அமெரிக்காவில் இந்தியரை கொன்ற மர்ம நபர்கள்| Mysterious people who killed an Indian in America

நியூயார்க்: அமெரிக்காவில், முகமூடி அணிந்த மர்ம நபர்களால் இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்டார்; இவரது மனைவி மற்றும் மகள் பலத்த காயமடைந்தனர். அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த இந்தியர் பினால் படேல், ௫௦, இவரது மனைவி ரூபல்பென் படேல் மற்றும் மகள் பக்தி படேல் மூவரும், ஜன., ௨௦ம் தேதி பணியை முடித்துவிட்டு, தங்கள் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, கார் நிறுத்தும் இடத்தில் முகமூடி அணிந்த மூன்று நபர்கள், துப்பாக்கியை காட்டி இவர்களை மிரட்டினர். அவர்களை பினால் படேல் … Read more

ஒரே ஒரு டிக்கெட்; ரூ.33 கோடி பரிசு- லைஃப் டைம் செட்டில்மெண்ட் ஆன துபாய் மாப்பிள்ளை!

தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஏழை, எளிய மக்களின் சுரண்டி வாழ்வாதாரத்தை பாதிப்பதாக எழுந்த குற்றச்சாட்டால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தடை செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். ஆனால் பிற மாநிலங்களில், பல்வேறு நாடுகளில் லாட்டரி சீட்டுகள் இன்னும் பயன்பாட்டில் தான் இருக்கின்றன. ஆனால் அளவாக பணத்தை செலவிட்டு லாட்டரி சீட்டுகளில் ஜாக்பாட் பரிசை அள்ளும் பலரை பற்றி செய்திகளில் கேள்விப்பட்டிருப்போம். பிலிப்பைன்ஸ் இளைஞர் அப்படி ஒரு நிகழ்வு துபாயில் நடந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டை … Read more

பாலகோட் தாக்குதலின் போது இந்தியா – பாக். இடையே அணு ஆயுத போரை தவிர்த்தோம்: புத்தகத்தில் அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தகவல்

வாஷிங்டன்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில்நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு, பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாதமுகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் பிப்ரவரி 26-ம் தேதி தாக்குதல் நடத்தின. அப்போது, இந்தியா – பாகிஸ்தான் இடையே அணுஆயுத தாக்குதல் ஏற்படும் சூழலைதவிர்த்ததாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். அவர் எழுதியுள்ள ‘ஒரு அங்குலம் கூட விட்டுக் கொடுக்க மாட்டோம். நான் நேசிக்கும் அமெரிக்காவுக்கான போராட்டம்’ என்ற புத்தகம்கடந்த செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு வந்தது. அதில் … Read more

இரண்டாண்டு தடைக்குப் பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் மீண்டும் ட்ரம்ப்: மெட்டா விளக்கம்

வாஷிங்டன்: பேஸ்புக், இஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு கால தடை முடிந்து அவர் மீண்டும் அவற்றில் அனுமதிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் அவர் இந்தத் தளங்களில் இயங்க அனுமதிகப்படுவார் என்று மெட்டா சர்வதேச விவகாரங்களின் தலைவர் நிக் க்ளெக் தெரிவித்தார். இது குறித்து நிக், “2021 அமெரிக்க கலவரத்திற்குப் பின்னர் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதற்கான தடை … Read more

ரஷ்யாவைப் போரில் எதிர்கொள்ள 31 ஆப்ரம்ஸ் பீரங்கிகள்.. ஜெர்மனியைத் தொடர்ந்து உக்ரைனுக்கு அமெரிக்காவும் வழங்க முடிவு..!

ரஷ்யாவை போரில் எதிர்கொள்வதற்காக உக்ரைனுக்கு 31 ஆப்ரம்ஸ் பீரங்கிகளை அனுப்பி வைக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் சரமாரியான ஏவுகணைத் தாக்குதலை சமாளிக்க பீரங்கிகள் தேவை என அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார். ஜெர்மனி உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள் அதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தன. இந்நிலையில் அமெரிக்காவும் 31 பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இதனிடையே வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் வீரர்களுக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்கும் என்று கூறியுள்ளார். … Read more

“ஐ.எம்.எப். கடனுக்காக கடுமையான நிபந்தனைகளை ஏற்கத் தயார்” – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு

பன்னாட்டு நிதி அமைப்பான ஐஎம்எப் மீண்டும் கடன் வழங்குவதற்கு கடுமையான நிபந்தனைகளை விதித்தால் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கசப்பு மருந்தை ஏற்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாகக் கூறினார். பாகிஸ்தானில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு நீடிக்கிறது. இந்நிலையில் ஐஎம்எப் நிபந்தனைகளை ஏற்கத் தயார் என்று அவர் கூறினார் , இது தொடர்பாக ஐஎம்எப் பின் மேலாண்மை இயக்குனருடன் தாம் பேச்சு நடத்தியதாகவும் பாகிஸ்தான் பிரதமர் … Read more

உலகம் முழுவதும் முடங்கிய மைக்ரோசாப்ட் சேவைகள்

லண்டன், உலகம் முழுவதும் நேற்று மைக்ரோசாப்டின் அவுட்லுக், டீம்ஸ், மைக்ரோசாப்ட் 365 போன்றவற்றின் சேவைகள் பல மணி நேரம் முடங்கின. அவுட்லுக் சேவை முடங்கியதால் மின்னஞ்சல்களை அனுப்பவும், பெறவும் முடியமால் போனதாக பயனர்கள் தெரிவித்தனர். உலகம் முழுவதும் பாதிப்பு இருந்தபோதும் இந்திய பயனர்களே அதிகம் புகார் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல் ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் பயனர்களும் மைக்ரோசாப்டின் சேவைகள் முடங்கியதாக புகார் அளித்தனர். அதை தொடர்ந்து, மைக்ரோசாப்ட் 365 … Read more

China: குளிர் அலையால் மட்டுமல்ல இயற்கை எரிவாயு பற்றாக்குறையாலும் அவதியுறும் சீனா

பெய்ஜிங்: குளிர் அலையால் மட்டுமல்ல இயற்கை எரிவாயு பற்றாக்குறையாலும் அவதியுறும் சீன மக்களின் உறைந்து போன வாழ்க்கை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு போதுமான எரிவாயு விநியோகத்தை பராமரிக்க முடியாமல் நாடு திண்டாடுகிறது. இது குளிர்காலத்தை மக்களுக்கு கொடுமையானதாக மாற்றிவிட்டது. இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக ஏற்கனவே அரசாங்கத்தின் மீது கோபத்தில் இருக்கும் சீனர்களுக்கு … Read more

ஆண்ட்ராய்ட், டேப்லட்களில் மூன்றாம் தரப்பு சர்ச் எஞ்சின்களைப் பயன்படுத்தலாம் – கூகுள் நிறுவனம்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, ஆண்ட்ராய்டு பயனர்கள் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை சர்ச் எஞ்சின்களாகப் பயன்படுத்த அனுமதிப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. பயனர்கள் புதிய ஆண்ட்ராய்டு ஃபோன் அல்லது டேப்லெட்டை புதிதாக இயக்கத் தொடங்கும் போதெல்லாம் தங்களுக்கு விருப்பமான சர்ச் எஞ்சினைத் தேர்வு செய்யலாம் என கூறியுள்ளது. கூகுள் மேப்ஸ் போன்ற ஆண்ட்ராய்டு சாதனங்களில் முன்பே நிறுவப்பட்ட கூகுளுக்குச் சொந்தமான பயன்பாடுகளை நீக்க பயனர்களை அனுமதிக்கும் பிற நடவடிக்கைகளையும் இந்திய வணிகப் போட்டி ஆணையம் வலியுறுத்தியுள்ளது. பல சந்தைகளில் … Read more

உக்ரைன் போரில் இங்கிலாந்தை சேர்ந்த தன்னார்வ உதவி ஊழியர்கள் 2 பேர் பலி

லண்டன், உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 11 மாதங்களுக்கும் மேலாக போர் நடத்தி வருகிறது. இந்த போர் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரை பறித்ததோடு, லட்சக்கணக்கான மக்களை அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புக செய்துள்ளது. கல்வி, வேலை மற்றும் பிற தேவைகளுக்காக உக்ரைனுக்கு சென்ற வெளிநாட்டினர் பெரும்பாலானோர் போர் தொடங்கியதும் அங்கிருந்து வெளியேறினர். அதே சமயம் வெளிநாடுகளை சேர்ந்த தன்னார்வ உதவி ஊழியர்கள் பலர் போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு சென்று அந்த நாட்டு மக்களுக்கு மனிதாபிமான … Read more