பதிலுக்கு பதிலாக சீனாவின் 26 விமான சேவை ரத்து செய்தது அமெரிக்கா

நியூயார்க்: கரோனா வைரஸ் பரவலை காரணம் காட்டி சீனாவுக்கு 26 விமான சேவைகளை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது. சீனாவை சேர்ந்த 4 விமான நிறுவனங்களின் 26 விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக நேற்று முன்தினம் அமெரிக்க அரசு அறிவித்தது. சீனாவில் கரோனா அதிகரித்து வருவதையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவின் ஜியாமென், ஏர் சீனா, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ், சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஆகிய விமான போக்குவரத்து நிறுவனங்களின் செப்டம்பர் 5-ம் தேதி … Read more

அக்னிபாதை திட்டத்தின் கீழ் கூர்காக்களின் ஆட்சேர்ப்பை நேபாளம் ஒத்திவைத்தது ஏன்?

சண்டிகர்: அக்னிப்பாதை திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு கூர்க்கா வீரர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கையை நேபாளம் ஒத்திவைத்துள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு 1947-ல் நேபாளம், இந்தியா மற்றும் இங்கிலாந்து அரசுகளுக்கு இடையே கையெழுத்தான முத்தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய ராணுவத்தின் அக்னிப்பாதை என்ற இந்த புதிய திட்டத்தை இணைக்க முடியாது என்ற கருத்து நிலவி வருகிறது. இதனால், அக்னிப்பாதை திட்டத்தில் கூர்காக்களை தேர்வு செய்வதற்கான பணிகளை ஒத்திவைக்கும் முடிவை நேபாள அரசு எடுத்துள்ளது. அக்னிப்பாதை திட்டத்தைப் பொருத்த வரையில் அதற்கு … Read more

“அவரிடம் துப்பாக்கி இருந்தது" – அமெரிக்க பெண்ணால் இனவெறி தாக்குதலுக்குள்ளான இந்திய வம்சாவளியினர்

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பெண்களிடம் “அமெரிக்காவில் எங்கு சென்றாலும் நீங்கள்தான் (இந்தியர்கள்) இருக்கிறீர்கள்- இந்தியாவுக்கு திரும்ப ஓடுங்கள்” என மெக்ஸிகன்-அமெரிக்கன் பெண் இனவெறியுடன் பேசி அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரீமா ரசூல் என்ற இந்திய வம்சாவளிப் பெண் அவரது தாயார் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த புதன்கிழமை இரவு டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரத்தில் உள்ள உணவு விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது, வாகனம் நிறுத்துவது … Read more

லடாக் எல்லையில் இந்திய ராணுவம் மலையுச்சிகளில் பீரங்கிகளை நிறுத்த நடவடிக்கை!

லடாக் எல்லையில் சீனாவுடனான முரண்பாடு நீடிக்கும் நிலையில் இந்திய ராணுவம் மலையுச்சிகளில் பீரங்கிகளை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இலகு ரக பீரங்கிகளுடன் சீனப்படைகளின் நகர்வைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் பிராஜக்ட் ஜோராவர் என்ற திட்டத்தை ராணுவம் மேற்கொண்டு வருகிறது. எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ள  தன்னை ராணுவம் தயார் நிலையில் வைத்துள்ளது. மலைப்பகுதி என்பதனால் கனரக பீரங்கிகளை அடிவாரத்திலும் இலகு ரக பீரங்கிகளை மலைகளின் மேல் பகுதிகளிலும் ராணுவம் நிறுத்தி வைக்கிறது. ஏவுகணைத் தாக்குதலை முறியடிக்கவும் டிரோன்களை வீழ்த்தவும் பீரங்கிகள் ராணுவத்தின் … Read more

ஆசிய கோப்பை இன்று துவக்கம்: சாதிக்குமா இந்தியா| Dinamalar

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று(ஆக.,27) துவங்குகிறது. இதில் சாதித்து இந்திய அணி எட்டாவது கோப்பை வெல்லக் காத்திருக்கிறது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 15வது சீசன் ‘டி-20’ தொடராக இன்று எமிரேட்சில் துவங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உட்பட ஆறு அணிகள் பங்கேற்கின்றன. சாதிக்குமா இந்தியா ஆசிய கோப்பை தொடரில் ஏழு முறை கோப்பை வென்றது ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா. தற்போது எட்டாவது முறையாக சாதிக்க … Read more

நீளமான வெள்ளரிக்காய் வளர்த்து பிரிட்டன் விவசாயி உலக சாதனை

லண்டன்: மிக நீளமான வெள்ளரிக்காயை வளர்த்து பிரிட்டன் விவசாயி ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். பிரிட்டனின் சவுத்தாம்டன் பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டியன் சுஸ்கி. விவசாயியான இவர் தனது தோட்டத்தில் 113.4 செ.மீ. நீளத்துக்கு வெள்ளரியை வளர்த்து உலக சாதனை படைத்துள்ளார். பிரிட்டனில் பண்ணையில் வளர்க்கப்படும் விளைபொருட்கள் மீது வெப்ப அலைகள் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் செபாஸ்டியன் தனது பயிர்களை வளர்த்து மிக நீளமான வெள்ளரிக்காயை விளை வித்துள்ளார். இதற்கு முன் 107.2 செ.மீ. நீளம் … Read more

அமெரிக்காவில் ஆதரவற்றோர் இல்லத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் கென்டக்கி மாகாணம் ஹென்டர்சன் நகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்தவர்கள் உயிர் பயத்தில் அலறியபடி அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். எனினும் மர்ம நபரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 2 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். … Read more

வாம்பயர் ராக்கெட் லாஞ்சர்களை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா

வாஷிங்டன், ரஷியா-உக்ரைன் இடையிலான மோதல் போராக வெடித்தது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கியது. மிக குறுகிய காலத்தில் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமித்து விடலாம் என கருதி ரஷியா போரை தொடங்கிய சூழலில், உக்ரைன் ராணுவம் கடுமையாக பதிலடி கொடுத்து வருவதால் போர் முடிவின்றி நீண்டு கொண்டு இருக்கிறது. உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கி 6 மாதம் நிறைவடைந்துள்ளது. ஆனாலும் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைன் … Read more

சீன விமான நிறுவனங்களின் 26 விமான சேவைகளை ரத்து செய்த அமெரிக்கா..!!

வாஷிங்டன், அமெரிக்காவில் கொரோனா பாதிப்பை காரணம் காட்டி அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், யூனைடெட் ஏர்லைன்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் 26 விமான சேவைகளை சீனா ரத்து செய்திருந்தது இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு செல்லும் 26 விமானங்களின் சேவையை அமெரிக்க அரசு தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. இதன்படி ஷியாமென், ஏர் சீனா, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் மற்றும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஆகிய 26 விமானங்களின் சேவையை செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 28ஆம் தேதி … Read more

கூட்ட நெரிசலில் ரெயிலின் மேற் கூரையில் ஏற முயன்ற பெண்ணால் பரபரப்பு

டக்கா, ஒவ்வொரு நாளும் நாம் சமூக வளைதளங்களில் பல வீடியோக்களையும் படங்களையும் பார்க்கிறோம், அவை பல்வேறு காரணிகளால் நம் நினைவுகளில் அவ்வபோது வந்து செல்லும். சில நேரங்களில் அவை மிகவும் வேடிக்கையாகவும் சில நேரங்களில் மிகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும். சமீபத்தில் வங்காள தேசத்தில் நெரிசல் மிகுந்த ரெயிலின் கூரையில் ஏற முயன்ற பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ அதிக கவனத்தை ஈர்த்துள்ளது மற்றும் அனைத்து சமூக ஊடக தளங்களிலும் பரவலாக … Read more