சீனாவுடனான நட்பின் பொற்காலம் முடிந்துவிட்டது: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை

லண்டன்: பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்ட பிறகு, வெளியுறவுக் கொள்கை குறித்த தனது முதல் முக்கிய உரையாற்றிய பிரதமர் ரிஷி சுனக், சீனாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கலாம் என்ற செய்தியை வழங்கியுள்ளார். இங்கிலாந்துக்கும் சீனாவுக்கும் இடையிலான சிறந்த உறவுகளின் பொற்காலம் முடிந்துவிட்டதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெளிவுபடுத்தியுள்ளார். இங்கிலாந்தின் ‘மதிப்புகள் மற்றும் நலன்களுக்கு’ சீனா தொடர்ந்து சவால் விடுத்து வருவதாக கூறிய அவர், வெளியுறவுக் கொள்கை குறித்த தனது முதல் முக்கிய உரையில், … Read more

21 மாத குழந்தையில் கடத்தப்பட்டவர் 51 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

சென்னை, சிறு வயதில் கடத்தப்பட்ட குழந்தைகள் வளர்ந்த பிறகு பெற்றோர்களுடன் மீண்டும் இணைவது என்பது தமிழ் சினிமாவில் நாம் அடிக்கடி பார்த்த ஒரு செயலாகும். ஆனால், இதே சம்பவம் நிஜ வாழ்க்கையில் அரங்கேறும் போது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கும். அமெரிக்காவில் அப்படியொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போர்ட் வொர்த்தில் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். 1971ம் ஆண்டு அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அவர்கள் மெலிசா ஹைஸ்மித் என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த … Read more

அதிகமாக டி.வி. பார்த்த சிறுவன்… இரவு முழுவதும் டி.வி. பார்க்க வைத்து தண்டனை கொடுத்த பெற்றோர் மீது விமர்சனம்

பெய்ஜிங், குழந்தைகளை வளர்ப்பதில் நவீன கால பெற்றோர் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக டி.வி., ஸ்மார்ட்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களுக்கு குழந்தைகள் அடிமையாகாமல் தடுப்பது பெற்றோருக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அந்த வகையில் சீனாவில் அதிகமாக டி.வி. பார்க்கும் பழக்கத்தைக் கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு, அவனது பெற்றோர் வழங்கிய நூதன தண்டனை, தற்போது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூனான் மாகாணத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனை மாலை நேரத்தில் வீட்டில் தனியாக விட்டுவிட்டு … Read more

Monkeypox: குரங்கம்மை பெயர் மாற்றம் – புதிய பெயரை அறிவித்தது WHO

குரங்கம்மை நோய் பெயரை மாற்றி உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் அதிகளவில் பரவும். கை, கால்கள் உட்பட உடலில் கொப்புளங்கள் போல் இந்த நோய் பரவும். சமீபத்தில் இந்தியா, இலங்கை உட்பட பல நாடுகளில் வேகமாக பரவத் தொடங்கியது. இதுவரை இல்லாத அளவில் உலக அளவில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டனர். இதன் பரவலைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் உலகளாவிய அவசரநிலையை உலக … Read more

விபத்தில் நினைவை இழந்த கணவர்… மனைவியிடம் கேட்ட அந்த கேள்வி – நெகிழ்ச்சி தருணம்!

அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தைச் சேர்ந்த கிறிஸ்டி மற்றும் ஆண்ட்ரூ மெக்கன்ஸி ஜோடி, கடந்தாண்டு ஒரு விபத்தில் சிக்கி படுகாயமடைந்து உயிர் தப்பியுள்ளனர். போக்குவரத்து சிக்னலில் நிக்காமல் வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியதில் அந்த விபத்து நிகழந்ந்துள்ளது.  ஏறத்தாழ சுமார் 50 அடி தூரத்திற்கு இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு கொடூரமான விபத்தில் சிக்கிய அவர்களுக்கு, கடுமையான ரத்தப்போக்கு, நுரையீரல், எலும்புகளில் பலத்த காயம் என அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மேற்கொண்ட … Read more

FIFA WC 2022 | வேல்ஸ் அணிக்கு எதிராக வெற்றி: 700 சிறைக் கைதிகளை விடுவிக்கும் ஈரான்

தெஹ்ரான்: கத்தார் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் வேல்ஸ் அணிக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் வகையில், 700 சிறைக் கைதிகளை விடுவிப்பதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஃபிஃபா உலகக் கோப்பை கால்பாந்தட்ட போட்டித் தொடர், கந்தாரில் நடந்து வருகிறது. இதில் ஈரான் தனது முதல் போட்டியில் இங்கிலாந்திடம் 6-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் ஈரான் அணி, வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஈரானின் இந்த வெற்றி, … Read more

அமெரிக்காவில் நெகிழ்ச்சி: 51 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட மகளை சந்தித்த பெற்றோர்

அதிசயங்கள் எப்போது வேண்டுமானலும் நடக்கும். அதற்கு நம்பிக்கை முக்கியம்…ஆம் அப்படியொரு சம்பவம்தான் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. அமெரிக்காவில் 50 வருடங்களுக்கு முன்னால் காணாமல்போன ஒருவர் மீண்டும் தனது குடும்பத்துடன் சேர்ந்த மகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த அல்டா அபாண்டென்கோ. இவருக்கு மெலிசா ஹைஸ்மித் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் 1971 ஆம் ஆண்டு தனது குழந்தையை பார்த்து கொள்ள பாதுகாவலர் ஒருவரை நியமித்துள்ளார். இந்த பாதுகாவலரால் மெலிசா கடத்தப்படுகிறார். மெலிசாவை பல்வேறு … Read more

அதெல்லாம் அந்த காலம்..! இனிமே தான் ஆட்டம்.. சீனாவை அலற விட்ட ரிஷி சுனக்

சீனா உடனான உறவின் பொற்காலம் முடிந்து விட்டதாக, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்து உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டன் நாட்டின் பிரதமராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், 42, அண்மையில் பதவி ஏற்றுக் கொண்டார். இவர், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் ஆவார். பிரிட்டன் நாட்டின் மிக இளம் வயது பிரதமரான ரிஷி சுனக், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பிரிட்டன் பிரதமர் வசிக்கும் அரசு வீட்டில் வசிக்காமல், … Read more

சீனாவில் அதிபருக்கு எதிராக உச்சத்தை எட்டும் ஆர்ப்பாட்டங்கள்! மக்களை அடக்கும் போலீஸ்

பெய்ஜிங்: நாட்டில் கோவிட் எதிர்ப்புகள் அதிகரிப்பதைத் தடுக்க சீனா அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஷி ஜின்பிங்கை அதிபர் பதவியில் இருந்து விலகக் கோரும் போராட்டக்காரர்களை வீட்டிற்கு அனுப்ப நாடு முழுவதும், குறிப்பாக பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். கோவிட் கட்டுப்பாடுகள் நாட்டில் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்து பொருளாதாரத்தை சேதப்படுத்தியுள்ளன. இருப்பினும், கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது என்று சீன அரசு உறுதியாக இருக்கிறது.   சமூக ஊடகங்களில் வைரலாகும் … Read more

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்| Dinamalar

லண்டன்: சீனா உடன் நிலவிய உறவின் பொற்காலம் முடிந்துவிட்டது என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார். அரசின் வெளியுறவுக் கொள்கையை விளக்கும் வகையில் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் ரிஷி சுனக் பேசியதாவது: வரும் 2050ம் ஆண்டில் உலக வளர்ச்சியில் இந்தோ- பசிபிக் பிராந்தியங்களில் பங்களிப்பு 50 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் என்பதால், இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக உறவு மேற்கொள்ள விரும்புகிறேன். பிரிட்டன் – சீனா உறவில் நிலவிய பொற்காலம் முடிந்துவிட்டது. பொருளாதார ஸ்திரத்தன்மை, காலநிலை … Read more