மெதினாவில் ஏராளமான தங்கம், தாமிரம் கண்டுபிடிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ரியாத்: சவுதி அரேபியாவின் மெதினா நகரில், பூமிக்கு அடியில் ஏராளமான தங்கம் மற்றும் தாமிரம் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாடு கூறியுள்ளது.இது தொடர்பாக சவுதி புவியியல் சர்வே அமைப்பு கூறுகையில், மெதினா பிராந்தியத்தில் அபா அல் ரஹா பகுதியில் தங்க படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே பிராந்தியத்தில் அல் மதீக் பகுதியில் நான் இடங்களில் தாமிர படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த கண்டுபிடிப்பு மூலம், உலகிற்கு நம்பிக்கையான முதலீட்டிற்கான கூடுதல் வாய்ப்புகளை தருகிறோம் என … Read more

மெக்சிகோ நாட்டில் மீண்டும் நிலநடுக்கம்..! – உயிரிழப்பு சம்பவத்தால் அதிர்ச்சி ..!

மெக்சிகோ நாட்டில் கடந்த சில நாட்கள் முன்னதாக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோவில் கடந்த 19ம் தேதியன்று பயங்கர நிலநடுக்கம் உருவானது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மெக்சிகோவின் மேற்கு மைக்கோகன் மாகாணத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கம் அல்லது பூகம்பம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்படும் போது, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இதனை டெக்டோனிக் தட்டுகள் என்று கூறலாம். இந்த … Read more

ஹிஜாப் அணிய மறுத்த சர்வதேச பத்திரிகையாளர்: நேர்காணலை ரத்து செய்த ஈரான் அதிபர்

நியூயார்க்: பேட்டி எடுக்கும்போது ஹிஜாப் அணிய மறுத்ததால் தனியார் தொலைக்காட்சியின் சர்வதேச பத்திரிக்கையாளர் கிறிஸ்டியன் அமன்பூருடனான நேர்காணலை ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ரத்து செய்தார். சிஎன்என் தொலைக்காட்சியின் பிரபல சர்வதேச செய்தியாளர் கிறிஸ்டியன் அமன்பூர். இவர், ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை அவரின் அலுவல்களுக்கிடையில் நேர்காணல் செய்வதாக இருந்தது. இதற்காக பல வாரங்களாக திட்டமிடப்பட்டு புதன்கிழமை இரவு நேர்காணல் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இப்ராஹிம் ரைசி அமெரிக்காவில் கொடுக்கும் முதல் … Read more

'ப்ளீஸ் வாய மூடிட்டு இருங்க..!' – அமெரிக்காவுக்கு வட கொரியா 'குட்டு'

ரஷ்யாவுக்கு அணு ஆயுதங்களை வழங்கவில்லை என்று வட கொரியா விளக்கம் அளித்துள்ளது. உக்ரைன் நாடு மீது, ரஷ்யா தொடுத்துள்ள போர், சுமார் 7 மாதங்களை கடந்து தொடர்ந்து கொண்டு வருகிறது. இந்தப் போர் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான போர், உலக அரங்கில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. போரை நிறுத்தும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் கேட்டுக் … Read more

ரஷ்ய போரின் வீச்சு உலக நாடுகளை பாதிக்கிறது; உடனே நிறுத்துங்கள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கவலை

நியூயார்க்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 8 மாதங்கள் கடந்துவிட்டன. இந்நிலையில் போரை தீவிரப்படுத்தப்போவதாக பகிரங்கமாக தொலைக்காட்சியில் உரையாற்றியுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், உக்ரைன் போரின் வீச்சு ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தையும் கவலை கொள்ளச் செய்யும் பிரச்சினை. இந்தச் சூழலில் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக போரை நிறுத்திவிட்டு வெறுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்பவேண்டும். பிரதமர் நரேந்திர மோடி சொன்னதுபோல் போர்களுக்கான காலம் … Read more

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா ஆதரவு

வாஷிங்டன், அமெரிக்காவில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், அந்த நாட்டின் ஜனாதிபதியான ஜோ பைடன் நேற்று முன்தினம் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்கச்செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியாவுடன் ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இன்றைய உலகின் தேவைகளுக்கு சிறப்பாக பதிலளிக்கிற வகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்னும் … Read more

உக்ரைன் போருக்கு எதிராக ரஷ்யாவில் போராட்டம் – 1000-க்கும் மேற்பட்டோர் கைது

மாஸ்கோ: உக்ரைன் போருக்கு ரஷ்யாவில் 3 லட்சம் பேரை திரட்ட அதிபர் புதின் உத்தரவிட்டதற்கு எதிராக, ரஷ்யாவின் பல நகரங்களில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மொத்தம் 30 நகரங்களில் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்த உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. உக்ரைனின் பல பகுதிகள் தற்போது ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான நவீன … Read more

நெப்டியூனைப் படம் பிடித்த ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி – வெளியிட்ட நாசா

வாஷிங்டன், சூரிய குடும்பத்தின் 8-வது கிரகம், நெப்டியூன். பூமியைக் காட்டிலும் சூரியனில் இருந்து 30 மடங்கு தொலைவில் அமைந்துள்ளது, நெப்டியூன். இந்த நெப்டியூனையும், அதன் மெல்லிய வளையங்களின் விரிவான படத்தையும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி முதல் முறையாக படம் பிடித்துள்ளது. இந்தப் படத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலை நோக்கி, ஒளிர்கிற நெப்டியூன் மற்றும் அதன் நுட்பமான, தூசுகள் நிறைந்த … Read more

சட்ட விரோத போர் தொடுத்த 'ரஷியாவை தண்டிக்க வேண்டும்' – ஐ.நா.வில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் பதிவு செய்யப்பட்ட வீடியோ உரை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அந்த பேச்சில் அவர் வலியுறுத்திய முக்கிய விஷயங்கள்:- * உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக ரஷியாவை தண்டிக்க வேண்டும். * ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடு பதவியை பறிக்க வேண்டும். * சிறப்பு போர் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும், ரஷியா நடத்தியுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த … Read more

ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல் 1000 மடங்கு அதிகரிப்பு: அதிர்ச்சி தகவல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : ‘உலகம் முழுதும் ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்பு தாக்குதல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது’ என, அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. சமீபகாலமாக, அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த வடக்கு அமெரிக்க ஹிந்துக்கள் கூட்டமைப்பு சார்பில், இது தொடர்பான ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் வாஷிங்டனில் நடந்தது. இதில் பங்கேற்ற … Read more