ஆப்பிரிக்க நாட்டில் கண்ணிவெடியில் சிக்கி பஸ் வெடித்து 10 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் பல பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பயங்கரவாத தாக்குதல்களில் அங்கு ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். இந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் அங்கு ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் பயங்கரவாதத்தை ஒழிப்பதாக சூளுரைத்தது. எனினும் அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில் புர்கினோ பாசோவின் கிழக்கு பகுதியில் நைஜர் நாட்டின் எல்லையொட்டி அமைந்துள்ள படா கவுமா பிராந்தியம் … Read more

துவம்சம் செய்யும் பனி சூறாவளி காரில் இளம்பெண் உடல் மீட்பு| துவம்சம் செய்யும் பனி சூறாவளி காரில் இளம்பெண் உடல் மீட்பு

நியூயார்க் அமெரிக்காவை நான்கு நாட்களாக துவம்சம் செய்து வரும் பனி சூறாவளிக்கு இதுவரை 50 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த நான்கு நாட்களாக பனி சூறாவளி வீசுகிறது. நாடு முழுதும் வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டிருக்கும் நிலையில், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடும் பனிப்பொழிவால் வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் பனியில் உறைந்துள்ளன. பனி சூறாவளியில் சிக்கி, நேற்று வரை 50 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பப்பல்லோ நகரில் வசித்த ஆண்டெல் டெய்லர், 22, என்ற பெண், சமீபத்தில் … Read more

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட தென்கொரிய முன்னாள் அதிபருக்கு பொது மன்னிப்பு

தென்கொரியாவில் கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தவர் லீ மியூங் பாக் (வயது 81). இவர் தனது பதவி காலத்தின்போது பல்வேறு ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அதுதொடர்பான வழக்கு விசாரணையில் அவர் ஊழல் செய்தது நிரூபணமானது. இதனை தொடர்ந்து அவருக்கு கடந்த 2020-ல் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டின் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் அவரது உடல்நிலை மோசமானதால் கடந்த ஜூன் … Read more

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை: ஜப்பான் அறிவிப்பு

டோக்கியோ, சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் புமியோ கிஷிடா கூறுகையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் சீனாவில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார் … Read more

விற்பனைக்கு வந்த பாகிஸ்தான் தூதரக கட்டிடம் – ஏலத்தில் முன்னிலையில் உள்ள யூத குழு, இந்திய தொழிலதிபர்

வாஷிங்டன், அமெரிக்காவின் வாஷிங்டனில் பாகிஸ்தானுக்கு சொந்தமான 3 தூதரக கட்டிடங்கள் உள்ளன. அவற்றில் வாஷிங்டன் வடகிழக்கு சர்வதேச கோர்ட்டு அருகே உள்ள கட்டிடத்தில் பாகிஸ்தான் தூதரகம் செயல்பட்டு வருகிறது. அதேபோல், வாஷிங்டன்னின் மாகாணம் மாஸசூசெட்ஸ் அவன்யூவில் உள்ள ஒரு கட்டிடத்திலும் பாகிஸ்தான் தூதரகம் செயல்பட்டு வந்தது. அந்த கட்டிடம் தற்போது செயல்பாட்டில் இல்லை. இதனிடையே, வாஷிங்டனின் வடமேற்கில் ஆர்.ஸ்டிரிட்(தெரு)-இல் 1950 முதல் 2000 ம் ஆண்டு வரை பாகிஸ்தான் தூதரகம் செயல்பட்டு வந்தது. தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவு … Read more

கனடா: பஸ் பயணம் பாதுகாப்பு என நினைத்து சென்ற இந்தியர் உள்பட 4 பேர் விபத்தில் பலி

ஒட்டாவா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் கடும் குளிர் மற்றும் பனிப்புயல் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. உறைபனி சாலையெங்கும் படர்ந்து காணப்படுகிறது. இதனால், வார இறுதி வரை மக்கள் வீடுகளில் பாதுகாப்புடன் இருக்கும்படி அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த சூழலில் கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வான்கோவர் பகுதியில் இருந்து கெலோவ்னா நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று பனி படர்ந்த பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளது. இதில், இந்திய வம்சாவளியான பஞ்சாப்பின் அமிர்தசரஸ் … Read more

50 ஆண்டுகளில் இல்லாத பனிபுயல்… 60 பேர் பலி… அமெரிக்க துயரம்!

அமெரிக்காவில் வழக்கம்போல் இந்த ஆண்டும் குளிர் காலத்தில் பனிபுயல் வீசி வருகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் நகர சாலைகள் அனைத்திலும் பணி மூடிக் கிடக்கிறது. சாலைகளில் 25 சென்டிமீட்டர் உயரத்துக்கு பனி மூடிக் கிடப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு சென்றுள்ளதால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூயார்க், நியூ ஜெர்சி, கலிஃபோர்னியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிபுயல் வீசுவதால், அவசர மருத்துவ தேவைக்கான ஆம்புலன்ஸ்கள் கூட … Read more

வெளிநாட்டவர் தனிமைப்படுத்துதல் ரத்து செய்தது சீன அரசு | The Chinese government has lifted the quarantine of foreigners

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங் :சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு பயணியருக்கான கட்டாய தனிமைப்படுத்துதல் உத்தரவை ஜன., 8 முதல் ரத்து செய்வதாக அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.நம் அண்டை நாடான சீனாவின் வூஹான் நகரில் 2019 டிச., மாதம் பரவத் துவங்கிய கொரோனா தொற்று, கடந்த இரண்டரை ஆண்டுகளாக உலகையே ஸ்தம்பிக்க செய்தது. பின் உலகம் முழுதும் தொற்று பரவல் படிப்படியாக குறைந்துவிட்ட நிலையில், சீனாவில் கடந்த சில மாதங்களாக … Read more

ரஷ்யா லாஸ்ட் வார்னிங்; உக்ரைன் கொடுத்த ‘நச்’ பதில்!

ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் அதிக நெருக்கம் காட்டிய உக்ரைன் திடீரென கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இணைய முடிவெடுத்தது. உக்ரைன் எடுத்த இந்த முடிவால் தங்களுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக கூறி உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தது ரஷ்யா. கடந்த பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய உக்ரைன் – ரஷ்ய போர் 10 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மிகவும் பலம் வாய்ந்த ரஷ்ய ராணுவத்தை எதிர்கொள்ள முடியாமல் உக்ரைன் … Read more

தைவானில் கட்டாய ராணுவ சேவை 4 மாதங்களில் இருந்து ஒரு வருடமாக நீட்டிப்பு

வரும் 2024-ஆம் ஆண்டு முதல், கட்டாய ராணுவ சேவையை நான்கு மாதங்களில் இருந்து ஒரு வருடமாக அதிகரிக்கவுள்ளதாக, தைவான் அரசு அறிவித்துள்ளது. ராணுவ, ராஜதந்திர மற்றும் பொருளாதார ரீதியில் சீனா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கையை தைவான் எடுத்துள்ளது. அதிகரித்து வரும் சீனாவின் ராணுவ அச்சுறுத்தல்களை சமாளிக்க, தற்போதைய ராணுவ அமைப்புகள் திறனற்றதாகவும், போதுமானமானதாகவும் இல்லை என குறிப்பிட்ட தைவான் அதிபர் சாய் இங்-வென், அதனால் இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  Source … Read more