முதல் இன்னிங்சில் இந்தியா 404 ரன் குவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சாட்டோகிராம்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 404 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சாட்டோகிராமில் முதல் டெஸ்ட் துவங்கியது. ‛டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் லோகேஷ் ராகுல், ‛பேட்டிங்கை’ தேர்வு செய்தார். அதன்படி முதல்நாளான நேற்று (டிச.,14) இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் … Read more

ஒசாமாவுக்கு புகலிடம் கொடுத்தவர்கள் ஐ.நா.வில் பிரசங்கம் செய்ய தகுதியில்லை: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

நியூயார்க்: ஒசாமா பின் லேடனுக்கு புகலிடமாக இருந்த பாகிஸ்தான் ஐ.நா. அவையில் காஷ்மீர் விவகாரம் பற்றியும் ஜனநாயகம் பற்றியும் பிரசங்கம் செய்யத் தகுதி இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10 தற்காலிக உறுப்பு நாடுகளும் உள்ளன. தற்காலிக உறுப்பு நாடுகள் 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த அமைப்புக்கு மாதத்துக்கு ஒரு உறுப்பு நாடு தலைமை வகிக்கும். அந்த வகையில் … Read more

ஒசாமாவை கொண்டாடும் பாகிஸ்தான்: ஜெய்சங்கர் தாக்கு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இந்தியா பரிசாக அளித்த மகாத்மா காந்தி சிலையை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரெஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் பாதுகாப்பு குழு கவுன்சில் கூட்டத்தில், ‛ஒசாமாவை பாகிஸ்தான் நற்சான்று கொடுத்து கொண்டாடி வருவதாக’ ஜெய்சங்கர் பாக்.,க்கு பதிலடி கொடுத்தார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை, அந்த கவுன்சிலின் உறுப்பு நாடுகள் மாதந்தோறும் சுழற்சி முறையில் ஏற்கும். … Read more

டென்மார்க் | 4 ஆண்டுகளுக்கு முன்னர் விரலை கடித்த பூனை: சதையை உண்ணும் பாக்டீரியா பாதிப்பால் ஒருவர் பலி

கோபன்ஹேகன்: நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் டென்மார்க் நாட்டை சேர்ந்த 33 வயதான ஹென்ரிக் என்பவரை அவர் செல்லமாக வளர்த்து வந்த பூனை ஒன்று அவரது கைவிரலை கடித்துள்ளது. அதனால் அவருக்கு சதையை உண்ணும் பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 2018 வாக்கில் அவர் ஒரு பூனை மற்றும் அதன் குட்டிகளுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார். பின்னர் அதில் ஒரு குட்டியை வேறு இடத்திற்கு மாற்றும் போது பூனை அவரது விரலை கடித்துள்ளது. அவரும் அதனை பெரிதாக … Read more

அதிகாரிகளை அவமதித்ததற்காக இஸ்தான்புல் மேயருக்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை!

அதிகாரிகளை அவமதித்ததற்காக  இஸ்தான்புல் நகர மேயருக்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் துருக்கி அதிபர் எர்டோகனின் போட்டியாளராகக் கருதப்படும் எக்ரெம் இமாமோக்லு போட்டியிட இருந்த நிலையில் நீதிமன்றம் அரசியல் தடை விதித்துள்ளது.  பிரதான எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியை சேர்ந்த பிரபலமான இமாமோக்லு, அதிபர் எர்டோகனின் முக்கிய போட்டியாளராகப் பார்க்கப்படுகிறார். அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு சுமார் ஆறு மாதங்கள் உள்ள நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. Source … Read more

புலம் பெயர்ந்த நூற்றுக்கணக்கானோர் கடத்தி செல்லப்படும் அவலம்.. வெவ்வேறு இடங்களில் அலைய வைத்து பிணைத்தொகை கேட்பதாக தகவல்

மெக்சிகோவில் இருந்து எல் பாசோவிற்கு ரியோ கிராண்டேவைக் கடந்து சென்ற புலம்பெயர்ந்தவர்களில் பலர் கடத்தப்பட்டனர். இரண்டு மூன்று முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களின் மீட்கும் பிணைத் தொகை கோரப்பட்டது. போதைப்பொருள் கடத்தல், வன்முறை மற்றும் பலவீனமான சட்ட விதிகள் நிறைந்த பகுதிகளைக் கடந்து மெக்சிகோ முழுவதும் பயணிக்கும்போது, புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் ஆபத்துகளை இந்த கடத்தல்கள் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலோர் அமெரிக்காவில் சிறந்த பொருளாதார வாய்ப்புகளைப் பெறுவதற்காகவும் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்,  … Read more

இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு :அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதம்| Dinamalar

கொழும்பு : இலங்கை வாழ் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்கும் அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான இலங்கையின், ௨.௨ கோடி மக்கள் தொகையில், சிங்களவர், ௭௫ சதவீதம் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் புத்த மதத்தினர். அதே நேரத்தில் தமிழர்கள், ௧௫ சதவீதம் உள்ளனர். இவர்களுக்கு அதிகாரம் கேட்டு நீண்ட காலமாக போராட்டங்கள் நடந்து வந்தன. பிறகு அது உள்நாட்டு போராக மாறியது. இந்நிலையில் … Read more

இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு; அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதம்| Dinamalar

கொழும்பு,: இலங்கை வாழ் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்கும் அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான இலங்கையின், 22 கோடி மக்கள் தொகையில், சிங்களவர், 75 சதவீதம் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் புத்த மதத்தினர். அதே நேரத்தில் தமிழர்கள், ௧௫ சதவீதம் உள்ளனர். இவர்களுக்கு அதிகாரம் கேட்டு நீண்ட காலமாக போராட்டங்கள் நடந்து வந்தன. பிறகு அது உள்நாட்டு … Read more

ஆப்கானிஸ்தானில் 20 பேருக்கு சவுக்கடி| Dinamalar

காபூல்: ஆப்கானிஸ்தானில் விபச்சாரம், திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட 20 ஆண்களுக்கு நேற்று சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை, கடந்த ஆண்டு ஆகஸ்டில் தலிபான்கள் அதிரடியாக கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்றனர். இவர்களின் ஆட்சி அமைத்தவுடன் குற்றச்செயல்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படுள்ளன. இந்நிலையில், ஹெல்மெண்ட் மாகாண அரசின் செய்தி தொடர்பாளர் முஹமது காசிம் ரியாஸ் கூறியதாவது: விபசாரம், திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட 20 ஆண்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது விசாரணை … Read more

வங்கிக் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ.4.6 கோடியை ஆடம்பரமாக செலவிட்ட ஆஸ்திரேலிய இளைஞருக்கு 18 மாதம் சிறை

சிட்னி: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தம்பதியினர் கோரே மற்றும் தாரா தோர்ன். இவர்கள் சிட்னி கடற்கரையையொட்டி வீடு வாங்க நினைத்தனர். புரோக்கர் ஆதம் மாக்ரோ மூலம் நல்ல வீடு ஒன்று விலைக்கு வந்தது. இந்நிலையில், வீட்டுக்கான தொகை ரூ.4.6 கோடியை அனுப்புமாறு புரோக்கரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அந்தத் தம்பதியினருக்கு தகவல் வந்துள்ளது. அதன்படி ரூ.4.6 கோடியை அந்தத் தம்பதியினர் அனுப்பினர். அதன்பின் புரோக்கரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்து காவல் துறையிடம் தம்பதியினர் புகார் … Read more