உக்ரைன் ராணுவத்திடம் சரணடைய விரும்பும் ரஷ்ய வீரர்களுக்காக, பிரத்யேக டிரோன் சேவை – உக்ரைன் அரசு

உக்ரைன் ராணுவத்திடம் சரணடைய விரும்பும் ரஷ்ய வீரர்களுக்காக, பிரத்யேக டிரோன் சேவைகளை உக்ரைன் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த டிரோன்கள் முன்பாக சரணடைவது எப்படி? என்பதை விளக்கும் காணொலியையும், ரஷ்ய மொழியில் உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது. சரணடைய விரும்பும் ரஷ்யர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹாட்லைன் எண்ணை தொடர்புகொண்டு, எதிர்முனையில் பேசுபவர் கூறும் இடத்திற்கு, சரியான நேரத்தில் வந்து சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடத்தை வந்தடைந்ததும், அங்கு வரும் டிரோன் முன் சரணடைவதுபோல் கைகளை உயர்த்தி, அது பின்னாலேயே நடந்து சென்றால், உக்ரைன் … Read more

எல்லையில் பதற்றம்: இந்தியா – சீனாவுக்கு ஐ.நா., வேண்டுகோள்!

இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை நீண்டகாலமாக நிலவி வருகிறது. இந்திய – சீன லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி இரு நாட்டு ராணுவத்தினர் இடையே மோதல் வெடித்தது. எல்லை கட்டுப்பாட்டு பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து படைகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் நடவடிக்கையின் போது, இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட இந்த சண்டையில் இரு தரப்புக்கும் இடையே உயிரிழப்புகள் … Read more

காங்கோ குடியரசில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 141 பேர் பலி..!

ஆப்ரிக்க நாடான காங்கோ குடியரசில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழப்பு  மேலும் அதிகரிக்க கூடும் என அந்த நாட்டின் சுகாதரத்துறை அமைச்சர் Jean-Jacques அச்சம் தெரிவித்துள்ளார். தலைநகர் Kinshasa உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. பல தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால்  போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மழை வெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டதுடன் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.  Source link

எல்லையில் இந்தியா – சீனா மோதல்: அமெரிக்கா பரபரப்பு கருத்து!

எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா – சீனா ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என, அமெரிக்கா கருத்துத் தெரிவித்து உள்ளது. இந்தியா – சீனா இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பகுதிகளில், சீனப் படைகள் அத்துமீறி நுழைவதும், இந்தியப் பிராந்தியங்களை, சட்ட விரோதமாக கைப்பற்றுவதையும் சீனா வாடிக்கையாக கொண்டு உள்ளது. இந்நிலையில், அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் செக்டார் என்ற எல்லைப் பகுதியில், … Read more

4 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ‘சிஸ்கோ’ நிறுவனம்

அமேசான், பேஸ்புக் மெட்டா போன்ற நிறுவனங்களின் வரிசையில், சிஸ்கோ நிறுவனமும், 4 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மென்பொருள் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பில் முன்னனியில் உள்ள சிஸ்கோ நிறுவனம், வருவாயை அதிகரிக்கும் விதமாக நிர்வாகத்தை மறுசீரமைக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது. இதற்காக, 5 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. வேலை இழந்த ஊழியர்கள், Layoff டாட் காம் போன்ற இணையதளங்களில் வேலை கேட்டு பதிவிட்டுள்ளனர். Source link

பிரிஸ்பேனில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக, நீல நிறத்தில் ஒளிரவிடப்பட்ட முக்கிய கட்டடங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக, முக்கிய கட்டடங்கள் நீல நிறத்தில் ஒளிரவிடப்பட்டன. கடந்த திங்கட்கிழமை, காணாமல் போன நபர் குறித்து விசாரிக்கச்சென்ற போலீசார் மீது ஆயுதமேந்திய மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 காவலர்களும், அலன் டேர் என்ற நபரும் உயிரிழந்தனர். உடனடியாக அப்பகுதியை சுற்றிவளைத்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திய மூவரையும் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், பிரிஸ்பேனில் உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. Source link

ஜன.1, 2009-ல் இருந்து பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்க வாழ்நாள் தடை: நியூசிலாந்து அதிரடி சட்டம்

வெலிங்டன்: நியூசிலாந்து இளைஞர்களை புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கான புதிய தனித்துவமானதும், அதிரடியானதுமான சட்டத்தை நியூசிலாந்து அறிமுகப்படுத்தி உள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் நியூசிலாந்தை புகைப்பிடிக்காத நாடாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் ஜெசிந்தா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. அதன் ஓர் அங்கமாக நியூசிலாந்து செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தப் புதிய சட்டம்படி ஜனவரி 1, 2009 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் புகையிலைப் பொருட்கள் விற்க முடியாது. இதன்படி, சிகரெட் வாங்குவதற்கான … Read more

கார் விபத்தில் காயமடைந்தார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ பிளின்டாஃப்

லண்டனில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பின்போது நிகழ்ந்த கார் விபத்தில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ பிளின்டாஃப் காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆண்ட்ரூ பிளின்டாஃப் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவிற்கு காயம் ஏற்படவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக பிரிட்டிஷ் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Source link

இந்திய – சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க ஐ.நா வேண்டுகோள்

இந்திய – சீன எல்லையில் பதற்றத்தை தணிக்கும்படி, இரு நாடுகளுக்கும் ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது. அருணாச்சல் பிரதேசத்தின் தவாங் பகுதியில், அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவ வீரர்களை, இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில் இந்த மோதல் குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா.பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் , இந்திய – சீன எல்லையில் பதற்றம் அதிகரிக்காதவாறு, இருநாடுகளும் செயல்படுமாறு, கேட்டுக்கொண்டார். Source link

ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் 2 கட்டடங்கள் சேதம்..!

ரஷ்ய ட்ரோன் தாக்குதலில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் இரண்டு நிர்வாக கட்டடங்கள் சேதமடைந்ததாக, கீவ் மேயர் விட்டலி க்லிட்ச்கோ தெரிவித்தார். எனினும் ரஷ்யா ஏவிய 10 ஷாஹெட் ட்ரோன்களை, உக்ரைன் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாகவும், ஷெவ் சென் கிவ்ஸ்கி மாவட்டத்தில், பல்கலைக்கழகங்கள், காட்சிக்கூடங்கள் மற்றும் உணவகங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும் கீவ் மேயர் கூறினார். ரஷ்யாவின் இந்த தாக்குதலில் குடியிருப்புக்கட்டடம் ஒன்றும் தீப்பற்றி எரிந்ததாகவும் கீவ் மேயர் விட்டலி க்லிட்ச்கோ தெரிவித்துள்ளார். Source … Read more