பாகிஸ்தானில் உணவு பஞ்சம் – 3 வாரங்களில் திவாலாகும் என எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. கோதுமை மாவு வாங்க ஏற்பட்ட கூட்டநெரிசலில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த 3 வாரங்களில் அந்த நாடு திவாலாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. அந்த நாட்டின் பயிர் சாகுபடி சுமார் 80 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த அக்டோபரில் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு பற்றாக் குறை ஏற்பட்டது. வெளிநாடுகளில் இருந்து உணவு … Read more

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கைது வாரண்ட்!

பாகிஸ்தானின் தேர்தல்ஆணையம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் பாகுபாடான கொள்கையை கொண்டிருப்பதாகவும், நடுநிலையாக இருக்கத் தவறி விட்டதாகவும் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இது தொடர்பான விசாரணையில் இருந்து விலக்கு கோரிய மனுக்களை நிராகரித்த தேர்தல் ஆணையம் இம்ரான்கான் உள்ளிட்டவர்களுக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய கைது உத்தரவைப் பிறப்பித்தது. Source link

நஷ்டத்தில் கின்னஸ் சாதனை –  ரூ.15 லட்சம் கோடி இழந்த எலான் மஸ்க்

கலிபோர்னியா: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் மட்டும் 182 பில்லியன் டாலர் (ரூ.15 லட்சம் கோடி) சரிந்துள்ளது. 2021 நவம்பரில் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 320 பில்லியன் டாலராக (ரூ.26 லட்சம் கோடி) இருந்தது. இது இம்மாதத்தில் 137 பில்லியன் டாலராக (ரூ.11 லட்சம் கோடி) சரிந்துள்ளது. உலக அளவில் மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்தவர்கள் எவருமில்லை. பெரும் நஷ்டத்தைச் சந்தித்த மனிதர் என்ற வகையில் எலான் மஸ்க் … Read more

ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அறிவிப்பு..!

தங்களுக்கு எதிரான போரில் ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி, பாக்முட் நகரின் வீதிகளில் ரஷ்ய வீரர்களின் உடல்கள் குவிந்து கிடப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் உக்ரைனின் உப்பு சுரங்க நகரம் எனக் கூறப்படும் சோலேடார் நகரில் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 10 மாத கால யுத்தத்தில் ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் … Read more

அமெரிக்க மாகாணமான கலிபோர்னியாவில் மலைப் பாதையில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு!

அமெரிக்க மாகாணமான கலிபோர்னியாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அம்மாகாணத்தில் தொடரும் மழை, வெள்ளம் நகர வீதிகளை ஆறுகளாக மாற்றியது. இந்நிலையில் ஃபிரெஸ்னோவில் உள்ள கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மலைப் பாதையில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு மாகாண நெடுஞ்சாலை 168 ஐ முற்றிலும் துண்டிப்பது படமாக்கப்பட்டுள்ளது.  Source link

நிலக்கரி சுரங்கம் தோண்ட எதிர்ப்பு : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முற்றுகை| Environmentalists strike against coal mining

லுாட்ஜெரட் : ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் மின் உற்பத்தி தேவைக்காக நிலக்கரி தோண்டும் பணியை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து, சுரங்கத்தை முற்றுகையிட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெர்மனியின் எரிசக்தி உள்ளிட்ட ஆற்றல் தேவையை பெருமளவு ரஷ்யாவே பூர்த்தி செய்து வந்தது.இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா ஈடுபட்டு வருவதால், பெரும்பாலான உலக நாடுகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் சார்பில் பொருளாதார தடை விதிக்கப்பட்டது.இதன் … Read more

தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை!

தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டமானது வன்முறையாக வெடித்தது. சிறையில் உள்ள முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டிலோவை விடுவிக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் புதிய அதிபர் டினா போலுவார்ட் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜூலியாகா எனும் இடத்தில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 17க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 68 பேர் … Read more

பார்லிமென்டில் ஓட்டெடுப்பு; நேபாள பிரதமர் வெற்றி| Voting in Parliament; Prime Minister of Nepal wins

காத்மாண்டு : நம் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த நவ. 20ல் தேர்தல் நடந்தது. சி.பி.என். மாவோயிஸ்ட் மற்றும் நேபாளி காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. கூட்டணி உடன்படிக்கையின்படி சி.பி.என். மாவோயிஸ்ட் கட்சி தலைவர் புஷ்பகமல் பிரசண்டா பிரதமராக பதவி ஏற்க நேபாளி காங். எதிர்ப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து கூட்டணியில் இருந்த வெளியேறிய பிரசண்டா ஷர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில் புஷ்பகமல் பிரசண்டா தலைமையிலான … Read more

Wealth Lost: டிவிட்டரை வாங்கி கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த மஸ்க்! காரணமோ சோகம்

புதுடெல்லி: பெருமளவில் சொத்துக்களை இழந்தவர்கள் பட்டியலில் இணைந்த எலோன் மஸ்க் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளார். வரலாற்றிலலேயே மிகப்பெரிய சொத்து இழப்பை எதிர்கொண்ட முதல் நபர் என்ற பதிவை ஏற்படுத்திய எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக கின்னஸ் உலக சாதனையில் சேர்த்துள்ளார். நவம்பர் 2021ல் இருந்து தோராயமாக $182 பில்லியன் (£153B; €173B) மதிப்பிலான சொத்தை மஸ்க் இழந்துள்ளார், இருப்பினும் அவரது இழப்பின் அளவு, சுமார் $200 பில்லியனுக்கு அருகில் இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது. டெக் பில்லியனர் எலோன் மஸ்க், தனக்கு … Read more

அமீரக அதிபருடன் பாகிஸ்தான் புதிய ராணுவ தலைமை தளபதி சந்திப்பு

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியாக அசிம் முனிரி சமீபத்தில் பொறுப்பேற்றார். இதனையடுத்து அவர் அமீரகத்துக்கு வருகை புரிந்தார். அபுதாபியில் உள்ள கசர் அல் சாதி அரண்மனையில் அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பாகிஸ்தான் புதிய ராணுவ தலைமை தளபதி அசிம் முனிரை வரவேற்றார். அப்போது அமீரக அதிபர் புதிய ராணுவ தளபதிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அமீரக அதிபரின் வாழ்த்துகளுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி தனது நன்றியை தெரிவித்தார். … Read more