குறிப்பிட்ட உடற்பயிற்சியை செய்து முடித்தால் இலவச பேருந்து சீட்டு.. வித்தியாசமான யோசனையை கடைபிடிக்கும் ருமேனியா..!

ருமேனியாவில், குறிப்பிட்ட உடற்பயிற்சியை செய்து முடிப்போருக்கு இலவச பேருந்து சீட்டு வழங்கப்படுகிறது. இணையத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், எந்திரத்தின் முன் நின்று, பெண் ஒருவர் ஸ்குவாட் எனப்படும் உடற்பயிற்சியை செய்கிறார். குறிப்பிட்ட அளவான இருபது ஸ்குவாட்களை, அந்த பெண் செய்து முடித்தவுடன், அவருக்கு இலவச பேருந்து சீட்டை அந்த எந்திரம் வழங்கியது. மக்களை ஊக்கப்படுத்தவும், நல்ல உடல்வாகுடன் இருக்கவும், குறிப்பிட்ட உடற்பயிற்சியை செய்வோருக்கு இலவச டிக்கெட்களை ருமேனியா வழங்குகிறது. Source link

அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா இக்கட்டான சூழலை உருவாக்குகிறது – ஈரான் குற்றச்சாட்டு

டெஹ்ரான், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்கா வெளியேறியது. இதையடுத்து அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஈரான் ஒவ்வொன்றாக புறக்கணித்து வந்தது. அதே சமயம் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு இணங்கி நடந்ததால் அந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறி வருகிறது. இந்நிலையில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான தற்போதைய இக்கட்டான நிலைக்கு, அமெரிக்காவின் தவறான நடத்தையே முக்கிய காரணம் என்று ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நாசர் கனானி கூறியுள்ளார். … Read more

8 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய மலேசிய விமானம் திட்டமிட்டே மூழ்கடிக்கப்பட்டதா.?

8 ஆண்டுகளுக்கு முன், 239 பயணிகளுடன் தென் சீன கடலில் மாயமான மலேசிய விமானத்தை பைலட் திட்டமிட்டே கடலில் மூழ்கடித்திருக்கலாம் என வல்லுநர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். கோலாலம்பூரில் இருந்து பீஜிங் புறப்பட்ட அந்த விமானத்தின் Landing Gear கதவை, மடகாஸ்கர் நாட்டு மீனவரின் மனைவி துணி துவைக்கும் சலவைக்கல்லாக 5 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளது அண்மையில் தெரியவந்தது. அதிலிருந்த உராய்வுகளை ஆராய்ந்த பிரிட்டன் பொறியாளர் Richard Godfrey, விமானி திட்டமிட்டே Landing Gear-ஐ பயன்படுத்தி விமானத்தை வேகமாக … Read more

ஆஸ்திரேலியா: போலீசாரை குறிவைத்து திடீர் தாக்குதல் – 6 பேர் பலி

சிட்னி, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் விம்பிலா நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போன நபர் ஒரு பண்ணை வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பண்ணை வீட்டிற்கு நேற்று மாலை 5 மணியளவில் போலீசார் சென்றனர். அப்போது, அந்த வீட்டிற்குள் இருந்த 3 பேர் கொண்ட கும்பல் போலீசார் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தியதுடன் கூடுதல் போலீசாரை அனுப்பும்படி … Read more

அணுக்கருக்களை இணைப்பதன் மூலம் மாசில்லா அதிக ஆற்றலை உருவாக்கும் மின்சக்தி விஞ்ஞானிகள் சாதனை

கலிபோர்னியா, கலிபோர்னியாவில் உள்ள விஞ்ஞானிகள் அணுக்கரு இணைவு தொழில்நுட்பத்தில் ஒரு திருப்புமுனையை உருவாக்கியுள்ளனர். விஞ்ஞான முன்னேற்றத்தின் வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையாகவும், மனித வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவும் இருக்கும், அணுக்கரு இணைவு மூலம் மாசில்லா அதிக ஆற்றலை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க ஆராச்சியாளர்கள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளனர். அணுக்கருவை பிளவுபடுத்துவதற்குப் பதிலாக இரண்டு அணுக்கருக்களை இணைப்பதன் மூலம் தற்போது அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் நுட்பமான பிளவு, பிளவு ஆகியவற்றிலிருந்து வேறுபடுகிறது. இணைவு ஆராய்ச்சியின் நோக்கம் சூரியனில் … Read more

புகைப்பிடிக்க கூடாது – இளைஞர்களுக்கு சிகரெட் விற்க தடை!

நியூசிலாந்து நாட்டில் இளைஞர்கள் புகைப் பிடிக்க நிரந்தரமாகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், கனடா உட்பட உலகம் முழுவதும் இளைஞர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதை தடுக்கும் பொருட்டு, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் இது குறித்த விழிப்புணர்வும் இளைஞர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டு மக்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாவதைக் குறைக்கும் வகையில் நியூசிலாந்து அரசு … Read more

“மின்கட்டமைப்பை சீரமைக்க 800 மில்லியன் யூரோ தேவை” – உக்ரைன் வேண்டுகோள்

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வரும் உக்ரைனில் சேதமடைந்த மின்கட்டமைப்பை சீரமைக்க 800 மில்லியன் யூரோ தேவைப்படுவதாக ஐரோப்பிய யூனியனுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைனுக்கு உதவுவதற்காக பாரிஸில் நடந்த சர்வதேச மாநாட்டில் இக்கோரிக்கையை முன்வைத்த ஜெலன்ஸ்கி, நிதியாக மட்டுமின்றி மின்மாற்றிகள், உயரழுத்த மின்கம்பிகள், ஜெனரேட்டர்கள் போன்றவற்றையும் வழங்க வேண்டும் என்றார். மின்சார கட்டமைப்புகள் சேதப்படுத்தப்பட்டதால் வரும் குளிர் காலத்தை சமாளிக்கும் வகையில் சுமார் இரண்டு பில்லியன் கன மீட்டர் கூடுதல் எரிவாயுவை வழங்க வேண்டுமென … Read more

ரஷ்ய அதிபர் மாளிகையில் பன்றிக்காய்ச்சல் வைரஸ் பரவல்: புடின் ஓட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வெளியான தகவலால் ரஷ்ய அதிபர் புடின் மாளிகையைவிட்டு வெளியேறினார். ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகை வரலாற்று சிறப்புமிக்கது. ரஷ்ய அதிபரின் அதிகாரப்பூரவ அலுவலக மாளிகையாக இந்த கட்டடம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இம்மாளிகையில் எச்1 என்1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் வைரஸ் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிபர் விளாடிமிர் புடின் மாளிகையை … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.94 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 கோடியே 40லட்சத்து 036 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 62 … Read more