மாகாணமான ஆசிரில் சென்ற போது பிரேக் பெயிலியரால் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. விபத்தில், பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் முழு விபரம் இதுவரையில் வெளியிடப்படவில்லை. Source … Read more

சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து: மெக்கா புனித யாத்ரீகர்கள் 20 பேர் பலி

மெக்கா: சவுதி அரேபியாவில் உள்ள புனித தலமான மெக்காவுக்கு சென்ற யாத்ரீகர்கள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ சவுதியில் அகபா ஷார் பகுதியில் இருந்து புனித தலமான மெக்காவுக்கு சென்ற யாத்ரீகர்கள் பேருந்து விபத்துக்குள்ளானது. அப்போது பேருந்து தீப்பிடித்து ஏறிந்தது. இதில் 20 பேர் பலியாகினர். விபத்தில் 29 -க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர். உயிரிழந்தவர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். விபத்துக்கான காரணத்தை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்” என்று … Read more