இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு :அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதம்| Dinamalar
கொழும்பு : இலங்கை வாழ் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்கும் அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான இலங்கையின், ௨.௨ கோடி மக்கள் தொகையில், சிங்களவர், ௭௫ சதவீதம் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் புத்த மதத்தினர். அதே நேரத்தில் தமிழர்கள், ௧௫ சதவீதம் உள்ளனர். இவர்களுக்கு அதிகாரம் கேட்டு நீண்ட காலமாக போராட்டங்கள் நடந்து வந்தன. பிறகு அது உள்நாட்டு போராக மாறியது. இந்நிலையில் … Read more