நவம்பர் 15..! – டொனால்டு ட்ரம்ப் சொல்லப் போகும் செய்தி என்ன?

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், வரும் 15 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தெரிவித்து உள்ளார். அமெரிக்காவின் 45வது அதிபராக பதவி வகித்தவர் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப். 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்த டொனால்டு ட்ரம்ப், அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். இவர் அதிபராக இருந்த காலத்தில் வட கொரியா உடன் நட்பு, இஸ்ரேல் – அரபு நாடுகள் … Read more

அமெரிக்க வெளியுறவு துணை செயலாளருடன் வினய் குவாத்ரா சந்திப்பு; இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரங்கள் பற்றி ஆலோசனை

வாஷிங்டன், இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா அமெரிக்காவில் அந்நாட்டு வெளியுறவு துணை செயலாளரான வெண்டி ஷெர்மானை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி ஆலோசிக்கப்பட்டது. ஜனநாயக கொள்கைகள், மண்டல பாதுகாப்பு மற்றும் வளம் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது ஆகிய இரு நாட்டு விவகாரங்கள் பற்றியும் செயல்திட்டங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன என இதுபற்றி அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் … Read more

டோனட்ஸ்க் பகுதியில் போர் உக்கிரம் – உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி

டோனட்ஸ்க் பகுதியில் போர் உக்கிரமடைந்துள்ளதாக, உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார். நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தினமும் நூற்றுக்கணக்கான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு, உக்ரைன் படைகள் முன்னேறி செல்வதாக தெரிவித்தார். 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். Source link

பருவகால மாற்ற மாநாட்டு நிகழ்ச்சியில் திடீரென பாதியிலேயே வெளியேறிய ரிஷி சுனக்

கெய்ரோ, ஐ.நா.வின் பருவகால மாற்ற மாநாடு, எகிப்து நாட்டின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் இங்கிலாந்தின் புதிய பிரதமராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக் கலந்து கொண்டுள்ளார். அவர், கிளாஸ்கோ பருவகால ஒப்பந்தம் பற்றி உரையாற்றுவதுடன் பிற நாடுகளையும், அதில் இருந்து விலகாமல் வாக்குறுதி அளித்ததன்படி அதனை பின்பற்றும்படி வலியுறுத்துவார். இந்த பருவகால உச்சி மாநாட்டில், இங்கிலாந்து நாட்டை தூய்மையான ஆற்றல் கொண்ட ஒன்றாக உருவாக்கும் தனது நோக்கங்களை சுனக் வெளியிடுவார் … Read more

மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறாரா டொனால்ட் டிரம்ப்? சூசகத் தகவல்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என்பதற்கான சமிக்ஞைகள் வந்துள்ளன. 2016 முதல் 2020-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், தனது ஆட்சியில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டவர். பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போன டொனால்டு டிரம்ப், அமெரிக்காவின் வழக்கமான செயல்பாடுகளில் இருந்து மாறுபட்டு யோசித்து செயல்பட்டவர். சர்வதேச அளவில், அமெரிக்காவுடனான வடகொரியாவுடன் நட்பு, இஸ்ரேல் – அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது … Read more

துருக்கியில் லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து – 7 பேர் பலி

துருக்கியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். அக்ரி மாகாணத்தில் லாரி மீது பயணிகள் பேருந்து மோதி தீப்பிடித்தது. பயணிகள் சிலர் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு கீழே குதித்துத் தப்பினர். எனினும், பேருந்துக்குள் தீ வேகமாக பரவியதால், கீழே இறங்க முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்ட 7 பேர் உடல்கருகி பலியாகினர். மேலும், 11 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Source link

ஐரோப்பாவில் கடும் கோடை வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் பலி; உலக சுகாதார அமைப்பு தகவல்

ஜெனீவா, ஐரோப்பிய நாடுகளில் நடப்பு ஆண்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், கடும் கோடை வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் மண்டல இயக்குனர் ஹான்ஸ் ஹென்றி குளூஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், இதுவரை கிடைத்த தகவலின்படி, ஐரோப்பாவில் நடப்பு ஆண்டின் கோடை காலத்தில் 3 மாதங்களில், கடும் வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் … Read more

ஜப்பானில் நடைபெற்ற அணிவகுப்பில் இந்திய கடற்படையை சேர்ந்த ஷிவாலிக், கமோர்டா கப்பல்கள் பங்கேற்பு

ஜப்பானின் யோகோசுகா கடற்பகுதியில் நடைபெற்ற அணிவகுப்பில் இந்திய கடற்படையை சேர்ந்த ஷிவாலிக் மற்றும் கமோர்டா கப்பல்கள் பங்கேற்றன. IFR-2022- என்ற பெயரில் சர்வதேச கடற்படை அணிவகுப்பு ஜப்பானின் யோகோசுகா கடற்பகுதியில் நடைபெற்றது. இதில் 2 இந்திய கடற்படை கப்பல்களும், இந்திய கடற்படையை சேர்ந்த இசைக்குழுவினர் மற்றும் அணிவகுப்பு குழுவினரும் பங்கேற்றனர்.

'அடுத்த வாரம் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடுகிறேன்' – அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்

டேடன்: அடுத்த வாரம் அரசியல் ரீதியாக மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடவிருப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 2024ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடுவேன் என்பதை ட்ரம்ப் பலமுறை சூசகமாக தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், நாளை அமெரிக்காவுக்கு ஒரு முக்கியமான நாள். அந்தத் தேர்தல் நாள் பரபரப்பில் இருந்து நான் திசைதிருப்புவதாக இல்லை. ஆனால் நவம்பர் 15 ஆம் தேதி நான் ஃப்ளோரிடாவின் பால்ம் பீச்சில் மிக முக்கியமான … Read more

அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல் – குடியரசுக்கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோரும் எலான் மஸ்க்

அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி ட்விட்டர் சி.இ.ஓ.வும், ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவன அதிபருமான எலான் மஸ்க் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் குடியரசு கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக எலான் மஸ்க் மீது, ஜனநாயகக் கட்சியை சேர்ந்த அதிபர் ஜோ பைடன் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இதை அடுத்து எலான் மஸ்க் தனது ஆதரவை குடியரசுக்கட்சி வேட்பாளர்களுக்கு தெரிவித்துள்ளார். … Read more