தொடர்ந்து வலுக்கும் ஹிஜாப் போராட்டம்; 'குதிரை' படைகளை நிறுத்தியுள்ள ஈரான் அரசு!

குர்திஷ் வம்சாவளியைச் சேர்ந்த ஈரானியரான அமினி, தெஹ்ரானில் கலாச்சார காவல் துறையினரால், கைது செய்யப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 16 அன்று மர்மமான முறையில் இறந்தார். இதை அடுத்து அங்கே பெரும் போராட்டம் வெடித்தது. ஈரானிய அதிகாரிகள் போராட்டங்களை ஒடுக்கும் முயற்சியில் பலவிதமான தாக்குதல்களை நடத்தினர். வெடிமருந்துகள், குண்டுகள், கண்ணீர்ப்புகை குண்டுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி பாதுகாப்புப் படையினர் எதிர்ப்பாளர்கள் மீது நேரடியாகச் சுட்டனர். மேலும், அரசாங்கம் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பை அணுகுவதைத் தடுப்பது உட்பட இணையக் … Read more

ரஷ்ய எண்ணெய் வாங்குவது இந்தியாவுக்கு சாதகம்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது இந்தியாவுக்கு சாதகம் என, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார். ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். இன்று, தலைநகர் மாஸ்கோவில், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை, அவர் சந்தித்து பேசினார். அப்போது, இரு நாட்டு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் … Read more

‛‛இந்திய-ரஷ்ய வர்த்தகத்தை விரிவுபடுத்த பாடுபடுகிறோம்: ஜெய்சங்கர் பெருமிதம்| Dinamalar

மாஸ்கோ: இந்திய- ரஷ்ய நாடுகள் இணைந்து வர்த்தகத்தை விரிவுபடுத்த பாடுபட்டு வருகின்றன என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். சந்திப்பு : மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். பிறகு ஜெய்சங்கர் கூறியவதாவது: இந்தியா- ரஷ்யா இரு நாடுகளும் இணைந்து வர்த்தகத்தை விரிவுபடுத்த பாடுபடுகின்றன. வர்த்தக ஏற்றத்தாழ்வு குறித்து இந்தியாவும், ரஷ்யாவும் இயல்பாகவே கவலைப்படுகிறது. பிரதமர் மோடியும் அதிபர் புடினும், கடந்த செப்டம்பர் மாதம் சமர்கண்டில் சந்தித்தனர். … Read more

ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு மிகவும் வலிமையானது: மாஸ்கோவில் ஜெய்சங்கர் விவரிப்பு

மாஸ்கோ (ரஷ்யா): ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு மிகவும் வலிமையானது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியதை அடுத்து முதல்முறையாக அந்நாட்டிற்குச் சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தலைநகர் மாஸ்கோவில் வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஜெய்சங்கர் கூறியது: “ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு மிகவும் வலிமையானது. செர்கி லாரோவை இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 5 … Read more

ஐரோப்பாவில் வெப்பத்தின் தாக்கத்தால் நடப்பாண்டில் 15,000 பேர் பலி..!

ஐரோப்பாவில் நடப்பாண்டில் மட்டும் வெப்பத்தின் தாக்கத்தால் சுமார் 15 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஜெர்மனியில் 4 ஆயிரத்து ஐநூறு பேரும் ஸ்பெயினில் 4 ஆயிரம் பேரும், பிரிட்டனில் 3 ஆயிரத்து 200 பேரும்,  போர்ச்சுக்கல்லில் ஆயிரம் பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 3 மாத கோடைக் காலத்தில் மட்டுமே வெப்பத்தின் தாக்கத்தால் கிட்டத்தட்ட 11 ஆயிரம் இறப்புகள் பதிவாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  … Read more

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியா? – வரும் 15-ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடும் டிரம்ப்

வாஷிங்டன், 2016 முதல் 2020-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் டொனால்டு டிரம்ப். பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர் டொனால்டு டிரம்ப். இவர் அமெரிக்காவின் அதிபராக இருந்த காலத்தில் வடகொரியாவுடன் நட்பு, இஸ்ரேல் – அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளை, 2020-ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார். புதிய அதிபராக … Read more

“குறை ஒன்றும் இல்லை!” – உலகின் உயரமான பெண்ணின் முதல் விமானப் பயணம்

அன்காரா: உலகின் உயரமான பெண்ணாக அறியப்படும் ருமேசா கெல்கி முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்திருக்கிறார். உயரமான மனிதர்களுக்கு அன்றாட வாழ்வில் செய்யும் சிறு சிறு விஷயங்கள் கூட கடினமானதாக மாறலாம். பேருந்து, ரயில், விமானம் என அவர்களது பயணங்கள் சிரமத்துக்குள்ளானதாகவே அமைவதை நாமும் பார்த்திருப்போம். அதே சிரமத்தை பல ஆண்டுகளாக அனுபவித்து வந்தவர்தான் துருக்கியின் ருமேசா கெல்கி. உலகின் உயரமான பெண்ணாக அறியப்படுகிறார் துருக்கியின் ருமேசா கெல்கி .இவரது உயரம் 7 அடி 7 அங்குலம். … Read more

நேபாளத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.5 ஆக பதிவு

காத்மண்டு, நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து வடகிழக்கே 155 கி.மீ. தொலைவில் இன்று காலை 4.37 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 100 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை. கடந்த அக்டோபர் 19-ந்தேதி நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் ரிக்டரில் 5.1 அளவிலான நிலநடுக்கம் … Read more

அரிதான காட்சி… ‘வைல்ட் டிரிப்லெட்’டின் புகைப்படத்தை வெளியிட்ட ஹப்பிள் தொலைநோக்கி!

நியூயார்க்: அண்டத்தின் ‘வைல்ட் டிரிப்லெட்’ (248- Wild’s Triplet) எனப்படும் இரண்டு விண்மீன் மண்டலங்களின் புகைப்படத்தை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி எடுத்துள்ளது. வைல்ட் டிரிப்லெட் விண்மீன் மண்டலங்கள் பூமியிலிருந்து 200 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன. இதன் புகைப்படத்தை ஹப்பிள் தொலைநோக்கி அழகாகவும், தெளிவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தில் ’வைல்ட் டிரிப்லெட்’ எனப்படும் இரு விண்வெளி மண்டலங்களும் ஈர்ப்பு விசையினால் ஒன்றின் பால் ஒன்று ஈர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதன் காரணமாக இந்த இரு விண்மீன் மண்டலங்களின் இடையே … Read more

நவம்பர் 15..! – டொனால்டு ட்ரம்ப் சொல்லப் போகும் செய்தி என்ன?

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், வரும் 15 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தெரிவித்து உள்ளார். அமெரிக்காவின் 45வது அதிபராக பதவி வகித்தவர் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப். 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்த டொனால்டு ட்ரம்ப், அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். இவர் அதிபராக இருந்த காலத்தில் வட கொரியா உடன் நட்பு, இஸ்ரேல் – அரபு நாடுகள் … Read more