மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு

மெக்சிகோ சிட்டி, வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள லா பிளாசிட்டா டி மோரேலோஸ் கடற்கரையில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மைக்கோகன் மாநிலத்தில் உள்ள லா பிளாசிடா டு மார்லஸ்க்கு தென்கிழக்கே 46 கிலோமீட்டர் (29 மைல்) தொலைவில் 10 கிமீ (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத … Read more

ராணி 2-ம் எலிசபெத்துக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி – குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்பு

லண்டன்: இங்கிலாந்து மகாராணியாக கடந்த 70 ஆண்டுகள் 214 நாட்கள் இருந்து பிளாட்டினம் விழா கொண்டாடி சாதனை படைத்தவர் ராணி 2-ம் எலிசபெத் (96). இவரது உடலுக்கு கடந்த 5 நாட்களாக லட்சக்கணக்கான பொதுமக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 500 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ரஷ்யா, ஆப்கானிஸ்தான், மியான்மர், சிரியா, வட கொரியா ஆகிய … Read more

துர்கா பூஜை கொண்டாட்டம்; வங்கதேசத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு| Dinamalar

கொமிலா: நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்தாண்டு நடந்த மத கலவரம் எதிரொலியாக, இந்தாண்டு துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வசிக்கின்றனர். கடந்தாண்டு கொமிலா என்ற இடத்தில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது இஸ்லாமியர்களின் புனித நுாலை சிலர் அவமதித்ததாக வதந்தி பரவியது. இதையடுத்து கலவரம் பரவியது. ஹிந்துக்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சிலர் கொல்லப்பட்டனர். ஹிந்துக்களின் வழிபாட்டு தலங்களும் சூறையாடப்பட்டன. இந்நிலையில் கொமிலா நகரில் … Read more

லண்டனில் வங்காளதேச பிரதமருடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்திப்பு

லண்டன், இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல் அடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக லண்டன் சென்றுள்ளார். நேற்று முன்தினம் ராணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்தநிலையில், நேற்று ராணி இறுதி ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பு, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை ஜனாதிபதி முர்மு சந்தித்தார். இச்சந்திப்பின்போது, ஷேக் ஹசீனாவின் சகோதரி ஷேக் ரெஹானாவும் உடன் இருந்தார். முன்னதாக, பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸ் அளித்த வரவேற்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார். … Read more

இங்கிலாந்தின் விண்ட்சர் கேஸ்டில் தேவாலய வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் எலிசபெத் மகாராணியின் உடல் நல்லடக்கம்

லண்டன்: மறைந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், விண்ட்சர் கேஸ்டில் பகுதியில் உள்ள தேவாலய வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உட்பட 2,000 வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத், கோடைகாலத்தை முன்னிட்டு, ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தங்கியிருந்தார். முதுமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், லண்டன் திரும்பாமல் அங்கேயே ஓய்வெடுத்து … Read more

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நல்லடக்கம்| Dinamalar

லண்டன், :மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், வெஸ்ட் மினிஸ்டர் ஹாலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, வெஸ்ட்மினிஸ்டர் அபேவில் முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. பின், விண்ட்ஸர் அரண்மனையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில், உள்ள அவரது கணவர் இளவரசர் பிலிப் மற்றும் பெற்றோரது கல்லறைகளுக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.’கோஹினுார்’ வைரம்ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96, ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் கடந்த 8ம் தேதி காலமானார். … Read more

கனடாவில் துப்பாக்கி சூடுஇந்திய மாணவர் பலி| Dinamalar

டொரொன்டோ, :கனடாவில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த இந்திய மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பஞ்சாபை சேர்ந்தவர் சத்விந்தர் சிங், 28. இந்தியாவில் எம்.பி.ஏ., படித்த இவர், மேல்படிப்புக்காக வட அமெரிக்க நாடான கனடா சென்றார். அங்கு படித்து வந்ததுடன், மில்டன் என்ற இடத்தில் உள்ள, ‘ஆட்டோமொபைல்’ நிறுவனத்தில் பகுதி நேர வேலையும் செய்து வந்தார். இந்த நிறுவனம் உள்ள இடத்தில் கடந்த 12ம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில், சத்விந்தர் சிங் … Read more

இங்கிலாந்தில் இந்து கோயில் மீது தாக்குதல் – இந்திய தூதரகம் கண்டனம்

இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரில் உள்ள இந்து கோயிலின் மீது நேற்று முன்தினம் (செப். 18) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், அதனை தொடர்ந்து கலவரம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்து கோயிலுக்கு வெளியே இருந்த கொடியை எதிர் தரப்பினர் அகற்றியது தொடர்பாக இந்த  கலவரம் ஏற்பட்டதாக லெய்செஸ்டர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.  கலவரத்திற்கு தொடர்புடைய 15-க்கும் மேற்பட்டோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சமூக  வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள சில வீடியோக்களில், இந்து அமைப்பை சேர்ந்த சிலர் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை … Read more

கிரெனேடியர் காவலர்களின் கொடி முதல் கிரீடம் வரை… ராணி எலிசபெத்தின் சவப்பெட்டியில் இடம்பெற்றுள்ளவை என்ன?

லண்டன்: லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பூத உடல், அவருக்கு மிகவும் பிடித்த அரண்மனைகளில் ஒன்றான விண்ட்சர் அரண்மனை வளாகத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. ராணியின் கணவர் பிலிப், தந்தை ஜார்ஜ் VI, தாய் எலிசபெத் ஏஞ்சலா, சகோதரி மார்கரெட் ஆகியோரின் உடல்களும் இங்கு தான் அடக்கம் செய்யப்பட்டது. அவர்களுக்கு அருகில் இரண்டாம் எலிசபெத்தின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, இறுதி ஊர்வலத்தில் … Read more

பழனிசாமி, பன்னீர் மீதானஅவதுாறு வழக்கு தள்ளுபடி| Dinamalar

புதுடில்லி,:அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோர் மீதான அவதுாறு வழக்கில், மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூரைச் சேர்ந்த வி.புகழேந்தி 2021ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி அவதுாறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இதை … Read more