கட்டுப்பாடுகள் தளர்வுக்கு மத்தியில் சீனாவில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

ஹாங்காங், கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால், கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்தது. ஆனால், சீன அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இதனால், கட்டுப்பாடுகளில் சிறிதளவு தளர்வுகளை சீனா அறிவித்தது. இந்த நிலையில், கொரோனா பாதிப்புக்கு சீனாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஷங்டாங் மற்றும் சிச்சுவான் மாகாணத்தில் தலா ஒருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும், உயிரிழந்தவர்களின் வயது குறித்த விவரவோ, தடுப்பூசி … Read more

தகாத உறவு, லிவிங் டூகெதர் கலாசாரத்தை ஒழிக்க வருகிறது புதிய சட்டம்!

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா, சுற்றுலா மற்றும் தொழில் முதலீட்டிற்கு உகந்த இடமாக கருதப்படுகிறது. இங்கு திருமண உறவை தாண்டிய உடலுறவு, பாலியல் வன்கொடுமைகள், லிவ்விங் டூகேதர், கே, லெஸ்பியன் என இயற்கைக்கு புறம்பான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதை அறிந்து ஆட்சியாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதுபோன்ற சமூக அவலங்களை களையும் நோக்கில், 2019 ஆம் ஆண்டு திருமண உறவைத் தாண்டிய உடலுறவுக்கு தடை விதிக்கும் சட்டம் இந்தோனேஷிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட இருந்தது. … Read more

ஈரானில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்| Dinamalar

தெஹ்ரான்: இஸ்ரேல் – ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக 4 பேருக்கு ஈரான் இன்று(டிச.,04) தூக்குதண்டனை நிறைவேற்றியுள்ளது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்கு வேலை செய்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரான் 7 பேரை கைது செய்தது. தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களில் 4 பேருக்கு இன்று ஈரான் தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது. மிதமுள்ள 3 பேருக்கும் 5 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை … Read more

எனது நண்பர் நரேந்திர மோடி.. அமைதியை ஏற்படுத்திட எங்களை ஒன்றிணைப்பார்: பிரான்ஸ் அதிபர் டுவீட்

பாரிஸ், இந்தியாவின் ஜி20 தலைவர் பதவிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வாழ்த்து தெரிவித்தார். இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவில் ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் இந்தியா அடுத்த ஆண்டு தலைமை ஏற்று நடத்தவுள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஜி 20 மாநாடு அடுத்த ஆண்டு நடந்து முடியும் வரை இந்த தலைமை பொறுப்பு நம் வசம் இருக்கும். இந்நிலையில், … Read more

ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் எதிரொலி: கலாச்சார கண்காணிப்பு காவல் பிரிவை தடை செய்தது ஈரான்

தெஹ்ரான்: கட்டுக்கு அடங்காமல் செல்லும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்களின் காரணமாக ஈரான் அரசு ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற கலாச்சார காவலர்கள் பிரிவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. ஓர் அறப் போராட்டம் என்ன செய்யும் என்பதற்கு விளக்கமாகி நிற்கின்றனர் ஈரானின் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் . ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் எனப் பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஈரான் அரசு ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற கலாச்சார காவலர்கள் பிரிவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அட்டர்னி … Read more

தொடரும் கரோனா கொடூரம் : கதறும் இளைஞர்… இழுத்துச்செல்லும் அதிகாரிகள்! சீனா அடாவடி

ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக சீனாவை மட்டுமல்ல உலகத்திற்கே மரண பயத்தை காட்டி வருகிறது கரோனா தொற்று. இந்த கடும் நெருக்கடியில் இருந்து பல்வேறு நாடுகள்  மீண்டு வந்தாலும், சீனாவில் நிலைமை சீராகவில்லை என்றுதான் கூற வேண்டும். 2019ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து, கரோனா தொற்று பாதிப்பில் முன்னணியில் உள்ள நாடு சீனாதான்., அங்கு பெரிய நகரங்களில் வசிப்பவர்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் உடன் பல ஊரடங்குகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. வுஹான் மற்றும் பல நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் … Read more

போராட்டங்கள் எதிரொலி: ஹிஜாப் சட்டத் திருத்தம் பற்றி ஈரான் நாடாளுமன்றம் ஆலோசனை

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் இரண்டு மாதங்களைக் கடந்து வலுத்துள்ள நிலையில், ஹிஜாப் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது தொடர்பாக நீதித்துறையும், நாடாளுமன்றமும் இணைந்து செயல்பட்டு வருவதாக காம் நகரில் ஈரான் நாட்டின் அட்டர்னி ஜெனரல் முகமது ஜஃபார் மோன்டாசெரி தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த சட்டத்திருத்தம் எந்த மாதிரியானதாக இருக்கும் என்பது பற்றி அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக கடந்த புதன் கிழமையன்று ஆய்வுக் குழு ஒன்று நாடாளுமன்ற கலாச்சார குழுவுடன் ஆலோசனை நடத்தியுள்ளது … Read more

வலுக்கும் ஹிஜாப் போரட்டம்..ஈரான் கலாச்சார காவலர்கள் அகற்றம்.!

ஈரானில் அமெரிக்க ராணுவம் படையெடுப்பைத் தொடர்ந்து 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்கவும், ஈரானின் கலாச்சாரம் மற்றும் ஹிஜாப் குறித்த ஒழுங்முறைகளை மேற்கொள்ளவும் ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற அறநெறி சிறப்பு காவல் பிரிவு கடந்த 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்று முதல் இஸ்லாமிய சட்டங்களை மீறுவோர்கள் மிது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் மீது கடுமையான நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. இந்த … Read more

வெளிநாட்டு கோவிட் தடுப்பூசிகளை ஏற்க மறுக்கும் ஜின்பிங்| Dinamalar

வாஷிங்டன்: சீனாவில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் கட்டுப்பாடுகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தினாலும், வெளிநாடுகளை சேர்ந்த கோவிட் தடுப்பூசிகளை ஏற்க அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் மறுப்பதாக அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் அவ்ரில் ஹெய்ன்ஸ் அகூறியுள்ளார். தனது நிலைப்பாட்டை பாதிக்கும் என ஜின்பிங் கருதுவதே அதற்கு காரணம் எனவும் கூறியுள்ளார். சீனாவில் நாள்தோறும் கோவிட் பரவல் அதிகரித்து வருவதால், அந்நாட்டு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட … Read more

டுவிட்டருக்கு மீண்டும் திரும்பிய விளம்பரத்தாரர்கள்: எலான் மஸ்க் மகிழ்ச்சி

வாஷிங்டன்: டுவிட்டரில் இருந்து வெளியேறிய விளம்பரத்தாரர்கள் மீண்டும் திரும்பியுள்ளதாக டுவிட்டர் சிஇஓ எலான் மஸ்க் கூறியுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு, விளம்பரத்தாரர்கள் பலரும், டுவிட்டரில் இருந்து வெளியேறினர். விளம்பரத்தினை தற்காலிகமாக நிறுத்தினர்.பல தரப்பும் டுவிட்டரின் எதிர்காலம் கேள்வி குறி தான் என்று எச்சரிக்கை விடுத்தன. ஒரு புறம் இப்படி எனில், மறுபுறம் டுவிட்டரை மீட்டெடுக்க அடுத்தடுத்த நடவடிக்கைகளை எலான் மஸ்க் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் டுவிட்டருக்கும் விளம்பரதாரர்களுக்கும் இடையே தற்போது சுமூகமான … Read more