“உக்ரைன்- ரஷ்யா போரைத்தொடர்ந்து, உலகம் முழுவதும் ஆயுத தேவை அதிகரிப்பு – ரபேல் நிறுவன சிஇஓ
உக்ரைன் – ரஷ்யா போரைத்தொடர்ந்து, உலகம் முழுவதும் ஆயுதங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக, இஸ்ரேலிய ரபேல் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் யோவ் ஹர்-ஈவன் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய ரஃபேல் நிறுவனம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்திய ஆயுதப்படைகளுக்கு பல்வேறு ஆயுதங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளை வழங்கி வருகிறது. அந்நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கும் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹார்-ஈவன், ரஃபேல் இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருவதாகக் கூறினார். … Read more