ஐரோப்பாவில் தஞ்சமடைய உரிமை இல்லாத மக்களை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப முடிவு..!

ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகளை திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ஐரோப்பிய ஒன்றியம் ஈடுபட்டுள்ளது. ஐரோப்பாவில் தஞ்சமடைய உரிமை இல்லாதவர்களை அதன் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் வகையில் விசா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் இன்று கூடி விவாதிக்கின்றனர். ஐ.நா அறிக்கையில் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் போர்கள் மற்றும் வறுமையால் வெளியேறும் மக்கள் கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து … Read more

டொயோட்டா நிறுவனத்தின் புதிய சி.இ.ஒ ஆகிறார் ‘கோஜி சடோ’..!

டொயோட்டா நிறுவனத்தின் லெக்சஸ் சொகுசு கார் பிரிவின் தலைவர் கோஜி சடோ (Koji Sato), தாய் நிறுவனமான டொயோட்டா-விற்கும் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார். டொயோட்டா நிறுவனர் Sakichi Toyoda-வின் பேரன் அகியோ டொயோடா, மார்ச் மாதத்துடன் பதவி விலக உள்ளார். அவரது கோரிக்கையை ஏற்று, லெக்சஸ் பிரிவின் தலைவரான கோஜி சடோ (Koji Sato) தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார். மின்சார கார் தயாரிப்பில் டொயோட்டா பின்தங்கியுள்ளதால், அதில் தடம் பதிப்பது கோஜி … Read more

எகிப்தின் சக்காரா நகரில் 4,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறைகள் கண்டுபிடிப்பு..!

எகிப்தின் சக்காரா நகரில் நான்காயிரத்து 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரச குடும்பத்தினரின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுண்ணாம்பு கற்களால் வடிவமைக்கப்பட்ட அந்த சவப்பெட்டிகளில், மதகுரு, உயரதிகாரிகள் ஆகியோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தன. பண்டைய எகிப்தியர்களின் வாழ்வியலை விளக்கும் ஓவியங்களும், நேர்த்தியாக வடிக்கப்பட்ட சிலைகளும் அவற்றுடன் இருந்துள்ளன. Source link

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க ஒப்புதல்; ரஷ்யா உடனடி தாக்குதல்.!

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். வரலாற்று ரீதியாக ரஷ்யாவின் ஒரு பகுதி உக்ரைன் என ரஷ்யா கூறிவருகிறது. ஆனால் தாங்கள் தனித்துவமானவர்கள் என உக்ரேனியர்கள் கூறிவருகின்றனர். இந்த சூழலில் நேட்டோவில் இணைய உக்ரைன் சம்மதம் தெரிவித்ததால், அதை எதிர்த்து ரஷ்யா போரை தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் … Read more

அமெரிக்காவில் தொழில்அதிபர் ஒருவர் வயது குறைப்பிற்காக ஆண்டுக்கு 2 மில்லியன் டாலர் செலவு செய்கிறார்..!

அமெரிக்காவில் 45 வயது தொழில்அதிபர் ஒருவர் தனது உடலை 18 வயதுக்காரரின் உடலமைப்பைப் போன்று மாற்றுவதற்காக ஆண்டுக்கு 2 மில்லியன் டாலரை செலவழிக்க உள்ளதாக அறிவித்து அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். கலிபோர்னியாவைச் சேர்ந்த ப்ரையன் ஜான்சன் தனது உடலமைப்பை மாற்றுவதற்காக 30 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களை உடன் வைத்துக் கொண்டு அவர்கள் தயாரித்துக் கொடுத்த திட்ட அறிக்கையின் படியே காலையில் எழுவது முதல் படுக்கைக்குச் செல்லும் வரையில் நடப்பதோடு, தினமும் ஆயிரத்து 977 கலோரி … Read more

இதயம் முதல் ஆணுறுப்பு வரை: என்றும் இளமைக்கு 2 மில்லியன் டாலர் – கோடீஸ்வரரின் வினோத சிகிச்சை

இளமையாக இருக்க வேண்டும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என அனைவரும் விரும்புவார்கள். அதற்காக உணவுமுறையில் கட்டுப்பாடு, தொடர் உடற்பயிற்சி மட்டுமின்றி இளமை தோற்றத்திற்காக சமருத்திற்கு என்று பிரத்யேக கவனிப்பையும் பலரும் மேற்கொள்வார்கள். குறிப்பாக, சமருத்திற்கு என்ரு வரும்போது, விலை உயர்ந்த பொருள்களையும், சிகிச்சையையும் பலரும் நாடுகின்றனர். அந்த வகையில், 45 வயதான மென்பொருள் பொறியாளரான ஒருவர் தான் 18 வயதான இளைஞர் போன்று இருக்க வேண்டும் என்பதற்காக 2 மில்லியன் அமெரிக்க டாலரை செலவழித்துள்ளார் என்று … Read more

பிரதமர் குறித்த பிபிசி ஆவணப்படத்திற்கு தடை; அமெரிக்கா பரபரப்பு கருத்து.!

‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ எனும் தலைப்பிலான பிபிசியின் ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில், இங்கிலாந்தில் 2001 முதல் 2006ம் ஆண்டு வரை இருந்த வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் ஜேக் ஸ்ட்ரா, பேசிய கருத்துக்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் கலவர புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகளைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில், கலவரத்துக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் நேரடி காரணம் என சுட்டிக்காட்டப்படுகிறது. இதையடுத்து, இந்த ஆவணப்படத்திற்கு … Read more

அதிர்ச்சி சம்பவம்! தன்னை கொல்ல வந்த கசாப்பு கடைக்காரரை போட்டுத் தள்ளிய பன்றி!

பன்றி ஒன்று இறைச்சிக் கடைக்காரரைக் கொன்று குவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, 61 வயதான கசாப்புக் கடைக்காரர் பன்றியால் தாக்கப்பட்டார் என்றும், அவருக்கு 40-சென்டிமீட்டர் (15 அங்குலம்) ஆழத்திற்கு காயங்கள் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். அவர் நகரின் வடக்கு பகுதியில் உள்ள ஷீயுங் சுய் இறைச்சிக் கூடத்தில் தரையில் விழுந்து கிடந்தார் எனவும் போலீஸார் தெரிவித்தனர். கசாப்புக் கடைக்காரர் பன்றியைக் கொல்லத் தயாராகிக்கொண்டிருந்த நிலையில், கதை தலைகீழானது. முன்னதாக, பன்றியை கொல்ல கசாப்புக் … Read more

ஹோட்டலில் மெதுவாக சாப்பிட்டால் ரூ. 10 ஆயிரம் அபராதம்…

மருத்துவர்கள் உள்பட அனைவரும் உணவை மெதுவாக சாப்பிட வேண்டும் என்றே பரிந்துரைக்கின்றனர். உணவை மெதுவாக சாப்பிட்டு உமிழ்நீருடன் சேர்த்து உட்கொண்டால்தான் அது எளிதாக ஜீரணமாகும் என கூறப்படுகிறது. ஆனால், இங்கு ஒருவருக்கு உணவை மெதுவாக சாப்பிட்டதால் சுமார் ரூ. 10 ஆயிரம் அபராதத்தை செலுத்தியுள்ளார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.  இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் நகரத்தில் உள்ள நியூமார்க்கெட் சாலையில் உள்ள மெக்டோனால்ஸ் ஃபாஸ்ட் புட் உணவகத்தில் ஷபூர் மெஃப்தா என்பவர் தனது சகோதரரை சந்தித்து உணவருந்தியுள்ளார். அப்போது … Read more

வியர்வை, சிறுநீர் வாடை வாயிலாக புற்றுநோயை கண்டறியும் எறும்புகள்| Ants detect cancer through sweat and urine stings

வாஷிங்டன்: சிறுநீரில் இருந்து வெளிப்படும் வாடை வாயிலாக, புற்றுநோயை கண்டறியும் திறன் எறும்புகளுக்கு உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக, அமெரிக்க நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பவரின் சிறுநீர் மற்றும் வியர்வையை மோப்பம் பிடித்து நோயை கண்டறியும் திறன் நாய்களுக்கு உள்ளதாக ஏற்கனவே பல்வேறு ஆய்வுகளில் நிரூபணமாகி உள்ளது. இந்த வகையில், எறும்புகளுக்கும் இந்த திறன் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். புற்றுநோய் கட்டிகளில், ‘வொலட்டைல் ஆர்கானிக் காம்ப்பவுண்ட்’ என்ற கரிமக் கலவை காணப்படும். இந்த … Read more