செல்போன் பேசியபடி சென்ற நபரை பிடிக்க முயன்ற போது 4 கி.மீ தூரம் கார் பானட்டில் இழுத்துச் செல்லப்பட்ட போக்குவரத்து காவலர்..!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் காரில் செல்போன் பேசியபடி சென்ற நபரை பிடிக்க முயன்ற போக்குவரத்து தலைமை காவலர் ஒருவர் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பானட்டில் இழுத்துச் செல்லப்பட்டார். சிவ சிங் சவுகான் என்ற போக்குவரத்து காவலர் சத்யசாய் சந்திப்பில் பணியில் இருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த காரில் இருந்த நபர் அபராதம் செலுத்த மறுத்தது மட்டுமின்றி அங்கிருந்து காரை வேகமாக இயக்கி தப்பி ஓட முயற்சித்துள்ளார். இதனை அறிந்த சவுகான் அந்த … Read more

 அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கத்தார்: ஜூலியன் அல்வாரெஸின் பிரேஸ் மற்றும் லியோனல் மெஸ்ஸியின் கோலினால் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. ஆட்டம் துவங்கிய 34வது நிமிடத்தில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது. 39வது நிமிடத்தில் ஜூலியன் அல்வாரெஸ் ஒரு கோல் அடித்தார். அர்ஜென்டினா அணி 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் மெஸ்ஸியின் தலைமையிலான அர்ஜென்டினாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. … Read more

165 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட ஜீன்ஸ் உலகின் பழமையானது என இந்திய மதிப்பில் ரூ.94 லட்சத்திற்கு விற்பனை..!

அமெரிக்காவின் வட கரோலினா கடற்பகுதியில் 165 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் பழமையான ஜீன்ஸ் இந்திய மதிப்பில் 94 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. 1857-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பனாமாவிலிருந்து நியூயார்க்கிற்கு 425 பேருடன் சென்றுகொண்டிருந்தபோது கப்பல் சூறாவளியில் சிக்கி மூழ்கியது. SS Central America-வில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் இந்த ஜீன்ஸ், மெக்சிகோ-அமெரிக்கப் போரில் ஓரிகானை சேர்ந்த ஜான் டிமென்ட் என்பவருக்குச் சொந்தமான பெட்டி ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. Source link

செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலம் நடத்த டிராய் தீவிரம்

புதுடில்லி :உலகளவில் செயற்கைக்கோள் தொலைதொடர்புக்கான அலைக்கற்றை ஏலத்தை, முதன்முதலாக நடத்த உள்ள நாடாக இந்தியா தான் இருக்கும் என, ‘டிராய்’ எனும், இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பி.டி., வகேலா கூறியுள்ளார். இந்தியாவில் தற்போது தொலைதொடர்பு சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள், செயற்கைக்கோள் வழியாக தொலைதொடர்பு சேவைகளை வழங்குவதற்கு, அலைக்கற்றை ஏலத்தை நடத்துமாறு கோரி வருகின்றன.இதையடுத்து, 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் போன்று, இந்த செயற்கைக்கோள் தொலைதொடர்பு சேவைக்கான ஏலத்தையும் நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.இது … Read more

இந்தியாவின் ஜி – 20 தலைமை ஜி – 7 நாடுகள் முழு ஆதரவு

வாஷிங்டன், இந்தியாவின் தலைமையில், ‘ஜி – ௨௦’ அமைப்பின் வாயிலாக, உலக அளவிலான பிரச்னைகள், சவால்களை எதிர்கொள்வதற்கு முழு ஆதரவை அளிப்பதாக, ‘ஜி – ௭’ அமைப்பு தெரிவித்துள்ளது. ஜி – ௨௦ எனப்படும் உலகின் பெரும் பொருளாதார நாடுகள் அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. கூட்டறிக்கை இந்த அமைப்பின் மாநாடு, புதுடில்லியில் அடுத்தாண்டு செப்., ௯ – ௧௦ல் நடக்க உள்ளது. இதில், ஜி – ௨௦ அமைப்பில் உள்ள அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, … Read more

பார்வையற்ற மாணவர்கள் விளையாடிய கால்பந்து போட்டியை நேரில் கண்டு ரசித்தார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்

பிரிட்டன் மன்னர் சார்லஸ் பார்வையற்ற மாணவர்கள் விளையாடிய கால்பந்து போட்டியை நேரில் கண்டு ரசித்தார். இங்கிலாந்தில் உள்ள பார்வையற்றோருக்கான தேசியக் கல்லூரியின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இப்போட்டி நடைபெற்றது. கல்லூரியில் உள்ள பார்வையற்ற மாணவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடிய மன்னர் சார்லஸ், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். Source link

2 விண்வெளி சோதனை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய சீனா

சீனா இரண்டு விண்வெளி சோதனை செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது. வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச்-4சி ராக்கெட் மூலம் ஷியான்-20ஏ மற்றும் ஷியான்-20பி என்ற இரண்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. செயற்கைக்கோள்கள் விண்வெளி சூழல் கண்காணிப்பு போன்ற புதிய தொழில்நுட்பங்களை சுற்றுப்பாதையில் சரிபார்ப்பதற்காக பயன்படுத்தப்பட உள்ளது. செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையில் நுழைந்ததாகவும், இது லாங் மார்ச் சீரிஸ் ராக்கெட்டுகளின் 454-வது திட்டம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ஜார்குலின் ஃபெர்னாண்டஸ் மீது நடிகை நோரா ஃபதேஹி அவதூறு வழக்கு!

பணமோசடி வழக்கில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ஜார்குலின் ஃபெர்னாண்டஸ் மீது நடிகை நோரா ஃபதேஹி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். 200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரிடம் விலை உயர்ந்த பரிசு பொருட்கள் பெற்றது தொடர்பாக பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் மற்றும் நோரா ஃபதேஹியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சதி செய்ததாக ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் மீது … Read more

சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு..!

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், பெய்ஜிங்கில் உள்ள சிகிச்சை மையங்களில், நோயாளிகள் காத்துக்கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தின் காரணமாக, கொரோனா கட்டுப்பாடுகளை சீன அரசு தளர்த்தியதில் இருந்து, அந்நாட்டில் கொரோனா பரவல் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கிழக்கு பெய்ஜிங்கில் உள்ள சிகிச்சை மையங்களில் நோயாளிகள் வருகை அதிகரித்ததால், படுக்கைகள் நிரம்பியுள்ளன. கிட்டத்தட்ட 40 நோயாளிகள் சிகிச்சைக்காக காத்துக் கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. Source link

குறிப்பிட்ட உடற்பயிற்சியை செய்து முடித்தால் இலவச பேருந்து சீட்டு.. வித்தியாசமான யோசனையை கடைபிடிக்கும் ருமேனியா..!

ருமேனியாவில், குறிப்பிட்ட உடற்பயிற்சியை செய்து முடிப்போருக்கு இலவச பேருந்து சீட்டு வழங்கப்படுகிறது. இணையத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், எந்திரத்தின் முன் நின்று, பெண் ஒருவர் ஸ்குவாட் எனப்படும் உடற்பயிற்சியை செய்கிறார். குறிப்பிட்ட அளவான இருபது ஸ்குவாட்களை, அந்த பெண் செய்து முடித்தவுடன், அவருக்கு இலவச பேருந்து சீட்டை அந்த எந்திரம் வழங்கியது. மக்களை ஊக்கப்படுத்தவும், நல்ல உடல்வாகுடன் இருக்கவும், குறிப்பிட்ட உடற்பயிற்சியை செய்வோருக்கு இலவச டிக்கெட்களை ருமேனியா வழங்குகிறது. Source link