ஆன்லைனில் வெறுப்பையும் துவேஷத்தையும் எதிர்கொள்ளும் பெண் பத்திரிகையாளர்கள்

புதுடெல்லி: பெண்களுக்கு சம உரிமை என்பது ஒரு புறம் இருக்கட்டும், படித்து, சமூக விவகாரங்களை அறிந்த பெண் பத்திரிகையாளர்களே ஆன்லைனில் குறிவைக்கப்படும் அவலம் தொடர்கிறது. இதை சொல்வது, யாரோ ஓரிரு பெண் பத்திரிக்கையாளர்கள் அல்ல என்பது முக்கியமான விஷயம். பெரும்பாலான பெண் பத்திரிகையாளர்கள் ஆன்லைனில், வெறுப்பு, துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைக்கு இலக்காகிறார்கள் என்று அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆய்வு ஒன்றில் பங்கேற்ற பெண் பத்திரிக்கையாளர்களில், 25 சதவீதம் பேர் தங்களுக்கு உடல் ரீதியான வன்முறை அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர், … Read more

பாலியல் குற்றச்சாட்டில் கைதான இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா இலங்கை அணிக்காக விளையாட தடை..!

பாலியல் வன்கொடுமை புகாரில் கைதாகியுள்ள இலங்கை பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான 29 வயது ஆஸ்திரேலிய நாட்டு பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாக, சிட்னி போலீசாரால் தனுஷ்கா குணதிலகா கைது செய்யப்பட்டார். 31 வயதாகும் குணதிலகாவிற்கு இலங்கை அணியில் இனி இடமில்லை என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.. Source link

'தவறு நடந்துவிட்டது' பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அழைக்கும் டுவிட்டர்…!

வாஷிங்டன், உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமான டுவிட்டரை உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் வாங்கினார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருந்த நிர்வாகிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார். மேலும், உலகம் முழுவதும் பணியாற்றும் டுவிட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் பலரை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உலகம் முழுவதும் டுவிட்டர் நிறுவனத்தில் சுமார் 7 ஆயிரத்து 500 பேர் பணியாற்றி வருகின்றனர். அதில், 50 சதவிகிதம் பேரை கடந்த 4-ம் … Read more

முதன்முறையாக விமானத்தில் பறந்த உலகின் மிக உயரமான பெண்!

உலகின் மிக உயரமான பெண் என்கிற கின்னஸ் சாதனையை படைத்த ருமேசா கெல்கி என்பவர் முதன்முறையாக விமானத்தில் சென்றுள்ளார், தனது முதல் விமான பயணம் அனுபவம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் அவர் பகிர்ந்ந்திருக்கிறார்.  துருக்கியை சேர்ந்த சாஃப்ட்வெர் டெவலப்பரான ருமேசா கெல்கி (25) வீவர் சின்ட்ரோம் எனப்படும் ஒரு அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார், இந்த நோயினால் தான் இவர் மிக உயரமாக இருக்கிறார்.  புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் தகவலின்படி இவரது உயரமா 2.15 மீட்டர் … Read more

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு இழப்பீடு: ‘காப் 27’ – முக்கிய தீர்மானம்

ஷார்ம் எல்-ஷேக்: காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு நிதி/இழப்பீடு வழங்க காப் குழுவில் இடம்பெற்றுள்ள 194 நாடுகளும் ஒப்புக்கொண்டன. ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்ற பணித்திட்டப் பேரவை (UNFCCC) 1992இல் உருவாக்கப்பட்டது. இந்தப் பணித்திட்டத்தில் கையெழுத்திட்டுள்ள 197 நாடுகளும், 1995 முதல் ஆண்டுதோறும் Conference of Parties (சுருக்கமாக COP; ‘Parties’ என்பது நாடுகள்) என்ற மாநாட்டைக் கூட்டி, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்துவருகின்றன. அந்த வகையில், 27ஆவது ஆண்டுக் கூட்டமான ‘COP … Read more

'தெரியாம தூக்கிட்டோம்… திரும்ப வாங்க' – பணியாளர்களிடம் பல்டி அடிக்கும் ட்விட்டர் – ஏன் தெரியுமா?

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் பல்வேறு காரணங்களுக்கு, அந்நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை முடுக்கிவிட்டார். இதனால், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் ட்விட்டர் பணியாளர்கள் தங்களின் வேலையை இழந்தனர்.  மொத்தம் ட்விட்டரின் 7,500 பணியாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், சுமார் 3,700 பேரை அன்றைய தினம் பணிநீக்கம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட சிலரை மீண்டும் பணிக்கு அழைக்க ட்விட்டர் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதாவது சிலரை தவறுதலாக பணிநீக்கம் … Read more

படுக்கை அறை அந்தரங்க காட்சி வெளியீடு: செய்தியாளர் முன் கதறி அழுத பாக்., – எம்.பி.,

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த எம்.பி., ஆசம் ஸ்வாதி, 75, தன் மனைவியுடன் படுக்கை அறையில் இருந்த அந்தரங்க, ‘வீடியோ’வை யாரோ தன் மனைவியின், ‘மொபைல் போனுக்கு’ அனுப்பி வைத்துள்ளதாக கூறி, செய்தியாளர்கள் முன் கதறி அழுதார்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானின் விசுவாசி என அழைக்கப்படுபவர் ஆசம் ஸ்வாதி. இவர், அக்கட்சி எம்.பி.,யாகவும் உள்ளார். ராணுவ ஜெனரல் … Read more

இம்மானுவேல் மேக்ரானுடன் ஹிரோஷிமா-நாகாசாகி மீதான அணுகுண்டு தாக்குதலை குறிப்பிட்டு பேசிய புதின்..!

ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகாசாகி நகரங்கள் மீது நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதலை சுட்டிக்காட்டி ரஷ்ய அதிபர் புதின் பேசியிருப்பது, மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை கலக்கமடைய செய்துள்ளது. 2ம் உலக போரின் இறுதியில் நடத்தப்பட்ட அத்தாக்குதலுக்கு பிறகு, ஜப்பான் படைகள், நேச நாடுகளிடம் சரணடைந்தன. இதை சுட்டிக்காட்டி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் உரையாற்றிய அதிபர் புதின், போரில் வெற்றி பெற பெரிய நகரங்களை தாக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ‘2ம் உலகப் போரின் போது நிகழ்த்தப்பட்ட அணுகுண்டு … Read more

பேரணியை மீண்டும் துவக்குகிறார் இம்ரான் கான்!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லாகூர் : ”பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், என் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட அதே இடத்தில் இருந்து, பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியின் பேரணி நாளை முதல் மீண்டும் துவங்கும்,” என, இம்ரான் கான் தெரிவித்தார்.பாகிஸ்தானில் ஆளும் கட்சியை எதிர்த்து, அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் பிரமாண்ட பேரணி நடத்தினார். இந்த பேரணி … Read more

ஆட்குறைப்புக்கு ஆயத்தமாகிறது பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா: தகவல்

நியூயார்க்: அண்மையில் சமூகவலைதளமான ட்விட்டரில் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த செய்திக்கு இதுவரை மெட்டா நிறுவனம் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. வரும் புதன்கிழமைக்குள் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து மெட்டா அதிகாரபூர்வ தகவலை வெளியிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச பொருளாதார மந்தநிலை, டிக்டாக் உள்ளிட்ட தலங்கள் விடுக்கும் சவால், ஆப்பிளின் … Read more