தென்கொரியா நோக்கிச் சென்ற சரக்குக் கப்பல் மூழ்கியதில் 8 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு

ஜப்பான் மற்றும் தென் கொரியா இடையேயான கடல் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கியதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜின் தியான் என்று பெயரிடப்பட்ட சரக்குக் கப்பலில் சீனாவைச் சேர்ந்த 14 பேரும், மியான்மரைச் சேர்ந்த 8 பேரும் இருந்ததாகக் கூறப்படுகிறது. தென் கொரியா நோக்கிச் சென்ற இந்தக் கப்பல் ஜப்பானின் நாகசாகிக்கு தென்மேற்கே, கடந்த புதன்கிழமை விபத்தில் சிக்கியது. இதையடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கப்பல் மூழ்கியதில் 8 … Read more

அமெரிக்காவில், கொரோனா தாக்கிய முதல் ஆண்டில் இதய நோயால் பலியானோர் அதிகரிப்பு..!!

வாஷிங்டன், அமெரிக்காவில், கொரோனா தாக்கிய முதலாவது ஆண்டில் இதய நோயால் பலியானோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. கொரோனாவுக்கு முன்பு 2019-ம் ஆண்டில், இதய நோய்க்கு 8 லட்சத்து 74 ஆயிரத்து 613 பேர் இறந்தனர். 2020-ம் ஆண்டு, இதய நோய்க்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 28 ஆயிரத்து 741 ஆக உயர்ந்தது. இது, 6.2 சதவீதம் அதிகம். அதற்கு முன்பு, 2003-ம் ஆண்டுதான் அதிகம் பேர் இதய நோயால் உயிரிழந்து இருந்தனர். … Read more

இங்கிலாந்தில் வேகமாகப் பரவி வரும் நோரோ வைரஸ்… தொற்று பரவலால் மருத்துவமனைகள் விரைவில் நிரம்பும் அபாயம்

இங்கிலாந்தில் நோரோ வைரஸ் தாக்கம் நாளுக்கு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் விரைவில் நிரம்பி விடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 371 பேர் இந்த வைரசின் தாக்கத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர்கள், இந்த எண்ணிக்கை கடந்த வாரத்தை விட கிட்டத்தட்ட 8 விழுக்காடு அதிகம் என்று குறிப்பிட்டுள்ளனர். நோரோ வைரஸ் தாக்குதல் காரணமாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் ஆபத்தில் உள்ளதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். Source link

உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது, ஜப்பான்

டோக்கியோ, ஜப்பான் ‘ஐ.ஜி.எஸ். 7’ என்ற உளவு செயற்கைக்கோளை உருவாக்கியது. இந்த ரேடார் செயற்கைக்கோள், மின்காந்த கண்காணிப்பு அமைப்புடன் இரவிலும், கடுமையான வானிலை நிலவுகிற நேரங்களிலும் படங்களைப் பிடிக்கும் என்று கேபிடன் செயற்கைக்கோள் புலனாய்வு மையம் தெரிவித்தது. இந்த ‘ஐ.ஜி.எஸ். 7 ‘ செயற்கைக்கோளை ’46 எச்2ஏ’ ராக்கெட் சுமந்து கொண்டு ககோஷிமா மாகாணத்தில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 10.50 மணிக்கு விண்ணில் சீறிப்பாய்ந்தது. இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட … Read more

உளவு வேலையில் ஈடுபட்ட சீன என்ஜினீயருக்கு அமெரிக்காவில் 8 ஆண்டு சிறை

வாஷிங்டன், சீனாவை சேர்ந்தவர் என்ஜினீயர் ஜி சாவோகுன். இவர் மாணவர்களுக்கான விசாவில் அமெரிக்காவுக்கு சென்று, அங்கு உளவு வேலையில் பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் சீன அரசின் உளவு அமைப்பின் உத்தரவுப்படி அமெரிக்காவில் விமான வர்த்தக ரகசியங்களை திருடவும் முயற்சித்துள்ளார். மேலும் ஆள் சேர்ப்புக்காக விஞ்ஞானிகளையும், என்ஜினீயர்களையும் அடையாளம் கண்டுள்ளார். இவர் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டது. 2018-ம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார். கடந்த செப்டம்பர் மாதம், அமெரிக்க அட்டார்னி ஜெனரலுக்கு அறிவிக்காமல், வெளிநாட்டு அரசின் … Read more

உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு மிக முக்கியம் – ரஷியா கருத்து

மாஸ்கோ, உலக பொருளாதாரம் குறித்து ரஷியா வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு மிக முக்கியம். பொருளாதார வளர்ச்சியில் முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஆசிய நாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு அதிகமாக உள்ளது. சீனா, இந்தியாவை பற்றி குறிப்பிட வேண்டுமானால், இரு நாடுகளும் அந்தந்த பிராந்தியங்களுக்கான அதிகார மையங்களாக செயல்படுகின்றன. அதனால் உலக அளவில் அவர்களின் திறனை புறக்கணிக்க முடியாது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் கோரிக்கைக்கு ரஷ்யா ஆதரவாக இருக்கிறது. … Read more

ஆஸ்திரேலியாவில் உள்ள கோயில்களில் வன்முறையை தூண்டும் சம்பவங்கள் – இந்திய தூதரகம் கண்டனம்

கேன்பெரா: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள சுவாமி நாராயண் கோயிலில், சமூக விரோதிகள் சிலர் கடந்த 12-ம் தேதி இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதினர். இதேபோல் விக்டோரியா பகுதியில் உள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோயிலிலும் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் கடந்த 16-ம் தேதி எழுதப்பட்டன. இந்நிலையில் ஆல்பர்ட் பார்க் பகுதியில் உள்ள இஸ்கான் கோயில் சுவரில் ‘காலிஸ்தான் வாழ்க, இந்துஸ்தான் ஒழிக’என்ற வாசகங்கள் எழுதப்பட்டன. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய தூதரகம் கூறியிருப்பதாவது: மெல்பர்னில் … Read more

ஹிஜாப் இன்றி செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனை – ஸ்பெயின் பிரதமருடன் சந்திப்பு

மாட்ரிட், ஈரான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், மாஷா அமெய்னி என்ற இளம்பெண் ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்டார். பின்னர் போலீசாரின் காவலில் வைக்கப்பட்டிருந்த மாஷா அமெய்னி, மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது மரணத்திற்கு நீதி கேட்டு ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்தது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்த போராட்டத்திற்கு சர்வதேச அளவில் பல்வேறு பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஈரான் நாட்டைச் … Read more

ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல்: இந்திய தூதரகம் கடும் கண்டனம்| Attack on Hindu Temples: Indian Embassy Strongly Condemns

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் மூன்று ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதற்கு அங்குள்ள இந்திய துாதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களில், மூன்று ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவற்றை சூறையாடியதுடன், கோவில் சுவரில், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் எழுதப்பட்டன. முதல் தாக்குதல், மெல்போர்னில் உள்ள சுவாமிநாராயண் கோவிலில் நடந்தது. இதைத் தொடர்ந்து விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு … Read more

ஐரோப்பாவில் தஞ்சமடைய உரிமை இல்லாத மக்களை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப முடிவு..!

ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகளை திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ஐரோப்பிய ஒன்றியம் ஈடுபட்டுள்ளது. ஐரோப்பாவில் தஞ்சமடைய உரிமை இல்லாதவர்களை அதன் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் வகையில் விசா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் இன்று கூடி விவாதிக்கின்றனர். ஐ.நா அறிக்கையில் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் போர்கள் மற்றும் வறுமையால் வெளியேறும் மக்கள் கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து … Read more