உலக அழிவை கணக்கிடும் 'டூம்ஸ்டே கடிகாரம்' – 90 வினாடிகள் மட்டுமே மீதம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை

வாஷிங்டன், கடந்த 1947-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாப்பு சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் ‘டூம்ஸ்டே கடிகாரம்’ உருவாக்கப்பட்டது. உலகில் நடக்கும் பருவநிலை மாற்றம், போர், அணுஆயுத ஆபத்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை வைத்து இந்த கடிகாரத்தின் நேரத்தை விஞ்ஞானிகள் மாற்றி அமைக்கின்றனர். அதன்படி நள்ளிரவு 12 மணியை இந்த கடிகாரம் தொட்டுவிட்டால் இந்த உலகம் அழிந்துவிடும் என்பது நம்பிக்கை. உலக அழிவிற்கான அபாயம் இருக்கும் சமயத்தில் இந்த கடிகாரத்தின் முள்ளானது 12 மணிக்கு … Read more

அமெரிக்க மாகாணத்தை புரட்டிப்போட்ட சூறாவளி.. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் தவிப்பு..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை அதி பயங்கர சூறாவளி தாக்கியது. மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் சுழன்றடித்த சுழல் காற்றில் சிக்கி வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள், மின் கம்பங்கள் என அனைத்தும் துவம்சம் செய்யப்பட்டன. மரங்கள் முறிந்து விழுந்து சாலைகளை முடக்கின. பலத்த காற்றால், நெடுஞ்சாலயில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சாலை தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களின் மேற்கூறைகள் பல மைல் தொலைவுக்கு தூக்கி எறியப்பட்டன. மேலும், சூறாவளி காற்றில் சிக்கி மின் கம்பங்களும் … Read more

பிபிசி ஆவணப்படத்தில் பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றதற்கு அமெரிக்கா ஆட்சேபம்

பிபிசி ஆவணப்படத்தில் பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றதற்கு அமெரிக்கா ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இந்தியாவுடன் மதிப்பு மிக்க உறவை நாடுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.அதிபர் ஜோ பைடனின் நிர்வாக அதிகாரிகள் இந்திய அமெரிக்க உறவுகள் வலுவானநிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் பிபிசியின் ஆவணப்படத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை என்ற சூழலில் அமெரிக்காவும் பிபிசியின் ஆவணப்படத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடியை குற்றம் சாட்டியதை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  Source link

வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு

வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சுவாச நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ள அந்நாட்டு அரசு, மக்கள் வீடுகளிலேயே இருக்கவும் உடல்வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வடகொரிய அரசாங்கம் குறிப்பிடவில்லை. பியாங்யாங் தவிர மற்ற பகுதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா என்ற தகவலும் வெளிவரவில்லை.  Source link

ஆப்கானிஸ்தானில் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குளிர்.. 158 பேர் உயிரிழப்பு..!

ஆப்கானிஸ்தானில் கடும் குளிர் நிலவி வருவதால் கடந்த 2 வாரத்தில் 158 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிர் அதிகமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. குளிரை எதிர்கொள்ள போதிய அளவில் அடுப்பு, நிலக்கரி, ஆடை, போர்வைகள் இல்லை எனக் கூறப்படும் நிலையில், தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பணியாளர்களுக்கு தலிபான் அரசு தடை விதித்திருப்பதால், நாட்டில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் … Read more

லித்துவேனியாவிலிருந்து உக்ரைனுக்கு அனுப்பப்படும் டிரான்ஸ்பார்மர்

லித்துவேனியாவில், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமலிருந்த ராட்சத டிரான்ஸ்பார்மர், கப்பல் மூலம் உக்ரைனுக்கு அனுப்பப்படுகிறது. உக்ரைனின் மின்சார கட்டமைப்பை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குவதால், லட்சக்கணக்கானோர் ஹீட்டர்களை பயன்படுத்த முடியாமல் மைனஸ் டிகிரி குளிரில் நடுங்கிவருகின்றனர். உக்ரைன் உள்ளிட்ட சோவியத் நாடுகளில் ஒரே மாதிரியான மின் கட்டமைப்பு உள்ளதால், லித்துவேனியாவில், 1980 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டிலில்லாமலிருந்த 200 டன் டிரான்ஸ்பார்மர், பார்ட் பார்டாக பிரிக்கப்பட்டு உக்ரைனுக்கு அனுப்பப்படுகிறது. 18 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த டிரான்ஸ்பார்மர் மூலம் … Read more

அமெரிக்க நிறுவனங்களில் ஆயிரக்கணக்கில் பணி நீக்கங்கள்! ஜோ பைடன் கவலை!

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க நிறுவனங்களில் பெருமளவிலான பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஆயிரக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் உள்ளனர். கூகுள் நிறுவனம்  12,000 பேர்களை ஜனவரி 20 பணியில் இருந்து நீக்கியது. கடந்த வாரம், மைக்ரோசாப்ட் 10,000 பேர்களை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்தது. அமேசான் நிறுவனம் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது.  இன்டெல் நிறுவனமும் பணிநீக்க செயல்பாட்டை … Read more

இஸ்ரேல் ராணுவத்தினரை கத்தியால் தாக்க முயன்ற பாலஸ்தீன இளைஞர் சுட்டுக்கொலை..!

இஸ்ரேல் ராணுவ வீரர்களை கத்தியால் குத்த முயன்ற பாலஸ்தீன இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். காரிலிருந்து இறங்கிவந்த 20 வயது மதிக்கத்தக்க பாலஸ்தீன இளைஞர், பேருந்து நிறுத்தம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர்களை நோக்கி கத்தியுடன் பாய்ந்தார். ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். Source link

2019ல் இந்தியாவும், பாக்.,கும் அணு ஆயுத போருக்கு தயாரானதா? அமெரிக்க மாஜி அமைச்சர் அதிர்ச்சி தகவல்| India informed me Pak was preparing for nuclear attack post-Balakot strike, claims Pompeo

வாஷிங்டன்: கடந்த 2019 ல் இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத போரை நடத்த இருந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் மைக் பாம்பியோ, எழுதிய புத்தகத்தில் கூறியுள்ளார். கடந்த 2019 ம் ஆண்டு பிப்., மாதம் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு காஷ்மீரின் புல்வாமாவில், துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்சை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாபாகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் … Read more

அமெரிக்காவில் இந்தியர்கள் மீது துப்பாக்கிச்சூடு.!

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. துப்பாக்கி வன்முறை காப்பக இணையதளத்தின்படி, கடந்த ஆண்டில் மட்டும் பொதுவெளியில் 647 துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளது. அந்தவகையில் அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 44 ஆயிரம் பேர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் பள்ளிக்கூட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன. கடந்த மே மாதம் டெக்சாஸில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல் … Read more