உலக செய்திகள்
ஜெரூசலேம் அருகில் வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கிச் சூடு… பொதுமக்கள் 7 பேர் உயிரிழப்பு
இஸ்ரேலில் உள்ள கிழக்கு ஜெரூசலேத்தில் தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டதில் பெண் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர். ஜெரூசலேம் அருகில் உள்ள யூத வழிபாட்டுத் தளத்தில் 21 வயது இளைஞன் ஒருவன் திடீரென துப்பாக்கியால் சுட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. துப்பாக்கியால் சுட்ட நபர் காரில் ஏறி தப்ப முயன்றபோது போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடைபெற்றது. Source link
நேபாள துணை பிரதமர் டிஸ்மிஸ்| Nepal Deputy Prime Minister Dismissed
காத்மாண்டு: போலி குடியுரிமை பெற்றதாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், நேபாளம் துணை பிரதமர் , உள்துறை அமைச்சரான ராபி லாமிச்சனே இன்று அப்பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார். நேபாளம் நாட்டின் முக்கிய கட்சி ஒன்றின் ,த பாராளுமன்ற எம்.பி.யும். உள்துறை அமைச்சரும்,துணை பிரதமருமான ராபி லாமிச்சனே, இவர் போலி குடியேற்ற உரிமை சான்று தயாரித்தது, பாஸ்போர்ட் தயாரித்தது ஆகிய குற்றங்கள் செய்ததாக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் ராபி லாமிச்சனே ஆஜரானார் வழக்கை விசாரித்த … Read more
அம்மா, அம்மா என்று கதறிய கறுப்பின இளைஞர்; போலீஸ் வன்முறையில் பலி: அமெரிக்காவில் கொடூரம்
மெம்ஃபிஸ்: அமெரிக்காவில் டயர் நிக்கோலஸ் என்ற 29 வயது கறுப்பின இளைஞர் ஒருவர் போலீஸ் வன்முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவங்கள் புதிதல்ல என்பதை நிரூபிப்பது போலவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் மெம்ஃபிஸ் நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அதுவும் அவரத்து வீட்டிலிருந்து 90 மீட்டர் தொலைவில் தான் இந்தக் கொடூரம் நடந்துள்ளது. பைக்கில் வந்து கொண்டிருந்த நிக்கோலஸை போலீஸார் திடீரென சுற்றி வளைக்கின்றனர். அப்போது அவரை தரையில் படுக்குமாறு எச்சரிக்கின்றனர். … Read more
நியூசிலாந்து : கனமழை – வெள்ளத்தில் மிதக்கும் சாலைகள்
நியூசிலாந்தில், கொட்டித் தீர்த்த அதி கனமழையால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆக்லாந்து சுற்றியுள்ள புறநகர் பகுதியில் இடைவிடாது பெய்த மழையால், நெடுஞ்சாலைகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கி விட்டன. இதனால், வாகனங்கள் கடந்து செல்ல முடியாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனமழை-வெள்ள பாதிப்பால் ஆக்லாந்து நகர நிர்வாகம் அவசர நிலையை பிறப்பித்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். கனமழையால், ஆக்லாந்து நகர சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு, … Read more
அர்ஜெண்டினாவில் சூறைக்காற்றுடன் கொட்டிய ஆலங்கட்டி மழை : கார்கள், வீடுகள் சேதம்
தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில், டென்னிஸ் பந்து அளவில் வானிலிருந்து விழுந்த பனிக்கட்டிகளால் கடும் சேதம் ஏற்பட்டது. சான் லூயிஸ் மாகாணத்தில் சூறாவளி புயலுடன், ஆலங்கட்டி மழையும் பெய்தது. அப்போது, வானில் இருந்து விழுந்த ஐஸ் கட்டிகளால் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், வீடுகளின் மேற்கூரைகள்-ஜன்னல்கள், விளை நிலங்கள் சேதமடைந்தன. ஆலங்கட்டி மழையால், சாலையில் நடந்து சென்றவர்கள் அவதிக்குள்ளாயினர். புயலைத் தொடர்ந்து, சான் லூயிஸ் மாகாணத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. Source link
பொருளாதார சக்தியின் புதிய மையங்களுக்கான வளர்ச்சியை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது: ரஷியா
மஸ்சாவா, உக்ரைனில் நடந்து வரும் போரானது 11 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. எனினும், ரஷியா தனது படையெடுப்பை நிறுத்தவில்லை. தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அந்நாடு ரஷியாவின் பல நகரங்களை கைப்பற்றுவதும், பின்னர் அவற்றை உக்ரைன் மீட்டெடுப்பதும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், ரஷியாவின் வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ் எரித்ரியா நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போது, அமெரிக்காவை சாடி பேசினார். பன்முக தன்மை கொண்ட உலகை நிறுவுவது என்பது ஒரு … Read more
மடகாஸ்கரை புரட்டிபோட்ட “சென்ஷோ” புயல்… வெள்ளம் – மண்சரிவுகளில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு
கிழக்கு ஆப்ரிக்க நாடான மடகாஸ்கரில், “செனிஷோ” புயலால் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். இந்திய பெருங்கடலில் உருவான செனிஷோ புயல் வலுவடைந்து ஜனவரி 19-அன்று மடகாஸ்கரில் கரையை கடந்தது. தொடர்ந்து, அங்கு சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கனமழையால் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். புயலால் 13 ஆயிரம் வீடுகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்தன. வெள்ளத்தில் … Read more
இஸ்ரேலில் 7 பேர் படுகொலை – இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடிய பாலஸ்தீனியர்கள்
ஜெருசலேம், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. அதேவேளை மேற்குகரை பகுதி பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நிர்வகித்து வருகிறார். ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. அதேவேளை, ஹமாஸ் … Read more
டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி; ஒரு டாலர் 262 ரூபாய்…!
லாகூர், பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இதன் காரணமாக உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தடுப்பாடு, விலைவாசி உயர்வு என பல்வேறு பிரச்சினைகளை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்பட சர்வதேச நிதி அமைப்புகளிடம் பாகிஸ்தான் கடன் வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில், பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி … Read more