பத்ம பூஷன் விருது பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லேபியர் வயது முதிர்வால் காலமானார்!

பாரிஸ், புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லேபியர்( 91) வயது முதிர்வால் நேற்று காலமானார். டொமினிக் லேபியர் அமெரிக்க எழுத்தாளர் லாரி காலின்ஸுடன் இணைந்து ஆறு புத்தகங்களை எழுதினார். லேபியர்-காலின்ஸுடன் இணைந்து இயற்றிய ஆறு புத்தகங்கள் 50 மில்லியன் பிரதிகள தாண்டி விற்பனையாகியுள்ளன. அவர்கள் இயற்றிய “இஸ் பாரிஸ் பர்னிங்?” புத்தகம் உலகப்புகழ் பெற்றது. கொல்கத்தாவில் ஒரு ரிக்சாக்காரர் வாழ்க்கையில் படும் கஷ்டங்களைப் பற்றி எழுத்தாளர் டொமினிக் லேபியர் எழுதி, 1985இல் வெளியான ‘சிட்டி ஆப் ஜாய்’ … Read more

ரஷியாவின் காஸ்பியன் கடற்கரையில் 2,500 சீல்கள் செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு!

மாஸ்கோ, தெற்கு ரஷியாவின் காஸ்பியன் கடற்கரையில் கிட்டத்தட்ட 2,500 சீல்கள் உயிரிழந்து கரை ஒதுங்கின. இத்தனை சீல்கள் உயிரிக்க காரணம் தெரியவில்லை எனவும், ஒருவேளை அவை இயற்கையாக இறந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முதலில் 700 சீல்கள் இறந்திருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் நடத்தப்பட்ட விரிவான ஆய்வில் இந்த எண்ணிக்கை 2,500 ஆக அதிகரித்தது. காஸ்பியன் சுற்றுச்சூழல் மைய தலைவர் ஜார் காபிசோவ் கூறுகையில், இவை ஒரு வரத்திற்கு முன் இறந்திருக்கலாம், அவை வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டதற்கான எந்த … Read more

மனஉளைச்சலால் நீதிமன்றத்தை நாடிய நபர்| Dinamalar

டப்ளின்: அயர்லாந்தில் வேலையே கொடுக்காமல் ‘சும்மா’ வந்துசெல்ல ஆண்டுக்கு ரூ.1.03 கோடி சம்பளம் கொடுத்துள்ளதாகவும் இதனால் தனக்கு மனஉளைச்சல் ஏற்படுவதாகவும் ரயில் நிறுவனத்தில் பணியாற்றும் நபர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை புலம்புவதையே பலரும் வாடிக்கையாக வைத்திருப்பர். எவ்வளவு வேலை செய்தாலும், சம்பளம் விஷயத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை திருப்திப்படுத்துவதில்லை. இது இப்படியிருக்க அயர்லாந்தை சேர்ந்த ஒருவருக்கு எந்த வேலையையும் செய்ய விடாமல் ‘சும்மாவே’ இருக்க வைத்து சம்பளம் கொடுத்திருக்கிறது அவர் பணியாற்றிய ரயில்வே … Read more

ஊபரில் சென்று வங்கியை கொள்ளை அடித்த திருடன் – சிங்கம் சூர்யாவாக மாறிய போலீஸ்!

அமெரிக்காவின் அயோவாவின் டெஸ் மொயின்ஸ் நகரில் உள்ள வங்கியைக் கொள்ளையடித்த புளோரிடாவைச் சேர்ந்த நபர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார், பின்னர் அவரை தனது இல ஓட்டிச் சென்ற உபெர் டிரைவரை கார்ஜாக் செய்தார். புளோரிடாவைச் சேர்ந்த 22 வயதான ஜேவியர் ரஃபேல் என்பவர் கடந்த புதன்கிழமை மாலை 6 மணியளவில், மினசோட்டாவின் லேக் கவுண்டியில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் அமெரிக்க-கனடா எல்லையில் இருந்து இரண்டு மணி நேரம் தொலைவில் இருந்தபோது அவரை ​போலீசார் கைது … Read more

ஈரானில் மரண தண்டனைகள் நிறைவேற்றம் அதிகரிப்பு

தெஹ்ரான்: ஈரானில் மரண தண்டனைகள் நிறைவேற்றி வருவது அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஈரான் சமீபத்தில் இஸ்ரேல் உளவுத் துறையுடன் இணைந்து பணியாற்றிய ஈரானைச் சேர்ந்த நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஈரான் நீதித் துறை இணையதள பக்கத்தில், “இஸ்ரேலின் உளவுத் துறையுடன் இணைந்து பணி செய்த நால்வர் மே மாதம் கைது செய்யப்பட்டனர். நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த மூவருக்கு சிறைத் தண்டனை (5 … Read more

மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த புதின்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் (70), மாஸ்கோவில் உள்ள தனது வீட்டு படிக்கட்டில் கடந்த வாரம் இறங்கும் போது கால் இடறி கீழே விழுந்தார் என ‘தி டெலிகிராம்’ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 5 படிக்கட்டுகளை தாண்டி புதின் கீழே விழுந்ததில், அவரது முதுகுதண்டின் அடிப்பகுதி எலும்பு (டெயில் போன்) பாதிப்படைந்ததாகவும், இதன் காரணமாக ஏற்கெனவே குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த புதினுக்கு தானாக மலம் வெளியேறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் உடல் நிலை மோசம் … Read more

அமைதி பேச்சுக்கு அதிபர் புதின் ஒப்புக் கொண்டால் ரஷ்ய பாதுகாப்புக்கு உத்தரவாதம் வேண்டும்: மேற்கத்திய நாடுகளுக்கு பிரான்ஸ் அதிபர் வேண்டுகோள்

பாரீஸ்: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைக்கு அதிபர் புதின் ஒப்புக் கொண்டால், ரஷ்ய பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்குவது குறித்து மேற்கத்திய நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் முடிவு செய்ததால், அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்தது. அது இன்னும் தொடர்கிறது. இந்தப் போர் காரணமாக, உலகளாவிய பொருளாதாரத்தில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இரு நாடுகள் இடையே … Read more

மாந்தரீகர் கட்டுபாட்டில் புடின்; மான் இரத்தத்தில் குளியில்… ரஷ்ய பத்திரிகையாளரின் பகீர் தகவல்!

உலக அளவில் பொருளாதார நீதியாகவும் பிற வகைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ரஷ்யா உக்ரைன் போர் 9 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், சமாதானம் ஏற்படுவதற்கான அறிகுறி எதுவுமே தென்படவில்லை. மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன. சில ஊடகங்களில், அவருக்கு கடுமையான புற்று நோய் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சிலர் அவருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட தீவிரமான நோய் இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால், எதுவும் உறுதிபடுத்தப்படவில்லை. இந்நிலையில், … Read more

ஆண்டுக்கு ரூ.1.03 கோடி சம்பளம். ஆனால், செய்வதற்கு ஒரு வேலையும் இல்லை: அயர்லாந்து இளைஞர் வழக்கு

டப்ளின்: தனக்கு ஆண்டுக்கு 1.03 கோடி ரூபாய் சம்பளம் (இந்திய மதிப்பில்) தரும் தனது நிறுவனம் தன்னிடம் அதற்கு உரித்தான வேலையைப் பெறுவதில்லை என்று குற்றஞ்சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். ஆரோக்கியமான பணிச் சூழல் ஒரு நபரின் மனநலத்திற்கு மிகவும் அவசியம் என்று கூறப்படுகிறது. ஆனால், தன் பணியே தனக்கு பெரிய அழுத்தமாக ஆகியிருப்பதாகக் கூறியுள்ளார் டெட்மார் மில்ஸ். ஐரிஷ் ரெயில் என்ற நிறுவனத்தில் நிதி மேலாளராகப் பணிபுரிகிறார் டெர்மாட் அலஸ்டெய்ர் … Read more

B 21 Raider: சீனாவை குறிவைக்கும் அமெரிக்கா! ரேடரில் சிக்காத போர் விமானம் அறிமுகமானது

பெண்டகன்: உலகின் முதல் ஆறாவது தலைமுறை அணுசக்தி குண்டுவீச்சு B-21 ரைடர் போர் விமானத்தை அமெரிக்கா வெளியிட்டது. 30 ஆண்டுகளில் இந்த நவீன வசதி கொண்ட ரைடரின் அணியைஉருவாக்கவும், வாங்கவும் இயக்கவும் 203 பில்லியன் அமெரிக்க டாலர் அளவு செலவாகும் என்று ப்ளூம்பெர்க் மதிப்பிட்டுள்ளது. இந்த வகை குண்டுவீச்சு ரைடர்களில் குறைந்தபட்சம் 100 விமானங்களை வாங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. போர் விமானத்தின் பெரும்பாலான அம்சங்கள் ரகசியமாகவே உள்ளன. இது ஒரு ஆளில்லாத விமானமாக இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக … Read more