உயிரியல் பூங்காவில் இருந்து தப்பியோடிய வரிக்குதிரை.. மயக்க ஊசி செலுத்தி பிடித்த ஊழியர்கள்..!

தென் கொரியாவில், உயிரியல் பூங்காவில் இருந்து தப்பியோடிய வரிக்குதிரை பிடிபட்டது. சியோலில் உள்ள பூங்காவில் இருந்து தப்பிய அந்த வரிக்குதிரை குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்ததை அறிந்த ஊழியர்கள், அதனை சுற்றி வளைத்து மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அந்த வரிக்குதிரை பத்திரமாக மீண்டும் உயிரியல் பூங்காவில் விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source link

தமிழக மீனவர்கள் 12 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்..!

கொழும்பு, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது அவ்வழியாக ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 2 படகுகளில் இருந்த 12 பேரை கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களிடம் இருந்து 2 … Read more

தமிழக மீனவர்கள் 12 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்..!

கொழும்பு, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது அவ்வழியாக ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 2 படகுகளில் இருந்த 12 பேரை கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களிடம் இருந்து 2 … Read more

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் – 12 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் பாகிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள இந்துகுஷ் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவனாது. மேலும் இது பூமிக்கு அடியில் 160 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த பயங்கர நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருந்தாலும் கூட அண்டை நாடான பாகிஸ்தானில்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி, குவெட்டா உள்ளிட்ட … Read more

அமெரிக்காவில் வேலை செய்ய விருப்பமா.? – இந்தியர்களுக்கு சூப்பர் நியூஸ்.!

வணிக அல்லது சுற்றுலா விசாவில் அமெரிக்காவிற்கு பயணிக்கும் தனிநபர்கள் இனி புதிய வேலை வாய்ப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக இந்தியாவில் இருந்து அதிக மக்கள் வணிக நோக்கில் அல்லது சுற்றுலாவிற்காக செல்கின்றனர். அப்படி அமெரிக்காவிற்கு செல்லும் நபர்களுக்கு புதிய வாய்ப்புகளை அந்நாடு ஏற்படுத்தி தந்துள்ளது. அதன்படி வெளிநாடுகளில் B-1, B-2 விசாக்களின் மூலம் அமெரிக்காவிற்கு பயணம் செய்யும் நபர்கள் இனி புதிய வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெவிரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து … Read more

“பஞ்சாப் போலீஸார் கூறும் தகவல்கள் ஆச்சரியம் அளிக்கிறது” – அம்ரித்பால் சிங்  தப்பிச் சென்றதில் மாநில காங்கிரஸ் சந்தேகம்

சண்டிகர்: பஞ்சாபில் ‘அனந்த்பூர் கல்சா ஃபவுஜ்’ என்ற பெயரில், தீவிரவாத குழுவை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீஸார் கடந்த 5 நாட்களாக தேடி வருகின்றனர். இந்நிலையில் அவர் தப்பிச் சென்ற பைக் தாராபூர் என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் தேடுவதை அறிந்த அம்ரித்பால் சிங் கடந்த சனிக் கிழமை மாலை குருத்வாரா ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கிருந்து அவர் பைக் ஒன்றில் மாறு வேடத்தில் தப்பிச் சென்றுள்ளார். அவரை விரட்டிச் சென்ற போலீஸார் … Read more

உக்ரைனுக்கு குறைக்கப்பட்ட யுரேனியம் அனுப்புவதை ஆதரித்த இங்கிலாந்து..!

ரஷ்ய அதிபர் புதினின் எச்சரிக்கைக்குப் பிறகு, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு குறைக்கப்பட்ட யுரேனியம் வெடிமருந்தை அனுப்புவதை இங்கிலாந்து ஆதரித்துள்ளது. உக்ரைனுக்கு இங்கிலாந்து கவசத் துளையிடும்  வெடிமருந்துகளைக் கொடுத்தால், தக்க பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று புதின் கூறியிருந்தார். இரண்டு டாங்கிகளுடன் கவச-துளையிடும் சுற்றுகளை உக்ரைனுக்கு வழங்குவதாக பிரிட்டன் அரசு உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால்  கதிர்வீச்சு அபாயம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளது.  குறைக்கப்பட்ட யுரேனியமுக்கும் அணு ஆயுதங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் … Read more

“எலான் மஸ்க் பதிலளிக்கும் வகையில் டுவீட் ஒன்றை இயற்றி தா…” – சாட் ஜி.பி.டி.யிடம் கேட்ட டுவிட்டர் பயனர்..!

இணையத்தில் பிரபலமடைந்து வரும் சாட் ஜி.பி.டி. தேடுபொறியால் இயற்றப்பட்ட கேள்விக்கு டுவிட்டர் சி.இ.ஒ. எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். டுவிட்டர் பயனர் ஒருவர், எலான் மஸ்க் பதிலளிக்கும் வகையில் கேள்வி ஒன்றை இயற்றி தருமாறு சாட் ஜி.பி.டி.யிடம் கேட்டுள்ளார். ”எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், பிரபஞ்சம் பற்றிய மக்களின் புரிதலை எவ்வாறு மேம்படுத்த போகிறது ?” என கேட்குமாறு சாட் ஜி.பி.டி. பதிலளித்தது. அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து டுவிட்டரில் பகிர்ந்த அந்த நபர், எலான் மஸ்கை … Read more

பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கீவ்: உக்ரைன் – ரஷ்யா போரில் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்த சந்திப்பில் ரஷ்யா, சீனா பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. மேலும் உக்ரைன் உடனான போரை சீனாவின் முயற்சிகள் முடிவுக்குக் கொண்டு வரலாம் … Read more

குழந்தைகள், குடியிருப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு!

ஒவ்வொரு முறையும் மாஸ்கோவில் சமாதானம் என்ற வார்த்தையை கேட்க முயற்சிக்கும் போது, அடுத்து ஒரு குற்றவியல் தாக்குதலுக்கு உத்தரவு வழங்கப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார். சீன அதிபரின் ரஷ்ய வருகை குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் இதனை தெரிவித்துள்ளார். இப்போது, சாதாரண மக்கள் மற்றும் குழந்தைகள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது என்றும் ஜெலென்ஸ்கி ட்வீட் செய்துள்ளார். ரஷ்யாவை தோற்கடிக்கவும் உயிர்களைப் பாதுகாக்கவும் உலகிற்கு அதிக ஒற்றுமையும் உறுதியும் தேவை. என்றும் … Read more