China: குளிர் அலையால் மட்டுமல்ல இயற்கை எரிவாயு பற்றாக்குறையாலும் அவதியுறும் சீனா

பெய்ஜிங்: குளிர் அலையால் மட்டுமல்ல இயற்கை எரிவாயு பற்றாக்குறையாலும் அவதியுறும் சீன மக்களின் உறைந்து போன வாழ்க்கை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு போதுமான எரிவாயு விநியோகத்தை பராமரிக்க முடியாமல் நாடு திண்டாடுகிறது. இது குளிர்காலத்தை மக்களுக்கு கொடுமையானதாக மாற்றிவிட்டது. இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக ஏற்கனவே அரசாங்கத்தின் மீது கோபத்தில் இருக்கும் சீனர்களுக்கு … Read more

ஆண்ட்ராய்ட், டேப்லட்களில் மூன்றாம் தரப்பு சர்ச் எஞ்சின்களைப் பயன்படுத்தலாம் – கூகுள் நிறுவனம்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, ஆண்ட்ராய்டு பயனர்கள் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை சர்ச் எஞ்சின்களாகப் பயன்படுத்த அனுமதிப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. பயனர்கள் புதிய ஆண்ட்ராய்டு ஃபோன் அல்லது டேப்லெட்டை புதிதாக இயக்கத் தொடங்கும் போதெல்லாம் தங்களுக்கு விருப்பமான சர்ச் எஞ்சினைத் தேர்வு செய்யலாம் என கூறியுள்ளது. கூகுள் மேப்ஸ் போன்ற ஆண்ட்ராய்டு சாதனங்களில் முன்பே நிறுவப்பட்ட கூகுளுக்குச் சொந்தமான பயன்பாடுகளை நீக்க பயனர்களை அனுமதிக்கும் பிற நடவடிக்கைகளையும் இந்திய வணிகப் போட்டி ஆணையம் வலியுறுத்தியுள்ளது. பல சந்தைகளில் … Read more

உக்ரைன் போரில் இங்கிலாந்தை சேர்ந்த தன்னார்வ உதவி ஊழியர்கள் 2 பேர் பலி

லண்டன், உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 11 மாதங்களுக்கும் மேலாக போர் நடத்தி வருகிறது. இந்த போர் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரை பறித்ததோடு, லட்சக்கணக்கான மக்களை அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புக செய்துள்ளது. கல்வி, வேலை மற்றும் பிற தேவைகளுக்காக உக்ரைனுக்கு சென்ற வெளிநாட்டினர் பெரும்பாலானோர் போர் தொடங்கியதும் அங்கிருந்து வெளியேறினர். அதே சமயம் வெளிநாடுகளை சேர்ந்த தன்னார்வ உதவி ஊழியர்கள் பலர் போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு சென்று அந்த நாட்டு மக்களுக்கு மனிதாபிமான … Read more

தென்மேற்கு ஜப்பானில், மோசமான வானிலையால் சரக்குக் கப்பல் மூழ்கிய விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு..!

தென்மேற்கு ஜப்பானில், மோசமான வானிலையால் சரக்குக் கப்பல் மூழ்கிய விபத்தில் சிக்கி 2 பேர் Cந்தனர். ஜப்பானின் நாகசாகி மற்றும் தென் கொரியாவின் ஜெஜு தீவுக்கு இடையே சென்று கொண்டிருந்த கப்பலொன்று செவ்வாய்கிழமை அதிகாலை மூழ்கியது. கடலில் மூழ்கத் தொடங்கியதும், அபாயக் கட்டத்தில் இருப்பதாக கப்பலிலிருந்து சிக்னல் அனுப்பப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தென்கொரிய மற்றும் ஜப்பான் கடலோரக் காவல் படையினர், கடும் குளிருக்கு மத்தியிலும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் இருந்த 22 ஊழியர்களில் 13 … Read more

அமெரிக்காவில் மீண்டும் சம்பவம்: சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் மான்டேரி பார்க் நகரில் கடந்த 21-ந் தேதி நடன பயிற்சி மையத்துக்குள் புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியாகினர்.இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த திங்கட்கிழமை கலிபோர்னியா, அயோவா மற்றும் இல்லினாய்ஸ் மாகாணங்களில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்களால் அமெரிக்காவே அதிர்ந்தது. இந்த நிலையில் வாஷிங்டன் மாகாணம் யாகிமா நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நேற்று … Read more

பிலிப்பைன்சில் ராணுவ விமானம் வயலில் விழுந்து நொறுங்கியது – 2 விமானிகள் பலி

மணிலா, பிலிப்பைன்ஸ் நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான ‘மார்செட்டி எஸ்.எப். 260’ ரக விமானம், அந்த நாட்டின் படான் மாகாணத்தில் உள்ள பிலார் நகரில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. விமானத்தில் 2 விமானிகள் இருந்தனர். இந்த விமானம் பிலார் நகருக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்தது. அதை தொடர்ந்து அங்குள்ள வயல்வெளியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் … Read more

ஜெர்மனியில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து – 2 பேர் பலி

ஜெர்மனியில் ஓடும் ரயிலில் இளைஞர் கத்தியால் குத்தியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஹம்பர்க் – கீல் நகரங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த ரயில், ப்ரோக்ஸ்டெட் நிலையத்தை நெருங்கியபோது, அங்கிருந்த பயணிகளைக் குறிவைத்து மர்மநபர் கத்தியால் சரமாரிக் குத்தினான். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை மடக்கிப் பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். Source link

உலக அழிவை கணக்கிடும் 'டூம்ஸ்டே கடிகாரம்' – 90 வினாடிகள் மட்டுமே மீதம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை

வாஷிங்டன், கடந்த 1947-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாப்பு சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் ‘டூம்ஸ்டே கடிகாரம்’ உருவாக்கப்பட்டது. உலகில் நடக்கும் பருவநிலை மாற்றம், போர், அணுஆயுத ஆபத்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை வைத்து இந்த கடிகாரத்தின் நேரத்தை விஞ்ஞானிகள் மாற்றி அமைக்கின்றனர். அதன்படி நள்ளிரவு 12 மணியை இந்த கடிகாரம் தொட்டுவிட்டால் இந்த உலகம் அழிந்துவிடும் என்பது நம்பிக்கை. உலக அழிவிற்கான அபாயம் இருக்கும் சமயத்தில் இந்த கடிகாரத்தின் முள்ளானது 12 மணிக்கு … Read more

அமெரிக்க மாகாணத்தை புரட்டிப்போட்ட சூறாவளி.. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் தவிப்பு..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை அதி பயங்கர சூறாவளி தாக்கியது. மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் சுழன்றடித்த சுழல் காற்றில் சிக்கி வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள், மின் கம்பங்கள் என அனைத்தும் துவம்சம் செய்யப்பட்டன. மரங்கள் முறிந்து விழுந்து சாலைகளை முடக்கின. பலத்த காற்றால், நெடுஞ்சாலயில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சாலை தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களின் மேற்கூறைகள் பல மைல் தொலைவுக்கு தூக்கி எறியப்பட்டன. மேலும், சூறாவளி காற்றில் சிக்கி மின் கம்பங்களும் … Read more

பிபிசி ஆவணப்படத்தில் பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றதற்கு அமெரிக்கா ஆட்சேபம்

பிபிசி ஆவணப்படத்தில் பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றதற்கு அமெரிக்கா ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இந்தியாவுடன் மதிப்பு மிக்க உறவை நாடுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.அதிபர் ஜோ பைடனின் நிர்வாக அதிகாரிகள் இந்திய அமெரிக்க உறவுகள் வலுவானநிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் பிபிசியின் ஆவணப்படத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை என்ற சூழலில் அமெரிக்காவும் பிபிசியின் ஆவணப்படத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடியை குற்றம் சாட்டியதை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  Source link