பிரிட்டனில் மின்சாரம், எரிவாயு விலை 80% உயர்வு

லண்டன்: பிரிட்டனில் மின்சாரம், எரிவாயுவிலை 80 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், உணவு தானியங்கள், உரம் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பிரிட்டனில் இயற்கை எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது. அந்த நாட்டில் 73 சதவீத மின்சாரம் இயற்கை எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணு சக்தி, சூரிய சக்தி, … Read more

இலங்கையில் பட்டினியாக உறங்கும் குழந்தைகள் – யுனிசெப் தெற்காசிய இயக்குநர் வேதனை

கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டனர். வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அந்நிய செலாவணியும் இலங்கையிடம் இல்லை. இதனால், உணவுப் பொருட்கள், எரிபொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவியை ராஜினாமா செய்தனர். அதன்பின், அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். எனினும் … Read more

சீனாவில் புதிதாக 1,494 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் 1,628 பேருக்கு … Read more

எத்தியோப்பியாவில் மழலையர் பள்ளிக்கூடம் மீது வான்தாக்குதலில் 7 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் ஒரு போராளி அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்புக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சுமார் 2 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். டைக்ரே போராளி அமைப்பை ஒடுக்குவதற்கு அந்த நாட்டின் பிரதமர் அபி அகமது உத்தரவின்பேரில் ராணுவம் நடத்துகிற தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் … Read more

மிஸ் இங்கிலாந்து போட்டியில் முதல் முறையாக ஒப்பனை இல்லாமல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய அழகி..!

லண்டன், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ‘மிஸ் இங்கிலாந்து 2022’ அழகிப் போட்டியில், லண்டன் நகரத்தைச் சேர்ந்த 20 வயது மெலிசா ராவ்ஃப், இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கல்லூரியில் அரசியல் படித்து வரும் மாணவியான இவர், ஒப்பனை எதுவும் இல்லாமலேயே மிஸ் இங்கிலாந்து அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று வரை முன்னேறியுள்ளார். மிஸ் இங்கிலாந்து போட்டியின் 94 வருட வரலாற்றில், அழகி ஒருவர் முதல் முறையாக ஒப்பனை இல்லாமல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனது இயற்கையான உள்ளார்ந்த அழகை … Read more

பாகிஸ்தான் கைதி மரணம் விசாரிக்க வலியுறுத்தல்| Dinamalar

இஸ்லாமாபாத்-‘காஷ்மீரில் பாகிஸ்தான் கைதி மரணமடைந்தது குறித்து, உரிய விசாரணை நடத்த வேண்டும்’ என, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அலி உசேன், ஜம்மு – காஷ்மீருக்குள் நுழைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்றபோது, 2006ல் கைது செய்யப்பட்டு காஷ்மீரில் உள்ள கோட் பல்வால் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சமீபத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்திய சிறையில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த … Read more

பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது

இஸ்லாமாபாத், 3.30 கோடி மக்கள் பாதிப்பு பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கிய நிலையில் கடந்த 3 மாதங்களாக அங்கு கனமழை, வெளுத்து வாங்குகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத இந்த மழைப்பொழிவால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. வெள்ளத்தில் சிக்கி 6 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழை, வெள்ளத்தால் நாடு முழுவதும் சுமார் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் அதிகம் பாதித்த 110 … Read more

மீட்பு பணியில் இறங்குது ராணுவம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்,-மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக ராணுவத்தை அழைக்க பாக்., அரசு முடிவெடுத்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 982 பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்த 1,456 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுதும் மூன்று கோடி பேருக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். ஆங்காங்கே நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 149 பாலங்கள் … Read more

பள்ளியில் பயிலும் தன் வருங்கால மனைவி தேர்வில் தோல்வியடைவார் என அஞ்சி பள்ளிக்கு தீ வைத்த இளைஞன்!

கெய்ரோ, எகிப்து நாட்டின் கர்பியா மாகாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், பள்ளி கட்டிடத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பியோடிய நபரை தலைநகர் கெய்ரோவின் வடக்கே உள்ள மெனோபியா மாகாணத்தில் போலீசார் கைது செய்தனர். பள்ளி கட்டுப்பாட்டு அறைக்கு தீ வைத்த பின்னர், அந்த இளைஞன் தனது சொந்த கிராமத்தில் ஒளிந்து கொள்வதற்காக சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனை பார்த்த சிலர் அந்த நபர் பற்றிய அடையாளங்களை … Read more

பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் சென்ற பயணிகள் படகு திடீரென தீப்பற்றி எரிந்து விபத்து..!

பிலிப்பைன்ஸ் நாட்டில் இயந்திர கோளாறு காராணமாக நடுக்கடலில் சென்ற படகு தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. 48 பயணிகள் மற்றும் 34 பணியாளர்களை ஏற்றிச் சென்ற படகு மணிலாவின் தெற்கே உள்ள துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது படகின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு தீ பிடித்து, படகு முழுவதும் தீ பரவியது. பலர் உயிர் தப்பிப்பதற்காக கடலில் குதித்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் படகில் இருந்தவர்களை மற்றொரு படகு முலம் மீட்டு கரைக்கு கொண்டு … Read more