அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட நபருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!!

வாஷிங்டன், அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நடந்த இந்த தாக்குதல் சம்பவம், அந்த நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக மோசமான நிகழ்வாக பதிவானது. இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் குளறுபடி நடந்துள்ளதாக டிரம்ப் கூறி வந்த நிலையில், தனது ஆதரவாளர்களிடையே … Read more

சீனாவில் புதிதாக 718 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 986 பேருக்கு … Read more

ஜோர்டனில் கட்டிட விபத்தில் சிக்கிய 10 மாத குழந்தை – சிறிய காயமும் இன்றி உயிர்தப்பிய அதிசயம்

அம்மான், ஜோர்டன் நாட்டின் தலைநகர் அம்மானில், 4 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் கட்டிடத்தில் இருந்தவர்களில் 10 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கட்டிட இடிபாடுகளை அகற்றிம் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வந்தனர். அந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. விபத்து நடந்து சுமார் 24 மணி நேரங்களுக்குப் பிறகு, மீட்புப் படையினர் … Read more

1.6 கோடி குழந்தைகள் பாக்.,கில் பாதிப்புயுனிசெப் பிரதிநிதி தகவல்| Dinamalar

இஸ்லாமாபாத்:’பாகிஸ்தானில் வெள்ளத்தால் 1.6 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 30 லட்சம் குழந்தைகள் உயிர் காக்கும் அவசர உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர்’ என, ‘யுனிசெப்’ தெரிவித்துள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஜூன் மாதம் முதல் கன மழை பெய்து வருகிறது. நாடு முழுதும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இதுவரை 3.5 கோடி பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.இந்நிலையில், யுனிசெப் எனப்படும் ஐ.நா., சபையின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியத்தின் பிரதிநிதி அப்துல்லா … Read more

பயங்கரவாதிக்கு எதிரான தீர்மானம் சீனா மீண்டும் முட்டுக்கட்டை| Dinamalar

நியூயார்க்:பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி சஜித் மிர்ரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் தீர்மானத்துக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு மற்றொரு அண்டை நாடான சீனா ஆதரவாக இருந்து வருகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சிலரை, சர்வதேச பயங்கரவாதி களாக அறிவிக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தாக்கல் செய்துள்ள பல தீர்மானங்களுக்கு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.கடந்த நான்கு மாதங்களில், … Read more

லண்டன் புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு| Dinamalar

லண்டன்: நாளை செப்.,17 முதல் 19 வரை நடைபெற உள்ள பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு நிகழ்வில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளதாக கடந்த செப்.,14ம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இன்று(செப்.,17) லண்டன் புறப்பட்டார். 3 நாள் பயணமாக லண்டன் செல்லும் திரௌபதி முர்மு 19 ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிச் சடங்கில் பங்கேற்று அஞ்சலியை செலுத்துவார். லண்டன்: நாளை … Read more

1.6 கோடி குழந்தைகள் பாக்.,கில் பாதிப்பு: யுனிசெப் பிரதிநிதி தகவல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்-‘பாகிஸ்தானில் வெள்ளத்தால் 1.6 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 30 லட்சம் குழந்தைகள் உயிர் காக்கும் அவசர உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர்’ என, ‘யுனிசெப்’ தெரிவித்துள்ளது .நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஜூன் மாதம் முதல் கன மழை பெய்து வருகிறது. நாடு முழுதும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இதுவரை 3.5 கோடி பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.இந்நிலையில், யுனிசெப் எனப்படும் ஐ.நா., சபையின் … Read more

ஹிஜாப் அணியாத இளம் பெண்அடித்து கொலை..! – ஈரானில் பரபரப்பு..!

ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் என்பது பாரம்பரியமாக முஸ்லிம் பெண்கள் தங்கள் குடும்பத்திற்கு வெளியே ஆண்களின் முன்னிலையில் அணியும் ஒரு முக்காடு ஆகும். 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் அனைத்துப் பெண்களும் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கட்டாய ஆடைக் குறியீட்டை ஈரான் கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. ஈரானில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் முதல் பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பொதுவெளியில் பெண்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். … Read more

எலிசபெத் ராணியின் இறுதி நிகழ்வின் பாதுகாப்பிற்கு ரூ.59 கோடி செலவு

லண்டன்: ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி நிகழ்வின் பாதுகாப்பிற்காக, இந்திய மதிப்பில் சுமார் 59 கோடி ரூபாய் தொகை செலவிடப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 8-ம் தேதி ஸ்காட்லாந்தின் பால்மோரல் அரண்மனையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) உயிரிழந்தார். தலைநகர் லண்டனில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அரங்கில் ராணியின்உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. ராணியின் இறுதி நிகழ்வு வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது. அதற்கான தீவிரப் பணிகளில் பிரிட்டன் அரசக் குடும்பம் ஈடுபட்டுள்ளது. இந்த … Read more

நேபாளத்தில் நிலச்சரிவு..! – விமானம் மூலம் தீவிர மீட்பு பணி..!

நேபாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மேற்கு நேபாளத்தில் நிலச்சரிவு காரணமாக அச்சாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேரை காணவில்லை என்றும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. மேற்கு நேபாளத்தில் இன்று கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று (செப் 17) நிலச்சரிவு காரணமாக மேற்கு நேபாளத்தின் அச்சாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், … Read more