8 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய மலேசிய விமானம் திட்டமிட்டே மூழ்கடிக்கப்பட்டதா.?

8 ஆண்டுகளுக்கு முன், 239 பயணிகளுடன் தென் சீன கடலில் மாயமான மலேசிய விமானத்தை பைலட் திட்டமிட்டே கடலில் மூழ்கடித்திருக்கலாம் என வல்லுநர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். கோலாலம்பூரில் இருந்து பீஜிங் புறப்பட்ட அந்த விமானத்தின் Landing Gear கதவை, மடகாஸ்கர் நாட்டு மீனவரின் மனைவி துணி துவைக்கும் சலவைக்கல்லாக 5 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளது அண்மையில் தெரியவந்தது. அதிலிருந்த உராய்வுகளை ஆராய்ந்த பிரிட்டன் பொறியாளர் Richard Godfrey, விமானி திட்டமிட்டே Landing Gear-ஐ பயன்படுத்தி விமானத்தை வேகமாக … Read more

ஆஸ்திரேலியா: போலீசாரை குறிவைத்து திடீர் தாக்குதல் – 6 பேர் பலி

சிட்னி, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் விம்பிலா நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போன நபர் ஒரு பண்ணை வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பண்ணை வீட்டிற்கு நேற்று மாலை 5 மணியளவில் போலீசார் சென்றனர். அப்போது, அந்த வீட்டிற்குள் இருந்த 3 பேர் கொண்ட கும்பல் போலீசார் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தியதுடன் கூடுதல் போலீசாரை அனுப்பும்படி … Read more

அணுக்கருக்களை இணைப்பதன் மூலம் மாசில்லா அதிக ஆற்றலை உருவாக்கும் மின்சக்தி விஞ்ஞானிகள் சாதனை

கலிபோர்னியா, கலிபோர்னியாவில் உள்ள விஞ்ஞானிகள் அணுக்கரு இணைவு தொழில்நுட்பத்தில் ஒரு திருப்புமுனையை உருவாக்கியுள்ளனர். விஞ்ஞான முன்னேற்றத்தின் வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையாகவும், மனித வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவும் இருக்கும், அணுக்கரு இணைவு மூலம் மாசில்லா அதிக ஆற்றலை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க ஆராச்சியாளர்கள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளனர். அணுக்கருவை பிளவுபடுத்துவதற்குப் பதிலாக இரண்டு அணுக்கருக்களை இணைப்பதன் மூலம் தற்போது அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் நுட்பமான பிளவு, பிளவு ஆகியவற்றிலிருந்து வேறுபடுகிறது. இணைவு ஆராய்ச்சியின் நோக்கம் சூரியனில் … Read more

புகைப்பிடிக்க கூடாது – இளைஞர்களுக்கு சிகரெட் விற்க தடை!

நியூசிலாந்து நாட்டில் இளைஞர்கள் புகைப் பிடிக்க நிரந்தரமாகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், கனடா உட்பட உலகம் முழுவதும் இளைஞர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதை தடுக்கும் பொருட்டு, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் இது குறித்த விழிப்புணர்வும் இளைஞர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டு மக்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாவதைக் குறைக்கும் வகையில் நியூசிலாந்து அரசு … Read more

“மின்கட்டமைப்பை சீரமைக்க 800 மில்லியன் யூரோ தேவை” – உக்ரைன் வேண்டுகோள்

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வரும் உக்ரைனில் சேதமடைந்த மின்கட்டமைப்பை சீரமைக்க 800 மில்லியன் யூரோ தேவைப்படுவதாக ஐரோப்பிய யூனியனுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைனுக்கு உதவுவதற்காக பாரிஸில் நடந்த சர்வதேச மாநாட்டில் இக்கோரிக்கையை முன்வைத்த ஜெலன்ஸ்கி, நிதியாக மட்டுமின்றி மின்மாற்றிகள், உயரழுத்த மின்கம்பிகள், ஜெனரேட்டர்கள் போன்றவற்றையும் வழங்க வேண்டும் என்றார். மின்சார கட்டமைப்புகள் சேதப்படுத்தப்பட்டதால் வரும் குளிர் காலத்தை சமாளிக்கும் வகையில் சுமார் இரண்டு பில்லியன் கன மீட்டர் கூடுதல் எரிவாயுவை வழங்க வேண்டுமென … Read more

ரஷ்ய அதிபர் மாளிகையில் பன்றிக்காய்ச்சல் வைரஸ் பரவல்: புடின் ஓட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வெளியான தகவலால் ரஷ்ய அதிபர் புடின் மாளிகையைவிட்டு வெளியேறினார். ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகை வரலாற்று சிறப்புமிக்கது. ரஷ்ய அதிபரின் அதிகாரப்பூரவ அலுவலக மாளிகையாக இந்த கட்டடம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இம்மாளிகையில் எச்1 என்1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் வைரஸ் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிபர் விளாடிமிர் புடின் மாளிகையை … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.94 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 கோடியே 40லட்சத்து 036 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 62 … Read more

நாசாவின் 'ஓரியன்' விண்கலம் பூமிக்கு திரும்பியது

வாஷிங்டன், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2025-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மீண்டும் மனிதரை அனுப்ப ‘ஆர்டெமிஸ்’ என்கிற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்ல ‘ஓரியன்’ என்கிற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது. சோதனை முயற்சியாக ஆளில்லா ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்ட நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் அந்த முயற்சி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. அதைதொடர்ந்து, கடந்த மாதம் 16-ந் தேதி ‘ஆர்டெமிஸ்-1’ ராக்கெட் மூலம் ‘ஓரியன்’ விண்கலம் … Read more

எல்லையில் வீரர்கள் மோதல்: மவுனம் காக்கும் சீனா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெய்ஜிங்: அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் நடந்த மோதல் தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வரும் சீனா, இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பகுதியில் அமைதி நிலவுகிறதாக மட்டும் கருத்து கூறியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் அமைந்துள்ள யாங்ஷ்டே பகுதியில் அத்துமீறி இந்திய பகுதிக்குள் வந்த சீன வீரர்களை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில் இரு … Read more