விமானத்தில் ‘டிக்கெட் இன்றி’ பயணம் செய்த பாம்பு; பயத்தில் அலறிய பயணிகள்!

விமான பயணத்தில் ‘ஸ்னேக் ஆன் எ பிளேன்’ திரைப்படம் போன்ற சம்பவம்  நடந்தால் எப்படி இருக்கும்…  அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து நியூஜெர்சி சென்ற விமானத்தில் பயணித்தவர்களுக்கு இதே நிலை தான் ஏற்பட்டது. விமானம் தரையிறங்குவதற்காக பயணிகள் இறங்கும் போது விமானத்தில் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அங்கே பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டது. பாம்பை கண்டதும் பிஸினஸ் வகுப்பில் இருந்த பயணிகள் அலறியடித்து தங்கள் கால்களை மேலே இழுத்துக் கொண்டு சீட்டின் மேல் வைத்துக் கொண்டனர். பின்னர் விமான … Read more

அண்டத்தின் பெருவிரல் ரேகையா..? – ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை

சிட்னி: சில நாட்களுக்கு முன்னர் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. மனிதர்களின் வடிவத்தில் பெரும் வெளிச்சத்துடன் காணப்படும் அந்த வடிவம் எலியன்களால் உருவாக்கப்பட்டதா அல்லது அண்டத்தின் பெரும்விரல் ரேகையா என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த நிலையில், சிட்னி பல்கலைகழகம் இது தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியை மீண்டும் தெளிவுப்படுத்தியதன் மூலம் அந்த வடிவம் அண்டத்தில் உள்ள WR140 என்ற நட்சத்திரம் என்று தெரிய வந்திருக்கிறது. ஆனால், ஒரு … Read more

இந்திய – அமெரிக்க முயற்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் சீனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஷேக் மெக்மூத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, அமெரிக்கா ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு 4வது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ‘1267 அல்கொய்தா தடை குழு’ வில் நேற்று, ஷாகீத் மெக்மூத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை இந்தியாவும், அமெரிக்காவும் கொண்டு வந்தது. இதற்கும் சீனா தனக்கு உள்ள … Read more

அமெரிக்கா | நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணிகளை பயமுறுத்திய பாம்பு

புளோரிடா: அமெரிக்க நாட்டில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணிகளை பாம்பு ஒன்று பயமுறுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் புளோரிடாவில் இருந்து நியூ ஜெர்சிக்கு சென்ற விமானத்தில் நடந்துள்ளது. யுனைட்டெட் ஏர்லைன் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் இது நடந்துள்ளது. பயணிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விமானக் குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அந்த விமானம் நியூ ஜெர்சி நகருக்கு சென்றதும் பயணிகள் பத்திரமாக அதிலிருந்து வெளியேறி உள்ளனர். தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் வனத் துறை ஊழியர்கள் இணைந்து … Read more

ரஷ்யாவிடம் பெட்ரோல் கேட்கும் பாக்.,| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு வழங்கும் சலுகை விலையிலேயே தங்களுக்கும் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ள பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர், இதற்கு மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்காது எனக்கூறியுள்ளார். அதிக இறக்குமதி உலகளவில் கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தானும் உள்ளது. இது 2020- 21 நிதியாண்டில்1.92 பில்லியன் டாலர் அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. … Read more

ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கெடுப்பு: மன்னிப்பு கேட்ட ஈரான் வீராங்கனை

தெஹ்ரான்: ஹிஜாப் அணியாமல் சர்வதேச போட்டியில் பங்கேற்ற ஈரான் வீராங்கனை நாடு திரும்புவதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார். மாஷா அமினியின் மறைவு, ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வைத்துள்ளது. ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டத்திலிருந்து அதாவது 1979 ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்தால் மட்டுமே அனுமதி உண்டு. இந்த நிலையில் மாஷா அமினியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அக்டோபர் 16 ஆம் தேதி தென்கொரியாவில் நடந்த … Read more

அமெரிக்க விமானத்தில் திடீரென தோன்றிய பாம்பு – பயணிகள் பீதி

நியூ ஜெர்சி, புளோரிடாவின் தம்பா நகரில் இருந்து நியூ ஜெர்சிக்கு சென்ற விமானத்தில் பாம்பு இருந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். இதையடுத்து பாம்பை பிடிக்க நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். இதுகுறித்து நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி போர்ட் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், விமான நிலையத்தின் வனவிலங்கு செயல்பாட்டு ஊழியர்கள் மற்றும் போர்ட் போலீசார் ‘யுனைடெட் ப்ளைட் 2038’-ல் இருந்த கார்டர் பாம்பை பிடித்து காட்டுக்குள் விட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை … Read more

தொடர் ஏவுகணை, பீரங்கி தாக்குதலில் ஈடுபடும் வடகொரியாவை கடுமையாக சாடிய தென்கொரியா

சியோல், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தியும், வடகொரியா விடாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. தொடர்ந்து ஏவுகணை சோதனையை அதிகப்படுத்திவரும் வடகொரியா, அதன் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் புதிய பீரங்கி தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதற்கு தென்கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வடகொரியாவின் இத்தகைய நடவடிக்கை, 2018 உடன்படிக்கையை மீறும் செயல் என்று தெரிவித்ததாக தென்கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. “வட கொரியாவின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்கள் கொரிய தீபகற்பம் மற்றும் சர்வதேச சமூகத்தின் … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.98 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 கோடியே 7 லட்சத்து 7 ஆயிரத்து 516 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

அமெரிக்க விமானத்தில் பாம்பு இருந்ததைக் கண்டு பயணிகள் அச்சம்..!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தம்பா நகரில் இருந்து நியூ ஜெர்சிக்கு சென்ற விமானத்தில், பாம்பு இருந்ததைக் கண்டு பயணிகள் அச்சமடைந்தனர். கடந்த திங்கட்கிழமை யுனைடர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நியூ ஜெர்சியில் தரையிறங்கிய போது, வணிக வகுப்பில் இருந்த பயணிகள், அங்கு பாம்பு இருந்ததைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு அந்த பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என யுனைடட் ஏர்லைன்ஸ் … Read more