பாலைவன நாட்டில் பெருக்கெடுக்கும் மழை வெள்ளம்.!

மழைப்பொழிவு குறைந்த, பாலைவன நாடாக அறியப்படும் சவுதிஅரேபியாவில் கனமழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  தலைநகர் ரியாத்தின் வடமேற்கில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உஷைகர் பகுதியில் பெய்த கனமழையினால், அங்குள்ள ஒரு பாலத்தின் அடியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளன. ஏற்கனவே, அந்நாட்டின் 2வது பெரிய நகரமான ஜெட்டாவில் நவம்பர் மாதம் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. Source link

Bomb Cyclone: கலிபோர்னியாவை தாக்கிய ‘பாம் புயல்’ எமர்ஜென்சி அறிவித்த கவர்னர்

அமெரிக்காவில் புத்தாண்டு சோகமாகவே தொடங்கியிருக்கிறது. கலிபோர்னியாவை தாக்கிய ‘பாம் புயல்’ எமர்ஜென்சி அறிவிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.  நிலைமையின் தீவிரத்தை அணுகி, கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் ‘நிலைமையை கட்டுப்படுத்துவதற்காகவும் மீட்பு முயற்சிகளுக்காகவும்’  அவசர நிலையை அறிவித்தார். கலிபோர்னியா ‘மிருகத்தனமான’ வானிலை நிலையை எதிர்கொள்ளக்கூடும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்த ஒரு நாளுக்குப் பிறகு, புதன்கிழமை ஒரு பாம் சூறாவளி மேற்கு அமெரிக்க மாகணத்டைத் தாக்கியது. சூறாவளி புயல் அப்பகுதியை மூழ்கடிக்கும் அளவில் பெருமழையைக் கொண்டு வந்தது, ஏற்கனவே … Read more

உக்ரைன் அணு மின்நிலையம் மீதான தாக்குதலில் இந்தியா சமரச முயற்சியில் ஈடுபட்டது – அமைச்சர் ஜெய்சங்கர்

உக்ரைன் அணு மின் நிலையங்கள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்திய போது பிரச்சினையைத் தணிக்க இந்தியா அமைதியாக சமரச முயற்சியில் ஈடுபட்டது என்றும், கோதுமை ஏற்றுமதியை அனுமதிக்க ரஷ்யா உக்ரைன் அரசுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அவர் வியன்னாவில் ஜெர்மன் மொழியில் வெளியாகும் தினசரி நாளிதழுக்கு பேட்டியளித்த போது இதனைக் குறிப்பிட்டார். கோவிட்டுக்குப் பிறகான சூழல் மிகவும் பொருளாதாரப் பின்னடைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றும் … Read more

சீனாவில் பரவும் கொரோனாவுக்கு 95 சதவீதம் காரணம் ஓமிக்ரான் உருமாற்றம்

சீனாவில் தற்போது கோவிட் பேரலையாகப் பரவி வருவதற்கு கொரோனாவின் மரபணு உருமாற்றமான ஒமிக்ரான் பி.ஏ.5 புள்ளி 2 மற்றும் பி.எப்.7 ஆகியவையே காரணம் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சீனாவில் உள்ள நிலைமையை மிகவும் கவனமாக கண்காணித்து வருவதாகவும் இந்த நோய்த் தாக்கம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. சீனாவில் புதிய வகை உருமாற்றங்களையும் கண்டறிந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது Source link

அமெரிக்காவில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது – இந்திய வம்சாவளி குடும்பம் மீட்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் பசடேனா பகுதியில் வசிப்பர் தர்மேஷ் படேல். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், மனைவி, குழந்தைகளுடன் டெஸ்லா காரில், கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சேன் மாடியோ என்ற மலைப் பகுதிக்கு சென்றுள்ளார். இவர்கள் சென்ற கார் 300 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரில் காயங்களுடன் இருந்த 4 வயது சிறுமி மற்றும் 9 வயது சிறுவனை … Read more

நாசாவின் புகழ்பெற்ற அப்பல்லோ 7 விண்வெளிப் பயணத்தின் கடைசி விண்வெளி வீரரும் உயிரிழப்பு

நாசாவின் அப்பல்லோ 7 விண்வெளிப் பயணத்தின் கடைசி விண்வெளி வீரர் வால்டர் கன்னிங்ஹாம் காலமானார். அவருக்கு வயது 90. 1968-ம் ஆண்டு ‘அப்பல்லோ 7’ விண்கலத்தில் சென்ற டான் எஃப் ஐசெல், வால்டர் எம். ஷிரா ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டனர். இந்நிலையில், வயதுமூப்பு மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாக வால்டர் கன்னிங்ஹாமும் காலமானார். Source link

பெரும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் – நிதி இல்லாமல் அரசு துறைகள், ரயில்வே தவிப்பு

புதுடெல்லி: அண்டை நாடான பாகிஸ்தான் தற்போது கடன் நெருக்கடியில் சிக்கி தத்தளித்து வருகிறது. இந்தியாவின் தெற்கு எல்லையில் உள்ள இலங்கையை அடுத்து தற்போது வடக்கு எல்லையில் உள்ள பாகிஸ்தானும் திவால் நிலைக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. பணவீக்கம் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி, வெள்ளம் ஆகியவை பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, பாகிஸ்தானின் எரிசக்தி துறையின் கடன் சுமை தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது அந்த நாட்டின் அன்றாட வாழ்கை முறையை புரட்டிப்போட்டுள்ளது. பாகிஸ்தான் … Read more

115 அடி கான்கிரீட் குழாய்க்குள் தவறிவிழுந்த 10 வயது சிறுவன் உயிரிழப்பு

வியட்நாமில், 115 அடி ஆழ கான்கிரீட் குழாய்க்குள் விழுந்த சிறுவன் பல மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டான். டோங் தெப் மாகாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 35 மீட்டர் கொண்ட கான்கிரீட் குழாய் ஒன்றில் 10 வயது சிறுவன் விழுந்தான். 25 சென்டி மீட்டர் மட்டுமே அகலம் கொண்ட குழாயில் இருந்து சிறுவனை மீட்க முடியாமல் மீட்புப் படையினர் திணறினர். தொடர்ந்து, குழாயை சுற்றி  நவீன இயந்திரங்கள் மூலம் பள்ளம் வெட்டி சிறுவனை … Read more

இந்த ஆண்டின் முதல் 3 நாட்களில் அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 130 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவில் சமீப ஆண்டுகளாகவே துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடக்காத நாளே கிடையாது என்கிற அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக ‘மாஸ் சூட்டிங்’ என்று அழைக்கப்படும் அதிக உயிர்பலிகளை ஏற்படுத்துகிற துப்பாக்கிச்சூடு சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில் இந்த ஆண்டு தொடங்கிய முதல் 3 நாட்களில் மட்டும் அமெரிக்கா முழுவதும் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 130-க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கிச்சூடு … Read more

ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனை நாடு திரும்பக்கூடாது என பலர் செல்போனில் மிரட்டல்..?

ஹிஜாப் அணியாமல் செஸ் போட்டியில் பங்கேற்ற ஈரான் வீராங்கனை சாரா காதெம், நாடு திரும்பக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில், மஹ்சா அமினி மரணத்தை தொடர்ந்து ஹிஜாப்புக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், கஜகஸ்தானில் நடைபெற்ற செஸ் போட்டியில் வீராங்கனை சாரா காதெம், ஹிஜாப் அணியாமல் பங்கேற்றார். இதனால், நாடு திரும்பக்கூடாது என சாரா காதெமுக்கு பலர் செல்போன் மூலம் எச்சரிக்கை விடுத்ததாகவும், அவரது குடும்பத்தினருக்கும் மிரட்டல் அழைப்புகள் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, … Read more