AQIS & TTP தீவிரவாதிகள் நால்வரை சேர்த்து சர்வதேச தீவிரவாதிகளின் பட்டியலை புதுப்பித்தது அமெரிக்கா

வாஷிங்டன்: AQIS, TTP பயங்கரவாத அமைப்புகளின் நான்கு தலைவர்களை உலகளாவிய பயங்கரவாதிகளாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத குழுக்களால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, இந்திய துணைக்கண்டத்தில் உள்ள அல்-கொய்தா (AQIS) மற்றும் தெஹ்ரிக்-இ தலிபான் பாகிஸ்தான் (TTP) போன்றவற்றின் ஒரு பகுதியாக செயல்படும் நால்வரை அமெரிக்கா சர்வதேச தீவிரவாதிகளாக அங்கீகரித்துள்ளது. US designates AQIS, TTP leaders as global terrorists Read @ANI Story | https://t.co/D7t3CW5HaH#AQIS #TTP #Terrorists #US pic.twitter.com/A17YFl7Exy — … Read more

"ஜனநாயகம் பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை" – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கான இந்திய தூதர் பேட்டி

நியூயார்க்: “ஜனநாயகம் பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை” என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ருச்சிரா காம்போஜ் தெரிவித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் டிசம்பர் மாதத்திற்கான தலைமைப் பொறுப்பு நேற்று வியாழக்கிழமை இந்தியா வசம் வந்தது. இதனையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ருச்சிரா காம்போஜிடம் இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த காம்போஜ், “ஜனநாயகத்தில் என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை. இந்தியா … Read more

பார்கோடு டாட்டூ குத்திக்க ரெடியா? கையை நீட்டினா பணம் வந்து குவிய சூப்பர் வழி

Barcode Tattoo: பார்கோடு டாட்டூவை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? கேட்பதற்கு சற்று விசித்திரமாக இருக்கலாம், உண்மையில் பார்கோடு என்பது பொருள் அல்லது விலையை ஸ்கேன் செய்வதற்கு பயன்படுவது. இதை ஒரு நபர் உடலில் பச்சை குத்திக்கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது. சிலர் தங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களை உடலில் பச்சை குத்திக் கொள்கின்றனர். டாட்டூ என்று பரவலாக அறியப்படும் இதை, படம், சின்னம் அல்லது வார்த்தைகள், பிடித்த பெயர்களை தங்கள் உடலில் பதித்துக் கொள்வார்கள். ஆனால்யாராவது பார்கோடு டாட்டூ குத்திக் … Read more

மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்ததால் கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது சீனா

பெய்ஜிங்: சீனாவில் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 36,061 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டது. இதைக் கட்டுப்படுத்த பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஜின்ஜியாங் மாகாணத்தில் உரும்கி நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். கரோனா கட்டுப்பாடுகளால்தான் அவர்கள் வெளியேற முடியாமல் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதையடுத்து சீனாவின் பல நகரங்களில் மக்கள் போராட்டத்தில் … Read more

ஆப்கானிஸ்தானில் பாதியில் நிறுத்தப்பட்ட 20 உள்கட்டமைப்பு திட்டங்களை மீண்டும் தொடர்கிறது இந்தியா

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் காரணமாக கைவிடப்பட்ட பணிகளை இந்தியா மீண்டும் தொடர இருப்பதாக தலிபான் அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதையடுத்து பாதுகாப்புக் கருதி, இந்திய தூதரகத்திலிருந்த அதிகாரிகளை இந்தியா திரும்ப அழைத்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவு தடைபட்டது. எனினும், மனிதாபிமான அடிப்படையில் உணவு மற்றும் மருத்துவ உதவிகளை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா வழங்கி வந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் இந்தியா – … Read more

எலான் மஸ்கின் அடுத்த அதிரடி| Dinamalar

லண்டன்: எலான் மஸ்க் துணை நிறுவனராக உள்ள ‘நியுராலிங்க்’ நிறுவனம், மனித மூளையில் மிகச் சிறிய கம்ப்யூட்டரை பதிக்கும் சோதனை முயற்சியில், இன்னும் ஆறு மாதத்தில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது. சோதனை இந்நிறுவனம் நான்கு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. மனித உடலில் மிகச் சிறிய கம்ப்யூட்டர்களை பதிப்பதன் வாயிலாக, பாதிப்புக்குள்ளாகி இருக்கும் பாகங்களின் செயல்பாட்டை மீட்டெடுக்க முடியும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மனித மூளையில் இந்த கம்ப்யூட்டரை பதிப்பதன் வாயிலாக, அவனது மூளையின் செயல்பாட்டை அந்த … Read more

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இனவெறி; ஆவணத் தொடர் ரெடி.!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரும், ஹாலிவுட் நடிகையுமான மேகன் மார்க்கல்லை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இங்கிலாந்து அரச குடும்பத்தில் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் திடீரென இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசர், இளவரசி பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அரச குடும்பத்தில் இருந்து விலகுவது குறித்து, அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓபரா வின்ப்ரேவுக்கு இருவரும் பேட்டி அளித்தனர். அப்போது மேகன் மார்க்கல் கூறும்போது, “நான் கர்ப்பமாக இருந்தபோது, பிறக்கப்போகும் குழந்தையின் நிறம் … Read more

சீனாவில் மக்கள் போராட்டம் எதிரொலி… ஊரடங்கை தளர்த்தியது அரசு

பீஜிங், உலக நாடுகளில் இரண்டரை ஆண்டுகளாக தீவிர அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா பெருந்தொற்று முதன்முறையாக சீனாவில் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகளில் பல்வேறு அலைகளாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. எனினும், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பிற நாடுகளை விட, பரவலை முன்பே சீனா கட்டுப்படுத்தி இருந்தது. இது சர்வதேச நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து … Read more

போலி டுவிட்டர் கணக்குகள் நீக்கம்; பின்தொடருபர்கள் எண்ணிக்கை குறையலாம் – எலான் மஸ்க் எச்சரிக்கை

சான் பிரான்சிஸ்கோ, டுவிட்டர் கணக்கு வைத்திருப்பவர்களை டுவிட்டரில் பின்தொடருபர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். தற்போது போலி டுவிட்டர் கணக்குகள் நீக்கப்பட்டு வருவதால் டுவிட்டரில் பின்தொடருபர்கள் எண்ணிக்கை குறையலாம் என்று தெரிவித்தார். Twitter is purging a lot of spam/scam accounts right now, so you may see your follower count drop — Elon Musk (@elonmusk) December 1, 2022 மேலும் டுவிட்டரில் … Read more

“ஒபாமாவிடம் இப்படி கேட்பீர்களா?” – செய்தியாளரிடம் நியூஸி. பிரதமர் ஜெசிந்தா ஆவேசம்

அக்லாந்து: பின்லாந்து பிரதமர் சன்னா மரின், நியூஸிலாந்துக்கு அரசியல் ரீதியாக பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, ஆக்லாந்தில் இன்று (வியாழக்கிழமை) பின்லாந்து பிரதமர் சன்னா மரின் மற்றும் நியூஸிலாந்து பிரதமர் ஜெசிகா இடையே நடந்த சந்திப்பில் காலநிலை மற்றம், உக்ரைன் போர், ஈரானில் பெண்களின் போராட்டம் குறித்து இருவரும் ஆலோசித்தனர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர். அப்போது இருவரிடமும் செய்தியாளர் ஒருவர், ”நீங்கள் ஒரே பாலினம், ஒரே வயதை உடையவர்கள் என்பதால் சந்தித்துள்ளீர்கள் என்று … Read more