அமெரிக்க அதிபர் வீட்டில் சோதனை; முக்கியமான ரகசிய ஆவணங்கள் மீட்பு| US Presidents house raided; Recovery of important confidential documents

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வீட்டில், எப்.பி.ஐ., அதிகாரிகள், ௧௩ மணி நேரம் அதிரடிச் சோதனை நடத்தினர். இதில் பல முக்கியமான ரகசிய ஆவணங்கள் மீட்கப்பட்டன. அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் தங்களுடைய பதவிக்காலத்தில் கையாளும் முக்கியஆவணங்களை, அரசு ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும். குற்றச்சாட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கடந்த, ௨௦௦௯ – ௨௦௧௭ வரை துணை அதிபராக இருந்தார். அப்போது அமெரிக்க அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. மேலும், … Read more

நிலவில் கால் வைத்த 2ம் நபருக்கு 4வது திருமணம்…93 வயதில் 63 வயது பெண்னை மணந்தார்…!

லாஸ் ஏஞ்சல்ஸ், 1969ம் ஆண்டு அப்பல்லோ 11 மிஷனில் சந்திரனில் மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்கள் இறங்கினர். அப்பல்லோ 11 மிஷனில் சந்திரனில் நுழைந்த மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களில் பஸ் ஆல்ட்ரின் ஒருவர். அந்த மிஷனில் இருந்த மூன்று அமெரிக்க வீரர்களில் தற்போது உயிருடன் இருப்பவர் இவர் மட்டுமே. அப்போலோ-11 பயணத்தின் போது சந்திரனில் நிலாவில் முதலாவதாக கால் வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங். இரண்டாவது கால் பதித்தவர் பஸ் ஆல்ட்ரின். ஆல்ட்ரின் திருமணமாகி மூன்று முறை … Read more

சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே மாண்ட்ரே பார்க் நகரம் அமைந்துள்ளது. அங்கு கார்வே அவென்யூ பகுதியில் செங் வான் சோய் என்ற சீன வம்சாவளி தொழிலதிபருக்கு சொந்தமான ஓட்டல் செயல்படுகிறது. அந்த ஓட்டலில் நேற்று இரவு சீன புத்தாண்டு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது மர்ம நபர் ஒருவர், அதிநவீன துப்பாக்கியுடன் ஓட்டலில் நுழைந்து கண் மூடித்தனமாக சுட்டார். இதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் … Read more

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சீன புத்தாண்டு கொண்டாடிய 10 பேர் பலி| 10 killed in shooting in US celebrating Chinese New Year

லாஸ் ஏஞ்சலஸ் : அமெரிக்காவில், சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, மர்ம நபர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில், ௧௦ பேர் பரிதாபமாக பலியாகினர்; மேலும், 10 பேர் காயம் அடைந்தனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இருந்து ௧௬ கி.மீ., தொலைவில் அமைந்துள்ள மான்டெரே பார்க் என்ற பகுதியில், ௬௦ ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்தோர் அதிகளவில் வசிக்கின்றனர். இப்பகுதியில், நேற்று முன்தினம் இரவு சீன புத்தாண்டு கொண்டாட்டம் துவங்கியது. … Read more

கலிபோர்னியாவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு – 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10-ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மான்டேரி பூங்காவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்த நிலையில், இரவு 10 மணியவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். Source link

விவசாய நிலங்களை, உயர்தர விவசாய நிலங்களாக மேம்படுத்தும் சீனா..!

உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், சீனாவிலுள்ள விவசாய நிலங்கள் உயர்தர விவசாய நிலங்களாக மேம்படுத்தப்பட்டுவருகின்றன. உயர்தர பாசன வசதிகள், விவசாயத் தேவைகளுக்கு மின் பகிர்மானம் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த உயர்தர விவசாய நிலங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. கடந்த ஒரு ஆண்டில், 74 லட்சம் ஏக்கர் உயர்தர விவசாய நிலங்களை அமைக்க திட்டமிட்ட சீனா, நிர்ணயித்த இலக்கை விட அதிகமாக, ஒரு கோடியே 73 லட்சம் ஏக்கர் உயர்தர விவசாய நிலங்களை அமைத்துள்ளது. Source link

அமெரிக்காவில் சீன மக்கள் மீது துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி.!

துப்பாக்கி வன்முறை என்பது அமெரிக்காவில் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. துப்பாக்கி வன்முறை காப்பக இணையதளத்தின்படி, கடந்த ஆண்டில் மட்டும் பொதுவெளியில் 647 துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளது. அந்தவகையில் அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 44 ஆயிரம் பேர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் பள்ளிக்கூட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன. கடந்த மே மாதம் டெக்சாஸில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தநிலையில் … Read more

ஜப்பானில் மூன்றடுக்கு மாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு..!

ஜப்பானில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததோடு, 4 பேர் படுகாயமடைந்தனர். கோபி நகரில் உள்ள மூன்றடுக்குமாடி கட்டிடத்தின், முதல் தளத்தில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு ஜன்னல் வழியாக கரும்புகை வெளியேறியுள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில், 4 ஆண்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்துக்காண காரணம் … Read more

புத்தாண்டை வரவேற்ற சீனர்கள்: கரோனாவிலிருந்து விடுபட உருக்கமான பிரார்த்தனை

பீஜிங்: சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒருபுறம் களைகட்டியிருக்க இன்னொருபுறம் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கரோனா உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ஒரே வாரத்தில் 13 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும், அவரின் கூற்றின்படி ஜனவரி 13 முதல் ஜனவரி 19 வரையிலான காலகட்டத்தில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாககவும் சர்வதேச ஊடகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. கணக்கு கேட்கும் உலக சுகாதார நிறுவனம்: ஜனவரி … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இல்லத்தில் நீதித்துறை அதிகாரிகள் சோதனை.. மேலும் 6 ரகசிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகத் தகவல்..!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இல்லத்தில் நீதித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மேலும் 6 ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதிபர் ஜோ பைடன் தொடர்பான இடங்களில் இதற்குமுன் 3 முறை சோதனை நடைபெற்றபோது 10க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. துணை அதிபராக பதவிவகித்த காலக்கட்டத்தை சேர்ந்த ரகசிய ஆவணங்கள் அவரது இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு, டெலவேர் மாநிலத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற சோதனையில், 1973 ஆம் ஆண்டு முதல் … Read more