“மின்கட்டமைப்பை சீரமைக்க 800 மில்லியன் யூரோ தேவை” – உக்ரைன் வேண்டுகோள்

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வரும் உக்ரைனில் சேதமடைந்த மின்கட்டமைப்பை சீரமைக்க 800 மில்லியன் யூரோ தேவைப்படுவதாக ஐரோப்பிய யூனியனுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைனுக்கு உதவுவதற்காக பாரிஸில் நடந்த சர்வதேச மாநாட்டில் இக்கோரிக்கையை முன்வைத்த ஜெலன்ஸ்கி, நிதியாக மட்டுமின்றி மின்மாற்றிகள், உயரழுத்த மின்கம்பிகள், ஜெனரேட்டர்கள் போன்றவற்றையும் வழங்க வேண்டும் என்றார். மின்சார கட்டமைப்புகள் சேதப்படுத்தப்பட்டதால் வரும் குளிர் காலத்தை சமாளிக்கும் வகையில் சுமார் இரண்டு பில்லியன் கன மீட்டர் கூடுதல் எரிவாயுவை வழங்க வேண்டுமென … Read more

ரஷ்ய அதிபர் மாளிகையில் பன்றிக்காய்ச்சல் வைரஸ் பரவல்: புடின் ஓட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வெளியான தகவலால் ரஷ்ய அதிபர் புடின் மாளிகையைவிட்டு வெளியேறினார். ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகை வரலாற்று சிறப்புமிக்கது. ரஷ்ய அதிபரின் அதிகாரப்பூரவ அலுவலக மாளிகையாக இந்த கட்டடம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இம்மாளிகையில் எச்1 என்1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் வைரஸ் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிபர் விளாடிமிர் புடின் மாளிகையை … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.94 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 கோடியே 40லட்சத்து 036 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 62 … Read more

நாசாவின் 'ஓரியன்' விண்கலம் பூமிக்கு திரும்பியது

வாஷிங்டன், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2025-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மீண்டும் மனிதரை அனுப்ப ‘ஆர்டெமிஸ்’ என்கிற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்ல ‘ஓரியன்’ என்கிற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது. சோதனை முயற்சியாக ஆளில்லா ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்ட நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் அந்த முயற்சி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. அதைதொடர்ந்து, கடந்த மாதம் 16-ந் தேதி ‘ஆர்டெமிஸ்-1’ ராக்கெட் மூலம் ‘ஓரியன்’ விண்கலம் … Read more

எல்லையில் வீரர்கள் மோதல்: மவுனம் காக்கும் சீனா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெய்ஜிங்: அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் நடந்த மோதல் தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வரும் சீனா, இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பகுதியில் அமைதி நிலவுகிறதாக மட்டும் கருத்து கூறியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் அமைந்துள்ள யாங்ஷ்டே பகுதியில் அத்துமீறி இந்திய பகுதிக்குள் வந்த சீன வீரர்களை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில் இரு … Read more

குழந்தை பெற்றுக் கொண்டால் ₹3 லட்சம்; சலுகைகளை அள்ளி வீசும் ஜப்பான் அரசு!

ஜப்பான் நாட்டில் மக்கள் தொகை குறைந்து வருவதாலும், சில காலமாக குறைந்து வரும் பிறப்பு விகிதத்தாலும் கலக்கமடைந்துள்ளது. நாட்டின் சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகம், அறிவித்துள்ள சில சலுகைகள், மூலம் மக்கள் குழந்தைகளைப் பெற ஊக்குவிக்கும் என்று நம்புகிறது. ஜப்பான் டுடே வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​குழந்தை பிறக்கும் போது, ​​பெற்றோருக்கு, 4,20,000 யென் (ரூ. 2,53,338) வழங்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையை 500,000 யென்களாக (ரூ. 3,00,402) அதிகரிக்க சுகாதாரம், தொழிலாளர் … Read more

இந்திய இலங்கை கடற்படை தளபதிகள் சந்திப்பு| Dinamalar

கொழும்பு:இந்திய கடற்படை தளபதி ஹரிகுமார் அரசு முறை பயணமாக நேற்றிரவு(டிச.,12) கொழும்பு சென்றடைந்தார். இந்நிலையில் இன்று அவர் இலங்கையின் கடற்படை கமண்டர்யுடன் சந்திப்பு நடத்தி ஆலோசனை மேற்கொண்டார். இது பொதுவான ஆர்வமுள்ள கடல்சார் பாதுகாப்பு விஷயங்களில் பயனுள்ள விவாதங்கள் மற்றும் கடல்சார் களத்தில் ஒத்துழைப்பை. மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஆகும். கொழும்பு:இந்திய கடற்படை தளபதி ஹரிகுமார் அரசு முறை பயணமாக நேற்றிரவு(டிச.,12) கொழும்பு சென்றடைந்தார். இந்நிலையில் இன்று அவர் இலங்கையின் கடற்படை கமண்டர்யுடன் சந்திப்பு நடத்தி ஆலோசனை … Read more

இந்திய எல்லையில் நிலைமை சீராக உள்ளது: மோதலுக்குப் பிறகு சீனா விளக்கம்

பீஜீங்: இந்திய – சீன எல்லையில் தற்போது நிலைமை சீராக இருப்பதாக சீனா தெரிவித்திருக்கிறது. இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறும்போது, “நான் புரிந்துகொண்டதன்படி, இந்தியா – சீனா இடையே எல்லைப் பகுதியில் தற்போது நிலைமை சீராக உள்ளது. எல்லைப் பகுதியில் நிலவும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்” என்றார். முன்னதாக, அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதிக்கு அருகே உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், கடந்த … Read more

தைவான் வான் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீனாவின் அணு ஆயுத விமானங்கள்..!

தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்தில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, அணு ஆயுதங்களை ஏந்திச்செல்லும் விமானங்களை சீனா அனுப்பியதாக தைவான் தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன், தைவானிலிருந்து உணவு பொருட்கள், மீன் மற்றும் இதர பொருட்களை இறக்குமதி செய்ய, சீனா புதிதாக தடை விதித்தது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் 18 H-6 விமானங்கள் உள்பட 21 விமானங்கள், தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்தில் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

தாய்லாந்தில் பள்ளி மாணவர்களுடன் கால்பந்து விளையாடிய யானைகள்..!

கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றுவரும் நிலையில், தாய்லாந்தில் யானைகள், பள்ளி மாணவர்களுடன் கால்பந்து விளையாடி, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தின. உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்ற அர்ஜெண்டினா, பிரான்ஸ், மொராக்கோ, குரேஷியா நாடுகளின் கொடிகள் உட்பட, ஃபிபா உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்ற நாடுகளின் கொடிகளை, உடலில் வர்ணம் தீட்டிய 13 யானைகள், மைதானத்தில் கால்பந்து விளையாடியதை மாணவர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். உள்ளூர் சுற்றுலாவை மேம்படுத்தவும், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி … Read more