ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பு: இந்தியாவிடம் ஒப்படைப்பு| Dinamalar

பாலி: ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியாவிடம் இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ ஒப்படைத்தார். அதனை, பிரதமர் மோடி பெற்று கொண்டார். அடுத்தமாதம் டிச.,1 முதல் இந்த அமைப்பின் தலைவராக இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்க உள்ளது. ‘ஜி-20’ எனப்படும் உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பின், இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்றுள்ளார். நேற்று, மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் பைடன், சீன அதிபர் ஷி ஜின்பிங், … Read more

ஜி-20 மாநாட்டு துளிகள் | பாலியின் மாங்குரோவ் காடுகளை பார்வையிட்ட உலகத் தலைவர்கள்

பாலி: இந்தோனேசியாவின் பாலி தீவில் ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று மாநாட்டின் ஒரு பகுதியாக உலக நாடுகளின் தலைவர்களுடன் பாலி தீவில் உள்ள மாங்குரோவ் எனப்படும் அலையாத்திக் காடுகளைப் பார்வையிட்டனர். ஜி-20 அமைப்பில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, … Read more

போலந்தில் விழுந்த ரஷ்ய ஏவுகணை: 2 பேர் பலி; ஜெலன்ஸ்கி இரங்கல்

வார்சா: உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அண்டை நாடான போலந்து நாட்டில் ரஷ்ய ஏவுகணை விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த ஏவுகணையை ஏவியது ரஷ்யா தானா என்பது இன்னும் உறுதியாகாத நிலையில் போலந்துக்கான ரஷ்ய தூதருக்கு அந்நாடு சம்மன் அனுப்பியுள்ளது. போலந்து தலைநகர் வார்சாவில் உள்ள ப்ரெஸ்வோடோவ் எனும் கிராமத்தில் ஏவுகளை விழுந்துள்ளது. இதனையடுத்து எல்லையில் தனது பாதுகாப்புப் படைகளை போலந்து தயார் நிலையில் வைத்துள்ளது. இதற்கிடையில் அமெரிக்க அதிபர் … Read more

நேட்டோ உறுப்பு நாடான போலந்தில் ரஷ்யாவின் இரண்டு ஏவுகணைகள் வந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு..!

நேட்டோ உறுப்பு நாடான போலந்தில் ரஷ்யாவின் இரண்டு ஏவுகணைகள் வந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். உக்ரைன் எல்லை அருகே மக்கள் நடமாட்டம் மிக்க சிறிய நகரில் ஏவுகணை விழுந்தது தொடர்பாக போலந்து பிரதமர் தலைமையில் அவசரமாக பாதுகாப்பு ஆலோசனை நடத்தப்பட்டது. நேட்டோ நாடுகளைப் பாதுகாப்போம் என்று என்று உறுதி அளித்துள்ள அமெரிக்கா, ஒரு நேட்டோ நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல் அனைத்து நாடுகளின் மீதான தாக்குதல் என குறிப்பிட்டுள்ளது. Source link

'2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன்..' – சொன்னபடி அறிவித்த டொனால்டு ட்ரம்ப்

ஃப்ளோரிடா: 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளார் டொனால்டு ட்ரம்ப். அமெரிக்காவில் ஒரு நபர் இரண்டு முறைதான் அதிபராக முடியும். முதல் முறை அதிபராக இருந்தவர் பெரும்பாலும் அடுத்த முறையும் போட்டியிடுவார். அப்படிப் போட்டியிட்டவர்களில் வெற்றி பெற்றவர்களே மிகுதி. சமீப காலத்தில் வெற்றியைத் தவறவிட்டவர்கள் மூன்று பேர். ஜிம்மி கார்ட்டர், ஜார்ஜ் டபிள்யூ புஷ் வரிசையில் மூன்றாவதாக இணைந்தார் டொனால்டு ட்ரம்ப். அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி … Read more

325பேர் ஒன்றாக அமர்ந்து ஷூக்களை துடைப்பதில் லண்டன் நிறுவனம் கின்னஸ் சாதனை..!

இங்கிலாந்து நாட்டில் ஷூக்களை துடைப்பதில் லண்டன் நிறுவனம் ஒன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது. லண்டனில் இயங்கி வரும் sneaker care நிறுவனத்தில் 325பேர் ஒன்றாக அமர்ந்து ஒரே நேரத்தில் ஷூக்களை துடைத்து சுத்தம் செய்து கின்னஸ் சாதனை படைத்தனர். இதன் மூலம் ஏற்கனவே செய்யப்பட்டிருந்த சாதனை முறியடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Source link

ஸ்பெயினில் விற்பனைக்கு வரும் கிராமத்தின் விலை ரூ.2.1 கோடி

மாட்ரிட்: சால்டோ டி காஸ்ட்ரோ. ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு கிராமம். தலைநகர் மாட்ரிட்டிலிருந்து மூன்று மணி நேர பயணத்தில் இந்தக் கிராமத்தை அடைந்துவிடலாம். 44 வீடுகள், ஒரு விடுதி, ஒரு தேவாலயம், ஒரு பள்ளி, ஒரு நீச்சல் குளம் உள்ள இந்தக் கிராமம் தற்போது விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. இந்தக் கிராமம் உருவான கதை சுவாரஸ்யமானது. 1950-களில் மின் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இக்கிராமத்தின் அருகே அணை கட்டும் பணியில் ஈடுபட்டது. ஊழியர்கள் தங்கி பணிபுரிவதற்காக அந்நிறுவனம் … Read more

உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை வீச்சு..!

ரஷ்யாவுடனான போரில் தங்களுக்கு வெற்றி கிட்டி வருவதாக ஜெலன்ஸ்கி கூறிய நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் முழுவதும் 12-க்கும் மேற்பட்ட நகரங்களில் ரஷ்யா ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. நேற்று ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ரஷ்ய படைகளால் ஏவப்பட்டதாகவும், போர் தொடங்கியதில் இருந்து இது மிகப்பெரிய தாக்குதல் எனவும் உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தலைநகர் கீவில், 5 மாடிகள் கொண்ட இரண்டு … Read more

சீனப்படைகளை எதிர்கொள்ள எல்லையில் படைபலத்தையும், உள்கட்டுமானத்தையும் அதிகரிக்கும் இந்தியா .!

சீனாவின் படைக்குவிப்புகளுக்கு மத்தியில் கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் இந்தியா தனது படைபலத்தையும் உள்கட்டுமானத்தையும் அதிகரித்துள்ளது. 450 பீரங்கிகளை நிறுத்தும் வகையிலும் கூடுதலாக 22 ஆயிரம் வீரர்களைக் குவிக்கும் வகையிலும் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.சீனாவை எதிர்கொள்ள ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவதற்கான இரண்டு மையங்களை இந்தியா அமைத்துள்ளது. இதன் மூலம் எல்லையில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வதும் பொருட்களை எடுத்துச் செல்வதும் எளிதாகும். தாக்குதல் நடத்தக்கூடிய ஹெலிகாப்டர்கள் இங்கு ஒரு நேரத்தில் 12 வீரர்களை அழைத்துச் செல்லும். 3டி பிரிண்டட் தற்காப்பு சாதனங்களும் முதன்முறையாகப் … Read more

பாலஸ்தீனியர் தாக்குதலில் மூன்று இஸ்ரேலியர்கள் பலி| Dinamalar

ஜெருசேலம் : ஜெருசேலம் நகரில், பாலஸ்தீனியர் ஒருவர் இரண்டு இஸ்ரேலியர்களை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பிக்கையில் மற்றொரு இஸ்ரேலியர் மீது காரை மோதி கொன்றார். மேற்காசிய நாடான இஸ்ரேலின் ஜெருசேலம் நகரின் மேற்கு கரைப் பகுதியில் உள்ள குடியிருப்பில் நுழைந்த பாலஸ்தீனியர் ஒருவர், அங்கிருந்த இஸ்ரேலியர்களை கத்தியால் தாக்கினர். இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய பாலஸ்தீனியர் அங்கிருந்த ஒரு காரை திருடி தப்பித்து சென்றார். வழியில் ஒரு இஸ்ரேலியர் மீது மோதினார். இதில் … Read more