வேல்ஸ் இளவரசி டயானா அணிந்த கவுன் ஏலம்… எதிர்பார்த்ததை விட 5 மடங்கு அதிக விலைக்கு விற்பனை

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நடைபெற்ற ஏலத்தில் வேல்ஸ் இளவரசி டயானா-வின் ஆடை, இந்திய மதிப்பில் 5 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. ஆயிரக்கணக்கான முத்துகள், பட்டு இழைகள் சேர்த்து உருவாக்கப்பட்ட இந்த கவுன் 80 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் டாலர் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை விட 5 மடங்கு அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளதாக கலைப் பொருட்கள் சேகரிப்பு மற்றும் ஏல நிறுவனமான சாத்பைஸ் தெரிவித்துள்ளது. Source … Read more

நேர்காணலின் போதே பணிநீக்கம் செய்யப்பட்ட கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த ஆட்சேர்ப்பு பணியாளர்

கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த ஆட்சேர்ப்பு பணியாளர் ஒருவர், ஊழியர்களுக்கான நேர்காணலின்போதே பணிநீக்கம் செய்யப்பட்டார். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பணியாளர்களைப் பணியில் இருந்து நீக்கி வருகின்றனர். இந்நிலையில், கூகுள் நிறுவனத்தில் ஆட்சேர்ப்புப் பணியாளராக இருந்த டான் லானிகன் ரியான் என்பவரும் பணிநீக்கம் செய்யப்பட்டார். வேலைக்கு விண்ணப்பித்தவர்களுடன் தொலைபேசியில் நேர்காணல் நடத்தியபோது, திடீரென அழைப்பு துண்டிக்கப்பட்டு பணிநீக்க தகவல் தெரிவிக்கப்பட்டதாக லிங்க்டினில் அவர் குறிப்பிட்டுள்ளார். Source link

4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் உயிரினங்கள் தோன்றியிருக்க வாய்ப்பு… விஞ்ஞானிகள் தகவல்

4 புள்ளி 6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் சூரியனின் வெளிப்புறத்தில் இருந்து வெளியான விண்கற்களால் பூமியில் உயிரினங்கள் உண்டானதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், விண்கற்களில் பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் அதிக அளவில் இருப்பதைக் கண்டறிந்தனர். இவ்விரு தனிமங்களும் ஆவியாகும் தன்மை என்பதால், குறைந்த வெப்பநிலையில் இரண்டும் நீராவியாக மாறும் தன்மை கொண்டவை என தெரிவித்துள்ளனர். எனவே 4 புள்ளி 6 பில்லியன் … Read more

பல்கேரியாவில் பாரம்பரியமான முகமூடி திருவிழா கோலாகலம்.. பாரம்பரிய உடையணிந்து மக்கள் ஊர்வலம்

பல்கேரியாவில் பாரம்பரியமான முகமூடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தீய சக்திகளை விரட்டும் விதமாகவும், மக்களுக்கு அதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியத்தையும் கொண்டு வரும் விதமாகவும் இந்த திருவிழா நடத்தப்படுகிறது. விழாவையொட்டி பெர்னிக் நகரில், பாரம்பரிய உடைகள், விலங்குகளின் உரோமங்களால் ஆன உடைகளை அணிந்து முகமூடியுடன் வந்த நடனக் கலைஞர்கள் டிரம்ஸ் இசைத்தபடி ஊர்வலமாக சென்றனர்.. கொரோனா பரவல் காரணமாக இந்த திருவிழா 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெற்றுள்ளது. இதில் அல்பேனியா, இத்தாலி, ருமேனியா உள்ளிட்ட பல்வேறு … Read more

2023ல் இந்தியர்களுக்கு அதிக விசா: அமெரிக்க தூதரகம் முடிவு| The US Embassy has decided to approve visas for a large number of Indians in 2023

வாஷிங்டன் : 2023ல் அதிக எண்ணிக்கையில் இந்தயர்களுக்கான விசாவுக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க தூதரகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, மும்பையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜான் பல்லார்ட் கூறியதாவது: இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம், கடந்த ஆண்டில் 8 லட்சம் விசாவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த ஆண்டில் இன்னும் அதிக விசாக்களுக்கு ஒப்புதல் அளிக்கதிட்டமிட்டுள்ளோம். அதேபோல், முதல் முறையாக பி1, பி2 சுற்றுலா மற்றும் தொழில்முறை பயண விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு காத்திருப்புக் காலம் குறைக்கப்படுகிறது. … Read more

ஜெருசலேமில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தங்களின் பதில் வலுவாகவும், வேகமாகவும், துல்லியமாகவும் இருக்கும் – இஸ்ரேல் பிரதமர்!

ஜெருசலேமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு தங்களின் பதில் வலுவாகவும், வேகமாகவும், துல்லியமாகவும் இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஜெருசலேமில் உள்ள யூதர்களின் ஆலயத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைநகரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளதாகவும், தங்களை யார் காயப்படுத்த முயன்றாலும், அவர்களையும் அவர்களுக்கு உதவி செய்பவர்களையும் தாங்கள் காயப்படுத்துவோம் என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார். Source link

ஆஸ்திரேலியாவில் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் சீசியம் 137 மாயம்.. அதிகாரிகள் அச்சம்

ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமான முறையில் உயிரிழப்பை ஏற்படுத்தும் கதிரியக்கப் பொருள் காணாமல் போனதால் அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர். சீசியம் 137 எனப்படும் இந்த கதிரியக்க பொருள், கடந்த 10ஆம் தேதிக்கும் 16ஆம் தேதிக்கும் இடையே நியூமன் நகரத்திற்கும் பெர்த் நகரத்திற்கும் இடையே காணாமல் போனது. சுரங்கத்தில் இருந்து லாரியில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்ட போது இந்த சிறிய கதிரியக்கக் குடுவை மாயமானதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சுமார் ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேடுதல் வேட்டையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். … Read more

பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத மாணவிகளுக்கு தடை: தலிபான்கள் அதிரடி உத்தரவு| Ban on female university entrance exams: Taliban orders action

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காபூல்: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை, தலிபான் அரசு ஆட்சி செய்து வருகிறது. இங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெண்களை நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது என்று பல்கலைக்கழகங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டத்திற்கான நுழைவுத் தேர்வில் பெண்கள் பங்கேற்க முடியாது. எந்தவொரு பல்கலைக்கழகமும் ஆணையை … Read more

பல்கலை. நுழைவுத் தேர்வில் பங்கேற்க மாணவிகளுக்குத் தடை… தனியார் பல்கலைக்கழகங்களுக்கு தாலிபான்கள் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற உள்ள பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் மாணவிகளை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என தாலிபான் அரசு மிரட்டல் விடுத்துள்ளது. இது தொடர்பாக வடக்கு மாகாணங்களில் உள்ள தனியார் பல்கலைக்கழங்களுக்கு, அந்நாட்டு உயர் கல்வி அமைச்சகம் விடுத்துள்ள சுற்றறிக்கையில், மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்கும் பல்கலைக்கழங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தாலிபான்களின் இந்த அறிவிப்புக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்துள்ளது. Source link