அமெரிக்காவின் செயலற்ற செயற்கைக் கோள் நாளை பூமியில் விழு வாய்ப்பு

40 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா ஏவி செயலற்றுப் போன செயற்கைக் கோள் ஒன்று நாளை பூமியில் விழ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பூமியின் கதிரியக்க ஆற்றல் குறித்து ஆய்வு செய்ய கடந்த 1984ம் ஆண்டு அமெரிக்கா செயற்கைக் கோள் ஒன்றை ஏவியது. இந்த செயற்கைக்கோள் செயலற்றுப் போனதால் நாளை பூமியில் விழும் என நாசா கூறியுள்ளது. உள்ளூர் நேரப்படி நாளை காலை 5.10 மணியளவில் விழ வாய்ப்பு என்றும், வளிமண்டலத்தில் நுழையும் போதே முற்றிலும் எரிந்து விடும் எனவும் … Read more

சீனாவில், 3 மாதங்களில், 2 முறை ‘டெஸ்லா’ கார்களின் விலை குறைப்பால் ஷோரூமை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம்..!

சீனாவில், கடந்த 3 மாதங்களில் 2 முறை டெஸ்லா நிறுவன கார்களின் விலை குறைக்கப்பட்டதால் அண்மையில் கார் வாங்கியவர்கள் ஷோரூம் முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கார் விற்பனை அதிகரித்தால் உற்பத்தி தன்னால் அதிகரித்துவிடும் என நினைத்த டெஸ்லா நிறுவனம், விற்பனையை அதிகரிப்பதற்காக சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிகம் விற்பனையாகும் y மற்றும் 3 மாடல் மின்சார கார்களின் விலையை குறைத்தது. இதனால் அண்மையில் டெஸ்லா கார் வாங்கியவர்கள் சமூகவலைத்தளங்களில் தங்கள் … Read more

போர் நிறுத்தத்தின் போது உக்ரைன் படைகள் தாக்குதல் – ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றச்சாட்டு

மாஸ்கோ, ரஷியா மற்றும் உக்ரைனில் வாழும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்கள் இன்று (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இதையொட்டி உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவிக்க ரஷிய அதிபர் புதினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று, வெள்ளிக்கிழமை நண்பகல் தொடங்கி சனிக்கிழமை நள்ளிரவு வரை 36 மணி நேரத்துக்கு தாக்குதல்களை நிறுத்தும்படி ரஷிய படைகளுக்கு புதின் உத்தரவிட்டார். ரஷிய படைகளின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு போர்நிறுத்தம் பொருந்துமா, உக்ரைன் தொடர்ந்து சண்டையிட்டால் ரஷியா திருப்பித் தாக்குமா என்பது அந்த உத்தரவில் தெளிவுப்படுத்தவில்லை. … Read more

ஜப்பானில் வெடிகுண்டு மிரட்டலால் அவசரமாக தரையிறங்கிய விமானம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ள நரிடாவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து அந்த நாட்டின் கியூஷி தீவில் உள்ள புகுவோவாவுக்கு காலை விமானம் ஒன்று புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்தது. உடனே விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானிக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விமானம் அய்ச்சி மாகாணத்தில் உள்ள சென்ட்ரேர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. … Read more

பெருவில் காஸ்டிலோ ஆதரவாளர்கள் தொடர் போராட்டம்; தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி

லிமா, தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. 2020-ம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது. இந்த நிலையில் பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி பெரு நாட்டின் அதிபராக கடந்த 2021 ஜூன் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் அவற்றை காஸ்டிலோ திட்டவட்டமாக மறுத்து வருகிறார். … Read more

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தேர்வு

நாடாளுமன்ற தேர்தல் அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனார். அமெரிக்காவை பொறுத்தவரையில் புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்த 2 ஆண்டுகளில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடந்த 8-ந் தேதி அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் (மேல்சபை) 105 இடங்களில் 35 இடங்களுக்கும் … Read more

நவாஸ் ஷெரீப் மகளுக்கு சுவிட்சர்லாந்தில் சிகிச்சை| Nawaz Sharifs daughter undergoing treatment in Switzerland

ஜெனீவா பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், தொண்டை அறுவை சிகிச்சைக்காக ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நம் அண்டை நாடான பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகளும், பாக்., முஸ்லிம் லீக் கட்சியின் துணை தலைவருமான மரியம், 49, ஆகியோர், சமீபத்தில் ஐரோப்பியா நாடான சுவிட்சர்லாந்து சென்றனர். மரியமுக்கு தொண்டையில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக, ஜெனீவாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது தொண்டையில் உள்ள இரண்டு சுரப்பிகளில் … Read more

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரானில் ராணுவ வீரரை கொன்ற 2 பேருக்கு மரண தண்டனை

டெஹ்ரான், ஈரானில் பெண்களுக்கு கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் அணியாமல் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மாஷா அமினி என்ற இளம் பெண் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து நாடு முழுவதும் அங்கு போராட்டம் வெடித்தது. ஏராளமான பெண்கள் இதில் பங்கேற்றனர். இது அந்நாட்டு இஸ்லாமிய குடியரசிற்கு மிகப்பெரிய சவாலாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், ஈரானில் … Read more

ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புதின்

ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, கிரெம்ளினில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிரார்த்தனை செய்தார். உக்ரைன் உளவுத்துறை தலைவர்  Kyrylo Budanov, அதிபர் புதின் நோய்வாய்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் உயிரிழக்கக்கூடும் என தெரிவித்த நிலையில், புதின் பிரார்த்தனை செய்த காட்சிகளை ரஷ்ய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. அதேநேரம், கடந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகையை, கதீட்ரல் தேவாலயத்தில், பல்லாயிரக்கணக்கானோருடன் கொண்டாடிய புதின், தற்போது தனி ஒருவராக கிரெம்ளினில் நடைபெற்ற பிரார்த்தனையில் பங்கேற்றுள்ளார். Source link