உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் இன்று அதிரடி தாக்குதல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கியூ: உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் இன்று அதிரடி தாக்குதல் துவக்கியது. இன்று நடந்த சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மூலம் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. உக்ரைன் வீரர்களும் தங்களது படை பலத்தால் நாட்டை காப்பாற்ற தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உக்ரைன் மீது போர் ; 2022 பிப். 24 ல் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து ரஷ்யா மீதான … Read more

2 லட்சம் பேரை களமிறக்கி கீவ் நகரில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்: உக்ரைன் படைத் தளபதி

கீவ்: “மீண்டும் கீவ் நகரை குறிவைத்து தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது. அதற்காக படைகளை ஒருங்கிணைத்து வருகிறது. பிப்ரவரி அல்லது மார்ச்சில் மிகக் கொடூரமான தாக்குதல்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று உக்ரைன் படைத் தளபதி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்தத் தாக்குதல் தற்போது ஓராண்டை நெருங்கவுள்ளது. இந்நிலையில், தலைநகர் கீவ் மீது ரஷ்யா உக்கிரமான தாக்குதலுக்கு ஆயத்தமாவவதாகவும், அதற்காக புதிதாக … Read more

“பின்லேடன் உயிருடன் இல்லை. ஆனால்…” – ஜெய்சங்கருக்கு பாக். வெளியுறவு அமைச்சர் சர்ச்சை பதில்

நியூயார்க்: “ஒசாமா பின்லேடன் தற்போது உயிருடன் இல்லை. ஆனால், மோடி இந்தியாவின் பிரதமராக இருக்கிறார்” என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ கூறியுள்ளார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கருத்துப் பதிவு செய்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிங் கூட்டம் நேற்று நடந்தது. இதில் டிசம்பர் மாதத்துக்கு தலைமை தாங்கிய இந்தியா 2 முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தது. இதில் ‘சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு அணுகுமுறை கொள்கைகள் மற்றும் … Read more

உக்ரைனில் மின்சாரம் இல்லாத மக்களுக்காக அடுப்புகள் தயாரிப்பு

உக்ரைனில் மின்சாரம் இல்லாத மக்களுக்காக, லிதுவேனியா நாட்டு நிறுவனம் கார் உதிரி பாகங்களிலிருந்து அடுப்புகளை உருவாக்கி வருகிறது. மின் நிலையங்களை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதல்களால், உக்ரைன் மக்கள் ஏராளமானோர் குளிரிலும், இருளிலும் தவித்து வருகின்றனர். இதனால் லிதுவேனியாவை சேர்ந்த கல்விஸ் நிறுவனம், பயன்படுத்திய கார் பாகங்களை சிறிய அடுப்புகளாக மாற்றி வருகிறது. பழைய வீல் ரிம்களில் இருந்து தயாரிக்கப்பட்ட அடுப்புகள், பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. Source link

5 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாரிஸ்: பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த தீ விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். பிரான்சின் கிழக்கு பகுதியில் உள்ள லியோன் நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஏழு மாடிகள் கொண்ட குடியிருப்பு உள்ளது. இங்கு அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென குடியிருப்பு முழுவதும் பரவியதால், தூக்கத்தில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். தகவல் அறிந்து சுமார் 65 … Read more

போப் பிரான்சிஸ் கருத்துக்கு எதிர்ப்பு | ரஷ்யாவிடம் மன்னிப்பு கேட்டது வாடிகன்

வாடிகன்: உக்ரைன் போரில் சிறுபான்மையினர் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலை போப் பிரான்சிஸ் சமீபத்தில் கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் போப்பின் இந்த கருத்துக்கு வாடிகன் மன்னிப்பு கேட்டுள்ளது. கடந்த நவம்பர் நடந்த நேர்காணல் ஒன்றில் போப் பிரான்சிஸ் ரஷ்யா – உக்ரைன் போர் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, “ரஷ்ய வீரர்கள் சிறுபான்மையினர், உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இவ்வாறு தாக்குதல் நடத்தும் வீரர்கள் எல்லாம் நிச்சயம் ரஷ்யாவின் பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் அல்ல.. மாறாக இவர்கள் … Read more

அமெரிக்காவின் மத்திய மேற்குப்பகுதியில் காணும் இடமெங்கும் கடும் பனிப்பொழிவு..!

அமெரிக்காவின் மத்திய மேற்குப்பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், சாலைகள், மரங்கள், வீடுகள், கார்கள் என அனைத்துமே பனியால் போர்த்தப்பட்டுள்ளது. சாலைகளில் பனி குவிந்து கிடப்பதால், எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. கடும் பனிப்பொழிவால் சில இடங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளதால், வாகன ஓட்டிகள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. Source link

பயங்கரவாதத்தின் மையமாக பாக்.,-ஐ பார்க்கும் உலக நாடுகள்: ஜெய்சங்கர்| Dinamalar

ஐக்கிய நாடுகள்: உலக நாடுகள், பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக பார்த்து வருகின்றன என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பத்திரிகை நிருபர்களை சந்தித்தார். அப்போது, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஹீனா ரப்பானி, இந்தியாவை விட பயங்கரவாதத்தை சரியாக கையாளும் நாடு வேறு எதுவும் கிடையாது எனக்கூறியது தொடர்பாக ஜெய்சங்கர் கூறியதாவது: கோவிட் பெருந்தொற்றின் தாக்கத்தால், இரண்டு ஆண்டுகளாக , கோவிட் … Read more

10 பேர் பலி;25 பேர் மாயம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோலாலம்பூர்: மலேஷிய தலைநகர் கோலாலம்பூர் அருகேயுள்ள பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் உயிரிழந்தனர். 25 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோலாலம்பூர் வடக்கே 50 கி.மீ., தொலைவில், படாங் களி என்ற இடத்தில் இயற்கை விவசாய பண்ணை உள்ளது. இங்கு இன்று(டிச.,16) அதிகாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. 30 மீ., உயரத்தில் இருந்து மண் சரிந்துள்ளது. இதனால், 3 கி.மீ., தூரம் அளவுக்கு … Read more

இயற்கை எழில் மிகுந்த படாங்கலி பகுதியில் நிலச்சரிவு – 16 பேர் பலி

மலேசியாவின் சிலாங்கூர் அருகே சுற்றுலா முகாம் ஒன்றில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி, 16 பேர் உயிரிழந்தனர். இயற்கை எழில் மிகுந்த படாங் கலி என்னுமிடத்தில், முகாம் வசதிகளுடன் கூடிய இயற்கை பண்ணை அமைந்துள்ளது. அந்த முகாம்களில் 90க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் திடீரென நிலச்சரிவு நிகழ்ந்தது.  நிலச்சரிவில் சிக்கிய 59 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், மண்ணுக்குள் புதைந்து மாயமான 20க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  Source … Read more