இந்தாண்டில் மட்டும் உலகம் முழுதும் 67 பத்திரிகையாளர்கள் படுகொலை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பிரசல்ஸ்-உக்ரைன் போர், மெக்சிகோ வன்முறை போன்ற பல்வேறு காரணங்களால், இந்தாண்டு மட்டும் உலகம் முழுதும், 67 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மோதல் ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் பத்திரிகையாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது. இந்தாண்டு மட்டும் உலகின் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த வன்முறைகளில், இதுவரை 67 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுஉள்ளனர். கடந்தாண்டில் 47 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட நிலையில், … Read more

முன்னாள் காதலியின் வருங்கால கணவரின் வீட்டுக்கு தீ வைத்தவருக்கு 6 மாதம் சிறை| Dinamalar

சிங்கப்பூர் முன்னாள் காதலியின் வருங்கால கணவர் வீட்டுக்கு தீ வைத்த இந்திய வம்சாவளி இளைஞருக்கு, சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தது. தென் கிழக்கு ஆசிய நாடானா சிங்கப்பூரில் வசிப்பவர் சுரேந்திரன் சுகுமாரன், 30. இவர் அதே நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். ஆனால், சில மாதங்களிலேயே காதல் முறிந்தது. இந்நிலையில், இந்தப் பெண்ணுக்கு முஹமது அஸ்லி முஹமது சலேஹ் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த தகவலை சமூக வலைதளம் வாயிலாக அறிந்த … Read more

பில்கிஸ் பானு வழக்கு வரும் 13ல் விசாரணை| Dinamalar

புதுடில்லி, குஜராத்தில் நடந்த கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் நாளை மறுநாள் விசாரிக்க உள்ளது. குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, 2002ல் பெரும் கலவரம் வெடித்தது. அப்போது பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி, ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் இதில் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில், 11 பேருக்கு ஆயுள் … Read more

போதை பொருள் கடத்தல் அசாமில் 4 பேர் அதிரடி கைது

கச்சார்,அசாமில் லாரியில் கடத்தி வரப்பட்ட, ‘யாபா’ என்ற தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை, போலீசார் பறிமுதல் செய்து, நான்கு பேரை அதிரடியாக கைது செய்தனர். வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள கச்சார் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு வந்த லாரியை மடக்கி, போலீசார் சோதனை நடத்தினர். இதில், ௨௦ பாக்கெட்டுகளில், இரண்டு லட்சம் யாபா என்ற போதை மாத்திரைகள் பதுக்கி வைத்து கடத்துவது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார், லாரியில் வந்த நான்கு பேரை கைது … Read more

கனடாவில் வசித்த சீக்கிய பெண் கொலை| Dinamalar

டொரோன்டோ, கனடாவில் வீட்டில் இருந்த சீக்கிய பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டார். வட அமெரிக்க நாடான கனடாவில், பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில், நம் நாட்டின் சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஹர்பிரீத் கவுர், 40, தன் கணவருடன் வசித்தார். கடந்த 7ம் தேதி இரவு அவர் வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்குப் போராடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், … Read more

ஒரு ஹெலிகான் அன்னாசி பழத்தின் விலை ரூ.1 லட்சம்

லண்டன்: அன்னாசி பழத்தில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட், மாங்கனீஸ், பொட்டாஷியம் போன்ற தாதுப் பொருட்கள் உள்ளன. இது, உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த பழமாக திகழ்கிறது. குறிப்பாக, குளிர் காலத்தில் இதை உண்ணும்போது உடலுக்கு ஏராளமான நன்மைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த அன்னாசி பழத்தின் வகைகளில் உலகின் மிக விலை உயர்ந்ததாக இங்கிலாந்தின் கான்வால் தோட்டத்தில் விளைவிக்கப்படும் ஹெலிகான் அன்னாசி பழம் உள்ளது. இதன் ஒன்றின் விலை 1,000 பவுண்டுகள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. … Read more

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ஓட்டெடுப்பு: இந்தியா புறக்கணிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து தாக்கல் செய்த தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் தற்போது தலைமை பொறுப்பில் உள்ள இந்தியா ஓட்டளிக்காமல் புறக்கணித்தது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், 15 உறுப்பு நாடுகள் உள்ளன. கவுன்சிலின் தற்போதைய தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தன. குறிப்பிட்ட சில நாடுகளின் மீது பொருளாதார தடைகள் உள்ளன. மனிதநேய அடிப்படையிலான … Read more

தங்கம் கடத்தி சென்ற 4 பேர் – தகவலளித்த இந்தியா, தட்டி தூக்கிய இலங்கை

கொழும்பு, இலங்கை கொழும்பு விமான நிலையத்தில் சென்னையில் இருந்து சென்ற 4 இலங்கை நாட்டவர் 22 கிலோ எடையுள்ள தங்கத்தைக் கடத்திவந்த விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 பேர் துபாயிலிருந்து சென்னை வழியாக இலங்கை வந்துள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டது. இந்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் அளித்த தகவலின் அடிப்படையில் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். தங்க நகைகளை அடையாளம் காண முடியாத வகையில் வர்ணம் பூசியும், தங்க துகள்களை கேப்சூலில் அடைத்தும் கடத்தி வரப்பட்ட … Read more

துபாய் சென்ற விமானத்தில் பாம்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு பதுங்கியிருந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கேரளாவின் கோழிக்கோட்டிலிருந்து, துபாய் நோக்கி புறப்பட்டு இன்று துபாய் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தது. அப்போது விமானத்தில் சரக்கு பெட்டகம் வைக்கும் பகுதியில் சரக்குகளை எடுத்த போது பாம்பு இருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை தர சிவில் விமான போக்குவரத்துத்துறை இயக்குனர் … Read more

தியாக பூமியின் குழந்தைகள் மிகவும் துன்பப்படுகிறார்கள்: உக்ரைன் போர் குறித்து பேசிய போது கண்ணீர் விட்டு அழுத போப்!

ரோம், கிறிஸ்துமஸ் யாத்திரைக்காக இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தனது உரையை நிகழ்த்தினார். தனது உரையின் நடுவில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். அதை தொடர்ந்து, உரையாற்றிய போப், உக்ரைன் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பேசும் போது திடீரென துயரம் தாளாமல் அமைதி ஆகி விட்டார். சில நொடிகளில் கண்ணீர் விட்டு அழுதார். இதைக்கண்ட போப்பின் அருகில் இருந்த ரோம் மேயர் ராபர்டோ … Read more