உலகக் கோப்பையில் இருந்து ஈரான் வெளியேற்றப்பட வேண்டும்: ஃபிபா முன்னாள் தலைவர்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து ஈரான் வெளியேற்றப்பட வேண்டும் என்று ஃபிபா (சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு) அமைப்பின் முன்னாள் தலைவர் செப் ப்ளேட்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செப் ப்ளேட்டர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “நடக்கவிருக்கும் உலககோப்பை தொடரிலிருந்து ஈரான் வெளியேற்றப்பட வேண்டும். நான் ஃபிபா அமைப்பின் தலைவராக இருந்திருந்தால் நிச்சயம் தொடரிலிருந்து ஈரானை நீக்கி இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். ஈரானின் நடந்து வரும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை ஈரான் அரசு எடுத்து … Read more

டிவிட்டரில் இயேசு கிறிஸ்து; உடனே கிடைத்தது ‘ப்ளூ டிக்’!

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் உரிமையாளர் எலான் மஸ்க். கடந்த மாதம் டிவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது முதல் தினமும் எலான் மஸ்க் குறித்து ஏதாவது ஒரு செய்தி வந்தபடியே தான் உள்ளது. டிவிட்டர் தனது வசமானதும் அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரப்போவதாகவும் எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அந்த வகையில் பல்வேறு மாற்றங்கள் ட்விட்டர் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, டிவிட்டர் ஊழியர்கள் பாதிக்கும் மேல் வேலையை விட்டு, நீக்கப்பட்டு உள்ளனர். அதிகாரப்பூர்வ கணக்கான … Read more

தென் பசுபிக் தீவில் அடுத்தடுத்து இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென் பசுபிக் தீவுக்கூட்டத்தில் அடுத்தடுத்து இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  நியூ தீவின் தலைநகர்அலோஃபிக்கு மேற்கே 241 கிலோ மீட்டர் தொலைவில் 7 புள்ளி 5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தரைப்பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனிடையே, 7 புள்ளி 1 ஆக பதிவான மற்றொரு நிலநடுக்கம் டோங்கா தீவின் தென்கிழக்குப் பகுதியில் உணரப்பட்டது. நிலநடுக்கத்தை அடுத்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை விடுக்க … Read more

பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறி 12 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் பெட்ரோல் ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். கோகி மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி, சாலையின் குறுக்கே வந்த காரின் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதி வெடித்து சிதறியது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்த ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின. இந்த கோர விபத்தில் 12 பேர் உடல்கருகி உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். Source link

ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடியை சந்திக்க ஜோ பைடன் ஆர்வம்

இந்தோனேசியாவின் பாலியில் 14ம் தேதி தொடங்கும் இரண்டு நாள் ஜி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை சந்திக்க ஆவலாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். டிசம்பர் 1 முதல் ஜி 20 கூட்டமைப்புக்கு இந்தியா ஓராண்டுகாலம் தலைமை தாங்க உள்ளது. எனவே இதில் அமெரிக்கா ஈடுபாடு கொள்வது உறுதி என்று கூறினார். மோடி ஏற்கனவே வெள்ளை மாளிகைக்கு வந்துள்ளதையும் … Read more

'உயிர் உங்களுடையது தேவி…' ஆபத்தான குற்றங்களை தடுக்கும் உலகின் அழகான போலீஸ் இவரா…

கொலம்பியாவின் பெண் போலீசார் ஒருவர், அங்கு நடக்கும் குற்றச்செயல்களை தட்டிக்கேட்டு ஒரு பகுதி முழுவதையும் தன் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கும் அதே வேளையில், சமூக வலைதளத்தில் ஏறத்தாழ நான்கு லட்சம் பேரையும் கட்டியாண்டு வருகிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.  கொலம்பியா நாட்டின் தலைநகரான மெடலினில், பெண் காவலராக பணியாற்றி வரும் டயானா ராமிரெஸ் என்பவர்தான் இந்த அத்தனை பெருமைக்கும் உரியவர். அவரை சமூக இணையத்தில் பின்தொடரும் அத்தனை பேரும், டயானாவைதான் ‘உலகின் மிக அழகான போலீஸ்’ என்று … Read more

ட்விட்டர் ஊழியர்களை எச்சரிக்கும் எலன் மஸ்க்… வாரத்தில் 80 மணி நேரம் வேலை , இலவச உணவு ரத்து என கெடுபிடிகள்

ட்விட்டர் பங்குகளை வாங்கிய கையோடு பாதியளவு ஊழியர்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பிய எலன் மஸ்க் எஞ்சியுள்ள ஊழியர்களுக்கு வாரத்தில் 80 மணி நேரம் வேலை இலவச உணவு ரத்து போன்ற கெடுபிடிகளை விதித்துள்ளார். ஊழியர்கள் மத்தியில் பேசிய எலன் மஸ்க், மேலும் நிதி ஆதாரத்தைப் பெருக்காமல் போனால் நிறுவனம் திவால் ஆவதைத் தவிர்க்க முடியாது என்று எச்சரித்தார். கோவிட் காலத்தையொட்டி வீட்டில் இருந்தபடியே பணியாற்றும் சலுகைகள் போன்றவற்றையும் எலன் மஸ்க் ரத்து செய்துள்ளார். Source link

ப்ளூ டிக் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது ட்விட்டர்

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய திட்டமான மாதம் 8 டாலருக்கு ப்ளூ டிக் அடையாளம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எலன் மஸ்க்கின் கட்டுப்பாட்டில் சென்ற பிறகு வாடிக்கையாளர்களுக்கு மாத சந்தா திட்டம் அறிவித்து ப்ளூ டிக்கிற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. முக்கியப் பிரமுகர்கள், விஐபிக்கள், பத்திரிகையாளர்கள் போன்ற நம்பகமான மனிதர்களை பின்தொடர இந்த ப்ளூ டிக் முக்கிய அடையாளமாகக் கருதப்பட்டது. ஆனால் கட்டணம் செலுத்திய பலர் போலிகணக்கு வைத்து உள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது. போலியான நபர்களின் அடையாளங்கள் அதிகரித்துள்ள … Read more

நேபாளத்தில் கொத்தடிமையாக இருந்த 38 இந்தியர்கள் மீட்பு| Dinamalar

காத்மாண்டு நேபாளத்தில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 38 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். நம் அண்டை நாடான நேபாளத்தின் ரவ்டஹட் என்ற இடத்தில் செங்கல் சூளைகள் இயங்குகின்றன. இங்கு, நம் நாட்டின் உத்தர பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களைச் சேர்ந்த பலர் வேலை செய்கின்றனர். இதில், ஒரு சூளையில் பலர் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸ் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து, தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அங்கு கொத்தடிமைகளாக இருந்த உத்தர … Read more

அமேசான் நிறுவனத்திலும் பணிநீக்கம்| Dinamalar

புதுடில்லி : ‘டுவிட்டர், மைக்ரோசாப்ட்’ ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து, ‘அமேசான்’ நிறுவனமும் பணிநீக்க நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அமெரிக்க மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான், அதன் லாபமில்லாத பிரிவுகளில் ஆள்குறைப்பு நடவடிக்கைகளை துவங்கி உள்ளது.இந்நிறுவனம் புதிதாக நபர்களை பணியமர்த்துவதை நிறுத்தி வைத்திருப்பதாக, கடந்த வாரம் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், தற்போது ஆள்குறைப்பிலும் இறங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது.இந்நிறுவனத்தின் ‘ரோபோடிக்ஸ்’ பிரிவில் உள்ள அனைவரும் வேலையிழப்புக்கு ஆளாகி இருப்பதாக கூறப்படுகிறது. இப்பிரிவில் 3,000த்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.மேலும், அதிக … Read more