“எங்களிடம் இன்னும் நிறைய ஆயுதங்கள் உள்ளன” – புதினின் புதிய மிரட்டல்

மாஸ்கோ: போர்களுக்கான காலம் முடிந்துவிட்டது என்று ரஷ்ய அதிபர் புதினுக்கு அறிவுறுத்தல்கள் ஒருபுறம் வரும் சூழலில்தான், அவர் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் “எங்கள் தேசத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு ஏதேனும் பங்கம் வந்தால் நாங்கள் எங்கள் மக்களைக் காக்க எல்லா வழிகளையும் கடைபிடிப்போம். ரஷ்யாவிடம் நிறைய ஆயுதங்கள் இருக்கின்றன. இது வெறும் உளறல்கள் அல்ல. மேற்கு உலகம் ரஷ்யாவை சிதைக்க நினைக்கிறது. அதனாலேயே நாங்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவாகப் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றது. ஆனால் அவ்வாறாக அறிக்கைகள் விடுவோருக்கு … Read more

பிரிட்டனில் ஹிந்து கோவிலை முற்றுகையிட்டு முஸ்லிம்கள் போராட்டம்| Dinamalar

லண்டன்: பிரிட்டனின் வெஸ்ட் மிட்லாண்ட்டில் உள்ள ஸ்மெத்விக் நகரில் இருக்கும் துர்கா கோயிலை 200க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள். துபாயில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர், ரசிகர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டது. இதனால், லீசெஸ்டர்ஷையரில் அமைந்துள்ள ஹிந்து கோவிலில் காவிக்கொடி கிழிக்கப்பட்டதால் வன்முறை ஏற்பட்டது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்திற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.இந்நிலையில், … Read more

”ஒற்றுமையுடன் செயல்படுவோம்” – இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகர இந்து – இஸ்லாமிய தலைவர்கள் கூட்டறிக்கை

லண்டன்: “ஒற்றுமையுடன் செயல்படுவோம்” என்று இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகர இந்து – இஸ்லாமிய தலைவர்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஆசிய கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி தோற்கடித்ததை அடுத்து, கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி லீசெஸ்டர் மாநகரில் மோதல் வெடித்தது. இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலை அடுத்து, லீசெஸ்டர் மாநகரில் உள்ள இந்துக்களையும் அவர்களின் வீடு, கடைகள், கோயில்கள் ஆகியவற்றையும் குறிவைத்து பாகிஸ்தானிய இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக 47 பேரை … Read more

நீடிக்கும் உக்ரைன் யுத்தம்; ரஷ்ய அதிபரின் அதிரடி அறிவிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போர்: ஏழு மாத காலமாக, உக்ரைன் யுத்தம் தொடரும் நிலையில் ராணுவத்தை அணிதிரட்டுவது தொடர்பான முக்கிய ஆணையில் கையெழுத்திட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார். நாட்டு மக்களிடையே ஆற்றிய ஒரு அரிய உரையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனில் போர் நடவடிக்கை தொடங்கி ஏறக்குறைய ஏழு மாதங்களை எட்டியுள்ள நிலையில், நாட்டின் 2 மில்லியன் வலிமையான இராணுவ துருப்புக்களை அணிதிரட்டுவதற்கான ஆணையில் கையெழுத்திட்டதாக அறிவித்தார். “தாய்நாடு, அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு … Read more

ரஷ்யாவுடன் இணையும் உக்ரைன் பிராந்தியங்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்: ரஷ்ய ஆதரவு பெற்றுள்ள பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் நான்கு பிராந்தியங்கள், அந்நாட்டுடன் இணைய உள்ளன. இதற்காக மக்களிடம் கருத்து கேட்கும் ஓட்டெடுப்பு விரைவில் துவங்க உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த, பிப்., 25ல் போர் தொடுத்தது. ஏழு மாதங்களை கடந்து போர் நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், போரை தீவிரப்படுத்தும் … Read more

ஐ.நா.,வில் பிரதமர் மோடிக்கு அமெரிக்கா, பிரான்ஸ் பாராட்டு| Dinamalar

நியூயார்க்: தற்போது போருக்கான காலம் அல்ல என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் வலியுறுத்திய பிரதமர் மோடியை, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவை பாராட்டு தெரிவித்துள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சமீபத்தில் கஜகஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் புடினை சந்தித்த பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இருவரும், உணவு, எரிபொருள் பாதுகாப்பு மற்றும் உரம் தொடர்பாக விவாதித்த போது, புடினிடம் தற்போது போருக்கான … Read more

'உக்ரைன் விவகாரத்தில் மோடி சொன்னதுதான் சரி' – ஐ.நா. சபையில் பிரான்ஸ் அதிபர் பேச்சு

நியூயார்க்: உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பார்வைதான் மிகவும் சரியானது என்று பேசியுள்ளார் பிரான்ஸ் அதிபர் இமானுவே மேக்ரான். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையில் நடந்த பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு இவ்வுலகை பிரித்துக் கொண்டிருக்கிறது. காலனி ஆதிக்க காலத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. இவ்விவகாரத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதுதான் மிகவும் சரியானது. அவர் “இது … Read more

மியான்மரில் பள்ளிக்கூடம் மீது வான்வழி தாக்குதல் – 11 சிறுவர்கள் பலி

நோபிடாவ், மியான்மரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தை கைபற்றியது. அதை தொடர்ந்து மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தை ராணுவம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது. ராணுவ வீரர்களின் துப்பாக்கிச்சூட்டில் 1,500க்கும் அதிகமானோர் கொன்று குவிக்கப்பட்டனர். இப்போதும் அங்கு ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்களை குறிவைத்து ராணுவம் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த … Read more

வைரசை கண்டறிந்து குறுஞ்செய்தி அனுப்பும் முக கவசம் கண்டுபிடிப்பு – சீன விஞ்ஞானிகள் அசத்தல்

பீஜிங், சீனாவில் 2019-ம் ஆண்டின் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளை கடந்தும் முற்றாக ஒழியாமல் உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் உயிர் காக்கும் கவசமாக முக கவசம் இருந்து வருகிறது. இந்த நிலையில் காற்றில் வைரஸ் கலந்திருந்தால் அதை குறுஞ்செய்தி மூலம் அணிந்திருப்பவருக்குக் காட்டிக் கொடுக்கும் வகையில் நவீன முக கவசத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள டோங்ஜி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த … Read more

லெய்செஸ்டர் இஸ்கான் ஆலய தாக்குதலில் அமைதியை மீட்கும் இந்து முஸ்லீம் மதத் தலைவர்கள்

Hindu Temple Vandalization: லெய்செஸ்டரில் இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகளுக்கு பிறகு, இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று இந்து மற்றும் முஸ்லிம் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, இரு … Read more