சீன உளவு கப்பலை நிறுத்தியதில் அரசியல் தலையீடு இல்லை – இந்தியாவுக்கான இலங்கை தூதர் விளக்கம்

புதுடெல்லி, இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற உளவு கப்பலை அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அரசு அனுமதி அளித்தது. அதன்படி கடந்த மாதம் 16-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை சீன உளவு கப்பல் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இது இலங்கை மீது இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிண்டா மொரகொடா சீன கப்பலை நிறுத்தியதில் எந்த … Read more

விண்வெளியில் சுற்றுலா விமான பயணத்தை தொடங்கும் சீனா..!

விண்வெளிக்கு சுற்றுலா விமானங்களை அனுப்பு திட்டத்தை 2025-ஆம் ஆண்டிற்குள் துவங்க சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விண்வெளி சுற்றுலா விமானங்களான ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் விமானத்தை போலவே இருக்கலாம் என்றும், இது பூமியின் மேற்பரப்பில் இருந்து 100 கி.மீ. உயரத்திற்கு சென்று கார்மென் கோட்டைத் தொட்டு திரும்பும் என்றும் கூறப்படுகிறது. இந்த பயணத்திற்கு ஒரு நபருக்கு 2 முதல் 3 மில்லியன் யுவான் வரை வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.  Source link

நைஜீரியாவில் லாரியும், பஸ்களும் அடுத்தடுத்து மோதல்: 19 பேர் பலி

அபுஜா, ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் உள்ள நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை பஸ் முந்த முயன்றது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்திசையில் வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது. அடுத்த சில நொடிகளில் பின்னால் வந்த மற்றொரு பஸ்சும் லாரி மீது மோதியது. லாரியின் மீது 2 பஸ்கள் அடுத்தடுத்து மோதிய நிலையில் 3 வாகனங்களிலும் தீப்பற்றியது. சற்று நேரத்தில் 3 வாகனங்களும் … Read more

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு

மெக்சிகோ சிட்டி, வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள லா பிளாசிட்டா டி மோரேலோஸ் கடற்கரையில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மைக்கோகன் மாநிலத்தில் உள்ள லா பிளாசிடா டு மார்லஸ்க்கு தென்கிழக்கே 46 கிலோமீட்டர் (29 மைல்) தொலைவில் 10 கிமீ (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத … Read more

ராணி 2-ம் எலிசபெத்துக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி – குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்பு

லண்டன்: இங்கிலாந்து மகாராணியாக கடந்த 70 ஆண்டுகள் 214 நாட்கள் இருந்து பிளாட்டினம் விழா கொண்டாடி சாதனை படைத்தவர் ராணி 2-ம் எலிசபெத் (96). இவரது உடலுக்கு கடந்த 5 நாட்களாக லட்சக்கணக்கான பொதுமக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 500 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ரஷ்யா, ஆப்கானிஸ்தான், மியான்மர், சிரியா, வட கொரியா ஆகிய … Read more

துர்கா பூஜை கொண்டாட்டம்; வங்கதேசத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு| Dinamalar

கொமிலா: நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்தாண்டு நடந்த மத கலவரம் எதிரொலியாக, இந்தாண்டு துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வசிக்கின்றனர். கடந்தாண்டு கொமிலா என்ற இடத்தில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது இஸ்லாமியர்களின் புனித நுாலை சிலர் அவமதித்ததாக வதந்தி பரவியது. இதையடுத்து கலவரம் பரவியது. ஹிந்துக்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சிலர் கொல்லப்பட்டனர். ஹிந்துக்களின் வழிபாட்டு தலங்களும் சூறையாடப்பட்டன. இந்நிலையில் கொமிலா நகரில் … Read more

லண்டனில் வங்காளதேச பிரதமருடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்திப்பு

லண்டன், இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல் அடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக லண்டன் சென்றுள்ளார். நேற்று முன்தினம் ராணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்தநிலையில், நேற்று ராணி இறுதி ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பு, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை ஜனாதிபதி முர்மு சந்தித்தார். இச்சந்திப்பின்போது, ஷேக் ஹசீனாவின் சகோதரி ஷேக் ரெஹானாவும் உடன் இருந்தார். முன்னதாக, பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸ் அளித்த வரவேற்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார். … Read more

இங்கிலாந்தின் விண்ட்சர் கேஸ்டில் தேவாலய வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் எலிசபெத் மகாராணியின் உடல் நல்லடக்கம்

லண்டன்: மறைந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், விண்ட்சர் கேஸ்டில் பகுதியில் உள்ள தேவாலய வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உட்பட 2,000 வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத், கோடைகாலத்தை முன்னிட்டு, ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தங்கியிருந்தார். முதுமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், லண்டன் திரும்பாமல் அங்கேயே ஓய்வெடுத்து … Read more

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நல்லடக்கம்| Dinamalar

லண்டன், :மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், வெஸ்ட் மினிஸ்டர் ஹாலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, வெஸ்ட்மினிஸ்டர் அபேவில் முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. பின், விண்ட்ஸர் அரண்மனையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில், உள்ள அவரது கணவர் இளவரசர் பிலிப் மற்றும் பெற்றோரது கல்லறைகளுக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.’கோஹினுார்’ வைரம்ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96, ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் கடந்த 8ம் தேதி காலமானார். … Read more

கனடாவில் துப்பாக்கி சூடுஇந்திய மாணவர் பலி| Dinamalar

டொரொன்டோ, :கனடாவில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த இந்திய மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பஞ்சாபை சேர்ந்தவர் சத்விந்தர் சிங், 28. இந்தியாவில் எம்.பி.ஏ., படித்த இவர், மேல்படிப்புக்காக வட அமெரிக்க நாடான கனடா சென்றார். அங்கு படித்து வந்ததுடன், மில்டன் என்ற இடத்தில் உள்ள, ‘ஆட்டோமொபைல்’ நிறுவனத்தில் பகுதி நேர வேலையும் செய்து வந்தார். இந்த நிறுவனம் உள்ள இடத்தில் கடந்த 12ம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில், சத்விந்தர் சிங் … Read more