ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கேற்ற ஈரான் வீராங்கனையால் கிளம்பியது புது சர்ச்சை| Dinamalar

சியோல் தென் கொரியாவில் நடந்த சர்வதேச, ‘கிளைம்பிங்’ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற ஈரான் நாட்டு வீராங்கனை, ‘ஹிஜாப்’ அணியாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உள் அரங்கத்திற்குள் அமைக்கப்பட்ட செயற்கை சுவரில் ஏறும் போட்டியான, ‘சர்வதேச கிளைம்பிங் ஆசிய சாம்பியன்ஷிப்’ போட்டி கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவின் சியோல் நகரில் நடந்தது. இதில் பல்வேறு நாட்டு வீரர் – வீராங்கனையர் பங்கேற்றனர். மேற்காசிய நாடான ஈரானில் இருந்து 8 வீரர் – வீராங்கனையர், மூன்று பயிற்சியாளர்கள் வந்திருந்தனர். … Read more

பிரிட்டன் பார்லிமென்டில் தீபாவளி கொண்டாட்டம்| Dinamalar

லண்டன், ஐரோப்பிய நாடான பிரிட்டன் பார்லி.,யில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஹிந்துக்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளி, நம் நாட்டில் வரும் 24ல் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுதும் இந்தியர்கள் பரவலாக வசித்து வருவதால், பல நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் அந்நாட்டு அரசுகள் சார்பிலும் தீபாவளி பண்டிகை விழா நடத்தப்படுகிறது. பிரிட்டன் தலைநகர் லண்டனில், அந்நாட்டு அரசு சார்பில் பார்லிமென்டில் சபாநாயகர் அறையில், நேற்று முன்தினம் மாலை … Read more

நீர்நிலையில் தவித்த அரிய வகை டால்பின்கள் ட்ரோன் உதவியுடன் மீட்ட மீட்புக் குழுவினர்..!

பொலிவியாவில் சிக்கி தவித்த இரண்டு அரிய வகை டால்பின்கள் மீட்கப்பட்டது.  ஆழமற்ற நீர்நிலையில் வயது முதிர்ந்த இளஞசிவப்பு நிறத்தில் இரண்டு டால்பின்கள் சிக்கி தவிப்பதாக மீட்புக்குழுவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த மீட்புக்குழுவினர், படகு மற்றும் ட்ரோன்கள் உதவியுடன் டால்பின்களை மீட்டனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அந்த டால்பின்கள் ஆற்றில் விடப்பட்டன.  Source link

ஈரானில் தொடர் போராட்டத்தில் ஒடுக்குமுறையை கையாண்ட ஈரான் பாதுகாப்பு படைகள் – அதிகாரிகள் மீது தடை விதித்த ஐரோப்பிய யூனியன்..!

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களில், ஒடுக்குமுறையை கையாண்ட அறநெறி காவல்படை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார  தடைகளை விதித்துள்ளது.  ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள்  நடைபெற்று வரும் நிலையில், அறநெறி காவல்படையின் உயர் அதிகாரிகள், தேசிய சீருடை காவலர்கள், பாசிஜ் துணை ராணுவப்படை மற்றும் அரசு தொடர்புடைய 3 நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் தடை விதித்தனர். இத்தடைகளால், அப்படைகளின் உயர் அதிகாரிகளின் விசா மற்றும் சொத்துகள் முடக்கப்படு Source link

ஆச்சர்யம்… கர்ப்பமடைந்ததை அறிந்த 48 மணிநேரத்தில் குழந்தை – அது எப்படி?

அமெரிக்காவின் ஓமஹா நகரில் ஆசிரியராக இருப்பவர் பெய்டன் ஸ்டோவர் (23). இவருக்கு திருமணமாகிவிட்டது. இவர் சில நாள்களுக்கு முன்னர், தனது உடற்சோர்வு குறித்து ஆலோசனை பெற மருத்துவரை சென்று சந்தித்துள்ளார்.  பெய்டன் முதலில், வேலைப்பளு காரணமாகதான் தனக்கு உடற்சோர்வு இருப்பதாக நினைத்துள்ளார். ஆனால், தனது உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்துள்ளார். அவரின் கால் கடுமையாக வீங்கியதாக கூறியுள்ளார்.  அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் கருவுற்றிருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், மீண்டும் ஒரு பரிசோதனையை மேற்கொண்டுள்ளார். அதில், அவரின் கர்ப்பம் … Read more

எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றும் ஜோ பைடன் ஹிட்லரை போன்றவர்: துளசி கப்பார்ட்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கபார்ட் அமெரிக்காவின் முதல் பெண் இந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் துளசி கபார்ட் ஜனநாயக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஜோ பிடனும் அவரது அரசாங்கமும் நம்மை அணு ஆயுதப் போரை நோக்கித் தள்ளிவிடுவதாக துளசி கப்பார்ட் குற்றம் சாட்டினார். இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இந்திய-அமெரிக்க உறுப்பினர் துளசி கப்பார்ட், அமெரிக்க அதிபர் ஜோ பிடனை நாஜி சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டுள்ளார். நவம்பர் 8 இடைக்காலத் … Read more

கொடூர கொலையாளியை காதலித்த பெண் சிறை அதிகாரி! சிறையில் பூத்த காதல்!

சிறையில் பூத்த காதல் கதை: பிரிட்டனில் ஒரு ஆச்சரியத்தை அளிக்கும் வினோத வழக்கு அம்பலமாகியுள்ளது. ஒரு பெண் சிறை அதிகாரி ஒரு கொடூரமான கொலையாளியைக் காதலித்த சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது பூத்த காதலின் காரணமாக, சிறையில் இருந்த கொலையாளிக்கு உதவி செய்துள்ளார். கொலையாளி வேறு சிறைக்கு மாற்றப்பட்டபோது, ​​​​கொலையாளியை ஒரு போலி பெயருடன், அவள் தொடர்ந்து அவனை சந்தித்தாள். பின்னர், பெண் சிறை அதிகாரி கொலையாளியின் குழந்தையையும் பெற்றெடுத்தார். பெண் அதிகாரி, கைதியின் … Read more

ரஷ்ய தாக்குதலால் இருளில் மூழ்கிய உக்ரைன் – மக்கள் பரிதவிப்பு

கீவ்: உக்ரைனில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின் காரணமாக, கீவ் உள்ளிட்ட நகரங்கள் மின் தடையால் இருளில் மூழ்கியுள்ளன. இதனால், உக்ரைன் மக்கள் பரிதவித்துள்ளனர். ஐரோப்பிய யூனியன், நேட்டோவில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதனால் தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதிய ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும், பெரும்பாலும் ராணுவ நிலைகளை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தது. … Read more

பொருளாதார மந்த நிலை: செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்ட பிரதமர்!

அரசின் பொருளாதார நடவடிக்கைகளில் செய்த தவறுகளுக்கு பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் மன்னிப்பு கோரினார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் பதவியேற்றதைத் தொடர்ந்து புதிய அரசின் இடைக்கால பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல வரிச் சலுகைகள் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன. ஆனால், அமெரிக்க டாலருக்கு எதிரான பிரிட்டனின் கரன்சியான பவுண்டு கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால், பிரிட்டனில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதை அடுத்து, … Read more

மன்னிப்பு கேட்டார் பிரிட்டன் பிரதமர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: அரசின் பொருளாதார நடவடிக்கைகளில் செய்த தவறுகளுக்கு பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் மன்னிப்பு கோரியுள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகினார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரே, பிரதமராக முடியும். இதன்படி கட்சித் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனாக் போட்டியிட்டனர். பிரிட்டன் பிரதமராக லிஸ் … Read more