இந்தியா தாக்கினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்: பாகிஸ்தான் ராணுவ தளபதி பேச்சு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த நவம்பர் 24-ம் தேதி அசிம் முனீர் புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று அவர் சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சென்று அங்குள்ள ராணுவ வீரர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “கில்ஜித் பல்திஸ்தான், ஜம்மு, காஷ்மீர் குறித்து இந்தியா பொறுப்பற்ற கருத்துகளை தெரிவித்து வருகிறது. நம் தாய் நிலத்தில் ஒரு அங்குலத்தைக் கூட இந்தியா அபகரிக்க முடியாது. இந்தியா நம் மீது போர் தொடுத்தால் … Read more

பெண்களின் தொடர் போராட்டம் எதிரொலி: ஈரானில் ஹிஜாப் கண்காணிப்பு பிரிவு கலைப்பு

டெஹ்ரான்: ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்நாட்டு அரசு ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவைக் கலைத்துள்ளது. ஈரானில் இஸ்லாமிய மதச் சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வீட்டைவிட்டு வெளியில் செல்லும் 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயம். இதற்கிடையே, ஹிஜாப் மத உடைக் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க 2006-ல் அறநெறிக் காவல் பிரிவை ஈரான் அரசு தொடங்கியது. ரோந்துப் பணியில் ஈடுபடும் … Read more

கனடா அரசு அறிவிப்பால் இந்தியர் மகிழ்ச்சி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டாவா: தங்கள் நாட்டில் வேலை பார்க்கும் வெளிநாட்டவரின் குடும்பத்தாரும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கனடா அறிவித்துள்ளது. இது அங்கு வாழும் இந்தியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில் தற்போது உயர் திறன் பதவிகளில் உள்ள வெளிநாட்டவரின் கணவர் அல்லது மனைவி மட்டுமே வேலைக்காக விண்ணப்பிக்க முடியும். இந்நிலையில், இந்தக் கட்டுப்பாட்டை நீக்கி, தங்கள் நாட்டில் பணியாற்றும் அனைத்து வெளிநாட்டவரின் மனைவி அல்லது கணவர், குழந்தைகளும் வேலைக்கு … Read more

Miss World: கத்தார் உலக அழகிப்போட்டி! 45 லட்சம் பரிசு வென்ற உலக அழகி ஒட்டகம்

Camel Beauty Contest: கத்தாரில் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு நடத்தப்பட்ட மற்றொரு போட்டியும் மக்களை வெகுவாக கவர்ந்தது. ஒட்டகங்களின் அழகுப் போட்டி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த போட்டியில், உலகின் மிக அழகான ஒட்டகம் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டது. பல நாட்கள் நடந்த இந்தப் போட்டியில் 700க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் பங்கேற்றன. இந்த ஒட்டகப் போட்டி மத்திய கிழக்கு முழுவதும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இந்த பிராந்தியத்தில் ஒட்டகங்கள் தலைமுறை தலைமுறைகளாக மக்களுடன் … Read more

படிக்கட்டுகளில் தவறி விழுந்த ரஷ்ய அதிபர் புடின் கவலைக்கிடம்?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: ரஷ்ய அதிபர் மாளிகையின் படிக்கட்டுகளில் அதிபர் விளாடிமிர் புடின், 70, தவறி விழுந்ததாகவும், அவரது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடல்நிலை குறித்து, கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி வதந்திகள் பரவி வருகின்றன. அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாக முதலில் தகவல் பரவியது. இதை, ரஷ்ய அதிபர் மாளிகை முற்றிலுமாக மறுத்தது. இந்நிலையில், கரீபிய தீவு நாடான கியூபா … Read more

 உலக மண் தினம் டிச.,05| Dinamalar

உலகத்தில் அதிக சகிப்புத் தன்மை கொண்டதாக, பூமி முழுவதும் பரவி கிடக்கும் ‘மண்’ணைதான் குறிப்பிட்டாக வேண்டும். ஏனெனில் யார் என்ன செய்தாலும், அதை உள்வாங்கிக்கொண்டு, சகித்துக் கொண்டு இருக்கும் மண்ணை பாதுகாப்பது நமது கடமை. அது அமைதியாக இருக்கிறது என்பதற்காக, அதை மாசுபடுத்தி கொண்டிருக்கிறோம். இதனால் மண்ணில் வாழும் நுண்ணுயிரில் இருந்து, புல், பூண்டு முதல், பெரிய உயிரினங்கள் வரை அனைவருக்குமே பேராபத்து என்பதை நாம் உணரும் தருவாயில் இருக்கிறோம். உலகம் முழுவதும் உள்ள மண்ணை, 12 … Read more

போராட்டத்துக்கு பணிந்தது ஈரான்: கலாசார காவல் படை கலைப்பு

டெஹ்ரான்:ஈரானில் ‘ஹிஜாப்’ அணிய எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின் எதிரொலியாக, அந்த நாட்டின் கலாசார காவல் படைப் பிரிவு கலைக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான ஈரானில், பெண்களுக்கு கடுமையான உடைகட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. நடவடிக்கை ஹிஜாப் எனப்படும் முகம் மற்றும் தலையை மறைக்கும் துணியை அணியாத பெண்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன், ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்ட மாஸா அமினி, 22, என்ற பெண், போலீஸ் காவலில் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஈரானில் சர்ச்சையை … Read more

4 உளவாளிகளுக்கு ஈரானில் துாக்கு| Dinamalar

டெஹ்ரான் : இஸ்ரேலுக்காக, ஈரானில் உளவு பார்த்த நான்கு உளவாளிகள் ஈரானில் நேற்று துாக்கிலிடப்பட்டனர். மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் மற்றும் மேற்காசிய நாடான ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி தங்கள் உளவு பார்க்கப்படுவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஈரான் அரசை உளவு பார்ப்பதாக, ஏழு பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இஸ்ரேலின், ‘மொசாட்’ உளவு அமைப்புக்காக ஈரானில் உளவு வேலையில் ஈடுபட்டு வந்ததாக … Read more

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தின் முதல் வெற்றி: 'அறநெறி போலீஸ்' பிரிவை கலைத்த ஈரான்

தெஹ்ரான், இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரான். அந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும், பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதை உறுதிபடுத்தவும் ‘அறநெறி போலீஸ்’ பிரிவு செயல்பட்டு வருகிறது. 2006-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த அறநெறி போலீஸ் பிரிவு ஈரானில் மக்கள் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுவதை உறுதிபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். இதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டு … Read more

சீனாவுக்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்தப்படும்: இலங்கை எம்.பி எச்சரிக்கை

கொழும்பு, இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இலங்கைக்கு சீனா அதிக அளவில் கடன் கொடுத்து தனது வலையில் சிக்க வைத்து விட்டதாகவும், இதனால்தான் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த 30-ந்தேதி பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டணி எம்.பி.யான சாணக்கியன் ராசமாணிக்கம் பேசும் போது, சீனா இலங்கையின் நட்பு நாடு அல்ல. அது முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் நண்பன். இக்கட்டான … Read more