நியூசிலாந்து புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்பு!

நியூசிலாந்து நாட்டின் 41வது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவி ஏற்றுக் கொண்டார். பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா ஆர்டெர்ன் விலகியதை அடுத்து புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்தின் பிரதமராக இருந்து வந்தவர் ஜெசிந்தா ஆர்டெர்ன். இந்நிலையில் தனது பிரதமர் பதவியை ராஜினமா செய்யப் போவதாக கடந்த வியாழக்கிழமை அன்று திடீரென ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்தார். “நியூசிலாந்து தலைமை ஏற்று நடத்த இனியும் தன்னால் முடியாது என்றும், அதற்கான ஆற்றல் … Read more

ஜெர்மனியில் விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. 35000 பயணிகள் அவதி..!

ஜெர்மனியில் விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் 300 க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதும், தரையிறங்குவதும் தடைபட்டது. நடப்பாண்டில் அங்கு 6 சதவீதம் வரை விலைவாசி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தலைநகர் பெர்லினிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், 44 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கக்கோரி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதிகாலை மூன்றரை மணிக்கு தொடங்கிய வேலை நிறுத்தத்தால் 35 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டனர். Source link

வடகொரியாவில் கரோனா பரவல்? – ஊரடங்கு அறிவிப்பின் பின்னணி

பியோங்யாங்: மூச்சுத் திணறல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து வடகொரிய தலைநகரில் 5 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் சுவாச நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேரும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிகிச்சை பெறும் அனைவரும் கடுமையான சளியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வடகொரியா இதனை கரோனா என்று குறிப்பிடவில்லை. எனினும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை கருதி அங்கு 5 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை … Read more

5 நாட்களுக்கு லாக்டவுன் அமல்… விநோத சுவாச பாதிப்பு- கலங்கும் வடகொரியா!

உலகம் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து விடுபட்டதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உருமாறிய வைரஸ்கள் வரிசையாக படையெடுத்து வருகின்றன. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடகொரிய நாட்டின் தலைநகர் பியோங்யாங்-கில் பலருக்கும் சுவாசப் பாதிப்புகள் உண்டாகியிருக்கிறது. இது வேகமாக பிறருக்கும் பரவுவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. 5 நாட்கள் ஊரடங்கு இதனை கொரோனா பாதிப்புகள் என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. இருப்பினும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டுள்ளது. அதன்படி, வரும் ஞாயிறு … Read more

‘ராப்’ பாடகர் கான்யே வெஸ்ட், ஆஸ்திரேலியா வரத் தடை ?

அமெரிக்க ராப் பாடகர் கான்யே வெஸ்ட், ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்படலாம் என அந்நாட்டு கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகப்புகழ் பெற்ற ராப்பரான கான்யே வெஸ்ட், தனது பெண் தோழி பியான்காவின் குடும்பத்தினரை சந்திக்க ஆஸ்திரேலியா வர உள்ளதாக தகவல் வெளியானது. ஹிட்லர் ஆட்சியில் ஜெர்மனியில் அரங்கேற்றப்பட்ட யூத இனப்படுகொலைக்கு ஆதரவாக கான்யே வெஸ்ட் பேசியிருந்ததால் அவருக்கு ஆஸ்திரேலிய அரசு விசா வழங்காது என கூறப்படுகிறது. Source link

கொரோனா கொடுத்த பாதிப்பு! மூன்றே வருடத்தில் வீதிக்கு வந்த சீனாவின் ‘அம்பானி’!

சீனாவின் பொருளாதார நிலை கொரோனாவால் அழிவின் விளிம்பில் உள்ளது. இங்கு ரியல் எஸ்டேட் துறையில் அதிகபட்ச நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இத்துறையில் உள்ள மாபெரும் நிறுவனமான எவர்கிராண்டே குழுமத்தின் (Evergrande Group)  நிலையே தாக்குபிடிக்க முடியாமல் உள்ளது. அப்படிப்பட்ட நிலையில், குழுமத்தின் தலைவரும், சீனாவின் இரண்டாவது பெரிய பணக்காரருமான ‘ஹுய் கா யான்’ என்பவரின் சொத்துக்களில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மூன்றே ஆண்டுகளில்,  தொழிலில் உச்சத்தில் இருந்த தொழிலதிபர்கள்  கீழே வந்து விட்டனர்.  … Read more

ஆப்கனில் பெண் கல்விக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்: ஐநா

நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் ஆட்சியாளர்களான தலிபான்களை ஐநா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் பேசும்போது, “கல்வி பயில்வதைத் தடுக்கும் அனைத்து பாரபட்சமான சட்டங்களையும், நடைமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் இது. குறிப்பாக ஆப்கனிஸ்தானில் இடைநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பெண்கள் கல்வி பயில்வதற்கு விதிக்கப்பட்டுள்ள மூர்க்கத்தனமான தடையை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆண்டுக்கான சர்வதேச கல்வி தினத்தின் கருப்பொருள், ‘கல்விக்கு … Read more

கொலம்பியாவில் தொடரும் கொக்கைன் ஹைட்ரோகுளோரைடு கடத்தல்… கப்பலில் இருந்து 4 டன் கொக்கைன் பறிமுதல்

கொலம்பியாவில் கப்பலில் கடத்தி செல்லப்பட்ட 4 டன் கொக்கைன் ஹைட்ரோகுளோரைடை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜனவரி 1-ம் தேதி முதல் தற்போது வரை கடந்த 25 நாட்களில் கடத்தி செல்லப்பட்ட 10 டன் கொக்கைன் ஹைட்ரோகுளோரைடை கொலம்பிய கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.  Source link

ஜப்பான்-தென்கொரியா இடையே கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்… கடலில் தத்தளித்த 13 பேர் கடும் குளிருக்கு மத்தியில் மீட்பு

தென்மேற்கு ஜப்பானில் சரக்குக்கப்பல் மூழ்கிய விபத்தில் கடலில் தத்தளித்த 13 பேரை, கடும் குளிருக்கு மத்தியில் தென்கொரியா மற்றும் ஜப்பான் கடலோரக் காவல்படையினர் மீட்டனர். ஜப்பானின் நாகசாகி மற்றும் தென்கொரியாவின் ஜெஜு தீவுக்கு இடையே நேற்று இரவு சரக்குக் கப்பல் மூழ்கியது. மொத்தம் இருந்த 22 ஊழியர்களில் 13 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 9 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   Source link