படிக்கட்டுகளில் தவறி விழுந்த ரஷ்ய அதிபர் புடின் கவலைக்கிடம்?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: ரஷ்ய அதிபர் மாளிகையின் படிக்கட்டுகளில் அதிபர் விளாடிமிர் புடின், 70, தவறி விழுந்ததாகவும், அவரது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடல்நிலை குறித்து, கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி வதந்திகள் பரவி வருகின்றன. அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாக முதலில் தகவல் பரவியது. இதை, ரஷ்ய அதிபர் மாளிகை முற்றிலுமாக மறுத்தது. இந்நிலையில், கரீபிய தீவு நாடான கியூபா … Read more

 உலக மண் தினம் டிச.,05| Dinamalar

உலகத்தில் அதிக சகிப்புத் தன்மை கொண்டதாக, பூமி முழுவதும் பரவி கிடக்கும் ‘மண்’ணைதான் குறிப்பிட்டாக வேண்டும். ஏனெனில் யார் என்ன செய்தாலும், அதை உள்வாங்கிக்கொண்டு, சகித்துக் கொண்டு இருக்கும் மண்ணை பாதுகாப்பது நமது கடமை. அது அமைதியாக இருக்கிறது என்பதற்காக, அதை மாசுபடுத்தி கொண்டிருக்கிறோம். இதனால் மண்ணில் வாழும் நுண்ணுயிரில் இருந்து, புல், பூண்டு முதல், பெரிய உயிரினங்கள் வரை அனைவருக்குமே பேராபத்து என்பதை நாம் உணரும் தருவாயில் இருக்கிறோம். உலகம் முழுவதும் உள்ள மண்ணை, 12 … Read more

போராட்டத்துக்கு பணிந்தது ஈரான்: கலாசார காவல் படை கலைப்பு

டெஹ்ரான்:ஈரானில் ‘ஹிஜாப்’ அணிய எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின் எதிரொலியாக, அந்த நாட்டின் கலாசார காவல் படைப் பிரிவு கலைக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான ஈரானில், பெண்களுக்கு கடுமையான உடைகட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. நடவடிக்கை ஹிஜாப் எனப்படும் முகம் மற்றும் தலையை மறைக்கும் துணியை அணியாத பெண்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன், ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்ட மாஸா அமினி, 22, என்ற பெண், போலீஸ் காவலில் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஈரானில் சர்ச்சையை … Read more

4 உளவாளிகளுக்கு ஈரானில் துாக்கு| Dinamalar

டெஹ்ரான் : இஸ்ரேலுக்காக, ஈரானில் உளவு பார்த்த நான்கு உளவாளிகள் ஈரானில் நேற்று துாக்கிலிடப்பட்டனர். மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் மற்றும் மேற்காசிய நாடான ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி தங்கள் உளவு பார்க்கப்படுவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஈரான் அரசை உளவு பார்ப்பதாக, ஏழு பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இஸ்ரேலின், ‘மொசாட்’ உளவு அமைப்புக்காக ஈரானில் உளவு வேலையில் ஈடுபட்டு வந்ததாக … Read more

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தின் முதல் வெற்றி: 'அறநெறி போலீஸ்' பிரிவை கலைத்த ஈரான்

தெஹ்ரான், இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரான். அந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும், பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதை உறுதிபடுத்தவும் ‘அறநெறி போலீஸ்’ பிரிவு செயல்பட்டு வருகிறது. 2006-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த அறநெறி போலீஸ் பிரிவு ஈரானில் மக்கள் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுவதை உறுதிபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். இதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டு … Read more

சீனாவுக்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்தப்படும்: இலங்கை எம்.பி எச்சரிக்கை

கொழும்பு, இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இலங்கைக்கு சீனா அதிக அளவில் கடன் கொடுத்து தனது வலையில் சிக்க வைத்து விட்டதாகவும், இதனால்தான் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த 30-ந்தேதி பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டணி எம்.பி.யான சாணக்கியன் ராசமாணிக்கம் பேசும் போது, சீனா இலங்கையின் நட்பு நாடு அல்ல. அது முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் நண்பன். இக்கட்டான … Read more

இஸ்ரேலின் மொசாட்டிற்கு உளவுபார்த்ததாக 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய ஈரான்

தெஹ்ரான், இஸ்ரேல் – ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலை ஒரு நாடாக ஈரான் அங்கீகரிக்கவில்லை. மேலும், இஸ்ரேலுக்கு எதிராக செயல்களிலும் ஈரான் ஈடுபட்டு வருகிறது. சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஈரான் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகிறது. ஈரான் அணு ஆயுத வல்லமை பெறுவதை … Read more

இஸ்ரேலுக்கு உளவு பார்த்த 4 பேருக்கு மரண தண்டனை; ஈரான் அதிரடி.!

உலகின் நம்பர் ஒன் உளவுத்துறையாக இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை உள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த சில ஆண்டுகளாக நிழல் யுத்தம் நடந்து வருகிறது. ஈரானில் மக்கள் கிளர்ச்சி மற்றும் உள்நாட்டு போருக்கு இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டணிதான் காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டி வருகிறது. 1979ம் ஆண்டு முதல் ஈரானில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டமானது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தூண்டுதலால் நடைபெற்று வருகிறது என்பது ஈரானின் வாதம். அந்தவகையில் … Read more

சீனாவில் உற்பத்தியை நிறுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீனாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்தி, இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் ஜெங்ஜூ நகரில் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி தொழிற்சாலை செயல்படுகிறது. சுமார் 3 லட்சம் பேர் பணியாற்றும் இந்த தொழிற்சாலையை தைவானின் பாக்ஸ்கான் நிறுவனம் அமைத்துள்ளது. ஐபோன் புரோ மாடல்களில் 85 சதவீதம் இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மொபைல்போன் அதிகம் தேவைப்படும் நேரத்தில் … Read more

கட்டுப்பாடுகள் தளர்வுக்கு மத்தியில் சீனாவில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

ஹாங்காங், கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால், கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்தது. ஆனால், சீன அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இதனால், கட்டுப்பாடுகளில் சிறிதளவு தளர்வுகளை சீனா அறிவித்தது. இந்த நிலையில், கொரோனா பாதிப்புக்கு சீனாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஷங்டாங் மற்றும் சிச்சுவான் மாகாணத்தில் தலா ஒருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும், உயிரிழந்தவர்களின் வயது குறித்த விவரவோ, தடுப்பூசி … Read more