உலக செய்திகள்
அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற ஹைதி அகதிகள் 396 பேரை திருப்பி ஹைதிக்கு அனுப்பி வைக்க அமெரிக்கா திட்டம்..!
கரீபியன் தீவு நாடான ஹைதியில் இருந்து அமெரிக்கா நோக்கி 396 அகதிகளை ஏற்றிச் சென்ற படகை அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர். ஹைதி நாட்டில் வறுமையும் – வன்முறையும் அதிகரித்ததால் வாழ்வாதாரத்தை தேடி ஏராளமானோர் மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் தஞ்சமடைய ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு, ஹைதியில் இருந்து பஹாமாஸ் வழியாக அகதிகளுடன் சென்ற படகினை, கண்ட கடலோர காவல்படை ரோந்து போலீசார் அதிவேக படகில் சென்று மடக்கி பிடித்தனர். Source link
''2019ல் பாகிஸ்தானும் இந்தியாவும் அணுஆயுத போருக்கு தயாராகின'': அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர்
வாஷிங்டன்: பாகிஸ்தானும் இந்தியாவும் கடந்த 2019ம் ஆண்டு அணுஆயுத போரை நடத்த இருந்ததாக அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தபோது அந்நாட்டின் வெளியுறவு அமைச்சராக 2018 முதல் 2021 வரை இருந்தவர் மைக் பாம்பியோ. தனது அனுபவங்கள் தொடர்பாக இவர் எழுதி சமீபத்தில் வெளியான Never Give an Inch: Fighting for the America I Love எனும் புத்தகத்தில், கடந்த 2019ம் … Read more
வாஷிங்டன் : பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். யக்கிமா நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நுழைந்த ஆயுதமேந்திய மர்மநபர், அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். அங்கிருந்தவர்கள் இதனைக் கண்டு அலறி அடித்துக்கொண்டு பாதுகாப்பான இடம் நோக்கி ஓடினர். தகவலறிந்த போலீசார், துப்பாக்கிக்சூட்டில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அப்பகுதியினை சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்ற மர்மநபரைத் தேடி வருகின்றனர். Source link
பாகிஸ்தான்: கோர்ட்டில் இளம்பெண்ணை சுட்டுக்கொன்ற கொடூர தந்தை..!!
இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் வஜிரிஸ்தான் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கராச்சி நகரை சேர்ந்த டாக்டர் ஒருவரை காதலித்து வந்தார். இதற்கு அந்த பெண்ணின் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலரை கரம் பிடித்தார். திருமணத்துக்கு பின் இருவரும் கராச்சி நகரில் வசித்து வந்தனர். இதற்கிடையில் அந்த பெண்ணின் தந்தை தனது பெண்ணை கராச்சியை சேர்ந்த டாக்டர் கடத்தி சென்றுவிட்டதாக கராச்சி போலீசில் புகார் அளித்தார். … Read more
மாதம் 5 டாலர் கட்டணத்தில் வீடு தேடி வரும் முக்கிய மருந்துகள்… அமெரிக்காவில் செயல்முறைக்கு வந்தது அமேசான் நிறுவனத்தின் புதிய திட்டம்
அமெரிக்காவில் மாதம் 5 டாலர் கட்டணம் செலுத்தினால் அமேசான் மூலம் மருந்துகள் வீடு தேடி வரும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அமேசான் மருந்தகத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி வின் குப்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், நீரிழிவு, ரத்த அழுத்தம், தலைமுடி கொட்டுதல் போன்ற 80க்கும் மேற்பட்ட நீண்டகால நோய்களுக்கான 50 முக்கியமான மருந்துகளை வீடு தேடி வழங்கும் திட்டத்தைப் பற்றி விளக்கினார். இந்த வசதியைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் மெடிக்கேர், மெடிக்கைட் போன்ற அரசின் சுகாதாரத்திட்டத்தில் இணைந்திருப்பது … Read more
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷிய விளையாட்டு வீரர்கள் போட்டியிடக் கூடாது: ஜெலென்ஸ்கி
கீவ், உக்ரைன் – ரஷியா இடையிலான போர் 11 மாதங்களாக நீடித்து வருகிறது. சிறிய நாடான உக்ரைனும் அமெரிக்கா உள்ள பல நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடம் தொலைபேசியில் பேசினார். இந்த தொலைபேசி உரையாடலுக்கு பின்னர் ஜெலன்ஸ்கி டெலிகிரமில் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். அதில், அடுத்த ஆண்டு பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் ரஷியாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இடம் பெறக்கூடாது என்பதை … Read more
ரஷ்யாவிடம் போதுமான ஆயுதங்கள் கையிருப்பு உள்ளதாக முன்னாள் அதிபர் மெட்வதேவ் அறிவிப்பு
ரஷ்யாவிடம் போதுமான ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளதாக அந்நாட்டு முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வதேவ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் குறைவாக இருப்பதாக மேற்கத்திய நாடுகளின் அறிக்கைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இதனை அவர் குறிப்பிட்டார். ஆயுத தயாரிப்புத் தொழிற்சாலை அமைந்துள்ள காலனிஷ்கோவ்-க்குச் சென்ற மெட்வதேவ், அங்கு தயாரிக்கப்படும் துப்பாக்கிகள், பீரங்கி குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஆய்வு செய்தார். Source link
தாய்லாந்தில் கோர விபத்து: 11 பேர் உடல் கருகி பலி
பாங்காக், தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள அம்னாட் சரோயன் மாகாணத்தில் இருந்து நகோன் பாத்தோம் மாகாணத்துக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேனில் 2 சிறுவர்கள் உள்பட 12 பேர் இருந்தனர். கியாஸ் மூலம் இயங்கும் இந்த வேன் தலைநகர் பாங்காங் அருகே ஷி கியூ மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய வேன் சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலியின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய … Read more
மின் இணைப்பு துண்டிப்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் வருத்தம்
மின் இணைப்பு துண்டிப்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வருத்தம் தெரிவித்துள்ளார். மின்சாரம் விநியோகத்தில் தடை ஏற்பட்டதற்கான காரணத்தை அறிய விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். திங்கட்கிழமை மாலையில் பாகிஸ்தானில் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு கராச்சி , குவெட்டா, லாகூர், இஸ்லாமாபாத் போன்ற முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின. தேசிய மின் விநியோகத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. Source link