உணவில்லாமல் வாடும் மக்கள்! ஆடம்பரமாய் வாழும் நவாப்கள்! பாகிஸ்தானின் அவல நிலை!

அண்டை நாடான பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசமாகி வருகிறது. நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை தொடுவதாலும், உணவு பொருட்கள் பற்றாக்குறை நீடிப்பதாலும், அங்கு மக்கள் உணவுக்காக அடித்திக் கொள்ளும் வீடியோக்கள் பல சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில், உலக வங்கி, IMF கடன் வழங்குவார்கள் என பாகிஸ்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இங்கு மக்களின் முக்கிய உணவாக இருக்கும் கோதுமை மாவு மற்றும் பருப்பு விலைகள் … Read more

கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் தலைகீழாய் கவிழ்ந்த பேருந்து… பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

துருக்கியில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மாலத்யாவில் 7 பயணிகளுடன் பேருந்து ஒன்றுசென்று கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் இருந்து விலகி அருகிலிருந்த ஏரிக்குள் பாய்ந்தது. பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் இந்த விபத்து காட்சிகள் பதிவாகி உள்ளன. Source link

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததாக அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 11 பிராந்தியங்களில் 35 கட்டடங்கள் மற்றும் மின்நிலையங்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்யா தாக்குதல் நடத்தும் முன்னதாக வான்வழி தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலித்ததால் கீவ் பொதுமக்கள் ஏராளமானோர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். ரஷ்யா வீசிய 55 ஏவுகணைகளில், ஹைப்பர்சோனிக் ஏவுகணை உள்பட 47 ஏவுகணைகள் மற்றும் 24 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் … Read more

பாகிஸ்தான் நாணய மதிப்பில் வரலாறு காணாத வீழிச்சி: பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்

புதுடெல்லி: நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பல பிரச்சனைகள் தினம் தினம் முளைத்து வருகின்றன. விலைவாசி உயர்வு, நிலையற்ற பொருளாதாரம்,  பணவீக்கம், உறுதியற்ற அரசியல் தலைமை என ஏகப்பட்ட இன்னல்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் சிக்கித் தவிக்கின்றது. இந்த நிலையில், வியாழக்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தானின் நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்தது. ஒரு டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ரூ. 255 ஆக குறைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  சர்வதேச நாணய … Read more

கடல் நீர்மட்டம் கணித்ததை விட வேகமாக அதிகரித்து வருகிறது…. நாசா விண்கலம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு

உலகில் கடல் நீர்மட்டம் ஏற்கனவே கணித்ததை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2018ல் செலுத்தப்பட்ட ICESat-2  என்ற நாசா செயற்கைக்கோள் அளவீடுகளைக் கொண்டு கடல் நீர்மட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், விஞ்ஞானிகள் நினைத்ததை விட கடலுக்கும் நிலப்பரப்புக்குமான உயரம் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடல் நீர்மட்டம் இரண்டு மீட்டர் அதிகரிக்கும் பட்சத்தில் பாங்காக்கின் பெரும்பகுதியையும், உலகம் முழுவதும் 24 கோடி மக்களையும் கடல் மட்டத்திற்கு கீழே வைக்கக்கூடும் எனத் தெரியவந்துள்ளது.  Source … Read more

1000 டன் அளவிற்கு பெயர்ந்து விழுந்த பிரமாண்ட பாறை

இங்கிலாந்தில் உள்ள கடற்கரையில் ஆயிரம் டன் எடை கொண்ட பழங்காலப் பாறை பெயர்ந்து விழுந்தது. டோர்செட் என்ற இடத்தில் உள்ள ஜூராசிக் கடற்கரையில் பிரமாண்ட பாறை அமைந்துள்ளது. மேற்கு விரிகுடா என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் பாறையில் விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து சில நிமிடங்களில் 150 அடி உயரத்திற்கு பாறை பெயர்ந்து விழுந்தது. பாறை விழுந்த இடத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பாறைக்கு அடியில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் இந்தச் சரிவு ஏற்பட்டிருக்கலாம் … Read more

ஒசாமா பின் லேடனைப் போன்றே அதிரடியாய் ISIS தீவிரவாதத்தலைவரை சுட்டுக் கொன்ற அமெரிக்கா

சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இஸ்லாமிய அரசின் மூத்தத் தலைவரை அமெரிக்க ராணுவம் கொன்றது. ஆப்கானிஸ்தானைக் கட்டுப்படுத்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கிளைக்கும் நிதி உதவி செய்துவந்தார் பிலால் அல்-சூடானி. ஆப்ரிக்காவில் உள்ள ஐஎஸ் கிளைகளுக்கு நிதியுதவி அளித்து வந்தவர் அல்ப்சூடானி என்று பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வடக்கு சோமாலியாவில் உள்ள தனது மலைத் தளத்தில் இருந்து அல்-சூடானி இயங்கி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  நேற்று, (ஜனவரி 26, வியாழன்) அமெரிக்க அதிபர் ஜோ … Read more

தென்கொரியா நோக்கிச் சென்ற சரக்குக் கப்பல் மூழ்கியதில் 8 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு

ஜப்பான் மற்றும் தென் கொரியா இடையேயான கடல் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கியதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜின் தியான் என்று பெயரிடப்பட்ட சரக்குக் கப்பலில் சீனாவைச் சேர்ந்த 14 பேரும், மியான்மரைச் சேர்ந்த 8 பேரும் இருந்ததாகக் கூறப்படுகிறது. தென் கொரியா நோக்கிச் சென்ற இந்தக் கப்பல் ஜப்பானின் நாகசாகிக்கு தென்மேற்கே, கடந்த புதன்கிழமை விபத்தில் சிக்கியது. இதையடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கப்பல் மூழ்கியதில் 8 … Read more

அமெரிக்காவில், கொரோனா தாக்கிய முதல் ஆண்டில் இதய நோயால் பலியானோர் அதிகரிப்பு..!!

வாஷிங்டன், அமெரிக்காவில், கொரோனா தாக்கிய முதலாவது ஆண்டில் இதய நோயால் பலியானோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. கொரோனாவுக்கு முன்பு 2019-ம் ஆண்டில், இதய நோய்க்கு 8 லட்சத்து 74 ஆயிரத்து 613 பேர் இறந்தனர். 2020-ம் ஆண்டு, இதய நோய்க்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 28 ஆயிரத்து 741 ஆக உயர்ந்தது. இது, 6.2 சதவீதம் அதிகம். அதற்கு முன்பு, 2003-ம் ஆண்டுதான் அதிகம் பேர் இதய நோயால் உயிரிழந்து இருந்தனர். … Read more

இங்கிலாந்தில் வேகமாகப் பரவி வரும் நோரோ வைரஸ்… தொற்று பரவலால் மருத்துவமனைகள் விரைவில் நிரம்பும் அபாயம்

இங்கிலாந்தில் நோரோ வைரஸ் தாக்கம் நாளுக்கு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் விரைவில் நிரம்பி விடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 371 பேர் இந்த வைரசின் தாக்கத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர்கள், இந்த எண்ணிக்கை கடந்த வாரத்தை விட கிட்டத்தட்ட 8 விழுக்காடு அதிகம் என்று குறிப்பிட்டுள்ளனர். நோரோ வைரஸ் தாக்குதல் காரணமாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் ஆபத்தில் உள்ளதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். Source link