அமெரிக்காவில் பயங்கரம்: 6 மாத குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை

வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் கோஷன் நகரில் உள்ள ஒரு வீட்டுக்குள் நேற்று முன்தினம் அதிகாலை ஒரு மர்ம கும்பல் துப்பாக்கியுடன் நுழைந்தது. பின்னர் அந்த கும்பல் வீட்டில் இருந்த அனைவரையும் குருவியை சுடுவது போல சுட்டுத்தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதனிடையே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு அதிர்ந்துபோன அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அடுத்த சில நிமிடங்களில் போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டுக்கு வெளியிலும், உள்ளேயும் … Read more

காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைகளையும் அமைதி முறையில் பேசி தீர்க்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு

புதுடெல்லி: போர் நடவடிக்கையால் துன்பம், வறுமைதான் மிஞ்சும். எனவே காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் அமைதியான முறையில் பேசி அதற்குரிய தீர்வுகளை காணவேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக “அல் அரேபியா” டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது. இந்தியாவுடன் மூன்று முறை போரிட்டு பாகிஸ்தான் பல்வேறு பாடங்களை கற்றுக் கொண்டுவிட்டது. போர் நடவடிக்கையால் துன்பம், வறுமை, வேலைவாய்ப்பின்மை மட்டுமே உருவாகும். அதனை நாங்கள் ஏற்கெனவே உணர்ந்துள்ளோம். அமைதியான முறையில் … Read more

சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு மக்கள் தொகை சரிவு

ஷாங்காய், உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடான சீனாவில் 141 கோடி பேர் வசிக்கின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் தேசிய புள்ளியியல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘சீனாவின் மக்கள்தொகை கடந்தாண்டு 141.26 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது 8,50,000 பேர் குறைந்து 141.18 கோடியாக உள்ளது. குழந்தை பிறப்புகளை காட்டிலும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சீனப் பெண்கள் கடந்த ஆண்டு 9.56 மில்லியன் குழந்தைகளைப் பெற்றனர்; அதே 2021ம் ஆண்டில் 10.62 மில்லியன் குழந்தைகள் பெற்றனர். தேசிய … Read more

50-ஆண்டுகளில் மிக மோசம்: சீன பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாக சரிவு..!!

பீஜிங், சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய், உலக பொருளாதார வளர்ச்சியை பதம் பார்த்தது. இதில் உலகின் 2-வது பெரிய பொருளாதார நாடான சீனாவும் தப்பவில்லை. அங்கு கடந்த 2022-ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீத அளவுக்கு சுருங்கிப்போய் விட்டது. இது கடந்த 50 ஆண்டுகளில் காணப்பட்டுள்ள 2-வது மோசமான பொருளாதார வளர்ச்சி ஆகும். 2022-ம் ஆண்டில் சீனாவின் மொத்த பொருளாதார மதிப்பு 17.94 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். (ஒரு டிரில்லியன் என்பது … Read more

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோவில் மீது மீண்டும் தாக்குதல்

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வாரத்திற்குள் நடந்த இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கேரம் டவுன்ஸ் நகரில் உள்ள சிவ விஷ்ணு கோவில் மீது நேற்று தாக்குதல் நடத்திய நபர்கள், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதி உள்ளதாக ஆஸ்திரேலிய இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது. தமிழர்களால் மூன்று நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தபோது, கோவில் மீது … Read more

நேபாள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 71 ஆக உயர்வு

காத்மண்டு, நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுற்றுலா தலமான பொக்காராவுக்கு நேற்று முன் தினம் காலை 10.33 மணிக்கு ‘எட்டி ஏர்லைன்ஸ்’ விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் என மொத்தம் 72 பேர் பயணம் செய்தனர். அந்த விமானம் காலை 11 மணிக்கு பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. பொக்காரா புதிய விமான நிலையம் கடந்த 1-ந்தேதி தான் திறந்து வைக்கப்பட்டது. விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு … Read more

அமெரிக்காவில் 3.7 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்த தீவு

நிகராகுவா: மத்திய அமெரிக்காவின் நிகராகுவா பகுதியில் அமைந்துள்ள தீவு ஒன்று ரூ.3.7 கோடிக்கு விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல். இதே விலையில் இந்தியாவின் மும்பை அல்லது டெல்லி போன்ற நகரில் அப்பார்ட்மெண்ட் வாங்கலாம் என தெரிகிறது. நிகராகுவாவின் ப்ளூ ஃபீல்ட் கடற்கரையில் இருந்து சுமார் 19.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ‘தி இகுவானா தீவு’தான் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதை தீவுகளை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் … Read more

எண்ணெய் கப்பலில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு..!

தாய்லாந்து அருகே நிறுத்தப்பட்டிருந்த எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். ஸ்மூத் சீ-22 என்ற அந்த எண்ணெய் கப்பலில் பழுதுநீக்கும் பணிகள் நடைபெற்றுகொண்டிருந்தபோது திடீரென பலத்த சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டு கப்பலில் தீப்பற்றி எரிந்தது. இதனால் பல அடி உயரத்திற்கு கரும்புகை எழும்பியது. நெருப்பை கட்டுப்படுத்த கரையிலிருந்தும், சிறிய படகுகளிலிருந்தும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இந்த விபத்தில், மியான்மரை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர். மாயமான 7 பேரை … Read more

பாலியல் தொழிலுக்காக பாகிஸ்தானிய பெண்களை 'இறக்குமதி' செய்யும் சீனா!

சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தட (CPEC) திட்டத்தை  சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனா பயன்படுத்துகிறது. வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை கையாள்வதில் பாகிஸ்தான் திணறி வரும் இந்த நேரத்தில், சீனா அதற்கு உதவாமல், நிலமையை தனக்கும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. இருப்பினும், சுயநலமே குறியாக கொண்ட சீனா இவ்வாறு நடந்து கொள்வதில் ஆச்சரியமில்லை. சீனா, பாகிஸ்தானில் இந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்குப் பின்னால் சீனாவின் வஞ்சகமான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரிகிறது. CPEC திட்டத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, … Read more

ஆறு மாத குழந்தை சுட்டுக் கொலை… அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரபலமான நகரங்களில் ஒன்றுதுலாரே. இந்த நகரின் ஒரு வீட்டில் இன்று துப்பாக்கி சூடு நடந்துள்ளது. தகவல் அறிந்து போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு விரைந்துள்ளனர். அப்போது அங்கு ஆறு மாத குழந்தை, தாய் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடந்ததை கண்டு போலீசாரே ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்ட போலீசார் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். … Read more