துருக்கியின் தரைப்படைகள் இனி சிரியாவை தாக்கும்; அதிபர் எர்டோகன் அறிவிப்பு.!

மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான துருக்கியும், சிரியாவும் அண்டை நாடுகள். வடகிழக்கு சிரியாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள சிரியா மக்கள் பாதுகாப்பு படை என்ற குர்திஸ் ஆயுதக் குழுவை அழிக்கும் நோக்கத்துடன், துருக்கி தங்கள் எல்லைப்புறத்தில் இருந்து சிரியா மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. இந்தநிலையில் துருக்கியை சமாளிப்பதற்காக சிரியாவின் அரசுப் படைகளுடன் சமரசம் செய்துகொண்டது சிரியா ஜனநாயகப் படை. இந்தநிலையில் கடந்த நவம்பர் 13ம் தேதி, துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள … Read more

அமெரிக்காவில் மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை மடக்கிப் பிடித்த காவலாளிக்கு குவியும் பாராட்டுக்கள்..!

அமெரிக்காவில் மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை மடக்கிப் பிடித்த காவலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள போதை மறுவாழ்வு மருத்துவமனைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் அங்கு திடீரென துப்பாக்கியால் சுட்டார். அப்போது, அருகிலிருந்த காவலாளி அவர் மீது பாய்ந்து அவரை மடக்கவும் மற்ற ஊழியர்களும் சேர்ந்து அவரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகிய நிலையில் காவலாளியை ஏராளமானவர்கள் பாராட்டி வருகின்றனர். Source link

மகளை கொன்று சூட்கேசில் வைத்து வீசிய தந்தை கைது| Dinamalar

லக்னோ: விருப்பத்திற்கு மாறாக வேறு சமூகத்தை சேர்ந்தவரை மகள் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் தாங்காத தந்தை பெற்ற மகளை சுட்டுக்கொன்று சூட்கேசில் வைத்து வீசிய சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேசத்தின் யமுனா எக்ஸ்பிரஸ் சாலை பகுதியில் கடந்த 18-ம் தேதி அனாதையாக கிடந்த சூட்கேஸ் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மதுரா போலீசார் சூட்கேசை கைப்பற்றி திறந்து பார்த்த போது 22 வயது இளம் பெண் சடலம் இருந்துள்ளதும், தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததற்கான காயம் இருந்தது. … Read more

குழந்தைகளின் மரணத்தில் லாபம் தேடும் நபர்களுக்கு இரக்கம் காட்டமாட்டேன்: எலான் மஸ்க்

வாஷிங்டன், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினார் என்பதற்காக அவரது டுவிட்டர் கணக்கு கடந்த 2020-ம் ஆண்டு முடக்கப்பட்டது. தற்போது டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியிருக்கும் நிலையில் டிரம்பிற்கு மீண்டும் அவரது டுவிட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுமா? என்பது குறித்த விவாதங்கள் அதிகரித்தன. இதனையடுத்து, டொனால்டு டிரம்பை டுவிட்டரில் மீண்டும் சேர்க்கலாமா என்பது குறித்து எலான் மஸ்க் டுவிட்டரில் வாக்கெடுப்பை நடத்தினார். இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலானவர்கள் டிரம்பை சேர்க்கலாம் என்றே … Read more

சிறுத்தை முன்னங்காலால் மசாஜ் செய்ய.. சாவகாசமாக ஓய்வெடுக்கும் வங்காள புலி..!

சீனாவின் ஹூசோ நகர உயிரியல் பூங்காவில் சிறுத்தை ஒன்று, புலிக்கு மசாஜ் செய்வது போன்ற காணொலி வெளியாகி உள்ளது. சாவகாசமாக படுத்திருந்த புலியை, மசாஜ் செய்வதுபோல் முன்னங்கால்களால் ஜாக்குவார் இன சிறுத்தை அழுத்தியதை, பூங்கா ஊழியர் ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். வனப்பகுதியில், புலியும், சிறுத்தையும், எதிரும் புதிருமாக இருக்கும்நிலையில், உயிரியல் பூங்காவில் சிறுவயது முதலே அவை ஒரே வேலிக்குள் பராமரிக்கப்பட்டு வருவதால், ஒன்றோடொன்று அந்நியோன்யமாக பழகிவருகின்றன. Source link

கடந்த 6 ஆண்டுகளில் ரூ.12,700 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி குடும்பம்

இஸ்லாமாபாத் கடந்த ஆறு ஆண்டுகளில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் கடுமையாக உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடமேஜிங் அறிக்கை தெரிவித்துள்ளது.ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் பதவிக்காலம் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முடிவடைய உள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.”’ இது குறித்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் அஹ்மத் நூரானி, கமர் ஜாவேத் பஜ்வாவின் குடும்ப உறுப்பினர்கள் புதிய தொழிலைத் தொடங்கி உள்ளனர். பாகிஸ்தானின் முக்கிய … Read more

சண்டைக்கு பின் சமாதானம்: பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லை மீண்டும் திறக்கப்பட்டது

வர்த்தகம் மற்றும் போக்குவரத்திற்காக மூடப்பட்ட ஆப்கானிஸ்தானுடனான எல்லைக் பகுதியை இன்று (நவம்பர் 2, திங்கள்கிழமை ) பாகிஸ்தான் மீண்டும் திறந்தது. கடந்த வாரத்தில், இரு நாட்டு பாதுகாப்புப் படையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இந்த எல்லைப் பகுதி மூடப்பட்டது. இதைத் தவிர மற்றுமொரு மோதலில், மூன்று பேர் காயமடைந்தனர். இந்த எல்லைப் பாதையானது, பாகிஸ்தானின் சாஹ்மான் நகரத்திற்கும் ஆப்கானிஸ்தானின் ஸ்பின் போல்டாக் மாவட்டத்திற்கும் இடையே அமைந்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தலிபான் அதிகாரிகளுக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை … Read more

அமெரிக்காவின் கைப்பாவையாக ஐ.நா. பொதுச் செயலாளர் செயல்படுகிறார்: வடகொரியா

பியாங்கியாங்: ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்று வடகொரியா குற்றாம்சாட்டியுள்ளது. வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை பரிசோதனைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், ஜப்பானின் வலியுறுத்தல்படி வடகொரியாவின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் ஐக்கிய நாடுகள் சபை ஆயத்தமாகி வருகிறது. இதனை வடகொரியா விமர்சித்துள்ளது இதுகுறித்து வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் சோ சன் கூறும்போது, “ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸும் வெள்ளை மாளிகையில் ஒரு உறுப்பினர்தான் … Read more

சீனாவில் மீண்டும் கொரோனா பூகம்பம்; பயண கட்டுப்பாடுகள் அமல்.!

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதை அடுத்து யாராலும் மறுக்க முடியாது. கொரோனா காரணமாக இந்தியாவில் லட்சக்கணக்காணோர் உயிரிழந்தனர். மேலும்,தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு படையெடுத்தால், பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கை வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு … Read more

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி 20 பேர் பலி ; 300 பேர் காயம்

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் பதிவாகி உள்ளது. நில நடுக்கம் ஏற்பட்டபோது, மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் வீதிகளுக்கு ஓடி வந்தனர். பலர் திறந்தவெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன், அலறியடித்துக்கொண்டு ஓடினர். சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இந்தநிலநடுக்கத்தால் இதுவரை 20 பேர் பலியாகி உள்ளதாகவும் 300 பேர் காயமடைந்துள்ளதாக அங்குள்ள உள்ளூர் அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். நிலநடுக்கத்தால் அங்கு மின்சாரம் தடைபட்டது. ஏராளமான … Read more