பழனிசாமி, பன்னீர் மீதானஅவதுாறு வழக்கு தள்ளுபடி| Dinamalar

புதுடில்லி,:அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோர் மீதான அவதுாறு வழக்கில், மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூரைச் சேர்ந்த வி.புகழேந்தி 2021ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி அவதுாறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இதை … Read more

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நல்லடக்கம்!

லண்டன்: மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு மிகவும் பிடித்த அரண்மனைகளில் ஒன்றான விண்ட்சர் அரண்மனை வளாகத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்குதான் இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த பலர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராணியின் கணவர் பிலிப் உடல் கடந்த 2021-இல் இங்கு தான் அடக்கம் செய்யப்பட்டது. ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தங்கியிருந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) உடல் … Read more

பிரிட்டன் ராணி 2ம் எலிசபெத் உடல் நல்லடக்கம் – கண்ணீர் மல்க பிரியாவிடை!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், கணவர் பிலிப் உடல் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், உடல் நலக் குறைவு காரணமாக, கடந்த 8 ஆம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 96. இந்தத் தகவலை பக்கிங்ஹாம் அரண்மனையும் உறுதிப்படுத்தியது. பிரிட்டன் வரலாற்றிலேயே அதிக காலம் ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத். இவர், 10-க்கும் மேற்பட்ட பிரிட்டன் பிரதமர்களை பார்த்துள்ளார். இவரது மறைவு பிரிட்டன் நாட்டு மக்களை சோகக் … Read more

இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது பாகிஸ்தானியர்கள் தாக்குதல்: தூதரகம் கண்டனம்

லண்டன்: இங்கிலாந்தின் லீசெஸ்டர் மாநகரில் இந்தியர்கள் மீதும், கோயில்கள் மீதும் பாகிஸ்தானியர்கள் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியத் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆசிய கோப்பை டி20 போட்டியின் இறுதிச் சுற்றில் பாகிஸ்தானை தோற்டித்து இந்திய அணி கோப்பையை வென்றதை அடுத்து, கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி இங்கிலாந்தின் லீசெஸ்டர் மாநகரில் மோதல் வெடித்துள்ளது. இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலை அடுத்து, 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து, லீசெஸ்டர் மாநகரில் உள்ள இந்துக்களையும், அவர்களின் … Read more

புனித ஜார்ஜ் தேவாலயத்தில் கணவருக்கு அருகில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அடக்கம்

Queen Elizabeth II’s state funeral: இரண்டாம் எலிசபெத் மகாராணி, தனது கணவர் பிலிப்புக்கு அருகில் அடக்கம் செய்யப்படுகிறார். பிரிட்டனில் 7 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. ராணி இரண்டாம் எலிசபெத் இளவரசர் பிலிப்புடன் புனித ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்படுவார். அவரது பெற்றோரும் விண்ட்சர் கோட்டையின் மைதானத்தில் உள்ள சிறிய தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்காக இன்று லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 2,000 க்கும் மேற்பட்டவர்கள் கூடியுள்ளனர். இறுதிச் சடங்குகள் இந்திய நேரப்படி பிற்பகல் … Read more

மகாராணி எலிசபெத் இறுதிசடங்கு : சாதாரண உடையில் இளவரசர் ஹாரி – ஏன் தெரியுமா?

மகாராணி இரண்டாம் எலிசபெத் இறுதி ஊர்வலம் , வெஸ்மின்ஸ்டர் அபேயில் ராணி தற்போது நடைபெற்று வருகிறது. பிரிட்டன் மக்கள், அரச குடும்பத்தினர், பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், ராணுவ அதிகாரிகள் உள்பட பலரும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர். மகாராணியின் இறுதி ஊர்வலம் உலகம் முழுவதும் நேரலையில் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக ஒளிபரப்பட்டு வருகிறது. சென்ட்ரல் லண்டன் பகுதியில் ட்ரோன் பறப்பதற்கு தடை தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹீத்ரோ விமான நிலையம், விமானங்களின் சத்தம் இறுதிச் சடங்குகளுக்கு இடையூறு … Read more

ராணி எலிசபெத் இறுதி ஊர்வலம்: நேரலையில் நிகழ்வுகளை ஒளிபரப்பும் அரச குடும்பம்

லண்டன்: மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலாயத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து நாட்டின் அரச குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாது உலக நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்திய சார்பில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றுள்ளார். இறுதிச் சடங்கு நிகழ்வுகள் அனைத்தையும் அரச குடும்பத்தின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதனை உலக மக்கள் பல்வேறு டிஜிட்டல் சாதனங்களின் வழியே பார்த்து வருகின்றனர். அதோடு … Read more

ஹிந்து கோவில் சூறையாடல்: காவி கொடியை அகற்றிய மர்ம கும்பல்!

பிரிட்டன் நாட்டில் ஹிந்து கோவில் ஒன்றில் இருந்த காவி கொடியை ஒருவர் அகற்ற முயற்சிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பிரிட்டன் நாட்டின் லீசெஸ்டர்ஷையரில் இரு பிரிவினர் இடையே வன்முறை வெடித்தது. கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இப்போட்டியை தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே, லீசெஸ்டர்ஷையரில் அமைந்துள்ள ஒரு ஹிந்து கோவிலுக்கு வெளியே காவி கொடி கிழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கருப்பு உடை அணிந்த ஒரு … Read more

எங்கள் வைரத்தை திருப்பிக் கொடுங்கள்: ராணி எலிசபெத் மறைவுக்குப் பின் தென் ஆப்பிரிக்காவில் வலுக்கும் குரல்

டர்பன்: இங்கிலாந்து மகாராணி எலிசபெத் இறுதிச் சடங்கை ஒட்டி லண்டன் நகரில் உலகத் தலைகர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். உலகின் கவனத்தை பிரம்மாண்ட இறுதி அஞ்சலி ஈர்த்துக் கொண்டிருக்கும் சூழலில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்து நோக்கி பல குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. சர்வதேச கவனத்தையும் அவை ஈர்த்துள்ளன. அரச குடும்பத்தின் பாரம்பரிய நகைகளில் ஒன்றான செங்கோலில் உள்ள வைரத்தை திருப்பி அளிக்குமாறு அந்தக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. கிரேட் ஸ்டார் ஆஃப் ஆப்பிரிக்கா என்றழைக்கப்படும் இந்த … Read more

ஹிந்து கோவிலில் காவி கொடி அகற்றம்: இங்கிலாந்தில் பதற்றம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லீசெஸ்டர்ஷையர்: இங்கிலாந்தில் வகுப்புவாத பதற்றம் வன்முறையாக மாறியது. இதில், அங்குள்ள ஹிந்து கோவிலில் இருந்த காவி கொடியை ஒருவர் அகற்ற முயற்சிக்கும் காட்சிகள் வைரலாகியுள்ளன. இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையரில் இரு பிரிவினர் இடையே வன்முறை வெடித்தது. கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இப்போட்டியை தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே, லீசெஸ்டர்ஷையரில் அமைந்துள்ள ஒரு ஹிந்து கோவிலுக்கு வெளியே காவி கொடி … Read more