ரஷ்யாவிடம் பெட்ரோல் கேட்கும் பாக்.,| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு வழங்கும் சலுகை விலையிலேயே தங்களுக்கும் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ள பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர், இதற்கு மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்காது எனக்கூறியுள்ளார். அதிக இறக்குமதி உலகளவில் கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தானும் உள்ளது. இது 2020- 21 நிதியாண்டில்1.92 பில்லியன் டாலர் அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. … Read more

ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கெடுப்பு: மன்னிப்பு கேட்ட ஈரான் வீராங்கனை

தெஹ்ரான்: ஹிஜாப் அணியாமல் சர்வதேச போட்டியில் பங்கேற்ற ஈரான் வீராங்கனை நாடு திரும்புவதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார். மாஷா அமினியின் மறைவு, ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வைத்துள்ளது. ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டத்திலிருந்து அதாவது 1979 ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்தால் மட்டுமே அனுமதி உண்டு. இந்த நிலையில் மாஷா அமினியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அக்டோபர் 16 ஆம் தேதி தென்கொரியாவில் நடந்த … Read more

அமெரிக்க விமானத்தில் திடீரென தோன்றிய பாம்பு – பயணிகள் பீதி

நியூ ஜெர்சி, புளோரிடாவின் தம்பா நகரில் இருந்து நியூ ஜெர்சிக்கு சென்ற விமானத்தில் பாம்பு இருந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். இதையடுத்து பாம்பை பிடிக்க நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். இதுகுறித்து நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி போர்ட் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், விமான நிலையத்தின் வனவிலங்கு செயல்பாட்டு ஊழியர்கள் மற்றும் போர்ட் போலீசார் ‘யுனைடெட் ப்ளைட் 2038’-ல் இருந்த கார்டர் பாம்பை பிடித்து காட்டுக்குள் விட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை … Read more

தொடர் ஏவுகணை, பீரங்கி தாக்குதலில் ஈடுபடும் வடகொரியாவை கடுமையாக சாடிய தென்கொரியா

சியோல், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தியும், வடகொரியா விடாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. தொடர்ந்து ஏவுகணை சோதனையை அதிகப்படுத்திவரும் வடகொரியா, அதன் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் புதிய பீரங்கி தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதற்கு தென்கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வடகொரியாவின் இத்தகைய நடவடிக்கை, 2018 உடன்படிக்கையை மீறும் செயல் என்று தெரிவித்ததாக தென்கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. “வட கொரியாவின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்கள் கொரிய தீபகற்பம் மற்றும் சர்வதேச சமூகத்தின் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.98 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 கோடியே 7 லட்சத்து 7 ஆயிரத்து 516 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

அமெரிக்க விமானத்தில் பாம்பு இருந்ததைக் கண்டு பயணிகள் அச்சம்..!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தம்பா நகரில் இருந்து நியூ ஜெர்சிக்கு சென்ற விமானத்தில், பாம்பு இருந்ததைக் கண்டு பயணிகள் அச்சமடைந்தனர். கடந்த திங்கட்கிழமை யுனைடர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நியூ ஜெர்சியில் தரையிறங்கிய போது, வணிக வகுப்பில் இருந்த பயணிகள், அங்கு பாம்பு இருந்ததைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என யுனைடட் ஏர்லைன்ஸ் … Read more

ஆப்கானிஸ்தான்: கை, கால்களை கட்டிப்போட்டு 27 பேரை சுட்டுக்கொன்ற தலீபான்கள்

காபூல், ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் இந்துகுஷ் மலைத்தொடரின் அருகே அமைந்துள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தலீபான்களுக்கு எதிரான கிளர்ச்சி படை செயல்பட்டு வருகிறது. இந்த கிளர்ச்சி படைக்கும் தலீபான்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த மாதம் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் நடந்த சண்டையில் கிளர்ச்சி படையினர் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 100-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாகவும் தலீபான்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட நபர்கள் … Read more

டிரக் கவிழ்ந்த விபத்தில் சாலை முழுவதும் சிதறிக் கிடந்த மீன்கள்..!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் மீன்கள் ஏற்றி வந்த டிரக் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த டிரக்கில் சுமார் 22ஆயிரம் பவுண்டுகள் எடை கொண்ட மீன்கள் கொண்டு செல்லப்பட்டன. அதிக பாரம் தாங்காமல் அந்த டிரக் கவிழ்ந்ததால், சாலை முழுவதும் மீன்கள் கொட்டி சிதறிக் கிடந்தன. இதனை அடுத்து அந்த வழியாக வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் சாலையில் இருந்த மீன்களை அகற்றும் பணி நடைபெற்றது. Source link

இங்கிலாந்தின் முன்னாள் விமானப்படை வீரர்களை பணியமர்த்தும் சீனா

லண்டன், இங்கிலாந்தின் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற விமானிகளை சீனா பெரும் தொகையை கொடுத்து தங்கள் பக்கம் இழுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் விமானப்படை வீரர்கள் தங்களது நிபுணத்துவத்தை சீன ராணுவத்துக்கு வழங்க அவர்களை பயிற்சியாளர்களாக சீனா பணியமர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அப்படி இதுவரை சுமார் 30 முன்னாள் இங்கிலாந்து ராணுவ விமானிகள் சீன வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக அங்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே முன்னாள் ராணுவ விமானிகள் சீன ராணுவத்தில் பணிபுரிவதற்கு … Read more

கடத்தப்பட்ட சாமி சிலைகள் உட்பட ரூ.33 கோடி மதிப்பிலான 307 பழங்கால கலை பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா

புதுடெல்லி: கடத்தப்பட்ட சாமி சிலைகள் உட்பட ரூ.33 கோடி மதிப்பிலான 307 பழங்கால கலைப் பொருட்களை அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளனர். இதில் பெரும்பாலானவை சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவை ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் பல்வேறு கோயில்கள் மற்றும் அரண்மனைகளில் இருந்தசிலைகள் மற்றும் கலைப் பொருட்கள் திருடப்பட்டன. அவை வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்க இந்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதுகுறித்து அமெரிக்காவின் … Read more