இயற்கை எழில் மிகுந்த படாங்கலி பகுதியில் நிலச்சரிவு – 16 பேர் பலி

மலேசியாவின் சிலாங்கூர் அருகே சுற்றுலா முகாம் ஒன்றில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி, 16 பேர் உயிரிழந்தனர். இயற்கை எழில் மிகுந்த படாங் கலி என்னுமிடத்தில், முகாம் வசதிகளுடன் கூடிய இயற்கை பண்ணை அமைந்துள்ளது. அந்த முகாம்களில் 90க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் திடீரென நிலச்சரிவு நிகழ்ந்தது.  நிலச்சரிவில் சிக்கிய 59 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், மண்ணுக்குள் புதைந்து மாயமான 20க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  Source … Read more

சீனாவில் மீண்டும் பரவுது கோவிட்; நிரம்பி வழியும் மருத்துவமனைகள்| Dinamalar

பீஜிங் :சீனாவில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்து வருகிறது. நோயாளிகள் வருகை அதிகரித்து இரு/ப்பதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து வருகிறது. படுக்கையறைகள் இல்லாமல் மருத்துவமனை அருகே சிகிச்சை அளிக்கப்படுகிறது. 24 மணி நேரத்தில் புதிதாக 2000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் முதல் கொரோனா தொற்று சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுதும் பரவியது. தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக இத்தொற்றில் இருந்து … Read more

"கொல்லைப்புறத்தில் பாம்பை வளர்த்துக் கொண்டு…" – பாகிஸ்தானை சரமாரியாக விளாசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

நியூயார்க்: “கொல்லைப்புறத்தில் பாம்பை வளர்த்துக் கொண்டு அது பக்கத்துவீட்டுக்காரரை மட்டுமே கடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்” என்று பாகிஸ்தானை சரமாரியாக விளாசியுள்ளார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10 தற்காலிக உறுப்பு நாடுகளும் உள்ளன. தற்காலிக உறுப்பு நாடுகள் 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த அமைப்புக்கு மாதத்துக்கு ஒரு உறுப்பு நாடு தலைமை வகிக்கும். அந்த வகையில் டிசம்பர் மாதத்துக்கு … Read more

பெரு நாட்டில் அவசர நிலை பிரகடனம்

லிமா : தென் அமெரிக்க நாடான பெருவில் சில ஆண்டுகளாகவே அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. 2020-ம் ஆண்டில் 5 நாளில் 3 அதிபர்கள் நாட்டை ஆண்டனர். இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி அதிபராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்றார். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பெட்ரோ காஸ்டிலோ நாட்டில் அவசர நிலையை அமல்படுத்துவதாக அறிவித்தார். மேலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தனிச்சிறப்பு வாய்ந்த அரசை … Read more

Malaysia Landslide : நிலச்சரிவில் சிக்கி 51 பேர் மாயம்; 8 பேர் பலி!

Malaysia Landslide : மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புறநகர் பககுயான உள்ள சிலாங்கூரில் இன்று அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியான அங்கு, சுற்றுலா பயணிகள் அதிகம் முகாமிட்டுள்ள  பண்ணை வீட்டின் அருகில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.  இந்த நிலச்சரிவில் மொத்தம் 79 பேர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 23 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில், எட்டு … Read more

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுவன் தற்கொலை| Dinamalar

வாஷிங்டன் : அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ‘கோல்டன் கேட் பிரிட்ஜ்’ என்ற உயரமான பாலத்தில் இருந்து கடலுக்குள் குதித்து இந்திய வம்சாவளி சிறுவன் தற்கொலை செய்துகொண்டான். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த ௧௬ வயது இந்திய வம்சாவளி சிறுவன் அங்கு 12ம் வகுப்பு படித்து வந்தான். சமீபத்தில் இச்சிறுவன் கோல்டன் கேட் பிரிட்ஜ் பாலத்தில் இருந்து கடலுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக, அமெரிக்க கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர். பாலத்தில் இருந்து சிறுவன் … Read more

இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து நீரவ் மோடி தாக்கல் செய்த மனு தள்ளுபடி: லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவு

லண்டன்: வைர வியாபாரி நீரவ் மோடியும் அவரது உறவினரான மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி அளவில் கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தனர். இந்த வழக்குத் தொடர்பான கைது நடவடிக்கையிலிருந்துத் தப்பிக்க 2018-ம் ஆண்டு அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பிச் சென்றனர். மெகுல் சோக்ஸி ஆன்டிகுவா தீவுக்கு தப்பிச் செல்ல, நீரவ் மோடி பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். இந்திய அரசின் வலியுறுத்தலின் பேரில் பிரிட்டன் அரசு 2019-ம் ஆண்டு … Read more

கிறிஸ்துமஸ் பண்டிகை செலவுகளைக் குறைத்து, போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுமென போப் பிரான்சிஸ் வேண்டுகோள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கான செலவுகளைக் குறைத்து போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு கொடுத்து உதவ வேண்டுமென போப் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில் இருந்து கலந்து கொள்ளும் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் உக்ரைனில் போரை நிறுத்த வேண்டுமென போப் பிரான்சிஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.   போரில் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் குளிரிலும், பசியிலும் வாடி வருகின்றனர் என்று தெரிவித்த போப், அவர்களது இதயங்களில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் … Read more

“உக்ரைன்- ரஷ்யா போரைத்தொடர்ந்து, உலகம் முழுவதும் ஆயுத தேவை அதிகரிப்பு – ரபேல் நிறுவன சிஇஓ

உக்ரைன் – ரஷ்யா போரைத்தொடர்ந்து, உலகம் முழுவதும் ஆயுதங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக, இஸ்ரேலிய ரபேல் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் யோவ் ஹர்-ஈவன் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய ரஃபேல் நிறுவனம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்திய ஆயுதப்படைகளுக்கு பல்வேறு ஆயுதங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளை வழங்கி வருகிறது. அந்நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கும் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹார்-ஈவன், ரஃபேல் இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருவதாகக் கூறினார். … Read more

நாடு கடத்துவதற்கு எதிரான மனு கடைசி வாய்ப்பை இழந்தார் நிரவ் மோடி| Dinamalar

லண்டன்,:இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவதை எதிர்த்து, பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் வாய்ப்பை, தொழிலதிபர் நிரவ் மோடி, 51, இழந்தார். மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 11 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பிச் சென்றார். அங்கு, கடந்த 2019ல் நிரவ் மோடி கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., … Read more