மியான்மர் சிறையில் பயங்கர குண்டு வெடிப்பு: 8 பேர் பலி

நோபிடாவ், மியான்மரின் 2-வது மிகப்பெரிய நகரமான யாங்கூனில் அந்த நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலை உள்ளது. நூற்றாண்டு பழமையான இந்த சிறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசியல் கைதிகள் ஆவர். இந்த சிறையில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதாகவும், கைதிகள் மனிதாபிமான மற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை இந்த சிறையில் சில கைதிகளை பார்க்க அவர்களது உறவினர்கள் வந்திருந்தனர். அவர்கள் சிறையின் தபால் … Read more

ரஷியாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் ராணுவ சட்டம் அமல்: புதின் அதிரடி

மாஸ்கோ, சிறப்பு ராணுவ நடவடிக்கை என கூறி உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கி 8 மாதங்கள் ஆகிறது. ஆனாலும் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டு இருக்கிறது. இந்த போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை சமீபத்தில் ரஷியா தன்னுடன் இணைத்துக்கொண்டது. இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட அந்த 4 பிராந்தியங்களையும் ரஷியாவிடம் இருந்து மீட்டெடுக்க … Read more

தீவிரமடையும் உக்ரைன் – ரஷ்யா போர்: உக்ரைனிலுள்ள இந்தியர்கள் உடனே வெளியேற இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்!

போர் தீவிரமடைந்து வருவதால் உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள மாணவர்கள் மற்றும் இந்தியக் குடிமக்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றஞ்சாட்டிய ரஷ்யா அந்நாட்டின் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் நிலைமை மோசமடைந்து வருவதால், இந்திய குடிமக்கள் உக்ரைனுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும், மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள் கிடைக்கக்கூடிய வழிகளில் விரைவில் உக்ரைனில் … Read more

மியான்மர் சிறையில் குண்டு வெடித்து 8 பேர் பலி| Dinamalar

பாங்காக் : மியான்மரின் முக்கிய சிறையில், நேற்று குண்டுகள் வெடித்து, எட்டு பேர் பலியாகினர்; 18 பேர் பலத்த காயமடைந்தனர். தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், தற்போது ராணுவ ஆட்சி நடக்கிறது. இங்கு நடந்த தேர்தலில், ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், கடந்த ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதல், அந்நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், யாங்கோன் நகரில் உள்ள ‘இன்செய்ன்’ என்ற சிறையில் அரசியல் கைதிகள் … Read more

பணவீக்கத்தால் வாழ்க்கை செலவு அதிகரிப்பு | பிரிட்டனில் ஒரு நாள் உணவை தவிர்க்கும் லட்சக்கணக்கான மக்கள்

லண்டன்: உலகில் உள்ள வளர்ந்த நாடுகளில் ஒன்றாக பிரிட்டன் உள்ளது. ஆனால், பணவீக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக அங்கு நிலைமை சரியில்லை என்று தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஃபுட் ஃபவுண்டேஷன் சாரிட்டி என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரிட்டனின் உணவுப் பாதுகாப்பின்மை காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் ஒரு நாள் முழுவதும் உணவைத் தவிர்ப்பதாக தெரிய வந்துள்ளது. பிரிட்டனில் கடந்த சில மாதங்களாக நிலைமை ஏற்கெனவே மோசமடைந்து வருகிறது. நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால் … Read more

இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக சுவெல்லா அறிவிப்பு..!

இந்திய வம்சாவளியினத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர்  சுவெல்லா பிரேவ்மான இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அரசு சார்ந்த கோப்புகளையும் ஆவணங்களையும் அவர் நாடாளுமன்ற செயலருக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்த தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள சுவெல்லா தவறே செய்யவில்லை என்பது போல் நடிப்பது, யாரும் அதை அறியவில்லை என்பது போலும் நாம் அதைச் செய்யவே இல்லை என்பது போலும் இருப்பது. ஏதோ மாயாஜாலம் போல எல்லாம் நல்லபடியாக நடந்து விடும் என்று கருதுவதெல்லாம் … Read more

சீன ராணுவத்தில் பிரிட்டன் வீரர்கள்| Dinamalar

பீஜிங் : சீன வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பிரிட்டனின் முன்னாள் விமானப்படை வீரர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். உலக அளவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட பல்வேறு நடவடிக்கைகளை சீனா எடுத்து வருகிறது. தைவானை தன்னுடன் இணைக்க தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரிட்டன் விமானப்படையின் ஓய்வு பெற்ற விமானிகளை பெரும் சம்பளம் கொடுத்து தங்கள் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க சீனா ஏற்பாடு செய்துள்ளது.இவ்வாறு 30 விமானிகள் சீனா சென்றுள்ளதாக பிரிட்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கத்திய நாடுகளின் … Read more

ஸ்வீடனில் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக 26 வயது இளம் பெண் நியமனம்!

ஸ்வீடனில் 26 வயது இளம் பெண் ரோமினா பூர்மோக்தாரி காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்ஸன் தலைமையிலான அமைச்சரவையில் ஈரான் வம்சாவளியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான ரோமினா பூர்மோக்தாரி காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் அமைச்சராக நியமிக்கப்பட்டதன் மூலம் ஸ்வீடனின் 27 வயது இளம் அமைச்சர் என்ற இதற்கு முந்தைய அமைச்சர் ஒருவரின் சாதனையை முறியடித்துள்ளார். Source link

எகிப்து – இரும்புக் கழிவுகளை பயன்படுத்தி சிலைகளை வடிவமைத்த சிற்பக் கலைஞர் ..!

எகிப்தைச் சேர்ந்த 29 வயதான சிற்பக் கலைஞர் ஒருவர், இரும்புக் கழிவுகளை பயன்படுத்தி பல்வேறு சிலைகளை வடிவமைத்துள்ளார். அந்நாட்டின் தலைநகர் கெய்ரோவின் மையப்பகுதியில் “கஸ்ர் எல் நில் லயன்ஸ்” என்றழைக்கப்படும் இரண்டு சிங்கங்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போன்று, சுமார் 3 அடி உயரத்தில் 300 கிலோ எடையில் பெரிய சிங்க சிலைகளை வடிவமைத்த இப்ராஹிம் சாலா, அவற்றை கண்காட்சியில் காட்சிப்படுத்தினார். சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத வண்ணம், இரும்புக் கழிவுகளை பயன்படுத்தி சிலைகளை வடிவமைத்ததாக அவர் … Read more

பாக்., பயங்கரவாதிக்கு தடை சீனா மீண்டும் முட்டுக்கட்டை| Dinamalar

நியூயார்க், :பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதி ஷாஹித் மகமூதை, சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் முயற்சிக்கு, சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சிலரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து, தடை விதிக்கப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இது தொடர்பாக, கடந்த நான்கு மாதங்களில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தாக்கல் செய்த மூன்று மனுக்களுக்கு, நம் … Read more